• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 29

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
திருமண மண்டபத்தினுள் புகுந்து.. திவாகரை அடித்துப் போட்டு மான்வியின் கழுத்தில் ஜீவா தாலி கட்டியதை.. பூதாகாரமாக திரித்து பலவிதமாக பேசிக் கொண்டிருந்தன யூடியூப் சேனல்கள்.. இன்னும் அந்த புயல் ஓய்ந்தபாடில்லை..

சில நேரங்களில் மான்வியை நடுரோட்டில் கண்டு விட்டு "மேம் உங்களை ஜீவா சார் கட்டாயப்படுத்தி திருமணம் செஞ்சதா ஒரு பேச்சு அடிப்படுதே.. நீங்க என்ன சொல்றீங்க" என்று மைக்கை தூக்கிக்கொண்டு அலையும் மீடியாக்களுக்கு பயந்து துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.. இந்த தொல்லை பிடித்த youtube சேனல்களை எப்படி தவிர்க்க வேண்டும் என்று ஜீவாவிற்கு தெரியும்.. பாவம் மான்விதான் சலசமயங்களில் திணறி போனாள்.

இப்போதுதான் சில நாட்களாக இந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது..

மணப்பெண்ணின் கழுத்தை வளைத்து.. தாலி கட்டிய ராட்சசன் என்று சிறிய கடுகை பலூன் போல் ஊதி பெரிதாக்கிக் கொண்டிருந்த சோசியல் மீடியாவின் நியூஸ் சேனல்களை அவளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. இப்படித்தானே அந்த ரோட் சைடு ரோமியோவை அடித்த போதும் அவனை வில்லனாக காண்பித்து தன் குடும்பத்தின் மனதில் பயத்தையும் தன் மனதில் கலக்கத்தையும் விதைத்த அந்த பொய் புளுகி மீடியாக்கள் மீதும்.. யூடியூப் சேனல்கள் மீதும் கட்டுக்கடங்காத கோபம் அவளுக்கு.. ஆயிரம் பேர் ஆயிரம் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடலாம்.. உனக்கு எங்கே போனது அறிவு? என்று மனசாட்சி அவளுக்கு ஆறுதல் சொல்வதை விடுத்து குற்றம் சாட்டியதில் மேலும் நொந்து போனாள் மான்வி..

இடையில் ஒருநாள்.. ஆட்டோவில்.. சிக்னலில் நின்ற போது பள்ளி சீருடையில் நிவினைக் காண நேர்ந்தது.. ஜீவா திருமணத்தின் போது போட்ட கட்டுப்பாடுகள் தகர்ந்து போக.. தம்பியை கண்டதும் தன்னிலை மறந்து ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடியிருந்தாள் மான்வி..

"நிவின்".. என அழைத்து அவனை நெருங்கும் நேரத்தில்.. ஆனந்த திகைப்புடன் "அக்காஆஆ".. என முகம் மலர்ந்து ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான் அவனும்..

"எப்படிடா இருக்க?.. அனிதா எப்படி இருக்கா?.. அம்மா அப்பா நல்லா இருக்காங்களா!!".. பேச முடியாது கண்ணீர் வழிந்த போதும். அவள் கரம் நிவின் தலையை பாசமாக வருடி கொடுத்தது..

"எல்லோரும் நல்லா இருக்கோம் நீ ஏன்க்கா ஒரு போன் கூட பண்ணல.. நாங்க போன் செய்யறோம்னு சொன்னா கூட அம்மாவும் அப்பாவும் வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிட்டாங்க.. நானும் அனிதாவும் உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்".. என்றான் நீண்ட நாள் கழித்து அக்காவை கண்டதில் சந்தோஷம் பொங்க..

"நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் நிவின்.. என்றாள் நெஞ்சம் நெகிழ்ந்து.. சிறு பையனிடம் வேறு எதையும் சொல்லி அவனை குழப்ப விரும்பவில்லை.. இந்த பக்கம் என்ன செய்ற?.. உன்னோட ஸ்கூல் இந்த ஏரியா இல்லையே".. பேச்சை திசை திருப்பி உரிமையோடு.. தம்பியை விசாரித்தாள்..

"என்னோட கெமிஸ்ட்ரி ரெக்கார்டு என் ஃபிரண்டு கிட்ட இருக்கு அக்கா.. அவன் இன்னைக்கு லீவு.. நோட்டு கண்டிப்பா சப்மிட் பண்ணியே ஆகணும்.. அதனாலதான் அவன் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்".. என்றதும் "ஒஹோ".. என்று தலையசைத்தவளாக "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்.. அந்த திவாகர் ஃபேமிலியால எந்த பிரச்சினையும் இல்லையே, அம்மா அப்பா நல்லா இருக்காங்களா".. தவிப்போடு கேட்டாள்..

"இல்லைக்கா.. அந்த குடும்பத்தை உன்னோட கல்யாணத்துக்கு பிறகு நாங்க பாக்கவே இல்ல.. அடிக்கடி ஒரு போலீஸ் அங்கிள் மட்டும் அப்பா கிட்ட வந்து அவங்க ஏதாவது பிரச்சனை கொடுக்குறாங்களான்னு விசாரிச்சுட்டு போவாரு.. நானும் அனிதாவும் எப்பவும் போல ஸ்கூல் போயிட்டு வர்றோம்.. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நீ கவலைப்படாம இரு".. அவள் கவலை உணர்ந்து பக்குவப்பட்டவனாக ஆறுதல் கூறியவனை கண்டு மான்விக்குள் ஊற்றாக சிறு சந்தோஷம்..

"சரிக்கா.. நான் கிளம்பனும் மிஸ் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு வந்திருக்கேன்.. சீக்கிரம் போகணும் நீ ஒரு நாள் வீட்டுக்கு வா.. உன்கிட்ட நிறைய பேசணும்".. ஏக்கத்தோடு அழைப்பு விடுத்த தம்பிக்கு.. தன்னிலையை சொல்லி மறுக்க மனம் வராமல் "சரி.. கண்டிப்பா வரேன்".. வலிய புன்னகைத்து அவன் தலைவருடியவள்.. அந்த சிறிய சந்துக்குள் புகுந்து அவன் உருவம் மறையும் வரையில் எதையோ தொலைத்தவளாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள்..

ஜீவாவிடமிருந்து அன்பு காதலும் கிடைக்காத நிலையில் பிறந்த வீட்டையும் பிரிந்த சோகம் மீண்டும் ஆட்கொண்டு அவள் நெஞ்சை புரட்டி போட்டதில்.. இனம் புரியாத வெற்றிடம் உருவாகி.. மான்வியை சோகக்கடலுக்குள் ஆழ்த்தியது..

இங்கே அலுவலகத்தில் ஜீவாவை பார்க்க வந்திருந்தான் பரத்..

"சொல்லுடா ஏதாவது சாப்பிடறியா?".. என்று கேட்ட நண்பனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அவன்..

"என்ன விஷயம்.. அட்வைஸ் பண்றதுக்கு பக்கம் பக்கமா பிரிப்பேர் செஞ்சு வச்சிருப்பியே.. எடுத்து விடு".. அலட்சியமாக கூறிவிட்டு கணினியில் கண் பதித்துக் கொண்டான் ஜீவா..

"ஜீவா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிட்டியா".. காரசாரமான குரலில் எதைப் பற்றி கேட்கப் போகிறான் என்று புரிந்தவனாய்.. "நீ குறை சொல்ற அளவுக்கு நான் எதுவுமே செய்யலையே!!.. அப்புறம் என்ன உன் பிரச்சனை".. என்றான் இதழ்கள் சுழித்து..

"ஜீவா எனக்கும் அந்த பொண்ணு மேல கோபம் இருக்கு.. அப்பாவோட இறப்புக்கு அவ ஒரு வகையில காரணம் அவ்வளவுதான்.. அதுக்காக அவளை நீ கொலை குற்றவாளி மாதிரி வெறுக்கிறது சரியில்ல".. என்றான் ஒரு நண்பனாக கண்டிக்கும் தொனியில்..

