• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 3

Active member
Joined
Jul 31, 2024
Messages
50
ஓரளவு வசதியான பழைய காலத்து செட்டிநாட்டு அமைப்பிலான வீடு.. தேக்கு மர தூண்களும்.. ஓங்கி உயர்ந்த கூடாரமும் என.. பார்ப்பதற்கே பழைய காலத்து சிற்றரசர் அரண்மனை போல் ஜீவாவின் கருத்தை கவர்ந்திருந்த காரணத்தினால் தான் விலைக்கு கேட்டிருந்தான் முன்பு..

உள்ளே நுழைந்த வேளையில் வீட்டினை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை.. இப்படி உட்காருங்க என்று மரத்தினால் செய்யப்பட்ட நீள்விருக்கையில் அமர வைத்தார் நீலகண்டன்..

கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கையின் கைப்பிடியில் தாளம் தட்டியவாறு.. வளையொலியும் கொலுசொலியும் கிங்கினி நாதமாய் கேட்டுக் கொண்டிருந்த எதிரே தெரிந்த அறையை தலை சாய்த்து ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"பொண்ணு வந்துடும் ஜீவா.. எழுந்து ஓடிடாதே".. என்று அவன் கரத்தினை இறுகப் பற்றிக் கொண்டார் விஸ்வ மூர்த்தி..

"மானத்தை வாங்காதீங்கப்பா".. என்று அவர் கரத்தை உதறிவிட்டு.. பார்வையை அத்திசையிலிருந்து விலக்காது.. தன் தலையை கோதியவாறு சரியாக நிமர்ந்து அமர்ந்தவனை.. "என்னது.. நான் மானத்தை வாங்குறேனா.. சரிதான்".. என்று தலையை அசைத்துக் கொண்டார் அவர்..

முகமன் எதுவும் தேவையில்லாமல்.. "பொண்ணை அழைச்சிட்டு வாம்மா".. என்று நீலகண்டன் ரமாவிடம் விழியசைவால் உத்தரவு போட.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்.. இரண்டு தோழிகளின் துணையோடு அழைத்து வரப்பட்டாள் மான்வி..

மான்வியோடு இன்னும் ஒரு எழுத்து சேர்த்து மான் விழி என்று வைத்திருக்கலாம்.. அத்தனை அழகான.. பென்சில் ஓவியம் வரைந்தது போல் மானின் மிரண்ட கண்கள்.. எடுப்பான நாசி.. அளவெடுத்த இதழ்கள்.. மேல் இதழ் சிறியதாய் கீழ் உதடு சதைப்பற்றோடு முத்தமிடுவதற்கு ஏற்ற வகையில்.. மாநிறம் என்றாலும்.. புத்தம் புதியதாய் பிறந்த குழந்தையின் இயல்பான ரோஸ் நிறமும் கலந்த ஒரு மாதிரியான மென்மையான வழுவழு கன்னங்கள்..

கழுத்தும்.. தோள்களும்.. அவள் உடலமைப்பும் கண்டு.. சீறலான மூச்சோடு கட்டை விரலும் ஆட்காட்டி விரலும் கொண்டு மூடிய விழிகளை நீவி விட்டுக் கொண்டான் ஜீவா..

"கண்ட்ரோல் யுவர் செல்ப் மச்சான்.. நிமிர்ந்து பொண்ணை பாரு".. என்று காதோரம் கிசுகிசுத்து அவன் தொடையில் தட்டினான் பரத்..

"பாக்க முடியல மச்சான்".. இதழ்களில் குறுகுறுத்த புன்னகையுடன்.. பரத் பக்கம் திரும்பி தலையை கோதினான் ஜீவா..

"அவ்வளவு வெக்கமா டா அதுவும் உனக்கு? உலக அதிசயம்டா".. மெல்ல சிரித்தவாறு அதிசயித்தான்..

"இல்ல மச்சான் இன்னும் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துட்டு இருந்தா.. எங்க கிஸ் பண்ணிடுவேன்னு பயமா இருக்கு.. என்றான் இவன்..

எது?.. பரத் அதிர்ந்து விழிக்க..

ஆழ்ந்த மூச்செடுத்து "ரொம்ப டெம்ப்ட் பண்றாடா.. இப்பவே அவளை கைய பிடிச்சு கூட்டிட்டு போகணும்னு தோணுது".. என்று நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் ஃப்ரீஸ் ஆகிப் போனான்.. அவன் பார்த்த நேரத்திற்கு அவள் விழிகளும் அவனை நோக்க.. நான்கு விழிகளும் பட்டும் படாமலும் மோதிக்கொண்டன.. அவள் என்னவோ தடுமாற்றத்துடன் விழிகளை தாழ்த்தி விட்டாள்.. ஆனால் அவன்.. தேவ மின்னல் கீற்று போன்ற சிறிய கண்களால் அவள் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தான்.. "அப்பா சொன்னப்ப கூட நான் நம்பல.. ஆனா இந்த பொண்ணை இவ்வளவு பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணுவேன்னு.. நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பாக்கல மச்சான்".. தன் குறுந்தாடியை நீவி விட்டுக் கொண்டே நண்பனின் காதுக்குள் ரகசியம் பேசினான் பரத்..

எனக்கே எனக்காக ஒருத்தியை கடவுள் மேக் பண்ணி இந்த பூமிக்கு அனுப்பி இருக்கான்னா.. அவளை நான் எவ்வளவு நேசிக்கனும்.. அதுக்குதான் முயற்சி பண்றேன்".. என்றவனின் பார்வை இளங் குறுத்தான காதுமடலை சிவக்க சிவக்கவைத்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்த குட்டி ஜிமிக்கியில் வந்து நின்றது.. தொட்டு சுண்டிவிட்டு முத்தமிட இதழ்கள் ஊறியது..

ஒரு ட்ரேயில் காப்பி.. பலகாரம் அடக்கி.. ரமாவின் சிறிய மகள் அனிதா.. கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு சென்றாள்..

