• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 19

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் திவாகர்.. சுற்றிலும் பாதுகாப்பிற்காக அடியாட்கள் நிற்க வைக்கப்பட்டிருக்க.. வேண்டாவெறுப்பாக அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத இறுகிய முகத்துடன் வந்தவர்களை கூட வரவேற்க மனமில்லாது.. ஓரமாக நின்று கொண்டிருந்தார் நீலகண்டன்..

திருமண கொண்டாட்டத்திற்கு ஏற்ற உற்சாகமோ.. குதூகலமோ இல்லாமல்.. மணக்கோலத்தில் அமர்ந்திருந்த அக்காவின் பக்கத்தில் முகத்தில் ஒளியே இல்லாமல் நின்று கொண்டிருந்தனர் அனிதாவும் நிவினும்..

"முகத்தை சிரிச்ச மாதிரி வச்சிரு.. பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையான்னு.. உன் முகத்தை பார்த்து இந்த கூட்டத்தில் ஒருத்தன் கேள்வி கேட்டாலும்.. அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை".. திவாகர் பற்களை கடித்துக் கொண்டு அவள் காதுக்குள் முணுமுணுத்ததில்.. உயிர்பில்லாத புன்னகை.. தேவையில்லாமல் உறைந்து நின்றது அவள் இதழ்களில்..

"ஹ்ம்ம்.. அது".. ஆணவப் புன்னகையோடு இதழ் வளைத்தவன் ஐயர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை சிரத்தையாக உச்சரித்துக் கொண்டிருந்தான்.. "பாஸ் பொண்ணோட அம்மாவை காணும்".. எங்கிருந்தோ வந்து திவாகர் காதினுள் கிசுகிசுப்பாய் சொன்னான் ஒருவன்..

"என்னடா சொல்றீங்க அவங்களை வெளியே போக விட்டுட்டு.. ம**ப் புடுங்கிட்டு இருந்தீங்களா.. இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள அவங்க என் முன்னாடி வந்து நிக்கணும் இல்லன்னா.. ஒருத்தரையும் உயிரோடு விடமாட்டேன்".. அக்னி குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு இணையாக செந்தணலாக தகித்தான் திவாகர்..

"என்னடி உங்க அம்மாவை வெளியே தப்பிக்க விட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்னு பாக்கறியா.. நிச்சயமா நடக்காது.. ஒரே நிமிஷத்துல உங்க குடும்பத்துல ஒருத்தர் விடாம உருத் தெரியாம அழிச்சிடுவேன் பாக்கறியா?".. அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் உச்சரித்த வார்த்தைகள் இதயத்துக்குள் பேரிடியாய் இறங்கின.. "அம்மாவை காணுமா?.. எங்க போனாங்கன்னு தெரியலையே".. பரிதவிப்போடு அவள் விழிகள் அலைபாய.. "கடவுளே என்னோட அம்மாவை உயிரோடு மீட்டு கொடுத்துடு".. அவள் நெஞ்சம் பெற்ற தாய்க்காக கண்ணீரோடு வேண்டுதல் வைத்தது.. அழும் பெண்ணிற்கு ஓம குண்ட புகை சாதமாகிப் போனது.. கண்ணெரிச்சல் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்..

சில நிமிடங்களுக்கு பின் கலங்கிய கண்களும் பயந்த முகமுமாக அங்கே வந்து நின்ற ரமாவை கண்ட பிறகே.. மிகப்பெரிய துயர் தீர்ந்ததாய் மான்விக்கு இதயத்துடிப்பு சீராகியதில் ஆழ்ந்த பெருமூச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன..

"அவங்க இங்க தானடா இருக்காங்க.. என்னத்தடா பாத்தீங்க".. கண்முன்னே நின்று கொண்டிருந்த ரமாவைக் கண்டு.. அடிக்காத குறையாக தன் பக்கத்தில் நின்றிருந்தவனை திவாகர் பார்வையால் எரிக்கவும்.. "அதெப்படி சாத்தியம்.. இவ்வளவு நேரம் இங்கே இல்லையே!!.. எப்படி வந்தாங்க".. குழப்பத்தோடு தலையை சொரிந்தான் அவன்..

அன்னை எங்கே சென்று வந்திருக்கிறாள்.. என்று அவளுக்கு தெரியவில்லை.. தன் குடும்பத்தால் நடந்து போன மிகப் பெரிய தவறுக்கு தண்டனையாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தயாராகி இருந்தாள் மான்வி..

ஜீவாவின் தந்தை இறப்புக்கு காரணமானவர்கள் தாங்கள் என்ற குற்ற உணர்ச்சியே அணு அணுவாக சிதைத்து கொண்டிருக்கும் நிலையில்.. கழுத்தை நெறிக்கும் தூக்குகயிறாய் இந்த திருமணம் ..

குண்டு குண்டாக ஆட்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்க.. அந்த ஊரையே வளைத்து போட்ட தாதாவாக பெரிய பெரிய சங்கிலி போன்ற நகைகளுடன் நடுநாயகமாக அமர்ந்திருந்த வேதாச்சலமும் அவர் மனைவியும்.. கர்வப் புன்னகை ததும்பிய முகத்தோடு மணமேடையில் அமர்ந்திருந்த மகனை பூரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.. இப்படி ஒரு மகனை பெறுவதற்கு தவமாய் தவமிருந்திருக்க வேண்டும்.. மான்வியை தன் வலையில் சிக்க வைப்பதற்காக அத்தனையும் அவன் நடத்திய நாடகம்.. என்று அவள் உணரும் வேளையில் நிலைமை கைமீறிப் போயிருந்தது..

"இப்போதைக்கு மான்வி வேலைக்கு போக வேண்டாம்.. அந்த ஜீவாவால இவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம்".. என்று மான்வியை திட்டம் போட்டு வீட்டில் நிறுத்தியபோதே.. எதற்காக என்னை சிறை வைக்க நினைக்கிறான் அவள் மூளையில் பல சந்தேகங்கள் உருவாகியது..

"ஜீவா ரொம்ப மூர்க்கமா இருக்கான்.. உங்களை கொன்னு போட்டுட்டு கூட மான்வியை தூக்கிட்டு போக வாய்ப்பிருக்கு".. என்று வீட்டை சுற்றிலும் அடியாட்களை நிற்க வைத்து இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க வைத்த திவாகர் வித்தியாசமாக தெரிந்தான்.. பழைய சினேகம் மறந்து அவன் சிறுத்தை விழிகள் ஏதோ ஒரு தீவிரத்தில் பளபளத்து மின்னியதை மான்வியின் உள்ளுணர்வு புரிந்து கொண்டது.. "அவன் பார்வையே சரியில்ல" ஜீவாவின் வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டன..

அப்படியானால் ஜீவா கோமாவிற்கு சென்ற விஷயம்?.. விஷ்வ மூர்த்தி வந்து சொன்னபோது.. நீலகண்டன் இரக்கமில்லாமல் பேசியதற்கும் மான்வி கல்லாக நின்றதற்கும் காரணம் உண்டோ!!.. அங்கு தான் திவாகரன் தந்திரம் படு சாமர்த்தியமாக வேலை செய்திருக்கிறது..

ஜீவாவின் நிலையும் விஷ்வமூர்த்தி இறந்து போன விஷயமும்.. நீலகண்டன் குடும்பத்திற்கு தெரிய வரும்போது.. மான்விக்கும் திவாகருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு.. தன் முகமூடியை கிழித்தெறிந்து சுய ரூபத்தோடு வலம் வந்து கொண்டிருந்தான் அவன்..

ஜீவா படு கொடூரனாக உருவகப்படுத்தப்பட்டு.. நீலகண்டனின் குடும்பம் நிம்மதியில்லாமல் தவித்து அஞ்சு நடுங்கிக் கொண்டிருந்த வேளையில்.. "இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வர ஒரே ஒரு வழி தான் இருக்கு.. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறீர்களா!!".. திவாகரனின் ஆதுரமான பேச்சில் நீலகண்டனின் முகம் மலர்ந்து மனம் நிம்மதியில் இளைப்பாறிய போது.. அமிலக் குடுவையில் விழுந்த பொன்வண்டாக துடித்தாள் மான்வி..

திவாகர் போல் ஒரு கணவன் தனக்கு வாய்க்க வேண்டும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டது உண்மைதான்.. ஆனால் திவாகர் மேல் ஆசைப்படவில்லையே!!.. அவன் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.. அதற்காக கணவனாக தன் நெஞ்சத்தில் வைத்து அழகு பார்க்க ஒப்பவில்லை..

"உங்க மகளை எனக்கு திருமணம் செஞ்சு கொடுக்கிறீர்களா" என்று கேட்ட அந்த கணம்.. இதயத்தில் வரையப் படாத ஓவியமாக நிறைந்து போனவன் ஜீவா.. சதா சர்வ காலமும் தன்னை துளைத்துக் கொண்டிருந்த அந்த முரட்டு நேசத்தை.. இத்தனை நாட்களாக அவள் தேடவில்லை என்று எளிதில் சொல்லி விட முடியுமா!!.. திவாகர் மூலம் பல கதைகள் கட்டப்பட்டு ஜீவா அரக்கனாக அனைவரும் முன்னிலையிலும் கற்பனையாக விஸ்வரூபம் எடுத்த போதிலும்.. ஒருமுறையாவது அவனை பார்த்து விட முடியாதா என்று தவித்துக் கொண்டிருந்த அந்த தவிப்பைதான் பொய்யென்று ஒதுக்கித் தள்ளி விட முடியுமா!!..

அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.. அவளாக ஜீவாவை காதலிக்கவில்லை.. கட்டாயத்தின் பேரில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் காதலிக்க வைக்கப்பட்டாள்.. சிறு வயதிலிருந்து புகுத்தப்பட்ட போதனைகளால்.. ஜீவாவின் அளவு கடந்த நேசம் கொடுத்த ஒவ்வாமையில் வெறுக்க வைக்கப் பட்டாள்..

வெறுக்கிறேன் என்றால் ஏன் அவனை தேடி என் மனம் அலை பாய்கிறது.. "ஜீவா அப்படிப்பட்டவர் இல்லம்மா" என்று ஏன் என் தாய் தந்தையிடம் வாய் வலிக்க வாதாடி கொண்டிருக்கிறேன்.. அன்று காருக்குள்.. தனக்கும் அவருக்கு மட்டும் நடந்த அந்தரங்கமான விஷயத்தை தாய் தந்தையிடம் சொல்லி இருக்கக் கூடாதோ!!.. அம்மா கிட்ட எதையும் மறைக்க கூடாது என்ற தாயின் அன்பு கட்டளையை மதிக்கும் பொருட்டு செய்த காரியத்தினால் தன் வாழ்க்கையில் இப்போது இத்தனை குழப்பங்கள் முடிச்சிட்டு நிற்கிறதே!!..

ஜீவாவை பற்றிய குழப்பம் தீரும் முன்னே.. அடுத்த இடியாக திவாகருடன் உனக்கு திருமணம்.. என்று அதிகாரத்தோடு தகவல் சொன்ன தந்தையை கண்டு விரக்தியில் மனம் நொந்து போனாள் மான்வி..

பெற்றோர்களிடம் பேசி வேலைக்காகாது என்று உணர்ந்து திவாகரிடம்.. "இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க திவாகர்.. எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.. நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்.. நீங்க வேற என்னை வேதனைப்படுத்தாதீங்க" என்று வீட்டுக்கு பின்னே அழைத்துச் சென்று தனிமையில் அவள் கூறிய போது.. "எல்லாமே உன்னோட நல்லதுக்காக தான் மான்வி.. இந்த கல்யாணத்தின் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்".. கட்டிக் கரும்பை வெட்டி வைத்தார் போல் இனிப்பாக பேசிய விதம் அவளுக்குள் உவப்பை ஏற்படுத்தவில்லை..

அதிலும் அவன் முன்னேறி அணைக்க வந்த கணம் தீப்பட்டது போல் விலகி நின்று.. உக்கிரமாய் முறைத்தாள் மான்வி.. தனக்கு அவ்வளவு கோபம் வருமா என்று வியந்து கொண்ட நொடி அது..

"ஹேய்.. கூல்மா.. சும்மா பிரென்ட்லியா ஹக் செய்ய வந்தேன்.. இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்".. அவன் புன்னகையில் போலி வாடை அடித்ததை அப்போது உணர்ந்து கொண்டாள்.. கோபம் தணியாத முகத்துடன் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளவும்.. "ஏன் உனக்கு அவன் தொட்டாதான் பிடிக்குமா?.. அவனை விட நான் பெட்டரா பண்ணுவேன் பாக்கறியா".. வக்கிரம் கொண்ட பார்வையுடன் அவன் சுய ரூபம் வெளிப்பட்ட முதல் நாள்.. விதிவிதிர்த்து போனாள் மான்வி.. திவாகரிடமிருந்து தன்னை பாதுகாக்க ஜீவா ஏன் அவ்வளவு போராடினான் என இப்போது புரிந்தது..

"ஏன் இப்படி பேசுறீங்க.. உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல.. நீங்க ரொம்ப தப்பா இருக்கீங்க.. சே".. அருவருப்போடு வார்த்தைகளை உமிழ்ந்து விட்டு சென்றாள்..

அவசர திருமணம்.. கண்மூடி திறப்பதற்குள் அடுத்தடுத்து ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருந்தன.. திவாகர் வீட்டிலிருந்து வந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.. பொம்மையாக நின்றாள் மான்வி.. வீட்டை விட்டு ஓட வழியில்லை.. அவளிடமிருந்த போனிலிருந்து ஜீவாவிற்கு அழைத்திருக்க அவன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கணினி பெண் தகவல் கூறினாள்.. நிலமை விபரீதமாக சென்று கொண்டிருப்பதாக உணர்ந்த மான்வியின் இதயத்திற்குள் அதிவேக ரயில் ஒன்று.. சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது..

திருமணத்திற்கு வெகு சில நாட்களே இருந்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டி கொடுத்தது..

தனிமையிலிருந்த அனிதாவிடம் அத்துமீறி நடந்த திவாகரை புலித்தோல் போர்த்திய நரி என்று அப்போதுதான் இனங் கண்டு கொண்டது அந்த குடும்பம்..

"எவ்வளவு தைரியமிருந்தா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருப்ப.. சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா".. என்று முகத்தில் காரி உமிழாத குறையாக அவன் சட்டையை பிடித்து கன்னத்தில் அடிக்க போன நீலகண்டனை கைப்பற்றி தடுத்திருந்தான் திவாகர்..

"இப்ப என்ன நடந்து போச்சு? ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்"... என்று எதுவுமே நடக்காதது போல் சட்டையை உதறிவிட்டுக் கொண்டவன்.. "ஏன்?.. அக்காளை கட்டிக்கிட்டா தங்கச்சியை வச்சிக்கிறது இல்லையா.. பாக்க கொழு கொழுன்னு.. புஷ்டியா இருந்ததில மனசு கொஞ்சம் அடங்காம அலை பாய்ஞ்சிருச்சு.. அதான் எதுவுமே நடக்கலையே அப்புறம் எதுக்கு இந்த ட்ராமா".. தவறு செய்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் திமிராக கேட்டிருந்த திவாகர் மான்வியை தவிர மற்றவர்களின் கண்களுக்கு புதிதாக தெரிந்தான் .. தன்னிடம் அத்துமீறி நடந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அக்காவின் தோள் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் அனிதா..

"உன்னை நல்லவன்னு நினைச்சு வீட்டுக்குள்ள விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தெரிஞ்சு போச்சு.. வெளிய போடா நாயே".. ஆங்காரத்தோடு நீலகண்டன் கத்தியதை தூசி போல் தட்டி விட்டுக் கொண்டவன்..

"அப்படியெல்லாம் வெளியே போக முடியாது.. நிச்சயம் செஞ்ச கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரனும்.. இல்லைனா இங்க ஒருத்தரும் உயிரோடு இருக்க முடியாது"..

"உன் பொண்ணுக்கு கஷ்டப்பட்டு பிராக்கெட் போட்டு கரெக்ட் பண்றதுக்காக.. ஐடி கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா.. எனக்கு முன்னாடி அந்த ஜீவா பிக்கப் பண்ணிட்டு போவான்.. நான் பாத்துக்கிட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சீங்களோ.. அதான் அன்னைக்கி உங்க பொண்ணு பயந்து ஓடி வந்ததை.. எனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு திட்டம் போட்டு காயை நகர்த்தினேன்".. வெற்றிப் புன்னகையுடன் அவன் சொல்லச் சொல்ல அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்..

"இப்போ அந்த ஜீவா கோமாவில் கிடக்கிற இந்த நேரத்துல அவனைப் பத்தி தப்பு தப்பா உங்க கிட்ட சொல்லி அவனால உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படப்போறதா நம்ப வச்சு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சேன்".. திவாகர் இறுமாப்போடு கூறவும்.. நீலகண்டனுக்கு இதயம் தூக்கி வாரி போட்டது..

"அடப் பாவி.. அன்னைக்கு ஜீவா கோமாவில் இருக்கிறதா அவங்க அப்பா சொன்னது உண்மையா?.. அதிரும் நெஞ்சத்தோடு குரலில் நடுங்கினார் நீலகண்டன்.. கால்கள் துவண்டு போக உயிரற்ற ஜடமாக சரிந்து அமர்ந்தாள் மான்வி.. என்றேனும் ஜீவா தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதில் இதய கூட்டுக்குள் கருகிப் போயிருந்தாள் அவள்..

எக்காளமிட்டு சிரித்தான் திவாகர். "ஆமா.. அன்னைக்கு நாங்க போன பைக் சேஸ் பண்ணிட்டு வரும்போது ஆக்சிடென்ட் ஆகி அவன் கோவமாவுக்கு போயிட்டான்".. போலியாக உச் கொட்டியவன்.."இன்னொரு விஷயம் தெரியுமா.. நான் சொன்னதை நம்பி நீங்க பேசின பேச்சுல.. அவனோட அப்பன்.. அதான்.. அந்த விஷ்வமூர்த்தி.. மனசு உடைஞ்சு ஹார்ட் வெடிச்சு செத்துப்போயிட்டான்".. திவாகர் உதட்டை பிதுக்கி சொல்லவும் நீலகண்டன் உறைந்த சிலையானார்.. ரமாவிற்கோ இதயம் திக்கென ஆனது..