"அதுக்காக அவளை தூக்கி வைச்சு கொண்டாட சொல்றியா".. எகத்தாளமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.. ஜீவாவின் இந்த அலட்சியப் போக்கான வார்த்தைகள் பரத்திற்கே சற்று அதிர்ச்சிதான்..

"அவளை தூக்கி வைத்து கொண்டாட சொல்லல.. தள்ளி நின்னு உன்னோட வெறுப்பை காட்டி இருக்கலாமே.. எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டே.. இதுக்கு அவ அவங்க வீட்டிலேயே சந்தோஷமா இருந்திருப்பாளே.. கூட்டிட்டு வந்து காயப்படுத்த தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா ஜீவா".. நேரடியான தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக.. "நான் ஒன்னும் வலுக்கட்டாயமா அவளை கல்யாணம் செய்து தூக்கிட்டு வரல.. அவளோட அம்மா கால்ல விழாத குறையா வீட்டுக்கு வந்து கெஞ்சினாங்களே.. நீ பாத்துட்டு தானே இருந்தே.. அதோட ஒரு அயோக்கியன் கையில மாட்டி அவ வாழ்க்கை வீணாகிடக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்தில் தான் அவளை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்தேன்".. என்று அனல் தாங்கிய கண்களோடு விளக்கம் கொடுத்தான் அவன்..

"அவளோட அம்மா காப்பாத்த தான் சொன்னாங்க.. கல்யாணம் பண்ணிக்க சொல்லலையே.. நீ ஏன் தாலி கட்டினே?".. சரியான கேள்வியோடு அவனை மடக்கியதாக நினைத்தான் பரத்.. தான் எதிர்பார்க்கும் வார்த்தைகளை சொல்லி விட மாட்டானா என்று எதிர்பார்ப்பு அவனுக்குள்..

ஆனால் ஜீவா அவன் எதிர்பார்ப்புக்கு இடம் கொடுக்காமல் "நான் தாலி கட்டி கூட்டிட்டு வராம போயிருந்தா.. தினமும் அவளுக்கு பிரச்சினைகள் வந்துட்டே இருக்கும்.. கல்யாணம் நின்னு போன பொண்ணை இந்த உலகம் வாழ விடுமா.. ஏற்கனவே மீடியா.. நியூஸ் சேனலுக்கு இப்ப நான்தான் தீனி போட்டுட்டு இருக்கேன்.. அந்த வேலையை அவ எடுத்துக்கணுமா.. தினமும் ஏதாவது ஒரு சேனல் அவளை பிச்சு தின்னுவாங்க.. அந்தப் பழியும் என் மேல விழும்.. இருக்கிற பிரச்சினை போதாதா? இது தேவைதானா எனக்கு".. என்றான் கோபமும் எரிச்சலுமாக..

"ஓஹோ.. அவளை நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்கு இது மட்டும் தான் காரணமா?".. பரத் பொருளடங்கிய பார்வையுடன் புருவங்களை உயர்த்தவும்.. ஆழ்ந்த மூச்சுடன் நிமிர்ந்தவன் தீர்க்கமான பார்வையுடன் "இதையெல்லாம் விட முக்கியமான காரணம்.. நான் மான்வியை கல்யாணம் செஞ்சுக்கணும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டார்.. அப்பாவோட ஆசைப்படி அவள் மூலமா என்னோட சந்ததி விருத்தியாகணும்.. அதனால தான் அவளை திருமணம் செஞ்சுகிட்டேன் போதுமா?".. என்றான் வெகு இயல்பாக..

"ஓஹோ?.. எப்படா இவ்வளவு சுயநலவாதியாகி போன?.. அவ என்ன புள்ள பெத்துக்கற மிஷினா.. அவளுக்கும் உணர்வுகள் இருக்கு.. அதை புரிஞ்சுக்கோடா".. பரத்திற்கு மான்வின் மீது கோபம் இருந்தாலும் காதலின் அடையாளமாக வாழ்ந்தவன் மான்வியை இந்த அளவுக்கு வெறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

"நான் அவளை கட்டாயப்படுத்தல.. அவளோட விருப்பத்தோடு தான் எல்லாம் நடக்குது".. ஜீவா இடைப்பகுந்தான்..

"அவ ஒப்புதலோடு நடக்குதுன்னு சொல்லு விருப்பத்தோடு நடக்குதுன்னு சொல்லாதே".. என்றதில் மௌனமாக உணர்ச்சி துடைத்த முகத்துடன் பரத்தை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"ஜீவா.. உன்னோட நிதானம் என்னை ரொம்ப பயப்பட வைக்குது டா.. நீ என்ன மனசுல நினைக்கிறனு என்னால புரிஞ்சுக்கவே முடியல" என்றதில் சத்தம் போட்டு சிரித்தான் அவன்.. அவன் வெடித்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் பரத் விழித்துக் கொண்டிருக்க அவனே விளக்கம் கொடுக்கும் விதமாய்

"என்னடா உன் பிரச்சனை.. ஓவர் எமோஷனலா இருக்கே.. பயமா இருக்கு.. நிதானமா இரு சாப்ட்டா ஹாண்டில் பண்ணு.. அவளை டார்ச்சர் பண்ணாதே.. புரிஞ்சு நடந்துக்கோ.. இதையெல்லாம் சொன்னது நீதானே.. இப்ப நான் அவளை தொந்தரவே பண்றது இல்ல.. ரொம்ப அமைதியா பேசுறேன்.. நிதானமா நடந்துக்கிறேன்.. கோபப்படுறதில்ல.. இப்பவும் அதையே சொன்னா எப்படி?.. எனக்கு புரியலடா உன்னோட லாஜிக்".. கேலியான பார்வையும்.. அடங்காத சிரிப்புமாக அழுத்தமாக கேட்டிருந்தான் ஜீவா..

"அதுதாண்டா எனக்கும் புரியல.. அப்பா இறந்த பிறகு நீ அடியோடு மாறிட்ட.. எது செஞ்சாலும் ரொம்ப பொறுமையா பிளான் பண்ணி.. ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கிறே.. அந்த பொண்ணு பாவம்.. தனியா ஆபீஸ் கிளம்பி போறதும் தனியா வர்றதும்.. பிறந்த வீட்டோட.. தொடர்பு இல்லாம தனிமையில நேரத்தை கழிக்கிறதும்.. ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சான்".. சோகம் அப்பியிருந்த அவன் முகத்தை கண்டு கொள்ளாது.. காதம்பரி சொன்னாங்களா.. என்றான் கண்களில் கடுமை கூட்டி..

"யாரும் சொல்லல.. தீப்தி ஒரு முறை உன் வீட்டுக்கு வந்தப்போ மான்வி எல்லாத்தையும் சொல்லி அழுதிருக்கா.. தீப்தி அவ மேல கோவமா இருந்ததுனால எதுவும் பேசிக்கல.. ஆனா மான்வியோட நிலைமையை நினைச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கிறதா என்கிட்ட வந்து புலம்பினா".. என்றான் பரத்..

"ஓஹோ மேடம் சிம்பதி தேடிக்கிறாங்களோ".. புருவங்களும் இதழ்களும் ஏளனத்தோடு வளைந்தன..