மூன்று லோட்டா காபியை ஆளுக்கு ஒருவராக எடுத்துக் கொள்ள.. மிச்சமிருந்த ஒரு டம்ளர் காப்பியை எடுத்தவனோ.. வாயில் வைப்பதற்கு முன்.. எதையோ யோசித்தவனாக "நீங்க காபி சாப்பிடலையா".. என்று விழிகளை நிமிர்த்து கேட்டிருந்த விதத்தில்.. "நாங்க அப்புறமா சாப்பிட்டுக்குறோம் நீங்க சாப்பிடுங்க".. என்றாள் ரமா கூச்சத்துடன்..

சிறிய புன்னகையுடன் "நான் உங்கள கேக்கல.. அவளை கேட்டேன்.. நீ காபி சாப்பிடலையா" என்று ஒருமைக்கு தாவியிருந்தான் ஜீவா.. அங்கிருந்த அனைவருக்குமே நெருடலோடு அவன் அழைத்த விதம் வித்தியாசமாகப்பட்டாலும் யாரும் வாய் திறக்கவில்லை..

"இ.. இல்ல.. எனக்கு வேண்டாம்".. வார்த்தைகள் திக்கித் திணறி வெளிவந்ததை.. தேன் கூட்டிலிருந்து சொட்டும் ஒரு துளி தேனை கூட வீணாக்காத ஆண் தேனி போல் ரசனையோடு கேட்டிருந்தவன்.. "பரவாயில்ல காலையிலிருந்து டென்ஷனோட இருந்திருப்பே.. குடிக்கலாம் தப்பில்ல.. இங்க வந்து உட்காரு" என்று ஆளுமையோடு.. எதிரே இருந்த இருக்கையை காட்டினான்.. மிரண்ட வழிகளோடு அன்னையைப் பார்த்தாள் அவள்..

"நாங்க அவளுக்கு வேற காப்பி கொடுத்துக்கறோமே".. ரமா கெஞ்சுவது போல் கேட்கவும்.. "ஏன் இதுல விஷம் கலந்து இருக்கீங்களா".. புன்னகை மாறாமல் கேட்டிருந்தான் ஜீவா..

"அச்சச்சோ" என்று வாய்ப் பொத்தி அவள் பதறவும்.. "அப்புறம் என்ன? வா வந்து உட்காரு".. என்றவன் விடுவதாக இல்லை.. அங்கிருந்தவர்களுக்கோ தர்ம சங்கடமாக போனது.. மான்வி எதிர் இருக்கையில் வந்து அமரவும்.. ஜீவா எழுந்து சென்று காபியை அவளிடம் கொடுத்தான்.. மிக நெருக்கத்தில் அவள் முகம்.. விழிகள் அந்த மான் விழிகளைக் கவ்விப் பிடிக்க துடித்துக் கொண்டிருக்க.. தடுமாற்றத்துடன் அவன் விழிகளை தவிர்த்தவளோ.. கையிலிருந்த டம்ளரை வாங்க முயல்கையில் தளிர் விரல்கள் சுட்டு விட்டன.. சிறு அதிர்வுடன் அவள் விரல்களை எடுத்துவிட..

"ஓஹ்.. சாரி" என்று அவள் விரல்களை.. தொட்டுப் பார்த்தவன்.. "சுட்டுடுச்சா" என்று இதமாக கேட்க.. சங்கடத்துடன் நெளிந்தாள் மான்வி.. இன்னும் ஒரு நொடி அவன் கைகளுக்குள் அந்த விரல்கள் அடைபட்டு கிடந்திருந்தாலும் நிச்சயமாக முத்தமிட்டு இருப்பான்..

அந்த மென்மையின் குறுகுறுப்பு இன்னும் அவன் முரட்டு கரங்களில்.. பன்னீர் தெளித்ததை போல் ஏதோ சுகந்த வாசனை நெஞ்சுக்குள்.. இதமாக பரவியது.. பக்கத்திலிருந்த டம்ளரை எடுத்து சூடு பொறுக்குமளவு ஆற்றி அவள் கையில் கொடுத்திருந்தான் ஜீவா..

"ம்ம்.. குடி".. என்றவன் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து கொள்ள.. அங்கிருந்தவர்களுக்கு என்னடா நடக்குது.. என்பது போன்ற முகம் முகபாவனையுடன் இருவரையும் மியூசியம் பீஸ் போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.. தொண்டைக்குள் இறங்க மறுத்த காப்பியை ஒரு வழியாக குடித்து முடித்திருந்தாள் மான்வி..

பெண்ணை பிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கே வழியில்லாமல்.. அடுத்தது ஆக வேண்டியதை பற்றி பேசுவோமா.. என்று நேரடியாக ஆரம்பித்திருந்தார் நீலகண்டன்..

"என் பொண்ணுக்காக" என்று அவர் ஆரம்பித்த வேளையிலே.. "உங்க பொண்ணுக்காக நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.. அவளை மட்டும் கொடுத்தால் போதும்".. என்று ஆழ்ந்த கிறங்கிய பார்வையை அவளிடமிருந்து விலக்கி.. கம்பீர தோரணையுடன் கூறியிருந்தான் ஜீவா..

"நான் பேச ஏதாவது இருக்காடா ஜீவா" அப்பாவியாக கேட்டார் விஷ்வமூர்த்தி..

"இல்லைப்பா நானே பேசிக்கிறேன்" என்றவன்.. நீலகண்டன் பக்கம் திரும்பி.. "கல்யாணத்துக்காக நீங்க எந்த செலவும் செய்ய வேண்டாம் எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்.. மான்விக்கு.. சேரியில் குத்தும் சேப்டி பின் கூட என்னோட காசுல வாங்குனதா தான் இருக்கணும்".. என்றவனின் அதிகார தோரணையும் ஆணவ கண்களும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை" மான்விக்கு..

ஆனால் நீலகண்டனுக்கும் ரமாவிற்கும் இதில் திருப்தி தான்.. கையில் சொற்ப சேமிப்பை வைத்துக்கொண்டு.. இப்போதைக்கு திருமணம் செய்வதெல்லாம் இயலாத காரியம்.. இதில் மாப்பிள்ளையே மனமுவந்து திருமண செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகு.. மனதிலிருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் ஆனந்தம்..

