- Joined
- Jan 10, 2023
- Messages
- 75
- Thread Author
- #1
பக்கத்தில் வந்து நின்று உணவு பரிமாறிய மனைவியை.. அழுத்தமான பார்வையோடு புருவங்கள் முடிச்சிட வினோதமாக நோக்கினான் ஜீவா.. என்றுமில்லாத திருநாளாக.. எதற்கு இந்த வேலை உனக்கு? என்பதை போல்..
அவன் முகத்தைப் பார்த்தால் மனம் தடுமாறும்.. பயம் குடியேறும் என்பதால்.. வேகமாக பரிமாறி முடித்தவள்.. பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு "சாப்பிடுங்க".. என்றாள் இயல்பான முகத்தோடு..
இரண்டு நிமிடங்களுக்கு மேலாகியும்.. தட்டிலிருந்த உணவில் கைப்படாமல் அவன் விழிகள் தன்னையே ஊசியாக துளைப்பதை.. பார்வை தரை தாழ்ந்த போதிலும் உணர்ந்து கொண்டவள்.. மெல்ல நிமிர்ந்து எதற்காக இந்த பார்வை என்பதை போல் மிரட்சியுடன் விழிக்கவும்.. அவள் எதிர்பார்த்த கோபமோ.. மூர்க்கத்தனமோ எதுவுமில்லாமல்.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்.. மிக நிதானமாக "என்ன ட்ரை பண்ற" என்றான் நக்கலாக இதழ் வளைத்து..
தடுமாறினாலும் அடுத்தகணமே சுதாரித்து "உங்களால் தாலி கட்டிக்கிட்ட நான் எல்லா விதத்திலும் உங்க மனைவியாக முயற்சி செய்கிறேன்".. என்று தைரியமாக பதிலளித்தாள் அவள்..
"ஓஹோ.. இதனால என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க".. என்று கேலியாக புருவங்களை வளைத்தான் ஜீவா..
"எனக்கு திருப்தி கிடைக்கும்.. நான் உங்க மேல வச்சிருக்குற காதலுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.. என்னோட குற்ற உணர்ச்சிக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.. இதையெல்லாம் மீறி எப்பவுமே உங்க பக்கத்துல இருக்கிற சந்தோஷம் கிடைக்கும்" என்றாள் அமைதியான குரலில்..
"வாரேவா".. பலமாக கைதட்டியவன் "அடேங்கப்பா வாயை திறக்கவே காசு கேக்குற மான்வி மேடம்.. என்னம்மா பாயிண்ட் பாயிண்ட்டா பேசுறாங்க.. பெரிய முன்னேற்றம் தான்".. போலி மெச்சுதலோடு தலை சாய்த்து உதட்டை பிதுக்கினான் அவன்..
"என்னை நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.. இனி உங்களுக்கு தேவையானதெல்லாம் நான் தான் செய்வேன்.. சாப்பாட்டை இப்படி காக்க வைக்க கூடாது சீக்கிரம் சாப்பிடுங்க".. என்றாள் மனைவிக்கே உரிய அதிகாரத்துடன்.. ஏற்கனவே வேலையின் அலுப்பில் ரொம்பவும் களைத்து போயிருந்தான் ஜீவா.. மேற்கொண்டு வாதம் பண்ண விரும்பாமல்.. அவள் பரிமாறி வைத்திருந்த உணவை அமைதியாக சாப்பிடலானான்.. மெல்ல விரிந்தன மான்வியின் இதழ்கள்.. தன் அன்பை வெளிப்படுத்துவதற்கான முதல் படியின் வெற்றியாகவே இதை நினைத்தாள்.. உண்டு முடித்து தனது அறைக்கு சென்று விட்டான்.. பூட்டிய அறை அதற்குப் பிறகு திறக்கவே இல்லை.. ஒரு வழியாக இன்று அவன் தயாராக இருக்கச் சொன்ன வேலையிலிருந்து விடுதலை என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மான்வி.. ஆம்.. கணவன் மனைவி ஆத்மார்த்தமான பந்தம் அவளைப் பொறுத்தவரை வேலையாகவே தோன்றியது.. அழகான தாம்பத்தியத்தின் ருசி அறியாத வரை அவள் எண்ணம் மாறப் போவதில்லை.. பிசிகல் ரிலேஷன்ஷிப் தள்ளிப் போகும் நாட்கள் கோல்டன் பீரியட் என்பதைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள்..
அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.. இரவு நேரத்தில் கிசுகிசுப்பான குரலில் வீடியோ காலில் அவன் பேசும் அந்தரங்கம் காதுக்குள் மெல்லிசையாய் பரவி அவளை ஏதோ இம்சை செய்வதாய்..