ஆழ்ந்த மூச்சோடு சலிப்பாக.. "எல்லாத்தையும் தவறான கோணத்தில் பாக்காத ஜீவா.. மான்வி தெரியாம உனக்கு கொடுத்த வலியை நீ தெரிஞ்சே அவளுக்கு தர்றே.. உன் இழப்பு பெருசுதான்.. ஆனா உன் பிடிவாதத்தால அவளை நீ இழந்திடாதே.. என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும்".. என்று எழுந்தவன் கதவு வரை சென்று விட்டு அங்கேயே நின்று.. "அப்பவும் சரி இப்பவும் சரி நீ அவளை கஷ்டப்படுத்திக்கிட்டு தான் இருக்கே.. இதுக்கு நீ மாறாமலேயே இருந்திருக்கலாம் ஜீவா".. என்று இயலாமையோடு சொல்லி விட்டு செல்லவும்.. இரும்பாக இறுகிய முகத்துடன்.. அவன் சென்ற திசையை வெறித்து கொண்டிருந்தான் ஜீவா..

விடா முயற்சியாக.. தன் மனதின் காதலை வெளிப்படுத்தும் விதமாக.. சுயமரியாதையை தொலைத்து.. அவன் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கண்டுகொள்ளாமல்.. முத்தமிட்டாள்.. கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள்.. அவன் வெற்று மார்பில் புதைந்தாள்.. சாதம் ஊட்ட முயன்றாள்.. அவன் கரம் பிடித்து தோளில் போட்டுக் கொண்டாள்.. குளிக்கும் நேரத்தில் அனுமதியின்றி நுழைந்து அவனோடு உறவாடினாள்.. அவன் இதழை கடித்தாள்.. உறவுக்கு அழைத்தாள்.. கெஞ்சினாள்.. கதறினால் அழுதாள்.. பலன் பூஜ்ஜியம்.. ஒரு மனைவியின் இத்தனை காதலின் இம்சைகளை தாங்கி எப்படி அவனால் இரும்பாக இறுகி நிற்க முடிகிறது.. உண்மையில் என்னைப் பிடிக்கவில்லையோ, நான் தான் வீண் முயற்சி செய்கிறேனா!! .. ஜீவாவின் அன்பும் காதலும் இனி எனக்கு கிடைக்கவே கிடைக்காதா?.. மனதினில் மீண்டும் இனம் புரியாத அச்சம்..

பல நாட்கள் இப்படியே தொடர ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தாள் மான்வி.. உச்சக்கட்ட அழுத்தத்தோடு அங்கிருந்த பூந்தொட்டியை கீழே தள்ளி உடைத்தாள்.. அப்போதும் சலனமில்லாத பார்வையுடன் அவள் பக்கம் திரும்பி மார்பின் குறுக்கே கைகட்டி நின்றான் அவன்..

"ஏன் ஜீவா ஏன் என்னை உங்களுக்கு பிடிக்கல?".. ஆக்ரோஷமாக கட்டியவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"இவ்வளவு கெஞ்சறேனே.. எந்த விதத்திலும் நான் உங்க மனசை நெருங்கலையா.. என் மேல காதல் வரவே இல்லையா.. உங்களை ஆசை தீர கொஞ்சறேன்.. முத்தம் கொடுக்கிறேன்.. கட்டிப்பிடிக்கிறேன் நீங்க பிடிச்சு தள்ளி விட்டாலும்.. உங்க நெஞ்சில படுத்துக்கிறேன்.. நிறைய நிறைய மனசு விட்டு பேசறேன்.. கல்லு மாதிரியே இருக்கீங்களே.. ரொம்ப வலிக்குது ஜீவா".. இதயம் வலிக்க கட்டிலில் தொப்பென அமர்ந்தாள் கண்ணீருடன்..

அருகில் வந்து நின்றவன் அவள் முகம் பற்றி நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தான்.. எந்த உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காத அவன் முகத்தில் எதையோ தேடி கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனாள் அவள்..

மெல்லிய புன்னகையுடன்.. "கல்யாணத்துக்கு முன்னாடி இதையேதான் உன்கிட்ட நானும் செஞ்சேன்.. உனக்கு என் மேல காதல் வந்ததா.. வெறுப்பு தானே வந்துச்சு?.. அப்புறம் எனக்கு மட்டும் காதல் வரும்னு எப்படி எதிர்பார்க்கிற மான்வி?.. அழுத்தமான கேள்விதனில் வாயடைத்து விழிகள் தெறிக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

வேதனை ததும்பிய அவள் முகத்தை சட்டை செய்யாமல் "எனக்கு நைட் வேலை இருக்கு.. நான் வர லேட்டாகும்.. நீ படுத்து தூங்கு".. மான்வியின் இதயத்தை மீண்டும் ஒருமுறை சுக்கு நூறாக உடைத்து விட்டு.. அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தான் ஜீவா..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 10, 2023
Messages
56
Superb sis
Maanvi unna vida jeeva ah ippa la rombavae porumaiya irukkan 🙄🙄🙄🙄🙄
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
140
Jeeva kalyanathuku munnadi kalyanathu pirahu nnu 2 part iruku ..... irandaiyum ore tha partha eppadi da.....🙄🙄🙄🙄🙄🙄 but ✍️👌 👌👌👌..... waiting for next ud sisy......2ud upload pannunga sisy....
 
Member
Joined
Apr 7, 2023
Messages
57
Super going sis 👌👌👌👌👌👌👌 next ud pls
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
திருமண மண்டபத்தினுள் புகுந்து.. திவாகரை அடித்துப் போட்டு மான்வியின் கழுத்தில் ஜீவா தாலி கட்டியதை.. பூதாகாரமாக திரித்து பலவிதமாக பேசிக் கொண்டிருந்தன யூடியூப் சேனல்கள்.. இன்னும் அந்த புயல் ஓய்ந்தபாடில்லை..

சில நேரங்களில் மான்வியை நடுரோட்டில் கண்டு விட்டு "மேம் உங்களை ஜீவா சார் கட்டாயப்படுத்தி திருமணம் செஞ்சதா ஒரு பேச்சு அடிப்படுதே.. நீங்க என்ன சொல்றீங்க" என்று மைக்கை தூக்கிக்கொண்டு அலையும் மீடியாக்களுக்கு பயந்து துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.. இந்த தொல்லை பிடித்த youtube சேனல்களை எப்படி தவிர்க்க வேண்டும் என்று ஜீவாவிற்கு தெரியும்.. பாவம் மான்விதான் சலசமயங்களில் திணறி போனாள்.

இப்போதுதான் சில நாட்களாக இந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது..

மணப்பெண்ணின் கழுத்தை வளைத்து.. தாலி கட்டிய ராட்சசன் என்று சிறிய கடுகை பலூன் போல் ஊதி பெரிதாக்கிக் கொண்டிருந்த சோசியல் மீடியாவின் நியூஸ் சேனல்களை அவளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. இப்படித்தானே அந்த ரோட் சைடு ரோமியோவை அடித்த போதும் அவனை வில்லனாக காண்பித்து தன் குடும்பத்தின் மனதில் பயத்தையும் தன் மனதில் கலக்கத்தையும் விதைத்த அந்த பொய் புளுகி மீடியாக்கள் மீதும்.. யூடியூப் சேனல்கள் மீதும் கட்டுக்கடங்காத கோபம் அவளுக்கு.. ஆயிரம் பேர் ஆயிரம் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடலாம்.. உனக்கு எங்கே போனது அறிவு? என்று மனசாட்சி அவளுக்கு ஆறுதல் சொல்வதை விடுத்து குற்றம் சாட்டியதில் மேலும் நொந்து போனாள் மான்வி..

இடையில் ஒருநாள்.. ஆட்டோவில்.. சிக்னலில் நின்ற போது பள்ளி சீருடையில் நிவினைக் காண நேர்ந்தது.. ஜீவா திருமணத்தின் போது போட்ட கட்டுப்பாடுகள் தகர்ந்து போக.. தம்பியை கண்டதும் தன்னிலை மறந்து ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடியிருந்தாள் மான்வி..

"நிவின்".. என அழைத்து அவனை நெருங்கும் நேரத்தில்.. ஆனந்த திகைப்புடன் "அக்காஆஆ".. என முகம் மலர்ந்து ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான் அவனும்..