வெளிப்படையாக அந்த நன்றி உணர்வை காட்டிக் கொள்ளாமல் "சரி நான் எங்க குடும்ப ஜோசியர் கிட்ட கேட்டு.. நிச்சயதார்த்த தேதி முடிவு பண்ணட்டுமா இல்ல.. நீங்க தேதி குறிச்சிட்டு சொல்றீங்களா".. என்று நீலகண்டன் கேட்டதும்..

நீங்களே உங்க குடும்ப ஜோசியர் கிட்ட பேசிட்டு சொல்லுங்க.. ஆனா கல்யாண தேதியை சீக்கிரம் ஃபிக்ஸ் பண்ணுங்க".. என்று ஜீவா பேசிய விதத்தில் தலையே வெடிப்பது போல் உணர்ந்தாள் மான்வி..

"எதிலும் தன் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பலி கொடுக்கப்படும் ஆடு போல் அமர்ந்திருப்பதாய் தன்னை கருதியவள்.. "ஒரு ஆணாதிக்கவாதி கிட்ட இருந்து இன்னொரு ஆணாதிக்கவாதி கிட்டே.. பண்டமாற்று முறை".. விரக்தியாக மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்..

"மான்வி கிட்டே தனியா பேசணும்".. எந்த வார்த்தையும் தாழ்வாக பணிவாக வராதோ.. பணக்கார வீட்டு பிள்ளை.. அதிகாரமும் திமிரும் கூட பிறந்த குணம்.. விழிகளை விரித்து மலைப்போடு நினைத்துக் கொண்டாள் ரமா.. சிறுசுகள் இரண்டிற்குமே ஜீவாவை பிடித்துப் போனது.. ஜீவனுள்ள முகம்.. இவர் தான் எங்க மாமா என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கம்பீரமும் அழகும் கொண்டவன்.. இது போதுமே..

"கூட்டிட்டு போமா".. என்ற நீலகண்டனை.. சக்தி இருந்திருந்தால் நெருப்பு விழிகளால் பொசுக்கி இருப்பாள்..

வேறு வழியில்லாமல் எழுந்தவள் முன்னே செல்ல.. அவள் பின்னே நடந்து சென்றான் ஜீவா..

"நைஸ் ஸ்ட்ரக்சர்".. என்று முனுமுனுத்தவனின் வார்த்தைகளில் ஏதோ உணர்ந்தவள் திடுக்கிட்டு திரும்ப கீழே இறங்கி இருந்த கண்கள் நிதானமாக அவள் முகத்திற்கு வந்தது.. திருட்டுத்தனமான பார்வை எல்லாம் இல்லை.. நேரடியாக தான் பார்த்தான்.. என்னவள் என்ற உரிமையோடு.. சற்றும் கூச்சம் இல்லாத அவன் பார்வை அவளுக்குதான் சித்திரவதை ஆகிப்போனது..

தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருந்தாள் மான்வி.. பவளமல்லி மகிழம் பூக்களின் வாசனை.. நாசியில் ஏறி இதயத்தை நிறைய செய்தன.. அவள் மேனியிலிருந்து வரும் வாசனை இரண்டு பூக்களின் நறுமணத்தை விட வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தான்.. கட்டிப்பிடித்து முகர வேண்டும்.. இதழ் கடித்தான்..

"என்னை பிடிச்சிருக்கு தானே".. பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு குனிந்து அவள் முகம் பார்த்து குறும்புடன் கேட்டிருந்தான்..

"பிடிச்சிருக்கா உன் மனசுல பட்டதை பயப்படாம சொல்லு" என்று கேட்டிருந்தால்.. ஒருவேளை உண்மை வந்திருக்குமோ என்னவோ.. "பிடிச்சிருக்கு தானே" என்று அழுத்தமான கேள்வியில் பிடித்தே ஆக வேண்டும் என்ற வலியுறுத்தல் தொக்கி நிற்க.. வழியற்று தவித்த பேதை "ம்ம்ம்".. என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்திருந்தாள்..

அப்போதுதான் நுரையீரல் செயல்பட ஆரம்பித்ததை போல் ஆழ்ந்த காற்றை உள்ளிழுத்து இதமாக சுவாசித்தவன்.. "தேங்க்யூ சோ மச் ஸ்வீட் ஹார்ட்" என்றிருந்தான் அளவை தாண்டி கரை கடந்த மகிழ்ச்சியோடு..

கரை கடந்த மகிழ்ச்சி வெறும் வாய் வார்த்தையில் முடியாது அல்லவா.. எக்சஸ் ஆஃப் எமோஷனல் ஃபீலிங்ஸ்.. ஏதாவது ஒரு வகையில் காட்டி தானே ஆக வேண்டும்..

அடுத்த கணம் எதிர்பாராத விதமாக பெண் மனம் அறியாமல் அவளை இழுத்து.. கண்கள் மூக்கு.. அடுத்து இதழில் அழுத்தமாக முத்தமிட்டு இருந்தான் ஜீவா.. என்ன நடக்கின்றது என சட்டென உணர முடியாமல் உடல் விரைத்து அதிர்ச்சியோடு நின்றிருந்தவள்.. அவனை விலக்கத் துணியவில்லை.. எதிர்க்கத் தோன்றவில்லை.. மான் விழிகள் உருள.. மேலும் அதிகமாக மையல் கொண்டு.. மிக அதிகமாக அவளோடு ஒன்றினான் அவன்.. இதழின் மென்மை அவனை இழுத்து பிடித்து ஒட்ட வைத்துக் கொள்ள.. அவள் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரை பிறகே நிதானமாக விடுவித்து விலகினான்..

முதல் முத்தம் அவளுக்கு அச்சத்தை கொடுத்திருக்க வேண்டும் என்றே நினைத்தவன் "தட்ஸ் ஓகே.. சில் பேபி" என்று அவள் நடுங்கிய கரத்தினை பற்றி தன் இதழில் ஒற்றிக் கொண்டான்..

அய்யோ திரும்ப திரும்ப முத்தம்.. முள் குத்தும் வலி.. இந்த ஸ்வீட் ஹார்ட்.. ஹனி.. பேபி.. போன்ற செயற்கை மூலம் பூசிய வார்த்தைகள் பிடிக்கவே பிடிக்காதே!!..