"எப்பேர்ப்பட்ட மா பாதகத்திற்கு துணை போயிருக்கிறேன் தெரிந்தோ தெரியாமலோ ஒரு உயிர் போக காரணமாக இருந்து விட்டேனே.. எந்த கங்கைக்கு போய் இந்த பாவத்தை கழுவி தீர்ப்பேன்.. அநியாயமாக ஒரு நல்ல ஆத்மாவை கொன்று குடித்த எனக்கு மன்னிப்பே கிடையாது".. நீலகண்டனின் மனம் ஓலமிட்டு அழுது கொண்டிருக்க.. வெளிப்புறம் சிலையாக நின்று கொண்டிருந்தார் அவர்.. திருமண வீடு.. சற்றுமுன் கசிந்த அதிர்ச்சியான உண்மைகளில் களையிழந்து போயிருந்தது.. வீட்டை சுற்றி பந்தோபஸ்து பலப்படுத்தப்பட்டதில் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை..

ஜீவாவை எதிர்க்க வேதாச்சலம் போன்ற பெரிய தாதாவால்தான் முடியும் என்று தப்பு கணக்கு போட்டிருந்த நீலகண்டன் அடுத்தடுத்து.. வேதாச்சலத்தின் மிரட்டலான நடவடிக்கைகளில் திணறிப் போனார்..

"அப்படி என்ன என் புள்ள பெரிய தப்பு பண்ணிட்டான்.. பொண்ணுங்க கிட்ட அப்படி இப்படி இருக்கிறவன் தான்.. அது என்ன உலக மகா தப்பா?.. அதுக்கு என் புள்ள சட்டையைப் புடிச்சு கேள்வி கேட்டியாமே நீ!!.. நானே என் பிள்ளையை ஒரு வார்த்தை கடிஞ்சு பேசினது இல்லை.. இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு உங்க எல்லோருக்கும்".. நிச்சயதார்த்தத்துக்கு முன் அவர்கள் பேசிய பேச்சுக்கள் என்ன.. இப்போது நடந்து கொள்ளும் முறை தான் என்ன..

இதோ குடும்பமே விரக்தியின் உச்சியில்.. விருப்பமே இல்லாமல் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்..

கண்களை மூடி திறந்தாள் மான்வி.. உருகி உருகி பேசிய போது தோன்றாத காதல்.. முத்தங்களில்.. பார்வைகளில்.. கசியாத காதல்.. அவன் பிரிவில் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டது வரமா.. சாபக்கேடா?.. சுவாசம் தேடும் நுரையீரல் போல்.. அவன் நினைவுகளை சுமந்து கண்ணீரோடு கழிந்த இந்த நாட்களை அவள் தலையணை மட்டும் தான் அறியும்.. என் வாழ்க்கை எப்படியோ நாசமாக போகட்டும்.. கோமாவில் இருப்பவன் நல்லபடியாக குணமாகி வர வேண்டும்.. கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்ள வழியில்லாத நிலையில்.. தன் ஜீவனுக்காக கடவுளை ஆத்மார்த்தமாக தொழுது கொண்டாள் மான்வி..

மணமேடையில் இன்னொருவன் நினைவில் மூழ்கியிருந்த மான்வியின் எண்ண அலைகளை கலைக்கும் விதமாக "கெட்டி மேளம் கெட்டி மேளம்".. மாங்கல்யம் தந்துனானே.. ஐயர் மந்திரங்களை முழங்க.. மேளதாளம் நாதஸ்வர இசையோடு.. அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க.. திவாகர் மான்வியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டும் வேளையில்..

"அம்மாஆஆஆஆ" என்ற அக்னி குண்டத்தை தாண்டி சுருண்டு விழுந்திருந்தான் அவன்..

ஓரிரு கணங்கள் அங்கு என்ன நடக்கிறதென்று புரியாமல் கூட்டம் சலசலத்துக் கொண்டிருக்க.. "ஐயோ மகனே" என்று ஓடி வந்தாள் அவன் தாய்.. மான்வியும் நடப்பது இன்னதென உணராமல்.. அலைபாயும் விழிகளோடு விழித்துக் கொண்டிருக்க.. சட்டென ஒரு கரம் முரட்டுத்தனமாக அவளை தூக்கி நிறுத்தியது..

"ஜீவாஆஆஆஆ".. அவள் இதழ்கள் முனுமுனுக்க.. எதற்கும் அவகாசம் கொடுக்காமல்.. சட்டை பாக்கெட்டிலிருந்து தங்கத்தாலியை எடுத்து மான்வியின் கழுத்தில் அணிவித்து அவளை தன் மனைவியாக்கி இருந்தான் ஜீவா..

தன் இளையமகன் தாலிகட்ட வேண்டிய பெண்ணுக்கு தன் மூத்தமகன் தாலிகட்டி மனைவியாக்கி கொண்டதில் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் ஜீவாவின் தாய் காஞ்சனா..

ஆம்.. ஜீவாவை பெற்றவள்தான் திவாகரின் அன்னையும் கூட.. விஷ்வமூர்த்தியின் முன்னாள் மனைவி காஞ்சனா..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
May 22, 2023
Messages
3
Enna sollanae theriyala😥😢
It's ok jeeva needs manvii😤
Manasa samathanam panikuren
 
New member
Joined
May 17, 2023
Messages
6
Ipadi oru twist ah ethir pakkalaiye😲 paravala inime than jeevanoda torture anupavikka pora manvi🥲🥲 epdiyavathu puriya vachuru avanuku🥲🥲🥲
 
Joined
Jul 25, 2023
Messages
36
டுவிஸ்ட் எதிர்பார்த்தேன் ஆனால் இவ்வளோ பெரிய சைஸ்ல எதிர்பார்க்கல.

எப்படியும் ஜீவா மான்சிய விட மாட்டான்னு தெரியும்

ஆனால் திவாகர் அம்மா திவாகர் கேரக்டர் இதெல்லாம் ரொம்ப எதிர்பாராதது மேம்.

ரொம்ப திரில்லிங்க இருக்கு மேம்

நன்றி சகி ❤️♥️♥️
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
Naan sonna mathiri jeeva vanthutan kappatha....... But diwakar thambi nnu solluratha ethir parkala.... Appadi ethir parkama niraiya twist vaikirathuthan enga sisy yoda special....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
New member
Joined
Aug 22, 2023
Messages
14
ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் திவாகர்.. சுற்றிலும் பாதுகாப்பிற்காக அடியாட்கள் நிற்க வைக்கப்பட்டிருக்க.. வேண்டாவெறுப்பாக அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத இறுகிய முகத்துடன் வந்தவர்களை கூட வரவேற்க மனமில்லாது.. ஓரமாக நின்று கொண்டிருந்தார் நீலகண்டன்..

திருமண கொண்டாட்டத்திற்கு ஏற்ற உற்சாகமோ.. குதூகலமோ இல்லாமல்.. மணக்கோலத்தில் அமர்ந்திருந்த அக்காவின் பக்கத்தில் முகத்தில் ஒளியே இல்லாமல் நின்று கொண்டிருந்தனர் அனிதாவும் நிவினும்..

"முகத்தை சிரிச்ச மாதிரி வச்சிரு.. பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையான்னு.. உன் முகத்தை பார்த்து இந்த கூட்டத்தில் ஒருத்தன் கேள்வி கேட்டாலும்.. அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை".. திவாகர் பற்களை கடித்துக் கொண்டு அவள் காதுக்குள் முணுமுணுத்ததில்.. உயிர்பில்லாத புன்னகை.. தேவையில்லாமல் உறைந்து நின்றது அவள் இதழ்களில்..

"ஹ்ம்ம்.. அது".. ஆணவப் புன்னகையோடு இதழ் வளைத்தவன் ஐயர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை சிரத்தையாக உச்சரித்துக் கொண்டிருந்தான்.. "பாஸ் பொண்ணோட அம்மாவை காணும்".. எங்கிருந்தோ வந்து திவாகர் காதினுள் கிசுகிசுப்பாய் சொன்னான் ஒருவன்..

"என்னடா சொல்றீங்க அவங்களை வெளியே போக விட்டுட்டு.. ம**ப் புடுங்கிட்டு இருந்தீங்களா.. இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள அவங்க என் முன்னாடி வந்து நிக்கணும் இல்லன்னா.. ஒருத்தரையும் உயிரோடு விடமாட்டேன்".. அக்னி குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு இணையாக செந்தணலாக தகித்தான் திவாகர்..

