• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 21

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
எதிரே நின்றிருந்த ஜீவாவை கண்டு விழி விரித்தாள் மான்வி.. எத்தனை நாட்களுக்கு பிறகு தன்னிடம் பேசுகிறான்.. அவன் குரலில் மெல்ல விரியும் தாமரையாக மலர்ந்த அவள் முகம்.. அவனுடைய வார்த்தைகளில் அனிச்சமாய் சுருங்கிப் போனது..

"உன் பிறந்த வீட்டோட தொடர்பு வச்சிக்கிறதா இருந்தா.. இப்பவே இங்கிருந்து கிளம்பலாம்.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை".. உணர்ச்சியில்லாத அவன் வார்த்தைகளில் மான்வியின் உள்ளம் அடிவாங்கியது..

"இங்கிருந்து கிளம்ப சொல்றதுக்கு ஏன் என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க".. என்று கேட்க வாயெடுத்தவள் தொண்டை குழிக்குள் வார்த்தைகளை விழுங்கி அடிவயிற்றுக்கு அனுப்பி விட்டாள்..

"ஹலோ ஹலோ மான்வி.. கேக்குதா?".. எதிர்முனையில் ரமா கத்திக் கொண்டிருக்கவும்.. அந்த ஃபோனை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.. இப்போது என்ன செய்வதாய் உத்தேசம் என்னும் பொருளோடு..

அவன் எண்ணம் புரிந்தவளாய் அழைப்பைத் துண்டித்து கட்டில் மீது ஃபோனை வைத்தாள் மான்வி.. அதன் பிறகே பார்வையின் தாக்கத்தை சற்று தணித்தவன்.. "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என் ரூமுக்கு வா".. அழைத்துவிட்டு சென்று விட.. பெருமூச்சோடு கண்கள் மூடி திறந்தவள்.. எழுந்து அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.. எதிரே இருந்த அறைக்குள் அவன் நுழைய அவளும் பின்னால் நுழைந்தாள்..

" உட்காரு" என்று கட்டிலை காட்டியவன்.. எதிரே நாற்காலியை இழுத்து போட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

தீர்க்கமான பார்வையுடன் அவளை நோக்கி நிமிர்ந்தவன்.. முதல் வாக்கியத்திலேயே அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கி சவுக்கால் அடித்த வலியை கொடுத்திருந்தான்..

"இந்த கல்யாணம் நடந்ததுக்கான காரணத்தை இப்பவே சொல்லிடறேன்"..

"உன் மேல ஆசைப்பட்டு இல்லைனா அந்த ராஸ்கல் கிட்ட இருந்து உன்னை காப்பாத்துறதுக்காக.. கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்னு நெனச்சேன்னா ஐ அம் சாரி.. நீ ஏமாந்து போவ".. அவன் வெகு சாதாரணமாய் சொன்னதில் கீழுதட்டை கடித்துக் கொண்டு விழிகளை மூடி திறந்தாள் மான்வி.. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு காரணமாக தன் மீது கொண்ட நேசமோ.. அல்லது தன்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றும் அன்பின் தாக்கமோ.. நிச்சயம் இருக்கும் என்று தான் நினைத்திருந்தாள்.. அப்படி ஒரு எண்ணமிருந்தால் அதை காற்றோடு கரைத்து விடு.. என்று அவள் மனதை உடைத்திருந்தான் ஜீவா..

"உன்னை கல்யாணம் செஞ்சதுக்கான முதல் காரணம்.. எங்க அப்பாவோட ஆசையை நிறைவேத்துறதுக்காக"..

"இரண்டாவது காரணம்.. அந்த அயோக்கிய நாயை தோக்கடிச்சு அவனைப் பெத்தவ முகத்துல தன் பையன் தோத்துப்போன வலியை பார்க்கிறதுக்காக".. விழிகளை தரைக்கு தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.. தன் உள்ளத்தின் ஏக்கத்தை நிவர்த்தி செய்யாத காரணங்கள் இல்லை என்ற பிறகு வேறு எந்த காரணங்களாக இருந்தால் என்ன?.. என்பது போன்ற தோரணையுடன் அவள் அமர்ந்திருந்த விதத்தை கூர்ந்து பார்த்தவன்.. சொடக்கிட்டு அழைத்தான்..

"இங்க பாரு.. நான் சொல்றதை தெளிவா கேட்டுக்கோ.. எல்லோரை மாதிரியும்.. பொண்டாட்டி குழந்தைன்னு நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழனும்னு என் அப்பா ரொம்பவே ஆசைப்பட்டாரு .. அந்த வாழ்க்கை உன் கூட அமையனும்னுங்கிறது அவர் விருப்பமும் கூட"..