வெளிப்படையாக அவன் எதையும் பேசியதில்லை ஆனாலும்.. வெகு சில வார்த்தைகள் பட்டும் படாமலும்.. மறைமுக பொருளோடு அவள் உயிர் தொட்டு செல்லும்.. சொல்ல முடியாத இடங்களில் இனம் புரியாத வலி ஏற்படும்.. அது பொங்கி பெருகும் உணர்வின் தாக்கம் என்று புரிந்து கொள்ள முடியாமல்.. ஏன் அங்கே வலிக்கிறது என்று அதற்கும் பயந்து.. தனக்குள் உருவெடுத்த உணர்வுகளை அணை போட்டு தடுத்து.. ஜீவா மீது எரிச்சலை உமிழ்ந்த நாட்கள் எத்தனையோ.. அவள் எரிச்சல் மிகுந்த பார்வையையோ பேச்சையோ.. இதுவரை ஒரு பொருட்டாக மதித்ததில்லை அவன்.. ஆனால் இப்போது அதே எரிச்சலை அவன் நெருப்பாக அள்ளி தெளிக்கும் போது.. இருதயம் மிகுந்த காயப்பட்டு போகிறதே..
நடுநிசியை தாண்டி விட்டதாலும் தோட்டத்தில் வெகு நேரம் நடந்த அயற்சியாலும் கண்கள் சொக்கி விழுந்தவள்.. எப்போது உறங்கினாளோ அவளை அறிவாள்..
புத்தம் புது காலையை சுமந்து வந்த பொன்வானம் வெளிச்சக் கதிர்களோடு பிரகாசித்து அலாரம் இல்லாமலே ஜீவாவின் கண்களை தொட்டு எழுப்பி விட்டதோ என்னவோ.. சரியான நேரத்திற்கு உறக்கம் கலைந்திருந்தான்..
மெல்ல எழுந்து அமர்ந்தவன் கண்களை மூடி திறந்து கைகளை தூக்கி தன் நீளமான தேகத்தை வளைத்து சோம்பல் முறித்து.. "குட் மார்னிங் அப்பா".. என்றான் காற்றோடு அவன் குரல் கலந்து சம்பந்தப்பட்டவருக்கு கேட்பதைப் போல்..
எப்போதும் எழுந்தவுடன் அப்பாவின் அறைக்கு சென்று குட் மார்னிங் சொல்லிவிட்டு பிறகு ஜாகிங் செல்வது தான் அவன் வழக்கம்.. அதே பழக்க தோஷத்தில் இப்போதும் எழுந்தவுடன் குட் மார்னிங் சொல்கிறான்.. இறைவன் எங்கும் இருப்பதைப் போல் அவன் தந்தையும்.. அவன் கூடவே இருப்பதைப் போன்ற உணர்வுடன் காற்றோடு குட் மார்னிங் சொல்லி அவரோடு தொடர்பு கொள்கிறான்.. இது பைத்தியக்காரத்தனம் அல்ல.. ஆத்மார்த்தமான பந்தத்தின் அடையாளம்..
எழுந்து குளியலறை சென்று வெளியே வந்தவன்.. வேகமாக வீட்டை விட்டு இறங்கி.. தன் நீளமான இரண்டு கைகளையும் சுழற்றி.. ஒருகால் முட்டியை மடக்கி மறு காலை சாய்த்து.. என பலமுறை வாம் அப் செய்துவிட்டு.. ஜாகிங் பயிற்சிக்காக வீட்டை சுற்றி போடப்பட்டிருந்த சிமெண்ட் பாதையில் ஓட ஆரம்பித்திருந்தான்.. வியர்வையில் குளித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 20 ரவுண்டுகள் ஓடிய பிறகு மூச்சிரைக்க.. தன் வேகத்தை குறைத்தவன்.. ஒரே இடத்தில் நின்று சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் வீட்டினுள் சென்றான்..
காலையில் எழுந்ததிலிருந்து யூடியூப் விலாகர் போல் உடற்பயிற்சியில் ஆரம்பித்து அலுவலகம் கிளம்பும் வரை அத்தனை அலுவல்களையும் அவளிடம் போன் கால் மூலம் அப்டேட் செய்பவன்.. இப்போது மான்வி என்ற ஒருத்தியே இல்லாதது போல் எந்த வித தொடர்பும் இல்லாமல்.. தூரதேசத்தில் தனித்து விட்டவனாய் நடந்து கொள்வது தான் அதிசயம்.. அதிக அமைதியும் ஆபத்தல்லவா!!..
அறைக்குள் நுழைந்திருந்த வேளையில் அவன் போடுவதற்கான உடைகள் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன.. அவன் படுக்கை விரிப்பு சரி செய்யப்பட்டு.. அழுக்கு உடைகள் துவைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.. இடுப்பில் கை வைத்து கண்கள் மூடி திறந்தவன் "மான்விஇஇ".. என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அழைத்திருக்க.. ஓரிரு நிமிடங்களில் அவன் முன்பு வந்து நின்றாள் அவள்.. முறைப்போடு ஆரம்பித்து அடுத்து சொல்லம்புகளாக "எதுக்காக இதெல்லாம் செஞ்சு வச்சிருக்க.. லுக்.. நீ என்ன செஞ்சாலும் என் மனசுல இடம் பிடிக்க முடியாது.. என்னோட அப்பாவுக்காகவும் சொசைட்டிக்காக மட்டும் தான் இந்த கல்யாணம்.. இதை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. அதை நீ புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்.. அதோட எந்த வேலைக்காரியும் எனக்கு தேவையில்லை.. என் வேலைகளை செஞ்சுக்க எனக்கு தெரியும்".. என தொடர்ச்சியாக எரி கற்களை எரிந்திருந்தான் ஜீவா..