"எப்படிடா இருக்க?.. அனிதா எப்படி இருக்கா?.. அம்மா அப்பா நல்லா இருக்காங்களா!!".. பேச முடியாது கண்ணீர் வழிந்த போதும். அவள் கரம் நிவின் தலையை பாசமாக வருடி கொடுத்தது..

"எல்லோரும் நல்லா இருக்கோம் நீ ஏன்க்கா ஒரு போன் கூட பண்ணல.. நாங்க போன் செய்யறோம்னு சொன்னா கூட அம்மாவும் அப்பாவும் வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிட்டாங்க.. நானும் அனிதாவும் உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்".. என்றான் நீண்ட நாள் கழித்து அக்காவை கண்டதில் சந்தோஷம் பொங்க..

"நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் நிவின்.. என்றாள் நெஞ்சம் நெகிழ்ந்து.. சிறு பையனிடம் வேறு எதையும் சொல்லி அவனை குழப்ப விரும்பவில்லை.. இந்த பக்கம் என்ன செய்ற?.. உன்னோட ஸ்கூல் இந்த ஏரியா இல்லையே".. பேச்சை திசை திருப்பி உரிமையோடு.. தம்பியை விசாரித்தாள்..

"என்னோட கெமிஸ்ட்ரி ரெக்கார்டு என் ஃபிரண்டு கிட்ட இருக்கு அக்கா.. அவன் இன்னைக்கு லீவு.. நோட்டு கண்டிப்பா சப்மிட் பண்ணியே ஆகணும்.. அதனாலதான் அவன் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்".. என்றதும் "ஒஹோ".. என்று தலையசைத்தவளாக "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்.. அந்த திவாகர் ஃபேமிலியால எந்த பிரச்சினையும் இல்லையே, அம்மா அப்பா நல்லா இருக்காங்களா".. தவிப்போடு கேட்டாள்..

"இல்லைக்கா.. அந்த குடும்பத்தை உன்னோட கல்யாணத்துக்கு பிறகு நாங்க பாக்கவே இல்ல.. அடிக்கடி ஒரு போலீஸ் அங்கிள் மட்டும் அப்பா கிட்ட வந்து அவங்க ஏதாவது பிரச்சனை கொடுக்குறாங்களான்னு விசாரிச்சுட்டு போவாரு.. நானும் அனிதாவும் எப்பவும் போல ஸ்கூல் போயிட்டு வர்றோம்.. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நீ கவலைப்படாம இரு".. அவள் கவலை உணர்ந்து பக்குவப்பட்டவனாக ஆறுதல் கூறியவனை கண்டு மான்விக்குள் ஊற்றாக சிறு சந்தோஷம்..

"சரிக்கா.. நான் கிளம்பனும் மிஸ் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு வந்திருக்கேன்.. சீக்கிரம் போகணும் நீ ஒரு நாள் வீட்டுக்கு வா.. உன்கிட்ட நிறைய பேசணும்".. ஏக்கத்தோடு அழைப்பு விடுத்த தம்பிக்கு.. தன்னிலையை சொல்லி மறுக்க மனம் வராமல் "சரி.. கண்டிப்பா வரேன்".. வலிய புன்னகைத்து அவன் தலைவருடியவள்.. அந்த சிறிய சந்துக்குள் புகுந்து அவன் உருவம் மறையும் வரையில் எதையோ தொலைத்தவளாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள்..

ஜீவாவிடமிருந்து அன்பு காதலும் கிடைக்காத நிலையில் பிறந்த வீட்டையும் பிரிந்த சோகம் மீண்டும் ஆட்கொண்டு அவள் நெஞ்சை புரட்டி போட்டதில்.. இனம் புரியாத வெற்றிடம் உருவாகி.. மான்வியை சோகக்கடலுக்குள் ஆழ்த்தியது..

இங்கே அலுவலகத்தில் ஜீவாவை பார்க்க வந்திருந்தான் பரத்..

"சொல்லுடா ஏதாவது சாப்பிடறியா?".. என்று கேட்ட நண்பனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அவன்..

"என்ன விஷயம்.. அட்வைஸ் பண்றதுக்கு பக்கம் பக்கமா பிரிப்பேர் செஞ்சு வச்சிருப்பியே.. எடுத்து விடு".. அலட்சியமாக கூறிவிட்டு கணினியில் கண் பதித்துக் கொண்டான் ஜீவா..

"ஜீவா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிட்டியா".. காரசாரமான குரலில் எதைப் பற்றி கேட்கப் போகிறான் என்று புரிந்தவனாய்.. "நீ குறை சொல்ற அளவுக்கு நான் எதுவுமே செய்யலையே!!.. அப்புறம் என்ன உன் பிரச்சனை".. என்றான் இதழ்கள் சுழித்து..

"ஜீவா எனக்கும் அந்த பொண்ணு மேல கோபம் இருக்கு.. அப்பாவோட இறப்புக்கு அவ ஒரு வகையில காரணம் அவ்வளவுதான்.. அதுக்காக அவளை நீ கொலை குற்றவாளி மாதிரி வெறுக்கிறது சரியில்ல".. என்றான் ஒரு நண்பனாக கண்டிக்கும் தொனியில்..

"அதுக்காக அவளை தூக்கி வைச்சு கொண்டாட சொல்றியா".. எகத்தாளமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.. ஜீவாவின் இந்த அலட்சியப் போக்கான வார்த்தைகள் பரத்திற்கே சற்று அதிர்ச்சிதான்..

"அவளை தூக்கி வைத்து கொண்டாட சொல்லல.. தள்ளி நின்னு உன்னோட வெறுப்பை காட்டி இருக்கலாமே.. எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டே.. இதுக்கு அவ அவங்க வீட்டிலேயே சந்தோஷமா இருந்திருப்பாளே.. கூட்டிட்டு வந்து காயப்படுத்த தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா ஜீவா".. நேரடியான தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக.. "நான் ஒன்னும் வலுக்கட்டாயமா அவளை கல்யாணம் செய்து தூக்கிட்டு வரல.. அவளோட அம்மா கால்ல விழாத குறையா வீட்டுக்கு வந்து கெஞ்சினாங்களே.. நீ பாத்துட்டு தானே இருந்தே.. அதோட ஒரு அயோக்கியன் கையில மாட்டி அவ வாழ்க்கை வீணாகிடக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்தில் தான் அவளை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்தேன்".. என்று அனல் தாங்கிய கண்களோடு விளக்கம் கொடுத்தான் அவன்..

"அவளோட அம்மா காப்பாத்த தான் சொன்னாங்க.. கல்யாணம் பண்ணிக்க சொல்லலையே.. நீ ஏன் தாலி கட்டினே?".. சரியான கேள்வியோடு அவனை மடக்கியதாக நினைத்தான் பரத்.. தான் எதிர்பார்க்கும் வார்த்தைகளை சொல்லி விட மாட்டானா என்று எதிர்பார்ப்பு அவனுக்குள்..

ஆனால் ஜீவா அவன் எதிர்பார்ப்புக்கு இடம் கொடுக்காமல் "நான் தாலி கட்டி கூட்டிட்டு வராம போயிருந்தா.. தினமும் அவளுக்கு பிரச்சினைகள் வந்துட்டே இருக்கும்.. கல்யாணம் நின்னு போன பொண்ணை இந்த உலகம் வாழ விடுமா.. ஏற்கனவே மீடியா.. நியூஸ் சேனலுக்கு இப்ப நான்தான் தீனி போட்டுட்டு இருக்கேன்.. அந்த வேலையை அவ எடுத்துக்கணுமா.. தினமும் ஏதாவது ஒரு சேனல் அவளை பிச்சு தின்னுவாங்க.. அந்தப் பழியும் என் மேல விழும்.. இருக்கிற பிரச்சினை போதாதா? இது தேவைதானா எனக்கு".. என்றான் கோபமும் எரிச்சலுமாக..