"என்னடி உங்க அம்மாவை வெளியே தப்பிக்க விட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்னு பாக்கறியா.. நிச்சயமா நடக்காது.. ஒரே நிமிஷத்துல உங்க குடும்பத்துல ஒருத்தர் விடாம உருத் தெரியாம அழிச்சிடுவேன் பாக்கறியா?".. அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் உச்சரித்த வார்த்தைகள் இதயத்துக்குள் பேரிடியாய் இறங்கின.. "அம்மாவை காணுமா?.. எங்க போனாங்கன்னு தெரியலையே".. பரிதவிப்போடு அவள் விழிகள் அலைபாய.. "கடவுளே என்னோட அம்மாவை உயிரோடு மீட்டு கொடுத்துடு".. அவள் நெஞ்சம் பெற்ற தாய்க்காக கண்ணீரோடு வேண்டுதல் வைத்தது.. அழும் பெண்ணிற்கு ஓம குண்ட புகை சாதமாகிப் போனது.. கண்ணெரிச்சல் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்..

சில நிமிடங்களுக்கு பின் கலங்கிய கண்களும் பயந்த முகமுமாக அங்கே வந்து நின்ற ரமாவை கண்ட பிறகே.. மிகப்பெரிய துயர் தீர்ந்ததாய் மான்விக்கு இதயத்துடிப்பு சீராகியதில் ஆழ்ந்த பெருமூச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன..

"அவங்க இங்க தானடா இருக்காங்க.. என்னத்தடா பாத்தீங்க".. கண்முன்னே நின்று கொண்டிருந்த ரமாவைக் கண்டு.. அடிக்காத குறையாக தன் பக்கத்தில் நின்றிருந்தவனை திவாகர் பார்வையால் எரிக்கவும்.. "அதெப்படி சாத்தியம்.. இவ்வளவு நேரம் இங்கே இல்லையே!!.. எப்படி வந்தாங்க".. குழப்பத்தோடு தலையை சொரிந்தான் அவன்..

அன்னை எங்கே சென்று வந்திருக்கிறாள்.. என்று அவளுக்கு தெரியவில்லை.. தன் குடும்பத்தால் நடந்து போன மிகப் பெரிய தவறுக்கு தண்டனையாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தயாராகி இருந்தாள் மான்வி..

ஜீவாவின் தந்தை இறப்புக்கு காரணமானவர்கள் தாங்கள் என்ற குற்ற உணர்ச்சியே அணு அணுவாக சிதைத்து கொண்டிருக்கும் நிலையில்.. கழுத்தை நெறிக்கும் தூக்குகயிறாய் இந்த திருமணம் ..

குண்டு குண்டாக ஆட்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்க.. அந்த ஊரையே வளைத்து போட்ட தாதாவாக பெரிய பெரிய சங்கிலி போன்ற நகைகளுடன் நடுநாயகமாக அமர்ந்திருந்த வேதாச்சலமும் அவர் மனைவியும்.. கர்வப் புன்னகை ததும்பிய முகத்தோடு மணமேடையில் அமர்ந்திருந்த மகனை பூரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.. இப்படி ஒரு மகனை பெறுவதற்கு தவமாய் தவமிருந்திருக்க வேண்டும்.. மான்வியை தன் வலையில் சிக்க வைப்பதற்காக அத்தனையும் அவன் நடத்திய நாடகம்.. என்று அவள் உணரும் வேளையில் நிலைமை கைமீறிப் போயிருந்தது..

"இப்போதைக்கு மான்வி வேலைக்கு போக வேண்டாம்.. அந்த ஜீவாவால இவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம்".. என்று மான்வியை திட்டம் போட்டு வீட்டில் நிறுத்தியபோதே.. எதற்காக என்னை சிறை வைக்க நினைக்கிறான் அவள் மூலையில் பல சந்தேகங்கள் உருவாகியது..

"ஜீவா ரொம்ப மூர்க்கமா இருக்கான்.. உங்களை கொன்னு போட்டுட்டு கூட மான்வியை தூக்கிட்டு போக வாய்ப்பிருக்கு".. என்று வீட்டை சுற்றிலும் அடியாட்களை நிற்க வைத்து இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க வைத்த திவாகர் வித்தியாசமாக தெரிந்தான்.. பழைய சினேகம் மறந்து அவன் சிறுத்தை விழிகள் ஏதோ ஒரு தீவிரத்தில் பளபளத்து மின்னியதை மான்வியின் உள்ளுணர்வு புரிந்து கொண்டது.. "அவன் பார்வையே சரியில்ல" ஜீவாவின் வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டன..

அப்படியானால் ஜீவா கோமாவிற்கு சென்ற விஷயம்?.. விஷ்வ மூர்த்தி வந்து சொன்னபோது.. நீலகண்டன் இரக்கமில்லாமல் பேசியதற்கும் மான்வி கல்லாக நின்றதற்கும் காரணம் உண்டோ!!.. அங்கு தான் திவாகரன் தந்திரம் படு சாமர்த்தியமாக வேலை செய்திருக்கிறது..

ஜீவாவின் நிலையும் விஷ்வமூர்த்தி இறந்து போன விஷயமும்.. நீலகண்டன் குடும்பத்திற்கு தெரிய வரும்போது.. மான்விக்கும் திவாகருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு.. தன் முகமூடியை கிழித்தெறிந்து சுய ரூபத்தோடு வலம் வந்து கொண்டிருந்தான் அவன்..

ஜீவா படு கொடூரனாக உருவகப்படுத்தப்பட்டு.. நீலகண்டனின் குடும்பம் நிம்மதியில்லாமல் தவித்து அஞ்சு நடுங்கிக் கொண்டிருந்த வேளையில்.. "இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வர ஒரே ஒரு வழி தான் இருக்கு.. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறீர்களா!!".. திவாகரனின் ஆதுரமான பேச்சில் நீலகண்டனின் முகம் மலர்ந்து மனம் நிம்மதியில் இளைப்பாறிய போது.. அமிலக் குடுவையில் விழுந்த பொன்வண்டாக துடித்தாள் மான்வி..

திவாகர் போல் ஒரு கணவன் தனக்கு வாய்க்க வேண்டும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டது உண்மைதான்.. ஆனால் திவாகர் மேல் ஆசைப்படவில்லையே!!.. அவன் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.. அதற்காக கணவனாக நினைத்து பார்க்க முடியுமா?.. நிச்சயம் முடியாது..

"உங்க மகளை எனக்கு திருமணம் செஞ்சு கொடுக்கிறீர்களா" என்று கேட்ட அந்த கணம்.. இதயத்தில் வரையப் படாத ஓவியமாக நிறைந்து போனவன் ஜீவா.. சதா சர்வ காலமும் தன்னை துளைத்துக் கொண்டிருந்த அந்த முரட்டு நேசத்தை.. இத்தனை நாட்களாக அவள் தேடவில்லை என்று எளிதில் சொல்லி விட முடியுமா!!.. திவாகர் மூலம் பல கதைகள் கட்டப்பட்டு ஜீவா அரக்கனாக அனைவரும் முன்னிலையிலும் கற்பனையாக விஸ்வரூபம் எடுத்த போதிலும்.. ஒருமுறையாவது அவனை பார்த்து விட முடியாதா என்று தவித்துக் கொண்டிருந்த அந்த தவிப்பைதான் பொய்யென்று சொல்லி விட முடியுமா!!..

அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.. அவளாக ஜீவாவை காதலிக்கவில்லை.. கட்டாயத்தின் பேரில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் காதலிக்க வைக்கப்பட்டாள்.. சிறு வயதிலிருந்து புகுத்தப்பட்ட போதனைகளால்.. ஜீவாவின் அளவு கடந்த நேசம் கொடுத்த ஒவ்வாமையில் வெறுக்க வைக்கப் பட்டாள்..

வெறுக்கிறேன் என்றால் ஏன் அவனை தேடி என் மனம் அலை பாய்கிறது.. "ஜீவா அப்படிப்பட்டவர் இல்லம்மா" என்று ஏன் என் தாய் தந்தையிடம் வாய் வலிக்க வாதாடி கொண்டிருக்கிறேன்.. அன்று காருக்குள்.. தனக்கும் அவருக்கு மட்டும் நடந்த அந்தரங்கமான விஷயத்தை தாய் தந்தையிடம் சொல்லி இருக்கக் கூடாதோ!!.. அம்மா கிட்ட எதையும் மறைக்க கூடாது என்ற தாயின் அன்பு கட்டளையை மதிக்கும் பொருட்டு செய்த காரியத்தினால் தன் வாழ்க்கையில் இப்போது இத்தனை குழப்பங்கள் முடிச்சிட்டு நிற்கிறதே!!..

ஜீவாவை பற்றிய குழப்பம் தீரும் முன்னே.. அடுத்த இடியாக திவாகருடன் உனக்கு திருமணம்.. என்று அதிகாரத்தோடு தகவல் சொன்ன தந்தையை கண்டு விரக்தியில் மனம் நொந்து போனாள் மான்வி..