கடுமையான முகபாவனை அவளுக்குள் தீராத வருத்தத்தை தோற்றுவித்தாலும் மறைத்துக் கொண்டு.. "நான் வேலைக்காரியா இல்ல மனைவியா.. மனப்பூர்வமா இந்த வேலைகளை செய்யறேன்".. என்றாள் அவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக..
உன் பதில் எந்த விதத்திலும் என் மனதை அசைக்கவில்லை என்பது போன்ற இறுக்கமான முகத்துடன் "இங்க பாரு மான்வி.. இந்த பழைய காலத்து சரோஜாதேவி சாவித்திரி ட்ரிக்ஸ் எதுவுமே என்கிட்ட வேலைக்காகாது.. தேவையில்லாம எதுவும் பிளே பண்ணாதே.. உன் வேலையை பாரு.. என் வேலைகளை நானே செஞ்சிக்கிற அளவுக்கு என் அப்பா என்னை வளர்த்திருக்காரு.. உன் உதவி எனக்கு தேவையில்லை".. என்று அவள் கட்டில் மீது வைத்திருந்த உடைகளுக்கு பதிலாக.. தனது கபோர்ட்டிலிருந்து வேறு உடைகளை எடுத்து மேஜை மீது வைத்தவன்.. "இனி என் விஷயத்தில் தலையிடாதே" என்பது போல் ஒரு பார்வையை வீசிவிட்டு குளிக்க சென்று விட்டான்.. மனதில் ஏமாற்றம் தொற்றிக்கொள்ள கண் கலங்கி போனாள் அவள்..
குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் ஜீவா.. அவனை தொந்தரவாக நினைத்த காலகட்டத்திலேயே ரசித்த விழிகள்.. இப்போது கட்டுப்பாடுகளை மீறி தன் கணவன் என்ற உரிமையோடு அவன் கட்டுக்கோப்பான மேனியை ஸ்பரிசித்தது.. முழங்கை வரை சட்டையை ஏற்றி விட்டுக்கொண்டு கம்பீரமாக நடந்து வந்தவனை கண்டு.. இவரை ஏன் நிராகரிக்க முயற்சி செய்தோம் என்று எவ்வளவு யோசித்தாலும் விளங்கவில்லை அவளுக்கு.. அப்போதைய அநியாயங்கள் அனைத்தும் காற்றில் கலந்த கற்பூரமாக மறைந்து போனது இப்போது..
தந்தையை பறி கொடுத்த துக்கத்திலிருந்து அவனை எப்படியாவது மீட்டெடுத்து அன்பு மழையில் நனைய வைத்து.. பேரின்பத்தை பரிசாக அளிக்க வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டவளுக்கு அதற்கான வழிமுறைகள் தான் தெரியவில்லை.. முன்னே சென்றால் முட்டுவதும் பின்னே சென்றாள் உதைப்பதுமாக இருக்கிறானே அவன் தான்..
வழக்கம் போல அவளை உணவை பரிமாறினாள்.. வேலையாட்கள் முன்பு தங்களுக்கு இடையேயான பிரச்சனையை காட்டிக்கொள்ள விரும்பாது.. அவள் பரிமாறிய உணவை சாப்பிட்டதில்.. ஏதோ ஒரு திருப்தி மான்வியிடம்..
மீண்டும் அறைக்குள் சென்று வெளியே வந்தவன் கார் வரை நடந்து சென்ற போது தான் அலுவலகம் கிளம்புகிறான் என்று தெரிந்து கொண்டாள்.. திரும்பி அவளை பார்த்து போயிட்டு வரேன் என சொல்லுவான் என எதிர்பார்த்தாளோ என்னவோ!!.. அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டு கார் கதவை திறந்து உள்ளே ஏறியவன்.. முகத்தில் சேற்றை வாரியிறைப்பது போல் படு வேகமாக சென்று விட்டிருந்தான்.. ஏமாற்றத்தின் இருள் சூழ்ந்து கொண்டதில் முகத்தில் குடியேறிய சோக சாயலோடு ஆழ்ந்த மூச்செடுத்து தோட்டத்து பக்கம் நடந்தாள் மான்வி..
வழக்கம்போல எதிர் வீட்டின் மீது பதிந்தன அவள் விழிகள்.. அலுவலகம் செல்ல மனமே இல்லாமல்.. அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டே நடந்த அவள் கணவன்.. அவன் கரங்களோடு கோர்த்து.. சிணுங்களோடு ஏதோ சிரித்து பேசிக் கொண்டு வந்த அந்தப் பெண்.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அடுத்த கணமே தன்னை ஒரு மனுஷியாக கூட கண்டுகொள்ளாமல் சென்ற ஜீவாவின் புறக்கணிப்பு முள்ளாக தைத்து வலி கொடுத்தது..