அதற்கு மேல் உடல் மொத்தமும் மாரடைப்பு நோய் வந்ததைப் போல வியர்த்து போக.. கால்கள் துவள.. அங்கே நிற்க முடியாமல்.. அவசரமாக உள்ளே சென்று விட்டாள்..

யார் முகத்தையும் பார்க்கத் திராணியில்லாதவள்.. அறைக்குள் சென்று அடைந்து கொள்ள.. "சரி அப்ப நாங்க கிளம்பறோம்".. என்று வணக்கத்தோடு விடை பெற்றனர் வந்திருந்த அனைவரும்.. மீண்டும் மீண்டும் அவளையே தேடிய ஜீவாவின் கண்களை புரிந்து கொண்ட நீலகண்டன்.. மான்வி என்று அழைத்தார்..

முட்டிக்கொண்டு வந்த அழுகையை இதழ் கடித்து அடங்கியவள்.. நிர்மலமான முகத்துடன் வெளியே வந்து நிற்க.. "கிளம்புறாங்க" என்றாள் ரமா.. நிமிர்ந்து அவனைப் பார்க்க வேண்டுமாம்.. அதுதானே அதற்கு அர்த்தம்..

வேண்டா வெறுப்பாக நிமிர்ந்து பார்த்தவள்.. ஒற்றை கண்ணை சிமிட்டி.. வருகிறேன் என்று அவன் சொன்ன தோரணையில் உள்ளம் திடுக்கிட்டு எச்சில் விழுங்கி நின்றாள்..

"அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் ரூமுக்கு போறேன் என்னை தொந்தரவு பண்ணாதீங்க" என்று சொல்லிவிட்டு.. வேகமாக சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டவள்.. வெறி கொண்டவள் போல் கட்டியிருந்த புடவையை முரட்டுத்தனமாக களைந்து தலையில் வைத்திருந்த பூவை.. அறுத்து வீசி எறிந்தாள்..

"எனக்கு பிடிக்கல பிடிக்கல அவனை பிடிக்கல" என்று.. காட்டுத்தனமாக கத்தினாள்..

அவன் முத்தம் கொடுத்த இதழ்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன.. பூசியிருந்த உதட்டு சாயம் மொத்தமும் நீங்கி வெளுத்து போயிருந்தன. மேல் கீழ் உதடுகள்..

உதட்டோடு உதட்டை ஒற்றி எடுப்பது தானே முத்தம்.. முத்தம் கொடுக்கிறேன் என்று இதழை கடித்து உறிஞ்சி.. நாக்கை உள்ளே விட்டு.. அய்யோ கடவுளே.. குமட்டியது.. பழகி ஒரு நிமிடமே ஆன பெண்ணிற்கு இப்படி முத்தம் கொடுக்கும் காம பிசாசு.. இவனோடு எப்படி காலம் முழுக்க வாழ்வது.. இதயத்திற்குள் இனம் புரியா பயம் சூழ்ந்து கொண்டது.. அவன் கொடுத்த முத்தத்தில் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை..

ஏன் என் வாழ்வு இந்த மூர்க்கனோடுதானா பிணைக்கப்பட வேண்டும்!!.. கடவுள் என் வாழ்க்கையை அந்த திவாகரோடு பிணைத்து வைத்திருக்கக் கூடாதா?..

யார் திவாகர்?.. அவள் அலுவலகத்தில் உடன் பணி புரிபவன்.. வேலை விஷயமாக மட்டுமே இருவரும் பேசிக் கொண்டதோடு சரி.. நிறைய உதவிகள் புரிந்திருக்கிறான்..

எவ்வளவு மென்மையானவன் இனியவன்.. பேச்சில் கூட அத்தனை நாகரீகம் இருக்கும்.. பெண்களை மதிக்க தெரிந்தவன்.. இவனைப் போல் அசரடிக்கும் உயரமும்.. உருண்டு திரண்ட உடற்கட்டும் கிடையாது.. ஆனாலும் வாட்ட சாட்டமான இளைஞன்தான்.. மென்மையான மனம் கொண்ட அவன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது உண்மைதான்.. வீட்டில் அதை சொல்ல தைரியம் இல்லாத காரணத்தால்.. அதுபோன்ற எண்ணங்களை தூக்கி ஓரமாக வீசி விட்டாள்..

ஆனால் இன்று அவள் ஜீவாவை நினைத்து வாழ்க்கையை வெறுத்து அழுது கொண்டிருந்த வேளையில்.. திவாகரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று அவள் மொபைலுக்கு வந்து விழுந்தது..

"மான்வி மை லவ்.. உன் ஏக்கப்பார்வையின் அர்த்தங்களை இன்றுதான் உணர்ந்து கொண்டேன்.. நானும் அதே உணர்வில் சிக்கித் தவிக்கிறேன்.. நீ சம்மதம் சொன்னால் உன் விருப்பத்தோடு உன்னை விரும்புவேன்.. இல்லையேல் ஏமாற்றத்தோடு திரும்பி செல்வேன்.. நேரடியான சந்திப்பும் என் காதல் மொழிகளும் எந்த விதத்திலும் உன்னை காயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவே என்று குறுஞ்செய்தி"..

பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. என்று முடித்திருந்தான்..

இதயம் திக் திக் என்று வேகமாக துடிக்க மீண்டும் அந்த குறுஞ்செய்தியை வாசித்தாள்.. திவாகரை பிடித்திருக்கிறதா தெரியவில்லை ஆனால்.. அனுமதி கேட்டு மிக நாகரீகமாக அனுப்பப்பட்டிருந்த அந்த குறுஞ்செய்தியை மிகவும் பிடித்தது..

ஒருவேளை எனக்கும் காதலிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இப்படி ஒருவனை தான் காதலித்திருப்பேனோ.. இதயம் சலனப் பட்டது..