"ஓஹோ.. அவளை நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்கு இது மட்டும் தான் காரணமா?".. பரத் பொருளடங்கிய பார்வையுடன் புருவங்களை உயர்த்தவும்.. ஆழ்ந்த மூச்சுடன் நிமிர்ந்தவன் தீர்க்கமான பார்வையுடன் "இதையெல்லாம் விட முக்கியமான காரணம்.. நான் மான்வியை கல்யாணம் செஞ்சுக்கணும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டார்.. அப்பாவோட ஆசைப்படி அவள் மூலமா என்னோட சந்ததி விருத்தியாகணும்.. அதனால தான் அவளை திருமணம் செஞ்சுகிட்டேன் போதுமா?".. என்றான் வெகு இயல்பாக..

"ஓஹோ?.. எப்படா இவ்வளவு சுயநலவாதியாகி போன?.. அவ என்ன புள்ள பெத்துக்கற மிஷினா.. அவளுக்கும் உணர்வுகள் இருக்கு.. அதை புரிஞ்சுக்கோடா".. பரத்திற்கு மான்வின் மீது கோபம் இருந்தாலும் காதலின் அடையாளமாக வாழ்ந்தவன் மான்வியை இந்த அளவுக்கு வெறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

"நான் அவளை கட்டாயப்படுத்தல.. அவளோட விருப்பத்தோடு தான் எல்லாம் நடக்குது".. ஜீவா இடைப்பகுந்தான்..

"அவ ஒப்புதலோடு நடக்குதுன்னு சொல்லு விருப்பத்தோடு நடக்குதுன்னு சொல்லாதே".. என்றதில் மௌனமாக உணர்ச்சி துடைத்த முகத்துடன் பரத்தை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"ஜீவா.. உன்னோட நிதானம் என்னை ரொம்ப பயப்பட வைக்குது டா.. நீ என்ன மனசுல நினைக்கிறனு என்னால புரிஞ்சுக்கவே முடியல" என்றதில் சத்தம் போட்டு சிரித்தான் அவன்.. அவன் வெடித்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் பரத் விழித்துக் கொண்டிருக்க அவனே விளக்கம் கொடுக்கும் விதமாய்

"என்னடா உன் பிரச்சனை.. ஓவர் எமோஷனலா இருக்கே.. பயமா இருக்கு.. நிதானமா இரு சாப்ட்டா ஹாண்டில் பண்ணு.. அவளை டார்ச்சர் பண்ணாதே.. புரிஞ்சு நடந்துக்கோ.. இதையெல்லாம் சொன்னது நீதானே.. இப்ப நான் அவளை தொந்தரவே பண்றது இல்ல.. ரொம்ப அமைதியா பேசுறேன்.. நிதானமா நடந்துக்கிறேன்.. கோபப்படுறதில்ல.. இப்பவும் அதையே சொன்னா எப்படி?.. எனக்கு புரியலடா உன்னோட லாஜிக்".. கேலியான பார்வையும்.. அடங்காத சிரிப்புமாக அழுத்தமாக கேட்டிருந்தான் ஜீவா..

"அதுதாண்டா எனக்கும் புரியல.. அப்பா இறந்த பிறகு நீ அடியோடு மாறிட்ட.. எது செஞ்சாலும் ரொம்ப பொறுமையா பிளான் பண்ணி.. ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கிறே.. அந்த பொண்ணு பாவம்.. தனியா ஆபீஸ் கிளம்பி போறதும் தனியா வர்றதும்.. பிறந்த வீட்டோட.. தொடர்பு இல்லாம தனிமையில நேரத்தை கழிக்கிறதும்.. ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சான்".. சோகம் அப்பியிருந்த அவன் முகத்தை கண்டு கொள்ளாது.. காதம்பரி சொன்னாங்களா.. என்றான் கண்களில் கடுமை கூட்டி..

"யாரும் சொல்லல.. தீப்தி ஒரு முறை உன் வீட்டுக்கு வந்தப்போ மான்வி எல்லாத்தையும் சொல்லி அழுதிருக்கா.. தீப்தி அவ மேல கோவமா இருந்ததுனால எதுவும் பேசிக்கல.. ஆனா மான்வியோட நிலைமையை நினைச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கிறதா என்கிட்ட வந்து புலம்பினா".. என்றான் பரத்..

"ஓஹோ மேடம் சிம்பதி தேடிக்கிறாங்களோ".. புருவங்களும் இதழ்களும் ஏளனத்தோடு வளைந்தன..

ஆழ்ந்த மூச்சோடு சலிப்பாக.. "எல்லாத்தையும் தவறான கோணத்தில் பாக்காத ஜீவா.. மான்வி தெரியாம உனக்கு கொடுத்த வலியை நீ தெரிஞ்சே அவளுக்கு தர்றே.. உன் இழப்பு பெருசுதான்.. ஆனா உன் பிடிவாதத்தால அவளை நீ இழந்திடாதே.. என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும்".. என்று எழுந்தவன் கதவு வரை சென்று விட்டு அங்கேயே நின்று.. "அப்பவும் சரி இப்பவும் சரி நீ அவளை கஷ்டப்படுத்திக்கிட்டு தான் இருக்கே.. இதுக்கு நீ மாறாமலேயே இருந்திருக்கலாம் ஜீவா".. என்று இயலாமையோடு சொல்லி விட்டு செல்லவும்.. இரும்பாக இறுகிய முகத்துடன்.. அவன் சென்ற திசையை வெறித்து கொண்டிருந்தான் ஜீவா..

விடா முயற்சியாக.. தன் மனதின் காதலை வெளிப்படுத்தும் விதமாக.. சுயமரியாதையை தொலைத்து.. அவன் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கண்டுகொள்ளாமல்.. முத்தமிட்டாள்.. கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள்.. அவன் வெற்று மார்பில் புதைந்தாள்.. சாதம் ஊட்ட முயன்றாள்.. அவன் கரம் பிடித்து தோளில் போட்டுக் கொண்டாள்.. குளிக்கும் நேரத்தில் அனுமதியின்றி நுழைந்து அவனோடு உறவாடினாள்.. அவன் இதழை கடித்தாள்.. உறவுக்கு அழைத்தாள்.. கெஞ்சினாள்.. கதறினால் அழுதாள்.. பலன் பூஜ்ஜியம்.. ஒரு மனைவியின் இத்தனை காதலின் இம்சைகளை தாங்கி எப்படி அவனால் இரும்பாக இறுகி நிற்க முடிகிறது.. உண்மையில் என்னைப் பிடிக்கவில்லையோ, நான் தான் வீண் முயற்சி செய்கிறேனா!! .. ஜீவாவின் அன்பும் காதலும் இனி எனக்கு கிடைக்கவே கிடைக்காதா?.. மனதினில் மீண்டும் இனம் புரியாத அச்சம்..

பல நாட்கள் இப்படியே தொடர ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தாள் மான்வி.. உச்சக்கட்ட அழுத்தத்தோடு அங்கிருந்த பூந்தொட்டியை கீழே தள்ளி உடைத்தாள்.. அப்போதும் சலனமில்லாத பார்வையுடன் அவள் பக்கம் திரும்பி மார்பின் குறுக்கே கைகட்டி நின்றான் அவன்..

"ஏன் ஜீவா ஏன் என்னை உங்களுக்கு பிடிக்கல?".. ஆக்ரோஷமாக கட்டியவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"இவ்வளவு கெஞ்சறேனே.. எந்த விதத்திலும் நான் உங்க மனசை நெருங்கலையா.. என் மேல காதல் வரவே இல்லையா.. உங்களை ஆசை தீர கொஞ்சறேன்.. முத்தம் கொடுக்கிறேன்.. கட்டிப்பிடிக்கிறேன் நீங்க பிடிச்சு தள்ளி விட்டாலும்.. உங்க நெஞ்சில படுத்துக்கிறேன்.. நிறைய நிறைய மனசு விட்டு பேசறேன்.. கல்லு மாதிரியே இருக்கீங்களே.. ரொம்ப வலிக்குது ஜீவா".. இதயம் வலிக்க கட்டிலில் தொப்பென அமர்ந்தாள் கண்ணீருடன்..