தொடக்கத்திலிருந்தே காட்டப்படாத அன்பு அதிக பாதிப்பை கொடுப்பதில்லை.. ஆனால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டு பின் ரத்தமும் சதையுமாக பிடுங்கி எறியப்படும் அன்பு.. உதாசீனத்தோடு அள்ளி தெளிக்கப்படும் வெறுப்பு.. கொடுமையிலும் கொடுமை.. ஜீவாவின் காதல் எனும் மதுக்குடத்தில்.. திணறத் திணற மூழ்கி போதை கொண்ட வண்டாக வாழ்ந்தபோது அவன் அருமை தெரியவில்லை.. இப்போது அவன் அருகாமை வேண்டும் என்று நெஞ்சம் ஏங்கி தவிக்கும் வேளையில் வெறும் ஏமாற்றத்தை கொடுத்து எள்ளி நின்று நகைக்கும் விதியின் விளையாட்டை என்னவென்று சொல்வது..
அலுவலகத்திற்கு அழைத்து தனது மேனேஜரிடம்.. மறுநாளிலிருந்து வேலைக்கு வருவதாக தகவல் தெரிவித்தாள்..
காதம்பரியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்..
"ஹலோ ஜீவா.. லஞ்ச் பிரிப்பேர் செய்யறேன்.. மதியம் வீட்டுக்கு வரீங்களா?".. காலையில் அவள் பரிமாறிய உணவை மறுபேச்சு பேசாமல் அருந்தியதை சலுகையாக எடுத்துக்கொண்டு ஃபோனில் அழைத்து கேட்டிருந்தாள்..
"எனக்கு வேலை இருக்கு.. வீட்டுக்கெல்லாம் வர முடியாது.. முதல்ல தேவையில்லாம இந்த மாதிரி கால் செய்யறதை நிறுத்து".. முகத்தில் அறைந்தார் போல் பேசி போனை வைத்தான்.. ஒரு காலத்தில் அவனுக்கு அவள் செய்ததை.. இம்மியளவு குறையாது திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறான்.. அழுகை வந்தது.. புன்னகையோடு தன் பக்கத்தில் வந்து அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருந்த.. காதம்பரியின் முன் எதையும் வெளி காட்ட முடியாது அழுகையை விழுங்கி வலு கட்டாயமாக புன்னகைத்தாள் மானு.. அத்தனை கவலைகளுக்கு மத்தியிலும்.. ஜீவாவின் மனதை மாற்றி விடலாம்.. பழைய ஜீவாவை திரும்பிக் கொண்டு வந்து விடலாம் என்ற திடமான நம்பிக்கை அவளுள் துளிர்த்து மலர்ந்து வாசமெழுப்பியதில் இதயத்தின் ஓரம் புள்ளியாக நிம்மதி..
சூன்யமான மனநிலையும் தனிமையும் அவள் மன அழுத்தத்தை அதிகரிக்காமல் இல்லை.. வீட்டை சுற்றி சுற்றி நடந்தாள்.. அழகான வீடுதான்.. அவள் மனம்தான் இப்பேற்பட்ட ஆடம்பரமான வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சந்தோஷப்பட முடியாமல் நிலையில்லாத ஊஞ்சலாக சதிராடிக் கொண்டிருக்கிறது ..
சிறிது நேரம் தோட்டக்காரரோடு சேர்ந்து தோட்ட வேலை செய்தாள்.. காதம்பரிக்கு உதவி செய்தாள்.. ஆயிரம் வேலைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் அவள் மனம் ஜீவாவை மட்டுமே சுற்றிவரும் பொன்வண்டாக!! ..
ஒரு மாதிரியான சித்திரவதையான மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.. அவன் இழப்புகளுக்கு காரணமான தன்னையே எண்ணி குற்ற உணர்ச்சியில் நெஞ்சம் ரணமாக வலித்தது..
வழக்கம் போல் இரவு அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள்.. இன்று சோபாவில் அமராமல் வாசற்படியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அவனுக்காக காத்திருக்கவும்.. படியில் ஒரு கல் இருப்பதாக நினைத்து கடந்து சென்றான் அவன்..
அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டவன் வெகு நேரமாகியும் வெளியே வராது போகவே.. ஒரு கட்டத்தில் அவளே கதவை தட்டினாள்.. பசி வயிற்றைக் கிள்ளியது.. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கதவை பொறுமையாக திறந்தான் அவன் ..
மான்வியை ஏற இறங்க பார்த்துவிட்டு "என்ன" கடுமையான குரலோடு..
"சாப்பிட வரலையா?".. மனைவிக்கான உரிமையும் அக்கறையும் அவள் குரலில்..
பெருமூச்சோடு.. "நான் வெளியே சாப்பிட்டேன்.. எனக்கு வேண்டாம்".. மீண்டும் கதவை சாத்த முயன்ற வேளையில்.. "நான் இன்னும் சாப்பிடல.. உங்களுக்காக தான் காத்திருந்தேன்.. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே?".. என்றாள் கண்களில் நீர் துளிர்க்க..
அவள் கண்ணீரை கண்டும் காணாதவன் போல் அலட்சியமான முகபாவனையுடன்.. "உன்னை சாப்பிட வேண்டாம்னு நான் சொல்லலையே.. நீயா உன் இஷ்டப்படி செய்ற விஷயங்களுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.. எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம்.. போய் சாப்பிட்டு தூங்கு".. என்று கதவை சாத்திக் கொண்டான்..