தொடரும்..
அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை😘👌 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
ஓரளவு வசதியான பழைய காலத்து செட்டிநாட்டு அமைப்பிலான வீடு.. தேக்கு மர தூண்களும்.. ஓங்கி உயர்ந்த கூடாரமும் என.. பார்ப்பதற்கே பழைய காலத்து சிற்றரசர் அரண்மனை போல் ஜீவாவின் கருத்தை கவர்ந்திருந்த காரணத்தினால் தான் விலைக்கு கேட்டிருந்தான் முன்பு..

உள்ளே நுழைந்த வேளையில் வீட்டினை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை.. இப்படி உட்காருங்க என்று மரத்தினால் செய்யப்பட்ட நீள்விருக்கையில் அமர வைத்தார் நீலகண்டன்..

கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கையின் கைப்பிடியில் தாளம் தட்டியவாறு.. வளையொலியும் கொலுசொலியும் கிங்கினி நாதமாய் கேட்டுக் கொண்டிருந்த எதிரே தெரிந்த அறையை தலை சாய்த்து ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..

"பொண்ணு வந்துடும் ஜீவா.. எழுந்து ஓடிடாதே".. என்று அவன் கரத்தினை இறுகப் பற்றிக் கொண்டார் விஸ்வ மூர்த்தி..

"மானத்தை வாங்காதீங்கப்பா".. என்று அவர் கரத்தை உதறிவிட்டு.. பார்வையை அத்திசையிலிருந்து விலக்காது.. தன் தலையை கோதியவாறு சரியாக நிமர்ந்து அமர்ந்தவனை.. "என்னது.. நான் மானத்தை வாங்குறேனா.. சரிதான்".. என்று தலையை அசைத்துக் கொண்டார் அவர்..

முகமன் எதுவும் தேவையில்லாமல்.. "பொண்ணை அழைச்சிட்டு வாம்மா".. என்று நீலகண்டன் ரமாவிடம் விழியசைவால் உத்தரவு போட.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்.. இரண்டு தோழிகளின் துணையோடு அழைத்து வரப்பட்டாள் மான்வி..

மான்வியோடு இன்னும் ஒரு எழுத்து சேர்த்து மான் விழி என்று வைத்திருக்கலாம்.. அத்தனை அழகான.. பென்சில் ஓவியம் வரைந்தது போல் மானின் மிரண்ட கண்கள்.. எடுப்பான நாசி.. அளவெடுத்த இதழ்கள்.. மேல் இதழ் சிறியதாய் கீழ் உதடு சதைப்பற்றோடு முத்தமிடுவதற்கு ஏற்ற வகையில்.. மாநிறம் என்றாலும்.. புத்தம் புதியதாய் பிறந்த குழந்தையின் இயல்பான ரோஸ் நிறமும் கலந்த ஒரு மாதிரியான மென்மையான வழுவழு கன்னங்கள்..

கழுத்தும்.. தோள்களும்.. அவள் உடலமைப்பும் கண்டு.. சீறலான மூச்சோடு கட்டை விரலும் ஆட்காட்டி விரலும் கொண்டு மூடிய விழிகளை நீவி விட்டுக் கொண்டான் ஜீவா..

"கண்ட்ரோல் யுவர் செல்ப் மச்சான்.. நிமிர்ந்து பொண்ணை பாரு".. என்று காதோரம் கிசுகிசுத்து அவன் தொடையில் தட்டினான் பரத்..

"பாக்க முடியல மச்சான்".. இதழ்களில் குறுகுறுத்த புன்னகையுடன்.. பரத் பக்கம் திரும்பி தலையை கோதினான் ஜீவா..

"அவ்வளவு வெக்கமா டா அதுவும் உனக்கு? உலக அதிசயம்டா".. மெல்ல சிரித்தவாறு அதிசயித்தான்..

"இல்ல மச்சான் இன்னும் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துட்டு இருந்தா.. எங்க கிஸ் பண்ணிடுவேன்னு பயமா இருக்கு.. என்றான் இவன்..

எது?.. பரத் அதிர்ந்து விழிக்க..

ஆழ்ந்த மூச்செடுத்து "ரொம்ப டெம்ப்ட் பண்றாடா.. இப்பவே அவளை கைய பிடிச்சு கூட்டிட்டு போகணும்னு தோணுது".. என்று நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் ஃப்ரீஸ் ஆகிப் போனான்.. அவன் பார்த்த நேரத்திற்கு அவள் விழிகளும் அவனை நோக்க.. நான்கு விழிகளும் பட்டும் படாமலும் மோதிக்கொண்டன.. அவள் என்னவோ தடுமாற்றத்துடன் விழிகளை தாழ்த்தி விட்டாள்.. ஆனால் அவன்.. தேவ மின்னல் கீற்று போன்ற சிறிய கண்களால் அவள் உருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தான்.. "அப்பா சொன்னப்ப கூட நான் நம்பல.. ஆனா இந்த பொண்ணை இவ்வளவு பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணுவேன்னு.. நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பாக்கல மச்சான்".. தன் குறுந்தாடியை நீவி விட்டுக் கொண்டே நண்பனின் காதுக்குள் ரகசியம் பேசினான் பரத்..

எனக்கே எனக்காக ஒருத்தியை கடவுள் மேக் பண்ணி இந்த பூமிக்கு அனுப்பி இருக்கான்னா.. அவளை நான் எவ்வளவு நேசிக்கனும்.. அதுக்குதான் முயற்சி பண்றேன்".. என்றவனின் பார்வை இளங் குறுத்தான காதுமடலை சிவக்க சிவக்கவைத்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்த குட்டி ஜிமிக்கியில் வந்து நின்றது.. தொட்டு சுண்டிவிட்டு முத்தமிட இதழ்கள் ஊறியது..

ஒரு ட்ரேயில் காப்பி.. பலகாரம் அடக்கி.. ரமாவின் சிறிய மகள் அனிதா.. கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு சென்றாள்..

மூன்று லோட்டா காபியை ஆளுக்கு ஒருவராக எடுத்துக் கொள்ள.. மிச்சமிருந்த ஒரு டம்ளர் காப்பியை எடுத்தவனோ.. வாயில் வைப்பதற்கு முன்.. எதையோ யோசித்தவனாக "நீங்க காபி சாப்பிடலையா".. என்று விழிகளை நிமிர்த்து கேட்டிருந்த விதத்தில்.. "நாங்க அப்புறமா சாப்பிட்டுக்குறோம் நீங்க சாப்பிடுங்க".. என்றாள் ரமா கூச்சத்துடன்..