பெற்றோர்களிடம் பேசி வேலைக்காகாது என்று உணர்ந்து திவாகரிடம்.. "இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க திவாகர்.. எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.. நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்.. நீங்க வேற என்னை வேதனைப்படுத்தாதீங்க" என்று வீட்டுக்கு பின்னே அழைத்துச் சென்று தனிமையில் அவள் கூறிய போது.. "எல்லாமே உன்னோட நல்லதுக்காக தான் மான்வி.. இந்த கல்யாணத்தின் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்".. கட்டிக் கரும்பை வெட்டி வைத்தார் போல் இனிப்பாக பேசிய விதம் அவளுக்குள் உவப்பை ஏற்படுத்தவில்லை..

அதிலும் அவன் முன்னேறி அணைக்க வந்த கணம் தீப்பட்டது போல் விலகி நின்று.. உக்கிரமாய் முறைத்தாள் மான்வி.. தனக்கு அவ்வளவு கோபம் வருமா என்று வியந்து கொண்ட நொடி அது..

"ஹேய்.. கூல்மா.. சும்மா பிரென்ட்லியா ஹக் செய்ய வந்தேன்.. இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்".. அவன் புன்னகையில் போலி வாடை அடித்ததை அப்போது உணர்ந்து கொண்டாள்.. கோபம் தணியாத முகத்துடன் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளவும்.. "ஏன் உனக்கு அவன் தொட்டாதான் பிடிக்குமா?.. அவனை விட நான் பெட்டரா பண்ணுவேன் பாக்கறியா".. வக்கிரம் கொண்ட பார்வையுடன் அவன் சுய ரூபம் வெளிப்பட்ட முதல் நாள்.. விதிவிதிர்த்து போனாள் மான்வி.. திவாகரிடமிருந்து தன்னை பாதுகாக்க ஜீவா ஏன் அவ்வளவு போராடினான் என இப்போது புரிந்தது..

"ஏன் இப்படி பேசுறீங்க.. உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல.. நீங்க ரொம்ப தப்பா இருக்கீங்க.. சே".. அருவருப்போடு வார்த்தைகளை உமிழ்ந்து விட்டு சென்றாள்..

அவசர திருமணம்.. கண்மூடி திறப்பதற்குள் அடுத்தடுத்து ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருந்தன.. திவாகர் வீட்டிலிருந்து வந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.. பொம்மையாக நின்றாள் மான்வி.. வீட்டை விட்டு ஓட வழியில்லை.. அவளிடமிருந்த போனிலிருந்து ஜீவாவிற்கு அழைத்திருக்க அவன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கணினி பெண் தகவல் கூறினாள்.. நிலமை விபரீதமாக சென்று கொண்டிருப்பதாக உணர்ந்த மான்வியின் இதயத்திற்குள் அதிவேக ரயில் ஒன்று.. சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது..

திருமணத்திற்கு வெகு சில நாட்களே இருந்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டி கொடுத்தது..

தனிமையிலிருந்த அனிதாவிடம் அத்துமீறி நடந்த திவாகரை புலித்தோல் போர்த்திய நரி என்று அப்போதுதான் இனங் கண்டு கொண்டது அந்த குடும்பம்..

"எவ்வளவு தைரியமிருந்தா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருப்ப.. சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா".. என்று முகத்தில் காரி உமிழாத குறையாக அவன் சட்டையை பிடித்து கன்னத்தில் அடிக்க போன நீலகண்டனை கைப்பற்றி தடுத்திருந்தான் திவாகர்..

"இப்ப என்ன நடந்து போச்சு? ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்"... என்று எதுவுமே நடக்காதது போல் சட்டையை உதறிவிட்டுக் கொண்டவன்.. "ஏன்?.. அக்காளை கட்டிக்கிட்டா தங்கச்சியை வச்சிக்கிறது இல்லையா.. பாக்க கொழு கொழுன்னு.. புஷ்டியா இருந்ததில மனசு கொஞ்சம் அடங்காம அலை பாய்ஞ்சிருச்சு.. அதான் எதுவுமே நடக்கலையே அப்புறம் எதுக்கு இந்த ட்ராமா".. தவறு செய்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் திமிராக கேட்டிருந்த திவாகர் மான்வியை தவிர மற்றவர்களின் கண்களுக்கு புதிதாக தெரிந்தான் .. தன்னிடம் அத்துமீறி நடந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அக்காவின் தோள் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் அனிதா..

"உன்னை நல்லவன்னு நினைச்சு வீட்டுக்குள்ள விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தெரிஞ்சு போச்சு.. வெளிய போடா நாயே".. ஆங்காரத்தோடு நீலகண்டன் கத்தியதை தூசி போல் தட்டி விட்டுக் கொண்டவன்..

"அப்படியெல்லாம் வெளியே போக முடியாது.. நிச்சயம் செஞ்ச கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரனும்.. இல்லைனா இங்க ஒருத்தரும் உயிரோடு இருக்க முடியாது"..

"உன் பொண்ணுக்கு கஷ்டப்பட்டு பிராக்கெட் போட்டு கரெக்ட் பண்றதுக்காக.. ஐடி கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா.. எனக்கு முன்னாடி அந்த ஜீவா பிக்கப் பண்ணிட்டு போவான் நான் பாத்துக்கிட்டு சும்மா இருப்பேன்னு நினைச்ச்சீங்களோ.. அதான் அன்னைக்கி உங்க பொண்ணு பயந்து ஓடி வந்ததை.. எனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு திட்டம் போட்டு காயை நகர்த்தினேன்".. அவன் சொல்லச் சொல்ல அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்..

"இப்போ அந்த ஜீவா கோமாவில் கிடக்கிற இந்த நேரத்துல அவனைப் பத்தி தப்பு தப்பா உங்க கிட்ட சொல்லி அவனால உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படப்போறதா நம்ப வச்சு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சேன்".. திவாகர் இறுமாப்போடு கூறவும்.. நீலகண்டனுக்கு இதயம் தூக்கி வாரி போட்டது..

"அடப் பாவி.. அன்னைக்கு ஜீவா கோமாவில் இருக்கிறதா அவங்க அப்பா சொன்னது உண்மையா?.. அதிரும் நெஞ்சத்தோடு குரலில் நடுங்கினார் நீலகண்டன்.. கால்கள் துவண்டு போக உயிரற்ற ஜடமாக சரிந்து அமர்ந்தாள் மான்வி.. என்றேனும் ஜீவா தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதில் இதய கூட்டுக்குள் கருகிப் போயிருந்தாள் அவள்..

எக்காளமிட்டு சிரித்தான் திவாகர். "ஆமா.. அன்னைக்கு நாங்க போன பைக் சேஸ் பண்ணிட்டு வரும்போது ஆக்சிடென்ட் ஆகி அவன் கோவமாவுக்கு போயிட்டான்".. போலியாக உச் கொட்டியவன்.."இன்னொரு விஷயம் தெரியுமா.. நான் சொன்னதை நம்பி நீங்க பேசின பேச்சுல.. அவனோட அப்பன்.. அதான்.. அந்த விஷ்வமூர்த்தி.. மனசு உடைஞ்சு ஹார்ட் வெடிச்சு செத்துப்போயிட்டான்".. திவாகர் உதட்டை பிதுக்கி சொல்லவும் நீலகண்டன் உறைந்த சிலையானார்.. ரமாவிற்கோ இதயம் திக்கென ஆனது..

"எப்பேர்ப்பட்ட மா பாதகத்திற்கு துணை போயிருக்கிறேன் தெரிந்தோ தெரியாமலோ ஒரு உயிர் போக காரணமாக இருந்து விட்டேனே.. எந்த கங்கைக்கு போய் இந்த பாவத்தை கழுவி தீர்ப்பேன்.. அநியாயமாக ஒரு நல்ல ஆத்மாவை கொன்று குடித்த எனக்கு மன்னிப்பே கிடையாது".. நீலகண்டனின் மனம் ஓலமிட்டு அழுது கொண்டிருக்க.. வெளிப்புறம் சிலையாக நின்று கொண்டிருந்தார் அவர்.. திருமண வீடு.. சற்றுமுன் கசிந்த அதிர்ச்சியான உண்மைகளில் களையிழந்து போயிருந்தது.. வீட்டை சுற்றி பந்தோபஸ்து பலப்படுத்தப்பட்டதில் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை..

ஜீவாவை எதிர்க்க வேதாச்சலம் போன்ற பெரிய தாதாவால்தான் முடியும் என்று தப்பு கணக்கு போட்டிருந்த நீலகண்டன் அடுத்தடுத்து.. வேதாச்சலத்தின் மிரட்டலான நடவடிக்கைகளில் திணறிப் போனார்..

"அப்படி என்ன என் புள்ள பெரிய தப்பு பண்ணிட்டான்.. பொண்ணுங்க கிட்ட அப்படி இப்படி இருக்கிறவன் தான்.. அது என்ன உலக மகா தப்பா?.. அதுக்கு என் புள்ள சட்டையைப் புடிச்சு கேள்வி கேட்டியாமே நீ!!.. நானே என் பிள்ளையை ஒரு வார்த்தை கடிஞ்சு பேசினது இல்லை.. இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு உங்க எல்லோருக்கும்".. நிச்சயதார்த்தத்துக்கு முன் அவர்கள் பேசிய பேச்சுக்கள் என்ன.. இப்போது நடந்து கொள்ளும் முறை தான் என்ன..