முதல் முறையாக அவள் நம்பிக்கை ஆட்டம் கண்டது..
தொடரும்..
அவன் முகத்தைப் பார்த்தால் மனம் தடுமாறும்.. பயம் குடியேறும் என்பதால்.. வேகமாக பரிமாறி முடித்தவள்.. பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு "சாப்பிடுங்க".. என்றாள் இயல்பான முகத்தோடு..
இரண்டு நிமிடங்களுக்கு மேலாகியும்.. தட்டிலிருந்த உணவில் கைப்படாமல் அவன் விழிகள் தன்னையே ஊசியாக துளைப்பதை.. பார்வை தரை தாழ்ந்த போதிலும் உணர்ந்து கொண்டவள்.. மெல்ல நிமிர்ந்து எதற்காக இந்த பார்வை என்பதை போல் மிரட்சியுடன் விழிக்கவும்.. அவள் எதிர்பார்த்த கோபமோ.. மூர்க்கத்தனமோ எதுவுமில்லாமல்.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்.. மிக நிதானமாக "என்ன ட்ரை பண்ற" என்றான் நக்கலாக இதழ் வளைத்து..
தடுமாறினாலும் அடுத்தகணமே சுதாரித்து "உங்களால் தாலி கட்டிக்கிட்ட நான் எல்லா விதத்திலும் உங்க மனைவியாக முயற்சி செய்கிறேன்".. என்று தைரியமாக பதிலளித்தாள் அவள்..
"ஓஹோ.. இதனால என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க".. என்று கேலியாக புருவங்களை வளைத்தான் ஜீவா..
"எனக்கு திருப்தி கிடைக்கும்.. நான் உங்க மேல வச்சிருக்குற காதலுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.. என்னோட குற்ற உணர்ச்சிக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.. இதையெல்லாம் மீறி எப்பவுமே உங்க பக்கத்துல இருக்கிற சந்தோஷம் கிடைக்கும்" என்றாள் அமைதியான குரலில்..
"வாரேவா".. பலமாக கைதட்டியவன் "அடேங்கப்பா வாயை திறக்கவே காசு கேக்குற மான்வி மேடம்.. என்னம்மா பாயிண்ட் பாயிண்ட்டா பேசுறாங்க.. பெரிய முன்னேற்றம் தான்".. போலி மெச்சுதலோடு தலை சாய்த்து உதட்டை பிதுக்கினான் அவன்..
"என்னை நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.. இனி உங்களுக்கு தேவையானதெல்லாம் நான் தான் செய்வேன்.. சாப்பாட்டை இப்படி காக்க வைக்க கூடாது சீக்கிரம் சாப்பிடுங்க".. என்றாள் மனைவிக்கே உரிய அதிகாரத்துடன்.. ஏற்கனவே வேலையின் அலுப்பில் ரொம்பவும் களைத்து போயிருந்தான் ஜீவா.. மேற்கொண்டு வாதம் பண்ண விரும்பாமல்.. அவள் பரிமாறி வைத்திருந்த உணவை அமைதியாக சாப்பிடலானான்.. மெல்ல விரிந்தன மான்வியின் இதழ்கள்.. தன் அன்பை வெளிப்படுத்துவதற்கான முதல் படியின் வெற்றியாகவே இதை நினைத்தாள்.. உண்டு முடித்து தனது அறைக்கு சென்று விட்டான்.. பூட்டிய அறை அதற்குப் பிறகு திறக்கவே இல்லை.. ஒரு வழியாக இன்று அவன் தயாராக இருக்கச் சொன்ன வேலையிலிருந்து விடுதலை என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் மான்வி.. ஆம்.. கணவன் மனைவி ஆத்மார்த்தமான பந்தம் அவளைப் பொறுத்தவரை வேலையாகவே தோன்றியது.. அழகான தாம்பத்தியத்தின் ருசி அறியாத வரை அவள் எண்ணம் மாறப் போவதில்லை.. பிசிகல் ரிலேஷன்ஷிப் தள்ளிப் போகும் நாட்கள் கோல்டன் பீரியட் என்பதைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள்..
அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.. இரவு நேரத்தில் கிசுகிசுப்பான குரலில் வீடியோ காலில் அவன் பேசும் அந்தரங்கம் காதுக்குள் மெல்லிசையாய் பரவி அவளை ஏதோ இம்சை செய்வதாய்..
வெளிப்படையாக அவன் எதையும் பேசியதில்லை ஆனாலும்.. வெகு சில வார்த்தைகள் பட்டும் படாமலும்.. மறைமுக பொருளோடு அவள் உயிர் தொட்டு செல்லும்.. சொல்ல முடியாத இடங்களில் இனம் புரியாத வலி ஏற்படும்.. அது பொங்கி பெருகும் உணர்வின் தாக்கம் என்று புரிந்து கொள்ள முடியாமல்.. ஏன் அங்கே வலிக்கிறது என்று அதற்கும் பயந்து.. தனக்குள் உருவெடுத்த உணர்வுகளை அணை போட்டு தடுத்து.. ஜீவா மீது எரிச்சலை உமிழ்ந்த நாட்கள் எத்தனையோ.. அவள் எரிச்சல் மிகுந்த பார்வையையோ பேச்சையோ.. இதுவரை ஒரு பொருட்டாக மதித்ததில்லை அவன்.. ஆனால் இப்போது அதே எரிச்சலை அவன் நெருப்பாக அள்ளி தெளிக்கும் போது.. இருதயம் மிகுந்த காயப்பட்டு போகிறதே..