அருகில் வந்து நின்றவன் அவள் முகம் பற்றி நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தான்.. எந்த உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காத அவன் முகத்தில் எதையோ தேடி கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனாள் அவள்..

மெல்லிய புன்னகையுடன்.. "கல்யாணத்துக்கு முன்னாடி இதையேதான் உன்கிட்ட நானும் செஞ்சேன்.. உனக்கு என் மேல காதல் வந்ததா.. வெறுப்பு தானே வந்துச்சு?.. அப்புறம் எனக்கு மட்டும் காதல் வரும்னு எப்படி எதிர்பார்க்கிற மான்வி?.. அழுத்தமான கேள்விதனில் வாயடைத்து விழிகள் தெறிக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

வேதனை ததும்பிய அவள் முகத்தை சட்டை செய்யாமல் "எனக்கு நைட் வேலை இருக்கு.. நான் வர லேட்டாகும்.. நீ படுத்து தூங்கு".. மான்வியின் இதயத்தை மீண்டும் ஒருமுறை சுக்கு நூறாக உடைத்து விட்டு.. அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தான் ஜீவா..

தொடரும்..
Paavam pa.. ..
 
New member
Joined
Feb 4, 2023
Messages
7
Jeeva nee maanvi ya ponnu paaka vandha annaikke avala katti pudichi lip lock panna....engagement ku munnadiye ava viruppame illama avala muzhusa paatha thottu neeyave urima edthukitta ipdi laam panna endha ponnukkum pudikkadhu apram maanvi ku mattum pudikkum nu epdi edthirpaartha.....?! Maanvi unna verukka aarambichadhukku kaaraname unnooda indha activities naala thaan.....aana ippo nee dhideer nu boodhi marathadi buddhar maadhri maaritu ella thappum maanvi mela blame pandradhu konjam kooda nyaayame illa...annaikku unna nambama maanvi andha diwakar kooda bike la poonadhukku kaaranamum nee thaana jeeva....?aana adhukkum nee avala thaan blame panna.....I accept maanvi unnooda appa ooda irappukku oru vidhathula kaaranam thaan.....aana nee maanvi kitta ava virupatha consider pannama nee edthukitta adhigapadiyana urimai thaan prachnaikku muzhu kaaranam.....ippo avala kashapaduthi vedikka paakura....? Neeyellam korainjabatcham ava mana nilama enna nu yosikka kooda muyarchi panla ippavum sari appavum sari selfish ah nee unna paththi mattum thaan yosikkira.....unakkellam maanvi ya miss panna thaan buddthi varum....ava theriyaama thappu panna nee avalukku therinje paavam pandra....!:rolleyes:😬👊
 
New member
Joined
Oct 13, 2023
Messages
11
Semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma semma
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
ETHU ORU NALLA KELVI...ANA ANTHA PACHA PULLAIKKU VIDAI THERIYATHU JEEVA....ATHU ORU PAITHIYAM
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
36
திருமண மண்டபத்தினுள் புகுந்து.. திவாகரை அடித்துப் போட்டு மான்வியின் கழுத்தில் ஜீவா தாலி கட்டியதை.. பூதாகாரமாக திரித்து பலவிதமாக பேசிக் கொண்டிருந்தன யூடியூப் சேனல்கள்.. இன்னும் அந்த புயல் ஓய்ந்தபாடில்லை..

சில நேரங்களில் மான்வியை நடுரோட்டில் கண்டு விட்டு "மேம் உங்களை ஜீவா சார் கட்டாயப்படுத்தி திருமணம் செஞ்சதா ஒரு பேச்சு அடிப்படுதே.. நீங்க என்ன சொல்றீங்க" என்று மைக்கை தூக்கிக்கொண்டு அலையும் மீடியாக்களுக்கு பயந்து துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.. இந்த தொல்லை பிடித்த youtube சேனல்களை எப்படி தவிர்க்க வேண்டும் என்று ஜீவாவிற்கு தெரியும்.. பாவம் மான்விதான் சலசமயங்களில் திணறி போனாள்.

இப்போதுதான் சில நாட்களாக இந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது..

மணப்பெண்ணின் கழுத்தை வளைத்து.. தாலி கட்டிய ராட்சசன் என்று சிறிய கடுகை பலூன் போல் ஊதி பெரிதாக்கிக் கொண்டிருந்த சோசியல் மீடியாவின் நியூஸ் சேனல்களை அவளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. இப்படித்தானே அந்த ரோட் சைடு ரோமியோவை அடித்த போதும் அவனை வில்லனாக காண்பித்து தன் குடும்பத்தின் மனதில் பயத்தையும் தன் மனதில் கலக்கத்தையும் விதைத்த அந்த பொய் புளுகி மீடியாக்கள் மீதும்.. யூடியூப் சேனல்கள் மீதும் கட்டுக்கடங்காத கோபம் அவளுக்கு.. ஆயிரம் பேர் ஆயிரம் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடலாம்.. உனக்கு எங்கே போனது அறிவு? என்று மனசாட்சி அவளுக்கு ஆறுதல் சொல்வதை விடுத்து குற்றம் சாட்டியதில் மேலும் நொந்து போனாள் மான்வி..

இடையில் ஒருநாள்.. ஆட்டோவில்.. சிக்னலில் நின்ற போது பள்ளி சீருடையில் நிவினைக் காண நேர்ந்தது.. ஜீவா திருமணத்தின் போது போட்ட கட்டுப்பாடுகள் தகர்ந்து போக.. தம்பியை கண்டதும் தன்னிலை மறந்து ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடியிருந்தாள் மான்வி..

"நிவின்".. என அழைத்து அவனை நெருங்கும் நேரத்தில்.. ஆனந்த திகைப்புடன் "அக்காஆஆ".. என முகம் மலர்ந்து ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான் அவனும்..

"எப்படிடா இருக்க?.. அனிதா எப்படி இருக்கா?.. அம்மா அப்பா நல்லா இருக்காங்களா!!".. பேச முடியாது கண்ணீர் வழிந்த போதும். அவள் கரம் நிவின் தலையை பாசமாக வருடி கொடுத்தது..

"எல்லோரும் நல்லா இருக்கோம் நீ ஏன்க்கா ஒரு போன் கூட பண்ணல.. நாங்க போன் செய்யறோம்னு சொன்னா கூட அம்மாவும் அப்பாவும் வேண்டாம்னு கண்டிச்சு சொல்லிட்டாங்க.. நானும் அனிதாவும் உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்".. என்றான் நீண்ட நாள் கழித்து அக்காவை கண்டதில் சந்தோஷம் பொங்க..

"நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் நிவின்.. என்றாள் நெஞ்சம் நெகிழ்ந்து.. சிறு பையனிடம் வேறு எதையும் சொல்லி அவனை குழப்ப விரும்பவில்லை.. இந்த பக்கம் என்ன செய்ற?.. உன்னோட ஸ்கூல் இந்த ஏரியா இல்லையே".. பேச்சை திசை திருப்பி உரிமையோடு.. தம்பியை விசாரித்தாள்..

"என்னோட கெமிஸ்ட்ரி ரெக்கார்டு என் ஃபிரண்டு கிட்ட இருக்கு அக்கா.. அவன் இன்னைக்கு லீவு.. நோட்டு கண்டிப்பா சப்மிட் பண்ணியே ஆகணும்.. அதனாலதான் அவன் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்".. என்றதும் "ஒஹோ".. என்று தலையசைத்தவளாக "அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்.. அந்த திவாகர் ஃபேமிலியால எந்த பிரச்சினையும் இல்லையே, அம்மா அப்பா நல்லா இருக்காங்களா".. தவிப்போடு கேட்டாள்..

"இல்லைக்கா.. அந்த குடும்பத்தை உன்னோட கல்யாணத்துக்கு பிறகு நாங்க பாக்கவே இல்ல.. அடிக்கடி ஒரு போலீஸ் அங்கிள் மட்டும் அப்பா கிட்ட வந்து அவங்க ஏதாவது பிரச்சனை கொடுக்குறாங்களான்னு விசாரிச்சுட்டு போவாரு.. நானும் அனிதாவும் எப்பவும் போல ஸ்கூல் போயிட்டு வர்றோம்.. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நீ கவலைப்படாம இரு".. அவள் கவலை உணர்ந்து பக்குவப்பட்டவனாக ஆறுதல் கூறியவனை கண்டு மான்விக்குள் ஊற்றாக சிறு சந்தோஷம்..

"சரிக்கா.. நான் கிளம்பனும் மிஸ் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு வந்திருக்கேன்.. சீக்கிரம் போகணும் நீ ஒரு நாள் வீட்டுக்கு வா.. உன்கிட்ட நிறைய பேசணும்".. ஏக்கத்தோடு அழைப்பு விடுத்த தம்பிக்கு.. தன்னிலையை சொல்லி மறுக்க மனம் வராமல் "சரி.. கண்டிப்பா வரேன்".. வலிய புன்னகைத்து அவன் தலைவருடியவள்.. அந்த சிறிய சந்துக்குள் புகுந்து அவன் உருவம் மறையும் வரையில் எதையோ தொலைத்தவளாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தாள்..

ஜீவாவிடமிருந்து அன்பு காதலும் கிடைக்காத நிலையில் பிறந்த வீட்டையும் பிரிந்த சோகம் மீண்டும் ஆட்கொண்டு அவள் நெஞ்சை புரட்டி போட்டதில்.. இனம் புரியாத வெற்றிடம் உருவாகி.. மான்வியை சோகக்கடலுக்குள் ஆழ்த்தியது..

இங்கே அலுவலகத்தில் ஜீவாவை பார்க்க வந்திருந்தான் பரத்..

"சொல்லுடா ஏதாவது சாப்பிடறியா?".. என்று கேட்ட நண்பனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அவன்..

"என்ன விஷயம்.. அட்வைஸ் பண்றதுக்கு பக்கம் பக்கமா பிரிப்பேர் செஞ்சு வச்சிருப்பியே.. எடுத்து விடு".. அலட்சியமாக கூறிவிட்டு கணினியில் கண் பதித்துக் கொண்டான் ஜீவா..

"ஜீவா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிட்டியா".. காரசாரமான குரலில் எதைப் பற்றி கேட்கப் போகிறான் என்று புரிந்தவனாய்.. "நீ குறை சொல்ற அளவுக்கு நான் எதுவுமே செய்யலையே!!.. அப்புறம் என்ன உன் பிரச்சனை".. என்றான் இதழ்கள் சுழித்து..

"ஜீவா எனக்கும் அந்த பொண்ணு மேல கோபம் இருக்கு.. அப்பாவோட இறப்புக்கு அவ ஒரு வகையில காரணம் அவ்வளவுதான்.. அதுக்காக அவளை நீ கொலை குற்றவாளி மாதிரி வெறுக்கிறது சரியில்ல".. என்றான் ஒரு நண்பனாக கண்டிக்கும் தொனியில்..

"அதுக்காக அவளை தூக்கி வைச்சு கொண்டாட சொல்றியா".. எகத்தாளமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.. ஜீவாவின் இந்த அலட்சியப் போக்கான வார்த்தைகள் பரத்திற்கே சற்று அதிர்ச்சிதான்..

"அவளை தூக்கி வைத்து கொண்டாட சொல்லல.. தள்ளி நின்னு உன்னோட வெறுப்பை காட்டி இருக்கலாமே.. எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டே.. இதுக்கு அவ அவங்க வீட்டிலேயே சந்தோஷமா இருந்திருப்பாளே.. கூட்டிட்டு வந்து காயப்படுத்த தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா ஜீவா".. நேரடியான தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக.. "நான் ஒன்னும் வலுக்கட்டாயமா அவளை கல்யாணம் செய்து தூக்கிட்டு வரல.. அவளோட அம்மா கால்ல விழாத குறையா வீட்டுக்கு வந்து கெஞ்சினாங்களே.. நீ பாத்துட்டு தானே இருந்தே.. அதோட ஒரு அயோக்கியன் கையில மாட்டி அவ வாழ்க்கை வீணாகிடக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்தில் தான் அவளை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்தேன்".. என்று அனல் தாங்கிய கண்களோடு விளக்கம் கொடுத்தான் அவன்..

"அவளோட அம்மா காப்பாத்த தான் சொன்னாங்க.. கல்யாணம் பண்ணிக்க சொல்லலையே.. நீ ஏன் தாலி கட்டினே?".. சரியான கேள்வியோடு அவனை மடக்கியதாக நினைத்தான் பரத்.. தான் எதிர்பார்க்கும் வார்த்தைகளை சொல்லி விட மாட்டானா என்று எதிர்பார்ப்பு அவனுக்குள்..

ஆனால் ஜீவா அவன் எதிர்பார்ப்புக்கு இடம் கொடுக்காமல் "நான் தாலி கட்டி கூட்டிட்டு வராம போயிருந்தா.. தினமும் அவளுக்கு பிரச்சினைகள் வந்துட்டே இருக்கும்.. கல்யாணம் நின்னு போன பொண்ணை இந்த உலகம் வாழ விடுமா.. ஏற்கனவே மீடியா.. நியூஸ் சேனலுக்கு இப்ப நான்தான் தீனி போட்டுட்டு இருக்கேன்.. அந்த வேலையை அவ எடுத்துக்கணுமா.. தினமும் ஏதாவது ஒரு சேனல் அவளை பிச்சு தின்னுவாங்க.. அந்தப் பழியும் என் மேல விழும்.. இருக்கிற பிரச்சினை போதாதா? இது தேவைதானா எனக்கு".. என்றான் கோபமும் எரிச்சலுமாக..

"ஓஹோ.. அவளை நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்கு இது மட்டும் தான் காரணமா?".. பரத் பொருளடங்கிய பார்வையுடன் புருவங்களை உயர்த்தவும்.. ஆழ்ந்த மூச்சுடன் நிமிர்ந்தவன் தீர்க்கமான பார்வையுடன் "இதையெல்லாம் விட முக்கியமான காரணம்.. நான் மான்வியை கல்யாணம் செஞ்சுக்கணும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டார்.. அப்பாவோட ஆசைப்படி அவள் மூலமா என்னோட சந்ததி விருத்தியாகணும்.. அதனால தான் அவளை திருமணம் செஞ்சுகிட்டேன் போதுமா?".. என்றான் வெகு இயல்பாக..

"ஓஹோ?.. எப்படா இவ்வளவு சுயநலவாதியாகி போன?.. அவ என்ன புள்ள பெத்துக்கற மிஷினா.. அவளுக்கும் உணர்வுகள் இருக்கு.. அதை புரிஞ்சுக்கோடா".. பரத்திற்கு மான்வின் மீது கோபம் இருந்தாலும் காதலின் அடையாளமாக வாழ்ந்தவன் மான்வியை இந்த அளவுக்கு வெறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

"நான் அவளை கட்டாயப்படுத்தல.. அவளோட விருப்பத்தோடு தான் எல்லாம் நடக்குது".. ஜீவா இடைப்பகுந்தான்..