இதோ குடும்பமே விரக்தியின் உச்சியில்.. விருப்பமே இல்லாமல் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்..

கண்களை மூடி திறந்தாள் மான்வி.. உருகி உருகி பேசிய போது தோன்றாத காதல்.. முத்தங்களில்.. பார்வைகளில்.. கசியாத காதல்.. அவன் பிரிவில் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டது.. சுவாசம் தேடும் நுரையீரல் போல்.. அவன் நினைவுகளை சுமந்து கண்ணீரோடு கழிந்த இந்த நாட்களை அவள் தலையணை மட்டும் தான் அறியும்.. என் வாழ்க்கை எப்படியோ நாசமாக போகட்டும் கோமாவில் இருப்பவன் நல்லபடியாக குணமாகி வர வேண்டும்.. கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்ள வழியில்லாத நிலையில்.. கடவுளை ஆத்மார்த்தமாக தொழுது கொண்டாள் மான்வி..

"கெட்டி மேளம் கெட்டி மேளம்".. மாங்கல்யம் தந்துனானே.. ஐயர் மந்திரங்களை முழங்க.. மேளதாளம் நாதஸ்வர இசையோடு.. அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க.. திவாகர் மான்வியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டும் வேளையில்..

"அம்மாஆஆஆஆ" என்ற அக்னி குண்டத்தை தாண்டி சுருண்டு விழுந்திருந்தான் அவன்..

ஓரிரு கணங்கள் அங்கு என்ன நடக்கிறதென்று புரியாமல் கூட்டம் சலசலத்துக் கொண்டிருக்க.. "ஐயோ மகனே" என்று ஓடி வந்தாள் அவன் தாய்.. மான்வியும் நடப்பது இன்னதென உணராமல்.. அலைபாயும் விழிகளோடு விழித்துக் கொண்டிருக்க.. சட்டென ஒரு கரம் முரட்டுத்தனமாக அவளை தூக்கி நிறுத்தியது..

"ஜீவாஆஆஆஆ".. அவள் இதழ்கள் முனுமுனுக்க.. எதற்கும் அவகாசம் கொடுக்காமல்.. சட்டை பாக்கெட்டிலிருந்து தங்கத்தாலியை எடுத்து மான்வியின் கழுத்தில் அணிவித்து அவளை தன் மனைவியாக்கி இருந்தான் ஜீவா..

தன் இளையமகன் தாலிகட்ட வேண்டிய பெண்ணுக்கு தன் மூத்தமகன் தாலிகட்டி மனைவியாக்கி கொண்டதில் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் ஜீவாவின் தாய் காஞ்சனா..

ஆம்.. ஜீவாவை பெற்றவள்தான் திவாகரின் அன்னையும் கூட.. விஷ்வமூர்த்தியின் முன்னாள் மனைவி காஞ்சனா..

தொடரும்..
Super...Sema twist
 
Member
Joined
Jan 11, 2023
Messages
17
Sema sema sema twist. Aana sis yen divakar ivalo Vela paarthu maanviya kalyanam pannanumnu.... Nenaichaan.... Edhavadhu pagaiya....
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
Sagi nanga ethir பார்க்க வில்லை eppadi ஒரு twist. Super sana akka ungalal than eppadi elutha mudiyuthu. After jeeva Aaddam start thivakar & jeeva vin amma entra kansana athai paddikka ஆர்வமாக இருக்கிறது.
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான் திவாகர்.. சுற்றிலும் பாதுகாப்பிற்காக அடியாட்கள் நிற்க வைக்கப்பட்டிருக்க.. வேண்டாவெறுப்பாக அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத இறுகிய முகத்துடன் வந்தவர்களை கூட வரவேற்க மனமில்லாது.. ஓரமாக நின்று கொண்டிருந்தார் நீலகண்டன்..

திருமண கொண்டாட்டத்திற்கு ஏற்ற உற்சாகமோ.. குதூகலமோ இல்லாமல்.. மணக்கோலத்தில் அமர்ந்திருந்த அக்காவின் பக்கத்தில் முகத்தில் ஒளியே இல்லாமல் நின்று கொண்டிருந்தனர் அனிதாவும் நிவினும்..

"முகத்தை சிரிச்ச மாதிரி வச்சிரு.. பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையான்னு.. உன் முகத்தை பார்த்து இந்த கூட்டத்தில் ஒருத்தன் கேள்வி கேட்டாலும்.. அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை".. திவாகர் பற்களை கடித்துக் கொண்டு அவள் காதுக்குள் முணுமுணுத்ததில்.. உயிர்பில்லாத புன்னகை.. தேவையில்லாமல் உறைந்து நின்றது அவள் இதழ்களில்..

"ஹ்ம்ம்.. அது".. ஆணவப் புன்னகையோடு இதழ் வளைத்தவன் ஐயர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை சிரத்தையாக உச்சரித்துக் கொண்டிருந்தான்.. "பாஸ் பொண்ணோட அம்மாவை காணும்".. எங்கிருந்தோ வந்து திவாகர் காதினுள் கிசுகிசுப்பாய் சொன்னான் ஒருவன்..

"என்னடா சொல்றீங்க அவங்களை வெளியே போக விட்டுட்டு.. ம**ப் புடுங்கிட்டு இருந்தீங்களா.. இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள அவங்க என் முன்னாடி வந்து நிக்கணும் இல்லன்னா.. ஒருத்தரையும் உயிரோடு விடமாட்டேன்".. அக்னி குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு இணையாக செந்தணலாக தகித்தான் திவாகர்..

"என்னடி உங்க அம்மாவை வெளியே தப்பிக்க விட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்னு பாக்கறியா.. நிச்சயமா நடக்காது.. ஒரே நிமிஷத்துல உங்க குடும்பத்துல ஒருத்தர் விடாம உருத் தெரியாம அழிச்சிடுவேன் பாக்கறியா?".. அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் உச்சரித்த வார்த்தைகள் இதயத்துக்குள் பேரிடியாய் இறங்கின.. "அம்மாவை காணுமா?.. எங்க போனாங்கன்னு தெரியலையே".. பரிதவிப்போடு அவள் விழிகள் அலைபாய.. "கடவுளே என்னோட அம்மாவை உயிரோடு மீட்டு கொடுத்துடு".. அவள் நெஞ்சம் பெற்ற தாய்க்காக கண்ணீரோடு வேண்டுதல் வைத்தது.. அழும் பெண்ணிற்கு ஓம குண்ட புகை சாதமாகிப் போனது.. கண்ணெரிச்சல் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்..

சில நிமிடங்களுக்கு பின் கலங்கிய கண்களும் பயந்த முகமுமாக அங்கே வந்து நின்ற ரமாவை கண்ட பிறகே.. மிகப்பெரிய துயர் தீர்ந்ததாய் மான்விக்கு இதயத்துடிப்பு சீராகியதில் ஆழ்ந்த பெருமூச்சுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன..

"அவங்க இங்க தானடா இருக்காங்க.. என்னத்தடா பாத்தீங்க".. கண்முன்னே நின்று கொண்டிருந்த ரமாவைக் கண்டு.. அடிக்காத குறையாக தன் பக்கத்தில் நின்றிருந்தவனை திவாகர் பார்வையால் எரிக்கவும்.. "அதெப்படி சாத்தியம்.. இவ்வளவு நேரம் இங்கே இல்லையே!!.. எப்படி வந்தாங்க".. குழப்பத்தோடு தலையை சொரிந்தான் அவன்..

அன்னை எங்கே சென்று வந்திருக்கிறாள்.. என்று அவளுக்கு தெரியவில்லை.. தன் குடும்பத்தால் நடந்து போன மிகப் பெரிய தவறுக்கு தண்டனையாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தயாராகி இருந்தாள் மான்வி..

ஜீவாவின் தந்தை இறப்புக்கு காரணமானவர்கள் தாங்கள் என்ற குற்ற உணர்ச்சியே அணு அணுவாக சிதைத்து கொண்டிருக்கும் நிலையில்.. கழுத்தை நெறிக்கும் தூக்குகயிறாய் இந்த திருமணம் ..

குண்டு குண்டாக ஆட்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்க.. அந்த ஊரையே வளைத்து போட்ட தாதாவாக பெரிய பெரிய சங்கிலி போன்ற நகைகளுடன் நடுநாயகமாக அமர்ந்திருந்த வேதாச்சலமும் அவர் மனைவியும்.. கர்வப் புன்னகை ததும்பிய முகத்தோடு மணமேடையில் அமர்ந்திருந்த மகனை பூரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.. இப்படி ஒரு மகனை பெறுவதற்கு தவமாய் தவமிருந்திருக்க வேண்டும்.. மான்வியை தன் வலையில் சிக்க வைப்பதற்காக அத்தனையும் அவன் நடத்திய நாடகம்.. என்று அவள் உணரும் வேளையில் நிலைமை கைமீறிப் போயிருந்தது..

"இப்போதைக்கு மான்வி வேலைக்கு போக வேண்டாம்.. அந்த ஜீவாவால இவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம்".. என்று மான்வியை திட்டம் போட்டு வீட்டில் நிறுத்தியபோதே.. எதற்காக என்னை சிறை வைக்க நினைக்கிறான் அவள் மூளையில் பல சந்தேகங்கள் உருவாகியது..