நடுநிசியை தாண்டி விட்டதாலும் தோட்டத்தில் வெகு நேரம் நடந்த அயற்சியாலும் கண்கள் சொக்கி விழுந்தவள்.. எப்போது உறங்கினாளோ அவளை அறிவாள்..
புத்தம் புது காலையை சுமந்து வந்த பொன்வானம் வெளிச்சக் கதிர்களோடு பிரகாசித்து அலாரம் இல்லாமலே ஜீவாவின் கண்களை தொட்டு எழுப்பி விட்டதோ என்னவோ.. சரியான நேரத்திற்கு உறக்கம் கலைந்திருந்தான்..
மெல்ல எழுந்து அமர்ந்தவன் கண்களை மூடி திறந்து கைகளை தூக்கி தன் நீளமான தேகத்தை வளைத்து சோம்பல் முறித்து.. "குட் மார்னிங் அப்பா".. என்றான் காற்றோடு அவன் குரல் கலந்து சம்பந்தப்பட்டவருக்கு கேட்பதைப் போல்..
எப்போதும் எழுந்தவுடன் அப்பாவின் அறைக்கு சென்று குட் மார்னிங் சொல்லிவிட்டு பிறகு ஜாகிங் செல்வது தான் அவன் வழக்கம்.. அதே பழக்க தோஷத்தில் இப்போதும் எழுந்தவுடன் குட் மார்னிங் சொல்கிறான்.. இறைவன் எங்கும் இருப்பதைப் போல் அவன் தந்தையும்.. அவன் கூடவே இருப்பதைப் போன்ற உணர்வுடன் காற்றோடு குட் மார்னிங் சொல்லி அவரோடு தொடர்பு கொள்கிறான்.. இது பைத்தியக்காரத்தனம் அல்ல.. ஆத்மார்த்தமான பந்தத்தின் அடையாளம்..
எழுந்து குளியலறை சென்று வெளியே வந்தவன்.. வேகமாக வீட்டை விட்டு இறங்கி.. தன் நீளமான இரண்டு கைகளையும் சுழற்றி.. ஒருகால் முட்டியை மடக்கி மறு காலை சாய்த்து.. என பலமுறை வாம் அப் செய்துவிட்டு.. ஜாகிங் பயிற்சிக்காக வீட்டை சுற்றி போடப்பட்டிருந்த சிமெண்ட் பாதையில் ஓட ஆரம்பித்திருந்தான்.. வியர்வையில் குளித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 20 ரவுண்டுகள் ஓடிய பிறகு மூச்சிரைக்க.. தன் வேகத்தை குறைத்தவன்.. ஒரே இடத்தில் நின்று சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் வீட்டினுள் சென்றான்..
காலையில் எழுந்ததிலிருந்து யூடியூப் விலாகர் போல் உடற்பயிற்சியில் ஆரம்பித்து அலுவலகம் கிளம்பும் வரை அத்தனை அலுவல்களையும் அவளிடம் போன் கால் மூலம் அப்டேட் செய்பவன்.. இப்போது மான்வி என்ற ஒருத்தியே இல்லாதது போல் எந்த வித தொடர்பும் இல்லாமல்.. தூரதேசத்தில் தனித்து விட்டவனாய் நடந்து கொள்வது தான் அதிசயம்.. அதிக அமைதியும் ஆபத்தல்லவா!!..
அறைக்குள் நுழைந்திருந்த வேளையில் அவன் போடுவதற்கான உடைகள் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன.. அவன் படுக்கை விரிப்பு சரி செய்யப்பட்டு.. அழுக்கு உடைகள் துவைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.. இடுப்பில் கை வைத்து கண்கள் மூடி திறந்தவன் "மான்விஇஇ".. என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அழைத்திருக்க.. ஓரிரு நிமிடங்களில் அவன் முன்பு வந்து நின்றாள் அவள்.. முறைப்போடு ஆரம்பித்து அடுத்து சொல்லம்புகளாக "எதுக்காக இதெல்லாம் செஞ்சு வச்சிருக்க.. லுக்.. நீ என்ன செஞ்சாலும் என் மனசுல இடம் பிடிக்க முடியாது.. என்னோட அப்பாவுக்காகவும் சொசைட்டிக்காக மட்டும் தான் இந்த கல்யாணம்.. இதை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. அதை நீ புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்.. அதோட எந்த வேலைக்காரியும் எனக்கு தேவையில்லை.. என் வேலைகளை செஞ்சுக்க எனக்கு தெரியும்".. என தொடர்ச்சியாக எரி கற்களை எரிந்திருந்தான் ஜீவா..