"அந்த ஆசை நிராசையான துக்கம்.. மேற்கொண்டு உங்க அப்பா அவமானப்படுத்தின வேதனை.. எல்லாம் மனசுக்குள்ள சேர்ந்து.. மன உளைச்சல் அதிகமாகி".. என்றவன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்.. கீழுதட்டை கடித்துக் கொண்டு சில மணித்துளிகள் அமைதியாகவே இருந்தவன்.. அடுத்த கணம் நிமிர்ந்து "எனக்கு எங்க அப்பாவோட ஆசையை நிறைவேத்தனும்".. ஜீவாவின் உறுதியான குரலில்.. அதுக்கு நான் என்ன செய்யணும்.. என்ற பார்வையுடன் கேள்வியாக நிமிர்ந்தாள் மான்வி..

"ஐ வாண்ட் பேபி.. அன்ட் ஐ நீட் பிசிகல் ரிலேஷன்ஷிப் வித்தவுட் லவ்".. அவன் சொல்லி முடித்ததில் கண்கள் குளம் கட்டியது அவளுக்கு.. காதலே இல்லாமல் ஒரு காமம் கேட்கிறான்.. காதலோடு அளவு கடந்த ஆசையோடு அவன் நெருங்கிய போது கூட ஒன்ற முடியாமல் தவித்தவள்.. துளியும் காதல் இல்லாத காமத்திற்கு எப்படி சம்மதிப்பாள்..

கரைபுரண்டோடிய கண்ணீருடன் அலைப்புற்ற விழிகள் மார்பிள் தரையின் மீது பதிந்தன..

"என் கூட வாழ்ந்தா இந்த மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப்ல தான் காலம் முழுக்க வாழ வேண்டியிருக்கும்.. உனக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம் இல்லைனா.. இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளியேறலாம்.. பட் டோன்ட் வரி இனி உனக்கு திவாகர் தொல்லை இருக்காது.. அந்த விதத்துல நீ நிம்மதியாக இருக்கலாம்".. என்றிருந்தான் எந்தவித உணர்ச்சிகளையும் வெளி காட்டாத முகத்தோடு.. பாவம் அவள்தான் மருகிக் கொண்டிருந்தாள்..

"என் மேல கொஞ்சம் கூட அன்போ காதலோ இல்லைன்னா அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க".. அழுகையோடு கரைந்து உருகியது அவள் குரல்.. ஆனாலும் அவன் உருகவில்லை..

"அதுதான் சொன்னேனே.. என் அப்பாவோட ஆசைக்காக.. திவாகரோட தோல்விக்காக".. அலட்சியத்தோடு சொன்னவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்..

பீறிட்டு கிளம்பக் காத்திருந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்ணீர் வெளிப்படும் முன் ஓடி வந்து அணைத்துக் கொண்டு ஆயிரம் முறை ஆறுதல் சொல்பவன்.. இன்று அவள் அழுவதை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.. ஜீவாவின் இந்த மாற்றமே அவளை அணு அணுவாக கொன்றது..

"டோன்ட் வேஸ்ட் மை டைம் மான்வி".. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு.. சீக்கிரம் பதில் சொன்னா அடுத்த வேலையை பார்க்க நான் கிளம்பிடுவேன்.. ஒப்பந்தம் போட காத்திருக்கும் வியாபாரியை போலவே பேசினான்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்.. இயல்பிலேயே அவன் இப்படித்தான் என்றிருந்தால் இத்தனை வலியும் வருத்தமும் ஏற்பட்டிருக்காது.. உள்ளங்கைக்குள் வைத்து தாங்கியவன்.. அன்று அலுவலகத்திற்கு சென்றபோது கூட எத்தனை கரிசனம்.. எத்தனை அன்பு.. எத்தனை முத்தங்கள்.. அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் அவன் பார்வை அவளை தீண்டி சென்றதை மறக்கத்தான் முடியுமா.. எல்லாம் தாமதமாக தான் புரிகின்றதோ.. இழந்த அன்பை நினைத்து வேதனை பட்டு தான் என்ன பயன்..

கண்களை துடைத்துக் கொண்டவள்.. "ஜீவா.. நீங்க கோமாவில் இருந்ததோ உங்க அப்பா இறந்ததோ எனக்கு".. என்று தன் நிலையை விளக்கும் முன்..

"நான் உன்கிட்ட விளக்கம் கேட்கல.. பதில் தான் கேட்டேன்.. முடியுமா?.. முடியாதா?.. என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தான் ஜீவா..

"காதல் இல்லாத காமம்.. அதுக்கு நான் எதுக்கு ஜீவா".. ஆற்றாமையில் நேரடியாகவே கேட்டு விட்டாள்..