"ஜீவா ரொம்ப மூர்க்கமா இருக்கான்.. உங்களை கொன்னு போட்டுட்டு கூட மான்வியை தூக்கிட்டு போக வாய்ப்பிருக்கு".. என்று வீட்டை சுற்றிலும் அடியாட்களை நிற்க வைத்து இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க வைத்த திவாகர் வித்தியாசமாக தெரிந்தான்.. பழைய சினேகம் மறந்து அவன் சிறுத்தை விழிகள் ஏதோ ஒரு தீவிரத்தில் பளபளத்து மின்னியதை மான்வியின் உள்ளுணர்வு புரிந்து கொண்டது.. "அவன் பார்வையே சரியில்ல" ஜீவாவின் வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டன..

அப்படியானால் ஜீவா கோமாவிற்கு சென்ற விஷயம்?.. விஷ்வ மூர்த்தி வந்து சொன்னபோது.. நீலகண்டன் இரக்கமில்லாமல் பேசியதற்கும் மான்வி கல்லாக நின்றதற்கும் காரணம் உண்டோ!!.. அங்கு தான் திவாகரன் தந்திரம் படு சாமர்த்தியமாக வேலை செய்திருக்கிறது..

ஜீவாவின் நிலையும் விஷ்வமூர்த்தி இறந்து போன விஷயமும்.. நீலகண்டன் குடும்பத்திற்கு தெரிய வரும்போது.. மான்விக்கும் திவாகருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு.. தன் முகமூடியை கிழித்தெறிந்து சுய ரூபத்தோடு வலம் வந்து கொண்டிருந்தான் அவன்..

ஜீவா படு கொடூரனாக உருவகப்படுத்தப்பட்டு.. நீலகண்டனின் குடும்பம் நிம்மதியில்லாமல் தவித்து அஞ்சு நடுங்கிக் கொண்டிருந்த வேளையில்.. "இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வர ஒரே ஒரு வழி தான் இருக்கு.. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறீர்களா!!".. திவாகரனின் ஆதுரமான பேச்சில் நீலகண்டனின் முகம் மலர்ந்து மனம் நிம்மதியில் இளைப்பாறிய போது.. அமிலக் குடுவையில் விழுந்த பொன்வண்டாக துடித்தாள் மான்வி..

திவாகர் போல் ஒரு கணவன் தனக்கு வாய்க்க வேண்டும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டது உண்மைதான்.. ஆனால் திவாகர் மேல் ஆசைப்படவில்லையே!!.. அவன் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.. அதற்காக கணவனாக தன் நெஞ்சத்தில் வைத்து அழகு பார்க்க ஒப்பவில்லை..

"உங்க மகளை எனக்கு திருமணம் செஞ்சு கொடுக்கிறீர்களா" என்று கேட்ட அந்த கணம்.. இதயத்தில் வரையப் படாத ஓவியமாக நிறைந்து போனவன் ஜீவா.. சதா சர்வ காலமும் தன்னை துளைத்துக் கொண்டிருந்த அந்த முரட்டு நேசத்தை.. இத்தனை நாட்களாக அவள் தேடவில்லை என்று எளிதில் சொல்லி விட முடியுமா!!.. திவாகர் மூலம் பல கதைகள் கட்டப்பட்டு ஜீவா அரக்கனாக அனைவரும் முன்னிலையிலும் கற்பனையாக விஸ்வரூபம் எடுத்த போதிலும்.. ஒருமுறையாவது அவனை பார்த்து விட முடியாதா என்று தவித்துக் கொண்டிருந்த அந்த தவிப்பைதான் பொய்யென்று ஒதுக்கித் தள்ளி விட முடியுமா!!..

அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.. அவளாக ஜீவாவை காதலிக்கவில்லை.. கட்டாயத்தின் பேரில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் காதலிக்க வைக்கப்பட்டாள்.. சிறு வயதிலிருந்து புகுத்தப்பட்ட போதனைகளால்.. ஜீவாவின் அளவு கடந்த நேசம் கொடுத்த ஒவ்வாமையில் வெறுக்க வைக்கப் பட்டாள்..

வெறுக்கிறேன் என்றால் ஏன் அவனை தேடி என் மனம் அலை பாய்கிறது.. "ஜீவா அப்படிப்பட்டவர் இல்லம்மா" என்று ஏன் என் தாய் தந்தையிடம் வாய் வலிக்க வாதாடி கொண்டிருக்கிறேன்.. அன்று காருக்குள்.. தனக்கும் அவருக்கு மட்டும் நடந்த அந்தரங்கமான விஷயத்தை தாய் தந்தையிடம் சொல்லி இருக்கக் கூடாதோ!!.. அம்மா கிட்ட எதையும் மறைக்க கூடாது என்ற தாயின் அன்பு கட்டளையை மதிக்கும் பொருட்டு செய்த காரியத்தினால் தன் வாழ்க்கையில் இப்போது இத்தனை குழப்பங்கள் முடிச்சிட்டு நிற்கிறதே!!..

ஜீவாவை பற்றிய குழப்பம் தீரும் முன்னே.. அடுத்த இடியாக திவாகருடன் உனக்கு திருமணம்.. என்று அதிகாரத்தோடு தகவல் சொன்ன தந்தையை கண்டு விரக்தியில் மனம் நொந்து போனாள் மான்வி..

பெற்றோர்களிடம் பேசி வேலைக்காகாது என்று உணர்ந்து திவாகரிடம்.. "இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க திவாகர்.. எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.. நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்.. நீங்க வேற என்னை வேதனைப்படுத்தாதீங்க" என்று வீட்டுக்கு பின்னே அழைத்துச் சென்று தனிமையில் அவள் கூறிய போது.. "எல்லாமே உன்னோட நல்லதுக்காக தான் மான்வி.. இந்த கல்யாணத்தின் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்".. கட்டிக் கரும்பை வெட்டி வைத்தார் போல் இனிப்பாக பேசிய விதம் அவளுக்குள் உவப்பை ஏற்படுத்தவில்லை..

அதிலும் அவன் முன்னேறி அணைக்க வந்த கணம் தீப்பட்டது போல் விலகி நின்று.. உக்கிரமாய் முறைத்தாள் மான்வி.. தனக்கு அவ்வளவு கோபம் வருமா என்று வியந்து கொண்ட நொடி அது..

"ஹேய்.. கூல்மா.. சும்மா பிரென்ட்லியா ஹக் செய்ய வந்தேன்.. இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்".. அவன் புன்னகையில் போலி வாடை அடித்ததை அப்போது உணர்ந்து கொண்டாள்.. கோபம் தணியாத முகத்துடன் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளவும்.. "ஏன் உனக்கு அவன் தொட்டாதான் பிடிக்குமா?.. அவனை விட நான் பெட்டரா பண்ணுவேன் பாக்கறியா".. வக்கிரம் கொண்ட பார்வையுடன் அவன் சுய ரூபம் வெளிப்பட்ட முதல் நாள்.. விதிவிதிர்த்து போனாள் மான்வி.. திவாகரிடமிருந்து தன்னை பாதுகாக்க ஜீவா ஏன் அவ்வளவு போராடினான் என இப்போது புரிந்தது..

"ஏன் இப்படி பேசுறீங்க.. உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல.. நீங்க ரொம்ப தப்பா இருக்கீங்க.. சே".. அருவருப்போடு வார்த்தைகளை உமிழ்ந்து விட்டு சென்றாள்..

அவசர திருமணம்.. கண்மூடி திறப்பதற்குள் அடுத்தடுத்து ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருந்தன.. திவாகர் வீட்டிலிருந்து வந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.. பொம்மையாக நின்றாள் மான்வி.. வீட்டை விட்டு ஓட வழியில்லை.. அவளிடமிருந்த போனிலிருந்து ஜீவாவிற்கு அழைத்திருக்க அவன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கணினி பெண் தகவல் கூறினாள்.. நிலமை விபரீதமாக சென்று கொண்டிருப்பதாக உணர்ந்த மான்வியின் இதயத்திற்குள் அதிவேக ரயில் ஒன்று.. சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது..

திருமணத்திற்கு வெகு சில நாட்களே இருந்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டி கொடுத்தது..

தனிமையிலிருந்த அனிதாவிடம் அத்துமீறி நடந்த திவாகரை புலித்தோல் போர்த்திய நரி என்று அப்போதுதான் இனங் கண்டு கொண்டது அந்த குடும்பம்..

"எவ்வளவு தைரியமிருந்தா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருப்ப.. சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா".. என்று முகத்தில் காரி உமிழாத குறையாக அவன் சட்டையை பிடித்து கன்னத்தில் அடிக்க போன நீலகண்டனை கைப்பற்றி தடுத்திருந்தான் திவாகர்..