கடுமையான முகபாவனை அவளுக்குள் தீராத வருத்தத்தை தோற்றுவித்தாலும் மறைத்துக் கொண்டு.. "நான் வேலைக்காரியா இல்ல மனைவியா.. மனப்பூர்வமா இந்த வேலைகளை செய்யறேன்".. என்றாள் அவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக..
உன் பதில் எந்த விதத்திலும் என் மனதை அசைக்கவில்லை என்பது போன்ற இறுக்கமான முகத்துடன் "இங்க பாரு மான்வி.. இந்த பழைய காலத்து சரோஜாதேவி சாவித்திரி ட்ரிக்ஸ் எதுவுமே என்கிட்ட வேலைக்காகாது.. தேவையில்லாம எதுவும் பிளே பண்ணாதே.. உன் வேலையை பாரு.. என் வேலைகளை நானே செஞ்சிக்கிற அளவுக்கு என் அப்பா என்னை வளர்த்திருக்காரு.. உன் உதவி எனக்கு தேவையில்லை".. என்று அவள் கட்டில் மீது வைத்திருந்த உடைகளுக்கு பதிலாக.. தனது கபோர்ட்டிலிருந்து வேறு உடைகளை எடுத்து மேஜை மீது வைத்தவன்.. "இனி என் விஷயத்தில் தலையிடாதே" என்பது போல் ஒரு பார்வையை வீசிவிட்டு குளிக்க சென்று விட்டான்.. மனதில் ஏமாற்றம் தொற்றிக்கொள்ள கண் கலங்கி போனாள் அவள்..
குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் ஜீவா.. அவனை தொந்தரவாக நினைத்த காலகட்டத்திலேயே ரசித்த விழிகள்.. இப்போது கட்டுப்பாடுகளை மீறி தன் கணவன் என்ற உரிமையோடு அவன் கட்டுக்கோப்பான மேனியை ஸ்பரிசித்தது.. முழங்கை வரை சட்டையை ஏற்றி விட்டுக்கொண்டு கம்பீரமாக நடந்து வந்தவனை கண்டு.. இவரை ஏன் நிராகரிக்க முயற்சி செய்தோம் என்று எவ்வளவு யோசித்தாலும் விளங்கவில்லை அவளுக்கு.. அப்போதைய அநியாயங்கள் அனைத்தும் காற்றில் கலந்த கற்பூரமாக மறைந்து போனது இப்போது..
தந்தையை பறி கொடுத்த துக்கத்திலிருந்து அவனை எப்படியாவது மீட்டெடுத்து அன்பு மழையில் நனைய வைத்து.. பேரின்பத்தை பரிசாக அளிக்க வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டவளுக்கு அதற்கான வழிமுறைகள் தான் தெரியவில்லை.. முன்னே சென்றால் முட்டுவதும் பின்னே சென்றாள் உதைப்பதுமாக இருக்கிறானே அவன் தான்..
வழக்கம் போல அவளை உணவை பரிமாறினாள்.. வேலையாட்கள் முன்பு தங்களுக்கு இடையேயான பிரச்சனையை காட்டிக்கொள்ள விரும்பாது.. அவள் பரிமாறிய உணவை சாப்பிட்டதில்.. ஏதோ ஒரு திருப்தி மான்வியிடம்..
மீண்டும் அறைக்குள் சென்று வெளியே வந்தவன் கார் வரை நடந்து சென்ற போது தான் அலுவலகம் கிளம்புகிறான் என்று தெரிந்து கொண்டாள்.. திரும்பி அவளை பார்த்து போயிட்டு வரேன் என சொல்லுவான் என எதிர்பார்த்தாளோ என்னவோ!!.. அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டு கார் கதவை திறந்து உள்ளே ஏறியவன்.. முகத்தில் சேற்றை வாரியிறைப்பது போல் படு வேகமாக சென்று விட்டிருந்தான்.. ஏமாற்றத்தின் இருள் சூழ்ந்து கொண்டதில் முகத்தில் குடியேறிய சோக சாயலோடு ஆழ்ந்த மூச்செடுத்து தோட்டத்து பக்கம் நடந்தாள் மான்வி..
வழக்கம்போல எதிர் வீட்டின் மீது பதிந்தன அவள் விழிகள்.. அலுவலகம் செல்ல மனமே இல்லாமல்.. அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டே நடந்த அவள் கணவன்.. அவன் கரங்களோடு கோர்த்து.. சிணுங்களோடு ஏதோ சிரித்து பேசிக் கொண்டு வந்த அந்தப் பெண்.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அடுத்த கணமே தன்னை ஒரு மனுஷியாக கூட கண்டுகொள்ளாமல் சென்ற ஜீவாவின் புறக்கணிப்பு முள்ளாக தைத்து வலி கொடுத்தது..