பெரிதாக யோசிக்கவில்லை அவன்.. குரலை செருமிக் கொண்டு அவள் கேள்விக்கு பதில் கொடுப்பவனாய் "ஆக்சுவலி யாரா இருந்தாலும் எனக்கு ஓகே தான்... இப்ப நான் இருக்கிற டிப்ரஷன்ல கண்டிப்பா ஐ நீட் பிசிகல் ரிலேஷன்ஷிப்.. ஆனா பெண் சுகத்தை தேடி தவறான வழியில் போற அளவுக்கு என்னோட அப்பா என்னை வளர்க்கல.. சோ அதுக்கு லீகலா இந்த கல்யாணம் எனக்கு தேவைப்பட்டது".. இந்த பதிலில் இன்னும் நிலைகுலைந்து போனாள் மான்வி.. அப்படினா.. நான்?.. நான்?..

"தாம்பத்திய சுகம் மட்டும் தான் முக்கியம்னா வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிருக்கலாமே".. அந்த வார்த்தையை கேட்க கூட முடியாத அளவிற்கு அழுகை முற்றுகையிட்டது..

"ஓ காட் அதான் சொன்னேனே.. நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கணும்ங்கிறது அப்பாவோட விருப்பம்.. இறந்து போனவரோட கடைசி ஆசையை நிறைவேற்றி இருக்கேன்.. என்னோட குழந்தையை பாக்கணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டார்.. அவருக்காக மட்டும் தான் இந்த குழந்தை பெத்துக்கிற ஐடியா.. ஒரே விஷயத்தை எத்தனை முறை திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருப்பே".. இறுதி வார்த்தைகளை முடிக்கும் போது சற்று கடுமையாக மாறி இருந்தது அவன் குரல்.. இப்போதே பதில் சொல்லியாக வேண்டும் என்ற தீவிரம் அவன் பார்வையில்..

வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் மான்வி.. இப்படி ஒரு வாழ்க்கைக்கு பதிலாக செத்து விடலாமா என்று கூட தோன்றியது.. ஜீவாவின் அன்பை இழந்து அவன் பக்கத்தில் வெறுப்பை சுமந்து கொண்டு.. கடவுளே நரகம் அல்லவா.. எப்படி சமாளிக்கப் போகிறேன்.. படுக்கை விரிப்பை இறுகப்பற்றினாள்..

"மான்வி வி டோன்ட் ஹவ் ஆல் த டைம்".. அவன் குரல் உயர்ந்தது..

"எனக்கு சம்மதம்.. உங்க மனைவியா உங்களுக்கு குழந்தை பெத்து கொடுக்கிறதுல எனக்கு சம்மதம்".. பதில் சொல்லி முடித்திருந்தாள்.. அவன் பதில் பேசும் முன் அவளே மேலும் தொடர்ந்து

"எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் ஜீவா எனக்கு திரும்ப கிடைச்சிடுவாரு".. உறுதியான குரலில் கூறியவளை.. ஏளன புன்னகையுடன் எதிர் நோக்கினான் அவன்.. அந்த ஜீவா எப்பவோ செத்து போயிட்டான்.. இவன் கடமைக்காக மட்டுமே வாழறவன்.. நீ நினைக்கிற அன்பு பாசம் நேசம் எதுவும் இவன் கிட்ட கிடைக்காது.. எதிர்பார்த்து ஏமாந்து போகாதே, அவ்வளவுதான் சொல்வேன்".. என்றபடியே எழுந்து நின்றவன்.. "அப்புறம் எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு".. என்று மீண்டும் ஆரம்பித்ததில் அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்..

"நீ எப்பவும் போல அந்த ரூம்ல தங்கிக்கோ.. இது என்னோட ரூம் இங்க நீ வர வேண்டிய அவசியமே இல்லை.. எனக்கு நீ தேவைன்னு தோணும்போது நானே அங்கே வருவேன்.. அப்புறம் இன்னொரு விஷயம் உன் இஷ்டத்துக்கு நீ எங்க வேணாலும் போகலாம்.. வேலைக்கு போறது கூட உன்னோட சுதந்திரம்.. நான் தடுக்க மாட்டேன்.. ஆனா எந்த விதத்திலும் உனக்கு நான் செக்யூரிட்டி வேலை பார்க்க மாட்டேன்.. உன்னை நீ தான் பாத்துக்கணும்".. தலைக்கு மேல் வெள்ளம் போகிறது.. இனி என்ன நடந்தால் என்ன என்று ரீதியில் அவள் விழித்துக் கொண்டிருந்தாள்..

"பார்ட்டி பங்க்ஷன் எல்லாத்துக்கும் உன்னை கூட அழைச்சிட்டு போவேன்.. அதுக்காக நீ என்னோட அன்பான மனைவின்னு அர்த்தமில்லை.. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனைவி.. சோ வெளிய வரும் போது என்னோட அன்யோன்யமா இருக்கிற மாதிரி நடிக்க வேண்டி வரும்.. அதுக்கு ஏத்த மாதிரி பிரிப்பேர் ஆகிக்கோ"..