சிறிய புன்னகையுடன் "நான் உங்கள கேக்கல.. அவளை கேட்டேன்.. நீ காபி சாப்பிடலையா" என்று ஒருமைக்கு தாவியிருந்தான் ஜீவா.. அங்கிருந்த அனைவருக்குமே நெருடலோடு அவன் அழைத்த விதம் வித்தியாசமாகப்பட்டாலும் யாரும் வாய் திறக்கவில்லை..

"இ.. இல்ல.. எனக்கு வேண்டாம்".. வார்த்தைகள் திக்கித் திணறி வெளிவந்ததை.. தேன் கூட்டிலிருந்து சொட்டும் ஒரு துளி தேனை கூட வீணாக்காத ஆண் தேனி போல் ரசனையோடு கேட்டிருந்தவன்.. "பரவாயில்ல காலையிலிருந்து டென்ஷனோட இருந்திருப்பே.. குடிக்கலாம் தப்பில்ல.. இங்க வந்து உட்காரு" என்று ஆளுமையோடு.. எதிரே இருந்த இருக்கையை காட்டினான்.. மிரண்ட வழிகளோடு அன்னையைப் பார்த்தாள் அவள்..

"நாங்க அவளுக்கு வேற காப்பி கொடுத்துக்கறோமே".. ரமா கெஞ்சுவது போல் கேட்கவும்.. "ஏன் இதுல விஷம் கலந்து இருக்கீங்களா".. புன்னகை மாறாமல் கேட்டிருந்தான் ஜீவா..

"அச்சச்சோ" என்று வாய்ப் பொத்தி அவள் பதறவும்.. "அப்புறம் என்ன? வா வந்து உட்காரு".. என்றவன் விடுவதாக இல்லை.. அங்கிருந்தவர்களுக்கோ தர்ம சங்கடமாக போனது.. மான்வி எதிர் இருக்கையில் வந்து அமரவும்.. ஜீவா எழுந்து சென்று காபியை அவளிடம் கொடுத்தான்.. மிக நெருக்கத்தில் அவள் முகம்.. விழிகள் அந்த மான் விழிகளைக் கவ்விப் பிடிக்க துடித்துக் கொண்டிருக்க.. தடுமாற்றத்துடன் அவன் விழிகளை தவிர்த்தவளோ.. கையிலிருந்த டம்ளரை வாங்க முயல்கையில் தளிர் விரல்கள் சுட்டு விட்டன.. சிறு அதிர்வுடன் அவள் விரல்களை எடுத்துவிட..

"ஓஹ்.. சாரி" என்று அவள் விரல்களை.. தொட்டுப் பார்த்தவன்.. "சுட்டுடுச்சா" என்று இதமாக கேட்க.. சங்கடத்துடன் நெளிந்தாள் மான்வி.. இன்னும் ஒரு நொடி அவன் கைகளுக்குள் அந்த விரல்கள் அடைபட்டு கிடந்திருந்தாலும் நிச்சயமாக முத்தமிட்டு இருப்பான்..

அந்த மென்மையின் குறுகுறுப்பு இன்னும் அவன் முரட்டு கரங்களில்.. பன்னீர் தெளித்ததை போல் ஏதோ சுகந்த வாசனை நெஞ்சுக்குள்.. இதமாக பரவியது.. பக்கத்திலிருந்த டம்ளரை எடுத்து சூடு பொறுக்குமளவு ஆற்றி அவள் கையில் கொடுத்திருந்தான் ஜீவா..

"ம்ம்.. குடி".. என்றவன் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து கொள்ள.. அங்கிருந்தவர்களுக்கு என்னடா நடக்குது.. என்பது போன்ற முகம் முகபாவனையுடன் இருவரையும் மியூசியம் பீஸ் போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.. தொண்டைக்குள் இறங்க மறுத்த காப்பியை ஒரு வழியாக குடித்து முடித்திருந்தாள் மான்வி..

பெண்ணை பிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கே வழியில்லாமல்.. அடுத்தது ஆக வேண்டியதை பற்றி பேசுவோமா.. என்று நேரடியாக ஆரம்பித்திருந்தார் நீலகண்டன்..

"என் பொண்ணுக்காக" என்று அவர் ஆரம்பித்த வேளையிலே.. "உங்க பொண்ணுக்காக நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.. அவளை மட்டும் கொடுத்தால் போதும்".. என்று ஆழ்ந்த கிறங்கிய பார்வையை அவளிடமிருந்து விலக்கி.. கம்பீர தோரணையுடன் கூறியிருந்தான் ஜீவா..

"நான் பேச ஏதாவது இருக்காடா ஜீவா" அப்பாவியாக கேட்டார் விஷ்வமூர்த்தி..

"இல்லைப்பா நானே பேசிக்கிறேன்" என்றவன்.. நீலகண்டன் பக்கம் திரும்பி.. "கல்யாணத்துக்காக நீங்க எந்த செலவும் செய்ய வேண்டாம் எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்.. மான்விக்கு.. சேரியில் குத்தும் சேப்டி பின் கூட என்னோட காசுல வாங்குனதா தான் இருக்கணும்".. என்றவனின் அதிகார தோரணையும் ஆணவ கண்களும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை" மான்விக்கு..

ஆனால் நீலகண்டனுக்கும் ரமாவிற்கும் இதில் திருப்தி தான்.. கையில் சொற்ப சேமிப்பை வைத்துக்கொண்டு.. இப்போதைக்கு திருமணம் செய்வதெல்லாம் இயலாத காரியம்.. இதில் மாப்பிள்ளையே மனமுவந்து திருமண செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகு.. மனதிலிருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் ஆனந்தம்..

வெளிப்படையாக அந்த நன்றி உணர்வை காட்டிக் கொள்ளாமல் "சரி நான் எங்க குடும்ப ஜோசியர் கிட்ட கேட்டு.. நிச்சயதார்த்த தேதி முடிவு பண்ணட்டுமா இல்ல.. நீங்க தேதி குறிச்சிட்டு சொல்றீங்களா".. என்று நீலகண்டன் கேட்டதும்..