"இப்ப என்ன நடந்து போச்சு? ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்"... என்று எதுவுமே நடக்காதது போல் சட்டையை உதறிவிட்டுக் கொண்டவன்.. "ஏன்?.. அக்காளை கட்டிக்கிட்டா தங்கச்சியை வச்சிக்கிறது இல்லையா.. பாக்க கொழு கொழுன்னு.. புஷ்டியா இருந்ததில மனசு கொஞ்சம் அடங்காம அலை பாய்ஞ்சிருச்சு.. அதான் எதுவுமே நடக்கலையே அப்புறம் எதுக்கு இந்த ட்ராமா".. தவறு செய்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் திமிராக கேட்டிருந்த திவாகர் மான்வியை தவிர மற்றவர்களின் கண்களுக்கு புதிதாக தெரிந்தான் .. தன்னிடம் அத்துமீறி நடந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அக்காவின் தோள் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் அனிதா..

"உன்னை நல்லவன்னு நினைச்சு வீட்டுக்குள்ள விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தெரிஞ்சு போச்சு.. வெளிய போடா நாயே".. ஆங்காரத்தோடு நீலகண்டன் கத்தியதை தூசி போல் தட்டி விட்டுக் கொண்டவன்..

"அப்படியெல்லாம் வெளியே போக முடியாது.. நிச்சயம் செஞ்ச கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரனும்.. இல்லைனா இங்க ஒருத்தரும் உயிரோடு இருக்க முடியாது"..

"உன் பொண்ணுக்கு கஷ்டப்பட்டு பிராக்கெட் போட்டு கரெக்ட் பண்றதுக்காக.. ஐடி கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா.. எனக்கு முன்னாடி அந்த ஜீவா பிக்கப் பண்ணிட்டு போவான்.. நான் பாத்துக்கிட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சீங்களோ.. அதான் அன்னைக்கி உங்க பொண்ணு பயந்து ஓடி வந்ததை.. எனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு திட்டம் போட்டு காயை நகர்த்தினேன்".. வெற்றிப் புன்னகையுடன் அவன் சொல்லச் சொல்ல அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்..

"இப்போ அந்த ஜீவா கோமாவில் கிடக்கிற இந்த நேரத்துல அவனைப் பத்தி தப்பு தப்பா உங்க கிட்ட சொல்லி அவனால உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படப்போறதா நம்ப வச்சு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சேன்".. திவாகர் இறுமாப்போடு கூறவும்.. நீலகண்டனுக்கு இதயம் தூக்கி வாரி போட்டது..

"அடப் பாவி.. அன்னைக்கு ஜீவா கோமாவில் இருக்கிறதா அவங்க அப்பா சொன்னது உண்மையா?.. அதிரும் நெஞ்சத்தோடு குரலில் நடுங்கினார் நீலகண்டன்.. கால்கள் துவண்டு போக உயிரற்ற ஜடமாக சரிந்து அமர்ந்தாள் மான்வி.. என்றேனும் ஜீவா தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதில் இதய கூட்டுக்குள் கருகிப் போயிருந்தாள் அவள்..

எக்காளமிட்டு சிரித்தான் திவாகர். "ஆமா.. அன்னைக்கு நாங்க போன பைக் சேஸ் பண்ணிட்டு வரும்போது ஆக்சிடென்ட் ஆகி அவன் கோவமாவுக்கு போயிட்டான்".. போலியாக உச் கொட்டியவன்.."இன்னொரு விஷயம் தெரியுமா.. நான் சொன்னதை நம்பி நீங்க பேசின பேச்சுல.. அவனோட அப்பன்.. அதான்.. அந்த விஷ்வமூர்த்தி.. மனசு உடைஞ்சு ஹார்ட் வெடிச்சு செத்துப்போயிட்டான்".. திவாகர் உதட்டை பிதுக்கி சொல்லவும் நீலகண்டன் உறைந்த சிலையானார்.. ரமாவிற்கோ இதயம் திக்கென ஆனது..

"எப்பேர்ப்பட்ட மா பாதகத்திற்கு துணை போயிருக்கிறேன் தெரிந்தோ தெரியாமலோ ஒரு உயிர் போக காரணமாக இருந்து விட்டேனே.. எந்த கங்கைக்கு போய் இந்த பாவத்தை கழுவி தீர்ப்பேன்.. அநியாயமாக ஒரு நல்ல ஆத்மாவை கொன்று குடித்த எனக்கு மன்னிப்பே கிடையாது".. நீலகண்டனின் மனம் ஓலமிட்டு அழுது கொண்டிருக்க.. வெளிப்புறம் சிலையாக நின்று கொண்டிருந்தார் அவர்.. திருமண வீடு.. சற்றுமுன் கசிந்த அதிர்ச்சியான உண்மைகளில் களையிழந்து போயிருந்தது.. வீட்டை சுற்றி பந்தோபஸ்து பலப்படுத்தப்பட்டதில் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை..

ஜீவாவை எதிர்க்க வேதாச்சலம் போன்ற பெரிய தாதாவால்தான் முடியும் என்று தப்பு கணக்கு போட்டிருந்த நீலகண்டன் அடுத்தடுத்து.. வேதாச்சலத்தின் மிரட்டலான நடவடிக்கைகளில் திணறிப் போனார்..

"அப்படி என்ன என் புள்ள பெரிய தப்பு பண்ணிட்டான்.. பொண்ணுங்க கிட்ட அப்படி இப்படி இருக்கிறவன் தான்.. அது என்ன உலக மகா தப்பா?.. அதுக்கு என் புள்ள சட்டையைப் புடிச்சு கேள்வி கேட்டியாமே நீ!!.. நானே என் பிள்ளையை ஒரு வார்த்தை கடிஞ்சு பேசினது இல்லை.. இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு உங்க எல்லோருக்கும்".. நிச்சயதார்த்தத்துக்கு முன் அவர்கள் பேசிய பேச்சுக்கள் என்ன.. இப்போது நடந்து கொள்ளும் முறை தான் என்ன..

இதோ குடும்பமே விரக்தியின் உச்சியில்.. விருப்பமே இல்லாமல் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்..

கண்களை மூடி திறந்தாள் மான்வி.. உருகி உருகி பேசிய போது தோன்றாத காதல்.. முத்தங்களில்.. பார்வைகளில்.. கசியாத காதல்.. அவன் பிரிவில் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டது வரமா.. சாபக்கேடா?.. சுவாசம் தேடும் நுரையீரல் போல்.. அவன் நினைவுகளை சுமந்து கண்ணீரோடு கழிந்த இந்த நாட்களை அவள் தலையணை மட்டும் தான் அறியும்.. என் வாழ்க்கை எப்படியோ நாசமாக போகட்டும்.. கோமாவில் இருப்பவன் நல்லபடியாக குணமாகி வர வேண்டும்.. கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்ள வழியில்லாத நிலையில்.. தன் ஜீவனுக்காக கடவுளை ஆத்மார்த்தமாக தொழுது கொண்டாள் மான்வி..

மணமேடையில் இன்னொருவன் நினைவில் மூழ்கியிருந்த மான்வியின் எண்ண அலைகளை கலைக்கும் விதமாக "கெட்டி மேளம் கெட்டி மேளம்".. மாங்கல்யம் தந்துனானே.. ஐயர் மந்திரங்களை முழங்க.. மேளதாளம் நாதஸ்வர இசையோடு.. அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க.. திவாகர் மான்வியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டும் வேளையில்..

"அம்மாஆஆஆஆ" என்ற அக்னி குண்டத்தை தாண்டி சுருண்டு விழுந்திருந்தான் அவன்..

ஓரிரு கணங்கள் அங்கு என்ன நடக்கிறதென்று புரியாமல் கூட்டம் சலசலத்துக் கொண்டிருக்க.. "ஐயோ மகனே" என்று ஓடி வந்தாள் அவன் தாய்.. மான்வியும் நடப்பது இன்னதென உணராமல்.. அலைபாயும் விழிகளோடு விழித்துக் கொண்டிருக்க.. சட்டென ஒரு கரம் முரட்டுத்தனமாக அவளை தூக்கி நிறுத்தியது..

"ஜீவாஆஆஆஆ".. அவள் இதழ்கள் முனுமுனுக்க.. எதற்கும் அவகாசம் கொடுக்காமல்.. சட்டை பாக்கெட்டிலிருந்து தங்கத்தாலியை எடுத்து மான்வியின் கழுத்தில் அணிவித்து அவளை தன் மனைவியாக்கி இருந்தான் ஜீவா..

தன் இளையமகன் தாலிகட்ட வேண்டிய பெண்ணுக்கு தன் மூத்தமகன் தாலிகட்டி மனைவியாக்கி கொண்டதில் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் ஜீவாவின் தாய் காஞ்சனா..

ஆம்.. ஜீவாவை பெற்றவள்தான் திவாகரின் அன்னையும் கூட.. விஷ்வமூர்த்தியின் முன்னாள் மனைவி காஞ்சனா..

தொடரும்..
Ini jeeva games begin..
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
ohh inga iruka twist ...sari sari ...apparam jeeva appa pola oruthi pothum ninacha...evan amma mari vera ethavathu kidaikuma nu alaiyaravan pola iruku......
 
Member
Joined
Jan 26, 2024
Messages
50
அருமையான பதிவு
 
Top