"நாலாவது முக்கியமான கண்டிஷன்.. உங்க வீட்டோட எந்த டச்சும் வச்சுக்க கூடாது.. என் அம்மா அப்பா கூட பேசுறது என்னோட ரைட்ஸ் அப்படின்னு நீ ஆர்கியூர் செஞ்சா.. தாராளமா உங்க வீட்டோட போய் உட்கார்ந்துக்கலாம்.. எனக்கு எந்த அப்ஜக்ஷனும் கிடையாது.. சோ உன்னை எந்த விதத்திலும் நான் ஃபோர்ஸ் பண்ணல".. இரு கைகளை பிரித்து தோளைக் குலுக்கி அவன் சொன்ன விதத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள் மான்வி.. அவன் அன்புக்காக காத்திருக்கிறேன் என்று தான் வளைந்து கொடுப்பதில் எத்தனை எகத்தாளம்.. கோபம் வந்தது.. ஆனாலும் அவன் இழப்புகள் ஏராளம் என்ற காரணத்தால் அவன் பேசிய அம்புகளை விருப்பத்தோடு ஏற்று கொண்டாள்..

"இதுக்கெல்லாம் சம்மதம்னா உன்னோட ரூமுக்கு போகலாம்.. இல்லைனா.. வந்த வழியே திரும்பி போகலாம்".. என்று வாசலை காட்டியதில்.. "கல்யாணம்னா உங்களுக்கு அவ்வளவு சுலபமா போச்சா.. நினைச்சா தாலி கட்டி கூட்டிட்டு வருவீங்க.. வேண்டாம்னா திரும்பி அனுப்பிடுவீங்களா".. வீரியமின்றி வெளிப்பட்ட வார்த்தைகளில் அவன் இதழ்கள் கேலியான புன்னகையுடன் வளைந்தன..

"அடுத்தவங்களோட உயிரை மதிக்க தெரியாதவங்களுக்கு இந்த கல்யாணமோ.. தாலியோ ஒரு பெரிய விஷயமே இல்லையே.. அன்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவங்க தான்.. இதையெல்லாம் யோசிப்பாங்க.. உன்னை பொறுத்த வரைக்கும்.. நான் ஒரு அயோக்கியன் பொறுக்கி.. கேடுகெட்டவன் தானே.. என் கூட எந்த பெண்ணால வாழ முடியும்.. ஒருவேளை என் பணத்துக்காக.. என்னை பொறுத்துக்கிட்டு வாழ சம்மதிக்கலாம்".. அவன் பார்வையில் தெரிந்த ஏளனமும் எகத்தாளமும் அவளை கூறு போடுவதாய்.. காலாகாலத்துக்கும் என்னோடு நீ வாழ்ந்தாலும்.. பணத்துக்காக மட்டுமே என்னோடு வாழ்கிறாய் என்ற பட்டம் கட்டப்படுவாய்.. என்று பறைசாற்றுவதாய் அந்த பார்வை..

கண்களை துடைத்துக் கொண்டாள் மான்வி.. "உங்க பணத்துக்காக ஒன்னும் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கல.. விரும்பி தான் உங்க தாலியை கழுத்துல வாங்கிட்டேன்.. உங்க பணமோ சொத்து சுகமோ எனக்கு தேவையில்லை.. எப்ப நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களோ.. இனி எனக்கான தேவைகளை நானே பார்த்துக்கிறேன்.. எனக்காக நீங்க ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம்".. சுயமரியாதையின் அடையாளமாக உறுதியோடு உரைத்தவள்.. வேகமாக அங்கிருந்து தனது அறைக்கு சென்றிருந்தாள்..

மான்வி அவளது அறைக்குள் நுழையும் முன்னரே கதவை படாரென அடித்து சாத்தியிருந்தான் ஜீவா..

அறைக் கதவோடு அவன் மன கதவும் இறுகப்பூட்டிக் கொண்டதோ!!

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
Anbunnalum over ah ...... Verupu nallum overah..... poguthu Ithu enga poi mudiya poguthuoooooo.... Ellam nalla padiya poganum......
 
Last edited:
Joined
Jul 25, 2023
Messages
36
வைச்சி செய்யுறான் தலைவன் சூப்பரூ ஜீவா.

மான்வி மேடம் ஒருத்தரோட புறக்கணிப்பு எப்படி இருக்கும்னு இனி நீங்க புரிஞ்சிப்பீங்க
 

SSV

New member
Joined
Jan 11, 2023
Messages
8
எல்லா தப்பும் மான்வி மேலயே சொல்ல முடியாது இல்ல.. அவ வளர்ந்த விதம் அப்படி..
 