நீங்களே உங்க குடும்ப ஜோசியர் கிட்ட பேசிட்டு சொல்லுங்க.. ஆனா கல்யாண தேதியை சீக்கிரம் ஃபிக்ஸ் பண்ணுங்க".. என்று ஜீவா பேசிய விதத்தில் தலையே வெடிப்பது போல் உணர்ந்தாள் மான்வி..

"எதிலும் தன் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பலி கொடுக்கப்படும் ஆடு போல் அமர்ந்திருப்பதாய் தன்னை கருதியவள்.. "ஒரு ஆணாதிக்கவாதி கிட்ட இருந்து இன்னொரு ஆணாதிக்கவாதி கிட்டே.. பண்டமாற்று முறை".. விரக்தியாக மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்..

"மான்வி கிட்டே தனியா பேசணும்".. எந்த வார்த்தையும் தாழ்வாக பணிவாக வராதோ.. பணக்கார வீட்டு பிள்ளை.. அதிகாரமும் திமிரும் கூட பிறந்த குணம்.. விழிகளை விரித்து மலைப்போடு நினைத்துக் கொண்டாள் ரமா.. சிறுசுகள் இரண்டிற்குமே ஜீவாவை பிடித்துப் போனது.. ஜீவனுள்ள முகம்.. இவர் தான் எங்க மாமா என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கம்பீரமும் அழகும் கொண்டவன்.. இது போதுமே..

"கூட்டிட்டு போமா".. என்ற நீலகண்டனை.. சக்தி இருந்திருந்தால் நெருப்பு விழிகளால் பொசுக்கி இருப்பாள்..

வேறு வழியில்லாமல் எழுந்தவள் முன்னே செல்ல.. அவள் பின்னே நடந்து சென்றான் ஜீவா..

"நைஸ் ஸ்ட்ரக்சர்".. என்று முனுமுனுத்தவனின் வார்த்தைகளில் ஏதோ உணர்ந்தவள் திடுக்கிட்டு திரும்ப கீழே இறங்கி இருந்த கண்கள் நிதானமாக அவள் முகத்திற்கு வந்தது.. திருட்டுத்தனமான பார்வை எல்லாம் இல்லை.. நேரடியாக தான் பார்த்தான்.. என்னவள் என்ற உரிமையோடு.. சற்றும் கூச்சம் இல்லாத அவன் பார்வை அவளுக்குதான் சித்திரவதை ஆகிப்போனது..

தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருந்தாள் மான்வி.. பவளமல்லி மகிழம் பூக்களின் வாசனை.. நாசியில் ஏறி இதயத்தை நிறைய செய்தன.. அவள் மேனியிலிருந்து வரும் வாசனை இரண்டு பூக்களின் நறுமணத்தை விட வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தான்.. கட்டிப்பிடித்து முகர வேண்டும்.. இதழ் கடித்தான்..

"என்னை பிடிச்சிருக்கு தானே".. பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு குனிந்து அவள் முகம் பார்த்து குறும்புடன் கேட்டிருந்தான்..

"பிடிச்சிருக்கா உன் மனசுல பட்டதை பயப்படாம சொல்லு" என்று கேட்டிருந்தால்.. ஒருவேளை உண்மை வந்திருக்குமோ என்னவோ.. "பிடிச்சிருக்கு தானே" என்று அழுத்தமான கேள்வியில் பிடித்தே ஆக வேண்டும் என்ற வலியுறுத்தல் தொக்கி நிற்க.. வழியற்று தவித்த பேதை "ம்ம்ம்".. என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்திருந்தாள்..

அப்போதுதான் நுரையீரல் செயல்பட ஆரம்பித்ததை போல் ஆழ்ந்த காற்றை உள்ளிழுத்து இதமாக சுவாசித்தவன்.. "தேங்க்யூ சோ மச் ஸ்வீட் ஹார்ட்" என்றிருந்தான் அளவை தாண்டி கரை கடந்த மகிழ்ச்சியோடு..

கரை கடந்த மகிழ்ச்சி வெறும் வாய் வார்த்தையில் முடியாது அல்லவா.. எக்சஸ் ஆஃப் எமோஷனல் ஃபீலிங்ஸ்.. ஏதாவது ஒரு வகையில் காட்டி தானே ஆக வேண்டும்..

அடுத்த கணம் எதிர்பாராத விதமாக பெண் மனம் அறியாமல் அவளை இழுத்து.. கண்கள் மூக்கு.. அடுத்து இதழில் அழுத்தமாக முத்தமிட்டு இருந்தான் ஜீவா.. என்ன நடக்கின்றது என சட்டென உணர முடியாமல் உடல் விரைத்து அதிர்ச்சியோடு நின்றிருந்தவள்.. அவனை விலக்கத் துணியவில்லை.. எதிர்க்கத் தோன்றவில்லை.. மான் விழிகள் உருள.. மேலும் அதிகமாக மையல் கொண்டு.. மிக அதிகமாக அவளோடு ஒன்றினான் அவன்.. இதழின் மென்மை அவனை இழுத்து பிடித்து ஒட்ட வைத்துக் கொள்ள.. அவள் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரை பிறகே நிதானமாக விடுவித்து விலகினான்..

முதல் முத்தம் அவளுக்கு அச்சத்தை கொடுத்திருக்க வேண்டும் என்றே நினைத்தவன் "தட்ஸ் ஓகே.. சில் பேபி" என்று அவள் நடுங்கிய கரத்தினை பற்றி தன் இதழில் ஒற்றிக் கொண்டான்..

அய்யோ திரும்ப திரும்ப முத்தம்.. முள் குத்தும் வலி.. இந்த ஸ்வீட் ஹார்ட்.. ஹனி.. பேபி.. போன்ற செயற்கை மூலம் பூசிய வார்த்தைகள் பிடிக்கவே பிடிக்காதே!!..