"அவ ஒப்புதலோடு நடக்குதுன்னு சொல்லு விருப்பத்தோடு நடக்குதுன்னு சொல்லாதே".. என்றதில் மௌனமாக உணர்ச்சி துடைத்த முகத்துடன் பரத்தை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"ஜீவா.. உன்னோட நிதானம் என்னை ரொம்ப பயப்பட வைக்குது டா.. நீ என்ன மனசுல நினைக்கிறனு என்னால புரிஞ்சுக்கவே முடியல" என்றதில் சத்தம் போட்டு சிரித்தான் அவன்.. அவன் வெடித்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் பரத் விழித்துக் கொண்டிருக்க அவனே விளக்கம் கொடுக்கும் விதமாய்

"என்னடா உன் பிரச்சனை.. ஓவர் எமோஷனலா இருக்கே.. பயமா இருக்கு.. நிதானமா இரு சாப்ட்டா ஹாண்டில் பண்ணு.. அவளை டார்ச்சர் பண்ணாதே.. புரிஞ்சு நடந்துக்கோ.. இதையெல்லாம் சொன்னது நீதானே.. இப்ப நான் அவளை தொந்தரவே பண்றது இல்ல.. ரொம்ப அமைதியா பேசுறேன்.. நிதானமா நடந்துக்கிறேன்.. கோபப்படுறதில்ல.. இப்பவும் அதையே சொன்னா எப்படி?.. எனக்கு புரியலடா உன்னோட லாஜிக்".. கேலியான பார்வையும்.. அடங்காத சிரிப்புமாக அழுத்தமாக கேட்டிருந்தான் ஜீவா..

"அதுதாண்டா எனக்கும் புரியல.. அப்பா இறந்த பிறகு நீ அடியோடு மாறிட்ட.. எது செஞ்சாலும் ரொம்ப பொறுமையா பிளான் பண்ணி.. ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கிறே.. அந்த பொண்ணு பாவம்.. தனியா ஆபீஸ் கிளம்பி போறதும் தனியா வர்றதும்.. பிறந்த வீட்டோட.. தொடர்பு இல்லாம தனிமையில நேரத்தை கழிக்கிறதும்.. ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சான்".. சோகம் அப்பியிருந்த அவன் முகத்தை கண்டு கொள்ளாது.. காதம்பரி சொன்னாங்களா.. என்றான் கண்களில் கடுமை கூட்டி..

"யாரும் சொல்லல.. தீப்தி ஒரு முறை உன் வீட்டுக்கு வந்தப்போ மான்வி எல்லாத்தையும் சொல்லி அழுதிருக்கா.. தீப்தி அவ மேல கோவமா இருந்ததுனால எதுவும் பேசிக்கல.. ஆனா மான்வியோட நிலைமையை நினைச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கிறதா என்கிட்ட வந்து புலம்பினா".. என்றான் பரத்..

"ஓஹோ மேடம் சிம்பதி தேடிக்கிறாங்களோ".. புருவங்களும் இதழ்களும் ஏளனத்தோடு வளைந்தன..

ஆழ்ந்த மூச்சோடு சலிப்பாக.. "எல்லாத்தையும் தவறான கோணத்தில் பாக்காத ஜீவா.. மான்வி தெரியாம உனக்கு கொடுத்த வலியை நீ தெரிஞ்சே அவளுக்கு தர்றே.. உன் இழப்பு பெருசுதான்.. ஆனா உன் பிடிவாதத்தால அவளை நீ இழந்திடாதே.. என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும்".. என்று எழுந்தவன் கதவு வரை சென்று விட்டு அங்கேயே நின்று.. "அப்பவும் சரி இப்பவும் சரி நீ அவளை கஷ்டப்படுத்திக்கிட்டு தான் இருக்கே.. இதுக்கு நீ மாறாமலேயே இருந்திருக்கலாம் ஜீவா".. என்று இயலாமையோடு சொல்லி விட்டு செல்லவும்.. இரும்பாக இறுகிய முகத்துடன்.. அவன் சென்ற திசையை வெறித்து கொண்டிருந்தான் ஜீவா..

விடா முயற்சியாக.. தன் மனதின் காதலை வெளிப்படுத்தும் விதமாக.. சுயமரியாதையை தொலைத்து.. அவன் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கண்டுகொள்ளாமல்.. முத்தமிட்டாள்.. கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள்.. அவன் வெற்று மார்பில் புதைந்தாள்.. சாதம் ஊட்ட முயன்றாள்.. அவன் கரம் பிடித்து தோளில் போட்டுக் கொண்டாள்.. குளிக்கும் நேரத்தில் அனுமதியின்றி நுழைந்து அவனோடு உறவாடினாள்.. அவன் இதழை கடித்தாள்.. உறவுக்கு அழைத்தாள்.. கெஞ்சினாள்.. கதறினால் அழுதாள்.. பலன் பூஜ்ஜியம்.. ஒரு மனைவியின் இத்தனை காதலின் இம்சைகளை தாங்கி எப்படி அவனால் இரும்பாக இறுகி நிற்க முடிகிறது.. உண்மையில் என்னைப் பிடிக்கவில்லையோ, நான் தான் வீண் முயற்சி செய்கிறேனா!! .. ஜீவாவின் அன்பும் காதலும் இனி எனக்கு கிடைக்கவே கிடைக்காதா?.. மனதினில் மீண்டும் இனம் புரியாத அச்சம்..

பல நாட்கள் இப்படியே தொடர ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தாள் மான்வி.. உச்சக்கட்ட அழுத்தத்தோடு அங்கிருந்த பூந்தொட்டியை கீழே தள்ளி உடைத்தாள்.. அப்போதும் சலனமில்லாத பார்வையுடன் அவள் பக்கம் திரும்பி மார்பின் குறுக்கே கைகட்டி நின்றான் அவன்..

"ஏன் ஜீவா ஏன் என்னை உங்களுக்கு பிடிக்கல?".. ஆக்ரோஷமாக கட்டியவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

"இவ்வளவு கெஞ்சறேனே.. எந்த விதத்திலும் நான் உங்க மனசை நெருங்கலையா.. என் மேல காதல் வரவே இல்லையா.. உங்களை ஆசை தீர கொஞ்சறேன்.. முத்தம் கொடுக்கிறேன்.. கட்டிப்பிடிக்கிறேன் நீங்க பிடிச்சு தள்ளி விட்டாலும்.. உங்க நெஞ்சில படுத்துக்கிறேன்.. நிறைய நிறைய மனசு விட்டு பேசறேன்.. கல்லு மாதிரியே இருக்கீங்களே.. ரொம்ப வலிக்குது ஜீவா".. இதயம் வலிக்க கட்டிலில் தொப்பென அமர்ந்தாள் கண்ணீருடன்..

அருகில் வந்து நின்றவன் அவள் முகம் பற்றி நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தான்.. எந்த உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காத அவன் முகத்தில் எதையோ தேடி கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனாள் அவள்..

மெல்லிய புன்னகையுடன்.. "கல்யாணத்துக்கு முன்னாடி இதையேதான் உன்கிட்ட நானும் செஞ்சேன்.. உனக்கு என் மேல காதல் வந்ததா.. வெறுப்பு தானே வந்துச்சு?.. அப்புறம் எனக்கு மட்டும் காதல் வரும்னு எப்படி எதிர்பார்க்கிற மான்வி?.. அழுத்தமான கேள்விதனில் வாயடைத்து விழிகள் தெறிக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மான்வி..

வேதனை ததும்பிய அவள் முகத்தை சட்டை செய்யாமல் "எனக்கு நைட் வேலை இருக்கு.. நான் வர லேட்டாகும்.. நீ படுத்து தூங்கு".. மான்வியின் இதயத்தை மீண்டும் ஒருமுறை சுக்கு நூறாக உடைத்து விட்டு.. அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தான் ஜீவா..

தொடரும்..
அப்பவும் சரி இப்பவும் சரி அந்தப் புள்ளயோட மனச காயப்படுத்திகிட்டே இருக்க ஜீவா 😏

பாருங்களேன் சனா பேபி இதுக்கு எதுனா முட்டு குடிக்கும்😜😜😀
 
Top