Member
Joined
Aug 23, 2023
Messages
14
Jeeva seithathu seriya..... Ena than padithaalum valarpaal valarnthaalum avan intha alavu jeeva unnidam nerungum pothu... Nee un manathil enna ninaikirai endru solli irunthaal avan kandipaaga purinthu irupaan.. Ini avan epdi unnai nambuvaan maanvi.... Nee thivagarai munniruthi ivanai pola en jeeva illai endru yosithaaye thavira... Avan epdi ippadi irukiran... Manam thiranthu eppoluthu pesa pogirai.... Intha vaalvai nee evvaru ethir kolla pogiraai
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
எதிரே நின்றிருந்த ஜீவாவை கண்டு விழி விரித்தாள் மான்வி.. எத்தனை நாட்களுக்கு பிறகு தன்னிடம் பேசுகிறான்.. அவன் குரலில் மெல்ல விரியும் தாமரையாக மலர்ந்த அவள் முகம்.. அவனுடைய வார்த்தைகளில் அனிச்சமாய் சுருங்கிப் போனது..

"உன் பிறந்த வீட்டோட தொடர்பு வச்சிக்கிறதா இருந்தா.. இப்பவே இங்கிருந்து கிளம்பலாம்.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை".. உணர்ச்சியில்லாத அவன் வார்த்தைகளில் மான்வியின் உள்ளம் அடிவாங்கியது..

"இங்கிருந்து கிளம்ப சொல்றதுக்கு ஏன் என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க".. என்று கேட்க வாயெடுத்தவள் தொண்டை குழிக்குள் வார்த்தைகளை விழுங்கி அடிவயிற்றுக்கு அனுப்பி விட்டாள்..

"ஹலோ ஹலோ மான்வி.. கேக்குதா?".. எதிர்முனையில் ரமா கத்திக் கொண்டிருக்கவும்.. அந்த ஃபோனை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.. இப்போது என்ன செய்வதாய் உத்தேசம் என்னும் பொருளோடு..

அவன் எண்ணம் புரிந்தவளாய் அழைப்பைத் துண்டித்து கட்டில் மீது ஃபோனை வைத்தாள் மான்வி.. அதன் பிறகே பார்வையின் தாக்கத்தை சற்று தணித்தவன்.. "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என் ரூமுக்கு வா".. அழைத்துவிட்டு சென்று விட.. பெருமூச்சோடு கண்கள் மூடி திறந்தவள்.. எழுந்து அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.. எதிரே இருந்த அறைக்குள் அவன் நுழைய அவளும் பின்னால் நுழைந்தாள்..

" உட்காரு" என்று கட்டிலை காட்டியவன்.. எதிரே நாற்காலியை இழுத்து போட்டு அவள் எதிரே அமர்ந்தான்..

தீர்க்கமான பார்வையுடன் அவளை நோக்கி நிமிர்ந்தவன்.. முதல் வாக்கியத்திலேயே அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கி சவுக்கால் அடித்த வலியை கொடுத்திருந்தான்..

"இந்த கல்யாணம் நடந்ததுக்கான காரணத்தை இப்பவே சொல்லிடறேன்"..

"உன் மேல ஆசைப்பட்டு இல்லைனா அந்த ராஸ்கல் கிட்ட இருந்து உன்னை காப்பாத்துறதுக்காக.. கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்னு நெனச்சேன்னா ஐ அம் சாரி.. நீ ஏமாந்து போவ".. அவன் வெகு சாதாரணமாய் சொன்னதில் கீழுதட்டை கடித்துக் கொண்டு விழிகளை மூடி திறந்தாள் மான்வி.. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு காரணமாக தன் மீது கொண்ட நேசமோ.. அல்லது தன்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றும் அன்பின் தாக்கமோ.. நிச்சயம் இருக்கும் என்று தான் நினைத்திருந்தாள்.. அப்படி ஒரு எண்ணமிருந்தால் அதை காற்றோடு கரைத்து விடு.. என்று அவள் மனதை உடைத்திருந்தான் ஜீவா..

"உன்னை கல்யாணம் செஞ்சதுக்கான முதல் காரணம்.. எங்க அப்பாவோட ஆசையை நிறைவேத்துறதுக்காக"..

"இரண்டாவது காரணம்.. அந்த அயோக்கிய நாயை தோக்கடிச்சு அவனைப் பெத்தவ முகத்துல தன் பையன் தோத்துப்போன வலியை பார்க்கிறதுக்காக".. விழிகளை தரைக்கு தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.. தன் உள்ளத்தின் ஏக்கத்தை நிவர்த்தி செய்யாத காரணங்கள் இல்லை என்ற பிறகு வேறு எந்த காரணங்களாக இருந்தால் என்ன?.. என்பது போன்ற தோரணையுடன் அவள் அமர்ந்திருந்த விதத்தை கூர்ந்து பார்த்தவன்.. சொடக்கிட்டு அழைத்தான்..

"இங்க பாரு.. நான் சொல்றதை தெளிவா கேட்டுக்கோ.. எல்லோரை மாதிரியும்.. பொண்டாட்டி குழந்தைன்னு நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழனும்னு என் அப்பா ரொம்பவே ஆசைப்பட்டாரு .. அந்த வாழ்க்கை உன் கூட அமையனும்னுங்கிறது அவர் விருப்பமும் கூட"..

"அந்த ஆசை நிராசையான துக்கம்.. மேற்கொண்டு உங்க அப்பா அவமானப்படுத்தின வேதனை.. எல்லாம் மனசுக்குள்ள சேர்ந்து.. மன உளைச்சல் அதிகமாகி".. என்றவன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்.. கீழுதட்டை கடித்துக் கொண்டு சில மணித்துளிகள் அமைதியாகவே இருந்தவன்.. அடுத்த கணம் நிமிர்ந்து "எனக்கு எங்க அப்பாவோட ஆசையை நிறைவேத்தனும்".. ஜீவாவின் உறுதியான குரலில்.. அதுக்கு நான் என்ன செய்யணும்.. என்ற பார்வையுடன் கேள்வியாக நிமிர்ந்தாள் மான்வி..

"ஐ வாண்ட் பேபி.. அன்ட் ஐ நீட் பிசிகல் ரிலேஷன்ஷிப் வித்தவுட் லவ்".. அவன் சொல்லி முடித்ததில் கண்கள் குளம் கட்டியது அவளுக்கு.. காதலே இல்லாமல் ஒரு காமம் கேட்கிறான்.. காதலோடு அளவு கடந்த ஆசையோடு அவன் நெருங்கிய போது கூட ஒன்ற முடியாமல் தவித்தவள்.. துளியும் காதல் இல்லாத காமத்திற்கு எப்படி சம்மதிப்பாள்..

கரைபுரண்டோடிய கண்ணீருடன் அலைப்புற்ற விழிகள் மார்பிள் தரையின் மீது பதிந்தன..

"என் கூட வாழ்ந்தா இந்த மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப்ல தான் காலம் முழுக்க வாழ வேண்டியிருக்கும்.. உனக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம் இல்லைனா.. இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளியேறலாம்.. பட் டோன்ட் வரி இனி உனக்கு திவாகர் தொல்லை இருக்காது.. அந்த விதத்துல நீ நிம்மதியாக இருக்கலாம்".. என்றிருந்தான் எந்தவித உணர்ச்சிகளையும் வெளி காட்டாத முகத்தோடு.. பாவம் அவள்தான் மருகிக் கொண்டிருந்தாள்..

"என் மேல கொஞ்சம் கூட அன்போ காதலோ இல்லைன்னா அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க".. அழுகையோடு கரைந்து உருகியது அவள் குரல்.. ஆனாலும் அவன் உருகவில்லை..

"அதுதான் சொன்னேனே.. என் அப்பாவோட ஆசைக்காக.. திவாகரோட தோல்விக்காக".. அலட்சியத்தோடு சொன்னவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்..

பீறிட்டு கிளம்பக் காத்திருந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் மான்வி.. கண்ணீர் வெளிப்படும் முன் ஓடி வந்து அணைத்துக் கொண்டு ஆயிரம் முறை ஆறுதல் சொல்பவன்.. இன்று அவள் அழுவதை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.. ஜீவாவின் இந்த மாற்றமே அவளை அணு அணுவாக கொன்றது..

"டோன்ட் வேஸ்ட் மை டைம் மான்வி".. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு.. சீக்கிரம் பதில் சொன்னா அடுத்த வேலையை பார்க்க நான் கிளம்பிடுவேன்.. ஒப்பந்தம் போட காத்திருக்கும் வியாபாரியை போலவே பேசினான்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்.. இயல்பிலேயே அவன் இப்படித்தான் என்றிருந்தால் இத்தனை வலியும் வருத்தமும் ஏற்பட்டிருக்காது.. உள்ளங்கைக்குள் வைத்து தாங்கியவன்.. அன்று அலுவலகத்திற்கு சென்றபோது கூட எத்தனை கரிசனம்.. எத்தனை அன்பு.. எத்தனை முத்தங்கள்.. அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் அவன் பார்வை அவளை தீண்டி சென்றதை மறக்கத்தான் முடியுமா.. எல்லாம் தாமதமாக தான் புரிகின்றதோ.. இழந்த அன்பை நினைத்து வேதனை பட்டு தான் என்ன பயன்..

கண்களை துடைத்துக் கொண்டவள்.. "ஜீவா.. நீங்க கோமாவில் இருந்ததோ உங்க அப்பா இறந்ததோ எனக்கு".. என்று தன் நிலையை விளக்கும் முன்..

"நான் உன்கிட்ட விளக்கம் கேட்கல.. பதில் தான் கேட்டேன்.. முடியுமா?.. முடியாதா?.. என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தான் ஜீவா..

"காதல் இல்லாத காமம்.. அதுக்கு நான் எதுக்கு ஜீவா".. ஆற்றாமையில் நேரடியாகவே கேட்டு விட்டாள்..

பெரிதாக யோசிக்கவில்லை அவன்.. குரலை செருமிக் கொண்டு அவள் கேள்விக்கு பதில் கொடுப்பவனாய் "ஆக்சுவலி யாரா இருந்தாலும் எனக்கு ஓகே தான்... இப்ப நான் இருக்கிற டிப்ரஷன்ல கண்டிப்பா ஐ நீட் பிசிகல் ரிலேஷன்ஷிப்.. ஆனா பெண் சுகத்தை தேடி தவறான வழியில் போற அளவுக்கு என்னோட அப்பா என்னை வளர்க்கல.. சோ அதுக்கு லீகலா இந்த கல்யாணம் எனக்கு தேவைப்பட்டது".. இந்த பதிலில் இன்னும் நிலைகுலைந்து போனாள் மான்வி.. அப்படினா.. நான்?.. நான்?..

"தாம்பத்திய சுகம் மட்டும் தான் முக்கியம்னா வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிருக்கலாமே".. அந்த வார்த்தையை கேட்க கூட முடியாத அளவிற்கு அழுகை முற்றுகையிட்டது..

"ஓ காட் அதான் சொன்னேனே.. நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கணும்ங்கிறது அப்பாவோட விருப்பம்.. இறந்து போனவரோட கடைசி ஆசையை நிறைவேற்றி இருக்கேன்.. என்னோட குழந்தையை பாக்கணும்னு ரொம்பவும் ஆசைப்பட்டார்.. அவருக்காக மட்டும் தான் இந்த குழந்தை பெத்துக்கிற ஐடியா.. ஒரே விஷயத்தை எத்தனை முறை திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருப்பே".. இறுதி வார்த்தைகளை முடிக்கும் போது சற்று கடுமையாக மாறி இருந்தது அவன் குரல்.. இப்போதே பதில் சொல்லியாக வேண்டும் என்ற தீவிரம் அவன் பார்வையில்..

வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் மான்வி.. இப்படி ஒரு வாழ்க்கைக்கு பதிலாக செத்து விடலாமா என்று கூட தோன்றியது.. ஜீவாவின் அன்பை இழந்து அவன் பக்கத்தில் வெறுப்பை சுமந்து கொண்டு.. கடவுளே நரகம் அல்லவா.. எப்படி சமாளிக்கப் போகிறேன்.. படுக்கை விரிப்பை இறுகப்பற்றினாள்..

"மான்வி வி டோன்ட் ஹவ் ஆல் த டைம்".. அவன் குரல் உயர்ந்தது..

"எனக்கு சம்மதம்.. உங்க மனைவியா உங்களுக்கு குழந்தை பெத்து கொடுக்கிறதுல எனக்கு சம்மதம்".. பதில் சொல்லி முடித்திருந்தாள்.. அவன் பதில் பேசும் முன் அவளே மேலும் தொடர்ந்து

"எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் ஜீவா எனக்கு திரும்ப கிடைச்சிடுவாரு".. உறுதியான குரலில் கூறியவளை.. ஏளன புன்னகையுடன் எதிர் நோக்கினான் அவன்.. அந்த ஜீவா எப்பவோ செத்து போயிட்டான்.. இவன் கடமைக்காக மட்டுமே வாழறவன்.. நீ நினைக்கிற அன்பு பாசம் நேசம் எதுவும் இவன் கிட்ட கிடைக்காது.. எதிர்பார்த்து ஏமாந்து போகாதே, அவ்வளவுதான் சொல்வேன்".. என்றபடியே எழுந்து நின்றவன்.. "அப்புறம் எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு".. என்று மீண்டும் ஆரம்பித்ததில் அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்..

"நீ எப்பவும் போல அந்த ரூம்ல தங்கிக்கோ.. இது என்னோட ரூம் இங்க நீ வர வேண்டிய அவசியமே இல்லை.. எனக்கு நீ தேவைன்னு தோணும்போது நானே அங்கே வருவேன்.. அப்புறம் இன்னொரு விஷயம் உன் இஷ்டத்துக்கு நீ எங்க வேணாலும் போகலாம்.. வேலைக்கு போறது கூட உன்னோட சுதந்திரம்.. நான் தடுக்க மாட்டேன்.. ஆனா எந்த விதத்திலும் உனக்கு நான் செக்யூரிட்டி வேலை பார்க்க மாட்டேன்.. உன்னை நீ தான் பாத்துக்கணும்".. தலைக்கு மேல் வெள்ளம் போகிறது.. இனி என்ன நடந்தால் என்ன என்று ரீதியில் அவள் விழித்துக் கொண்டிருந்தாள்..

"பார்ட்டி பங்க்ஷன் எல்லாத்துக்கும் உன்னை கூட அழைச்சிட்டு போவேன்.. அதுக்காக நீ என்னோட அன்பான மனைவின்னு அர்த்தமில்லை.. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனைவி.. சோ வெளிய வரும் போது என்னோட அன்யோன்யமா இருக்கிற மாதிரி நடிக்க வேண்டி வரும்.. அதுக்கு ஏத்த மாதிரி பிரிப்பேர் ஆகிக்கோ"..

"நாலாவது முக்கியமான கண்டிஷன்.. உங்க வீட்டோட எந்த டச்சும் வச்சுக்க கூடாது.. என் அம்மா அப்பா கூட பேசுறது என்னோட ரைட்ஸ் அப்படின்னு நீ ஆர்கியூர் செஞ்சா.. தாராளமா உங்க வீட்டோட போய் உட்கார்ந்துக்கலாம்.. எனக்கு எந்த அப்ஜக்ஷனும் கிடையாது.. சோ உன்னை எந்த விதத்திலும் நான் ஃபோர்ஸ் பண்ணல".. இரு கைகளை பிரித்து தோளைக் குலுக்கி அவன் சொன்ன விதத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள் மான்வி.. அவன் அன்புக்காக காத்திருக்கிறேன் என்று தான் வளைந்து கொடுப்பதில் எத்தனை எகத்தாளம்.. கோபம் வந்தது.. ஆனாலும் அவன் இழப்புகள் ஏராளம் என்ற காரணத்தால் அவன் பேசிய அம்புகளை விருப்பத்தோடு ஏற்று கொண்டாள்..

"இதுக்கெல்லாம் சம்மதம்னா உன்னோட ரூமுக்கு போகலாம்.. இல்லைனா.. வந்த வழியே திரும்பி போகலாம்".. என்று வாசலை காட்டியதில்.. "கல்யாணம்னா உங்களுக்கு அவ்வளவு சுலபமா போச்சா.. நினைச்சா தாலி கட்டி கூட்டிட்டு வருவீங்க.. வேண்டாம்னா திரும்பி அனுப்பிடுவீங்களா".. வீரியமின்றி வெளிப்பட்ட வார்த்தைகளில் அவன் இதழ்கள் கேலியான புன்னகையுடன் வளைந்தன..

"அடுத்தவங்களோட உயிரை மதிக்க தெரியாதவங்களுக்கு இந்த கல்யாணமோ.. தாலியோ ஒரு பெரிய விஷயமே இல்லையே.. அன்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவங்க தான்.. இதையெல்லாம் யோசிப்பாங்க.. உன்னை பொறுத்த வரைக்கும்.. நான் ஒரு அயோக்கியன் பொறுக்கி.. கேடுகெட்டவன் தானே.. என் கூட எந்த பெண்ணால வாழ முடியும்.. ஒருவேளை என் பணத்துக்காக.. என்னை பொறுத்துக்கிட்டு வாழ சம்மதிக்கலாம்".. அவன் பார்வையில் தெரிந்த ஏளனமும் எகத்தாளமும் அவளை கூறு போடுவதாய்.. காலாகாலத்துக்கும் என்னோடு நீ வாழ்ந்தாலும்.. பணத்துக்காக மட்டுமே என்னோடு வாழ்கிறாய் என்ற பட்டம் கட்டப்படுவாய்.. என்று பறைசாற்றுவதாய் அந்த பார்வை..

கண்களை துடைத்துக் கொண்டாள் மான்வி.. "உங்க பணத்துக்காக ஒன்னும் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கல.. விரும்பி தான் உங்க தாலியை கழுத்துல வாங்கிட்டேன்.. உங்க பணமோ சொத்து சுகமோ எனக்கு தேவையில்லை.. எப்ப நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களோ.. இனி எனக்கான தேவைகளை நானே பார்த்துக்கிறேன்.. எனக்காக நீங்க ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம்".. சுயமரியாதையின் அடையாளமாக உறுதியோடு உரைத்தவள்.. வேகமாக அங்கிருந்து தனது அறைக்கு சென்றிருந்தாள்..

மான்வி அவளது அறைக்குள் நுழையும் முன்னரே கதவை படாரென அடித்து சாத்தியிருந்தான் ஜீவா..

அறைக் கதவோடு அவன் மன கதவும் இறுகப்பூட்டிக் கொண்டதோ!!

தொடரும்..
Kedaikkum podhu... Aruma purila manvi.. Ipo anupavai..
 
New member
Joined
May 17, 2023
Messages
6
Sari sari kelambu😂 inga pala anti herokkal ipadi than solli kadaisila pondati mela romba love vachu avanga munthanaiye pudichutu suthunanuga 🤣🤣🤣 evalo naalaikunu pakkalam ithu
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
un loss unbearable tha ...ana ava tharappu nyayathayum kekanum illla....nee...pavam
 
Top