அதற்கு மேல் உடல் மொத்தமும் மாரடைப்பு நோய் வந்ததைப் போல வியர்த்து போக.. கால்கள் துவள.. அங்கே நிற்க முடியாமல்.. அவசரமாக உள்ளே சென்று விட்டாள்..

யார் முகத்தையும் பார்க்கத் திராணியில்லாதவள்.. அறைக்குள் சென்று அடைந்து கொள்ள.. "சரி அப்ப நாங்க கிளம்பறோம்".. என்று வணக்கத்தோடு விடை பெற்றனர் வந்திருந்த அனைவரும்.. மீண்டும் மீண்டும் அவளையே தேடிய ஜீவாவின் கண்களை புரிந்து கொண்ட நீலகண்டன்.. மான்வி என்று அழைத்தார்..

முட்டிக்கொண்டு வந்த அழுகையை இதழ் கடித்து அடங்கியவள்.. நிர்மலமான முகத்துடன் வெளியே வந்து நிற்க.. "கிளம்புறாங்க" என்றாள் ரமா.. நிமிர்ந்து அவனைப் பார்க்க வேண்டுமாம்.. அதுதானே அதற்கு அர்த்தம்..

வேண்டா வெறுப்பாக நிமிர்ந்து பார்த்தவள்.. ஒற்றை கண்ணை சிமிட்டி.. வருகிறேன் என்று அவன் சொன்ன தோரணையில் உள்ளம் திடுக்கிட்டு எச்சில் விழுங்கி நின்றாள்..

"அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் ரூமுக்கு போறேன் என்னை தொந்தரவு பண்ணாதீங்க" என்று சொல்லிவிட்டு.. வேகமாக சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டவள்.. வெறி கொண்டவள் போல் கட்டியிருந்த புடவையை முரட்டுத்தனமாக களைந்து தலையில் வைத்திருந்த பூவை.. அறுத்து வீசி எறிந்தாள்..

"எனக்கு பிடிக்கல பிடிக்கல அவனை பிடிக்கல" என்று.. காட்டுத்தனமாக கத்தினாள்..

அவன் முத்தம் கொடுத்த இதழ்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன.. பூசியிருந்த உதட்டு சாயம் மொத்தமும் நீங்கி வெளுத்து போயிருந்தன. மேல் கீழ் உதடுகள்..

உதட்டோடு உதட்டை ஒற்றி எடுப்பது தானே முத்தம்.. முத்தம் கொடுக்கிறேன் என்று இதழை கடித்து உறிஞ்சி.. நாக்கை உள்ளே விட்டு.. அய்யோ கடவுளே.. குமட்டியது.. பழகி ஒரு நிமிடமே ஆன பெண்ணிற்கு இப்படி முத்தம் கொடுக்கும் காம பிசாசு.. இவனோடு எப்படி காலம் முழுக்க வாழ்வது.. இதயத்திற்குள் இனம் புரியா பயம் சூழ்ந்து கொண்டது.. அவன் கொடுத்த முத்தத்தில் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை..

ஏன் என் வாழ்வு இந்த மூர்க்கனோடுதானா பிணைக்கப்பட வேண்டும்!!.. கடவுள் என் வாழ்க்கையை அந்த திவாகரோடு பிணைத்து வைத்திருக்கக் கூடாதா?..

யார் திவாகர்?.. அவள் அலுவலகத்தில் உடன் பணி புரிபவன்.. வேலை விஷயமாக மட்டுமே இருவரும் பேசிக் கொண்டதோடு சரி.. நிறைய உதவிகள் புரிந்திருக்கிறான்..

எவ்வளவு மென்மையானவன் இனியவன்.. பேச்சில் கூட அத்தனை நாகரீகம் இருக்கும்.. பெண்களை மதிக்க தெரிந்தவன்.. இவனைப் போல் அசரடிக்கும் உயரமும்.. உருண்டு திரண்ட உடற்கட்டும் கிடையாது.. ஆனாலும் வாட்ட சாட்டமான இளைஞன்தான்.. மென்மையான மனம் கொண்ட அவன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது உண்மைதான்.. வீட்டில் அதை சொல்ல தைரியம் இல்லாத காரணத்தால்.. அதுபோன்ற எண்ணங்களை தூக்கி ஓரமாக வீசி விட்டாள்..

ஆனால் இன்று அவள் ஜீவாவை நினைத்து வாழ்க்கையை வெறுத்து அழுது கொண்டிருந்த வேளையில்.. திவாகரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று அவள் மொபைலுக்கு வந்து விழுந்தது..

"மான்வி மை லவ்.. உன் ஏக்கப்பார்வையின் அர்த்தங்களை இன்றுதான் உணர்ந்து கொண்டேன்.. நானும் அதே உணர்வில் சிக்கித் தவிக்கிறேன்.. நீ சம்மதம் சொன்னால் உன் விருப்பத்தோடு உன்னை விரும்புவேன்.. இல்லையேல் ஏமாற்றத்தோடு திரும்பி செல்வேன்.. நேரடியான சந்திப்பும் என் காதல் மொழிகளும் எந்த விதத்திலும் உன்னை காயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவே என்று குறுஞ்செய்தி"..

பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. என்று முடித்திருந்தான்..

இதயம் திக் திக் என்று வேகமாக துடிக்க மீண்டும் அந்த குறுஞ்செய்தியை வாசித்தாள்.. திவாகரை பிடித்திருக்கிறதா தெரியவில்லை ஆனால்.. அனுமதி கேட்டு மிக நாகரீகமாக அனுப்பப்பட்டிருந்த அந்த குறுஞ்செய்தியை மிகவும் பிடித்தது..

ஒருவேளை எனக்கும் காதலிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இப்படி ஒருவனை தான் காதலித்திருப்பேனோ.. இதயம் சலனப் பட்டது..

தொடரும்..
அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை😘👌 சூப்பர்💚 🤣அருமை👌😘 சூப்பர்💚 🤣அருமை
 
Member
Joined
Feb 15, 2025
Messages
51
Super Super Super Super Super
 
Member
Joined
May 3, 2025
Messages
45
Acachoo jeeva chitapa sonamari pinadi problem varumo intha diwakar Nala....
Jeeva ku tha porumai epavum pongal sapda poidume....papom
 
Top