தொடக்கத்திலிருந்தே காட்டப்படாத அன்பு அதிக பாதிப்பை கொடுப்பதில்லை.. ஆனால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டு பின் ரத்தமும் சதையுமாக பிடுங்கி எறியப்படும் அன்பு.. உதாசீனத்தோடு அள்ளி தெளிக்கப்படும் வெறுப்பு.. கொடுமையிலும் கொடுமை.. ஜீவாவின் காதல் எனும் மதுக்குடத்தில்.. திணறத் திணற மூழ்கி போதை கொண்ட வண்டாக வாழ்ந்தபோது அவன் அருமை தெரியவில்லை.. இப்போது அவன் அருகாமை வேண்டும் என்று நெஞ்சம் ஏங்கி தவிக்கும் வேளையில் வெறும் ஏமாற்றத்தை கொடுத்து எள்ளி நின்று நகைக்கும் விதியின் விளையாட்டை என்னவென்று சொல்வது..
அலுவலகத்திற்கு அழைத்து தனது மேனேஜரிடம்.. மறுநாளிலிருந்து வேலைக்கு வருவதாக தகவல் தெரிவித்தாள்..
காதம்பரியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்..
"ஹலோ ஜீவா.. லஞ்ச் பிரிப்பேர் செய்யறேன்.. மதியம் வீட்டுக்கு வரீங்களா?".. காலையில் அவள் பரிமாறிய உணவை மறுபேச்சு பேசாமல் அருந்தியதை சலுகையாக எடுத்துக்கொண்டு ஃபோனில் அழைத்து கேட்டிருந்தாள்..
"எனக்கு வேலை இருக்கு.. வீட்டுக்கெல்லாம் வர முடியாது.. முதல்ல தேவையில்லாம இந்த மாதிரி கால் செய்யறதை நிறுத்து".. முகத்தில் அறைந்தார் போல் பேசி போனை வைத்தான்.. ஒரு காலத்தில் அவனுக்கு அவள் செய்ததை.. இம்மியளவு குறையாது திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறான்.. அழுகை வந்தது.. புன்னகையோடு தன் பக்கத்தில் வந்து அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருந்த.. காதம்பரியின் முன் எதையும் வெளி காட்ட முடியாது அழுகையை விழுங்கி வலு கட்டாயமாக புன்னகைத்தாள் மானு.. அத்தனை கவலைகளுக்கு மத்தியிலும்.. ஜீவாவின் மனதை மாற்றி விடலாம்.. பழைய ஜீவாவை திரும்பிக் கொண்டு வந்து விடலாம் என்ற திடமான நம்பிக்கை அவளுள் துளிர்த்து மலர்ந்து வாசமெழுப்பியதில் இதயத்தின் ஓரம் புள்ளியாக நிம்மதி..
சூன்யமான மனநிலையும் தனிமையும் அவள் மன அழுத்தத்தை அதிகரிக்காமல் இல்லை.. வீட்டை சுற்றி சுற்றி நடந்தாள்.. அழகான வீடுதான்.. அவள் மனம்தான் இப்பேற்பட்ட ஆடம்பரமான வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சந்தோஷப்பட முடியாமல் நிலையில்லாத ஊஞ்சலாக சதிராடிக் கொண்டிருக்கிறது ..
சிறிது நேரம் தோட்டக்காரரோடு சேர்ந்து தோட்ட வேலை செய்தாள்.. காதம்பரிக்கு உதவி செய்தாள்.. ஆயிரம் வேலைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் அவள் மனம் ஜீவாவை மட்டுமே சுற்றிவரும் பொன்வண்டாக!! ..
ஒரு மாதிரியான சித்திரவதையான மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.. அவன் இழப்புகளுக்கு காரணமான தன்னையே எண்ணி குற்ற உணர்ச்சியில் நெஞ்சம் ரணமாக வலித்தது..
வழக்கம் போல் இரவு அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள்.. இன்று சோபாவில் அமராமல் வாசற்படியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அவனுக்காக காத்திருக்கவும்.. படியில் ஒரு கல் இருப்பதாக நினைத்து கடந்து சென்றான் அவன்..
அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டவன் வெகு நேரமாகியும் வெளியே வராது போகவே.. ஒரு கட்டத்தில் அவளே கதவை தட்டினாள்.. பசி வயிற்றைக் கிள்ளியது.. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கதவை பொறுமையாக திறந்தான் அவன் ..
மான்வியை ஏற இறங்க பார்த்துவிட்டு "என்ன" கடுமையான குரலோடு..
"சாப்பிட வரலையா?".. மனைவிக்கான உரிமையும் அக்கறையும் அவள் குரலில்..
பெருமூச்சோடு.. "நான் வெளியே சாப்பிட்டேன்.. எனக்கு வேண்டாம்".. மீண்டும் கதவை சாத்த முயன்ற வேளையில்.. "நான் இன்னும் சாப்பிடல.. உங்களுக்காக தான் காத்திருந்தேன்.. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே?".. என்றாள் கண்களில் நீர் துளிர்க்க..
அவள் கண்ணீரை கண்டும் காணாதவன் போல் அலட்சியமான முகபாவனையுடன்.. "உன்னை சாப்பிட வேண்டாம்னு நான் சொல்லலையே.. நீயா உன் இஷ்டப்படி செய்ற விஷயங்களுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.. எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம்.. போய் சாப்பிட்டு தூங்கு".. என்று கதவை சாத்திக் கொண்டான்..
முதல் முறையாக அவள் நம்பிக்கை ஆட்டம் கண்டது..
தொடரும்..
Last edited: