- Joined
- Jan 10, 2023
- Messages
- 73
- Thread Author
- #1
"ஜீவா கொஞ்சம் இங்க வந்து உட்காரு.. உன்கிட்ட பேசணும்".. இரவு உணவை முடித்துவிட்டு போன் திரையோடு கொஞ்சிக் கொண்டே தனது அறைக்கு செல்லப் போனவனை தடுத்து நிறுத்தியிருந்தார் விஸ்வ மூர்த்தி..
"ஜஸ்ட் டூ மினிட்ஸ் பேசிட்டு வந்துடறேன்ப்பா".. சொல்லிவிட்டு மீண்டும் வீடியோ காலினுள் மூழ்கியவன்.. நடந்து சென்றவாறு லிவிங் ரூமின் ஜன்னல் பக்கத்தில் நின்று கொண்டு தோட்டத்திலிருந்து மலர்களின் வாசனையை சுமந்து வந்த குளிர் காற்றை அனுபவித்தவாறே மான்வியோடு உரையாடிக் கொண்டிருந்தான்.. சில்லென மோதிய காற்றில் மான்வியின் மென்மையான உள்ளங்கை ஈரத்தை உணர்ந்தான் ஜீவா..
"உன்னைப் போலவே இங்கொருத்தி என்னை உரிமை கொண்டாட துடிக்கிறாள்".. ஈரக்காற்றில் கண்கள் மூடி..
என்ன.. புரியல?
நீண்ட மூச்சுடன் புன்னகைத்து "ம்ஹும்.. ஒண்ணுமில்ல.. நாளைக்கு லீவ்தானே".. என்றவனின் பார்வை மான்வியின் சங்கு கழுத்தில் மெல்லிய நூலிழையாக.. தகதகத்து கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியின் மேல் பதிந்தது.. கழுத்தோடு சேர்த்து அந்த நூல் சங்கிலியை வருடி கொடுக்க ஆசை கொண்டு விரல்கள் குறுகுறுத்தன..
"ம்ம்.. லீவ்தான்".. பதில் சொல்லி அவன் கவனத்தை கலைத்தாள் மான்வி..
"தென் ஒகே.. நாளைக்கு பரத் தீப்தி வெட்டிங் ஆனிவர்சரி.. இன்வைட் செஞ்சிருக்காங்க.. நாம போறோம்.. மார்னிங் ரெடியா இரு".. முடித்து விட்டான்..
"அப்பா ஒத்துக்க மாட்டாரு.. நான் வரலை நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்".. எப்போதும் போல் அவளிடம் தயக்கம்..
"உங்க அப்பாகிட்ட நான் பேசுறேன்.. காலையில கிளம்பி தயாராய் இரு.. சாரி கட்டிக்கோ.. நைட் தூங்கும்போது கூப்பிடுறேன்".. என்றவன் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு.. "மேக்ஸிமம் நைட் ஸ்லீவ்லஸ் லூஸ் டாப் போட்டு தூங்குறதுக்கு ப்ராக்டிஸ் பண்ணு.. ஏன் இவ்வளவு டைட் ஃபிட்டிங்கா போட்டிருக்க.. காத்தே போகாதுடி.. பிளட் சர்குலேஷன் பாதிக்கப்படும்னு உனக்கு தெரியாதா".. என்றிருந்தான்.. சற்று கண்டிப்பான குரலில் ..
முழுவதுமாக போர்த்திக் கொண்டு படுக்கும்போதே அங்கே இங்கே விலகி.. மானம் போகின்றது.. இதில் ஸ்லீவ் லஸ்.. லூஸ் டாப்.. கடவுளே.. நினைக்கும் போதே மான்விக்கு தலை சுற்றியது..
"ஐயோ அதெல்லாம் வேண்டாம் நீங்க வேற வீடியோ கால்ல". என்று சட்டென வார்த்தைகளை விழுங்கி நாக்கை கடித்துக் கொண்டாள்..
விழிகளில் குறும்புடன் அவள் பாவனைகளை உற்று கவனித்துக் கொண்டிருந்தவன்.. "என்ன வீடியோ கால்ல?".. என்றான் கல்மிஷப் புன்னகையுடன்.. அதற்கு மேல் சொல்ல இயலாது.. அவள் அவஸ்தைப் படுவதை ரசித்துக்கொண்டே..
"நான் எதையாச்சும் பார்த்திடுவேன்னு.. எம்பாரிசிங்கா பீல் பண்றியா?".. அவள் மனம் புரிந்து அவனே கேட்டிருந்தான்.. இதழை கடித்து அவள் அமைதி காக்க.. "டோன்ட் பைட் யுவர் லிப்ஸ்" என்றான் சற்று அதட்டலாக.. என் உதட்டை நான் கடிப்பதில் இவருக்கு என்ன கோபமாம்.. முகம் சுருக்கினாள் மான்வி..
நீண்ட மூச்சுடன்.. "நீ எனக்காக பொறந்தவ.. என்கிட்டே கூச்சப்பட்டா எப்படி ம்ம்?.. எனக்கானதுதானடி எல்லாம்.. அப்புறம் நான் பாக்காம?.. உன்கிட்டே எனக்கு சகல உரிமைகளும் இருக்கு.. புரியுதா".. உரிமையான குரலில் அத்தனை அழுத்தம்..
"ம்ம்".. என்று தலையசைப்பதை விட வேறென்ன சொல்ல முடியும்.. "நைட் பேசறேன்".. அழைப்பை துண்டித்து விட்டு விஸ்வ மூர்த்தியின் அருகில் வந்து அமர்ந்தான்..
"சொல்லுங்கப்பா"..
"மான்வி அப்பா நீலகண்டன் போன் பண்ணி இருந்தாரு.. வர்ற வைகாசி மாசம் பதினேழாம் தேதி.. நல்ல நாள்ன்னு ஜோசியர் தேதி குறிச்சு கொடுத்திருக்கிறாராம்.. அதுக்கு முன்னாடி சொல்லிக்கிற மாதிரி முகூர்த்தம் எதுவும் இல்லையாம்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு என்கிட்ட கேட்டாரு.. நானும் ஓகே உங்க இஷ்டப்படியே செய்யுங்கன்னு சொல்லிட்டேன்".. என்று மகனுக்கு தகவல் சொல்லவும்.. வைகாசி பதினேழுன்னா இன்னும் எத்தனை நாள் இருக்கு.. கண்கள் சுருங்க கேட்டிருந்தான் ஜீவா..
"இன்னும் ஒன்று கரெக்டா சொல்லப்போனால் இன்னும் ஒன்றரை மாசம் இருக்கு"..
"வாட்".. பெரிதாக திகைத்தான் அவன்..
"யூ மீன் பார்ட்டி பைவ் டேஸ்.. நோ அப்பா அவ்வளவு நாள் வெயிட் பண்ண முடியாது.. மேக்ஸிமம் ஒன் வீக்ல ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கான்னு பாருங்க".. பிடிவாதமாக சொன்ன மகனை சிரிப்போடு பார்த்தவர்..
"அவசரப்படாதே கண்ணா.. நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து.. பெரியவங்க ஆசிர்வாதத்தோடு திருமணம் செஞ்சாதான் உங்க வாழ்க்கை சுபிட்சமா இருக்கும்.. அதை விட்டுட்டு நீண்ட காலம் தொடர போற இந்த பந்தத்துக்கு எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது ஜீவா".. என்றார் சற்று அழுத்தமாக.. தனது ஒரே மகனின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடிக்க அவருக்கும் பேராசை உண்டல்லவா.. அதிலும் கர்கியுமிக் காஸ்மெடிக் நிறுவனத்தின் உரிமையாளர் திருமணம்.. அவசர அவசரமாக முடிவதில் துளியும் விருப்பமில்லை மூர்த்திக்கு..
"என்னப்பா பேசுறீங்க.. நல்ல நாள் பார்த்து செய்த திருமணம் தான் ஜெயிக்கும்னா உங்க திருமண வாழ்க்கை ஏன் தோல்வி அடைஞ்சது".. மகன் கேட்ட கேள்வியில் அவர் முகம் இருளடைந்து போனது.. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மைதான் என்றாலும்.. பல நேரங்களில் ஜீரணிக்க முடியாமல் தொண்டை அடைத்துப் போகின்றது..
"திரும்பத் திரும்ப உங்களை ஹர்ட் பண்ணனும்னு நான் இதை சொல்லலப்பா.. எது உண்மை எது முட்டாள்தனம்னு உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்றேன்.. நமக்காக விடியற ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தானேப்பா.. அதில ஏன் இந்த பாகுபாடு.. என்னால் அவளை பிரிஞ்சு இருக்க முடியல.. புரிஞ்சுக்கோங்க அப்பா".. கடைசி வார்த்தைகளில் மகனுக்கு மான்வி மீதான அதிகப்படியான நேசத்தை புரிந்து கொண்ட விஸ்வமூர்த்தி.. "எனக்கு புரியுது கண்ணா.. ஆனா என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கையும் ஆகிட கூடாதுன்னு தான் இவ்வளவு பாடுபடுறேன்.. நான் தொழில் தொழில்ன்னு உங்க அம்மா மேல அக்கறையே இல்லாம இருந்தேன்.. நீ அந்த பொண்ணு மேல அதீத அக்கறை எடுத்துக்கிறே.. இரண்டுமே நல்லதில்லையே!!"..
"அளவுக்கு மீறிய அன்பும் கூட ஆபத்துல முடியலாம்.. புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன்".. விஷ்வமூர்த்தி தயக்கத்தோடு மறைமுகமாக எச்சரிக்கை செய்திருக்க.. அவர் கூற்றை தவறு என்பது போல் புன்னகைத்தான் ஜீவா..
"அன்புக்கும் காதலுக்கும் ஏதுப்பா எல்லை.. அவ என்னை புரிஞ்சுக்குவா.. என் காதலை மனப்பூர்வமா ஏத்துக்குவா.. என் கூட சந்தோஷமா இருப்பா.. கல்யாணத்துக்காக ஒன்றரை மாசம் இடைவெளி இருக்கிற இந்த காலகட்டத்தை.. எங்க புரிதலுக்கான நேரமா நான் பயன்படுத்திக்கிறேன்.. என்னை நினைச்சு கவலைப்படாம நீங்க கல்யாண வேலையை போய் பாருங்க.. நான் போய் தூங்குறேன் நீங்களும் போய் தூங்குங்க குட் நைட்".. என்றவன் அவர் பதிலுக்காக காத்திராமல் எழுந்து சென்று விட்டான்.. அவன் சென்ற பிறகும் கூட தீவிரமாக எதையோ யோசித்தபடி அங்கேயே அமர்ந்திருந்தார் விஸ்வ மூர்த்தி.. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்.. மகனின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்துக் கொண்டவருக்கு இனம் புரியாத பயம் நெஞ்சத்தை அரித்துக் கொண்டிருந்தது.. தன் வாழ்க்கை தோற்றுப் போனதால் வந்த கலக்கமா.. அல்லது மகனின் குணம் தெரிந்ததால் வந்த கவலையா.. தண்ணீரில் குதிக்காமல் நீச்சல் பழக முடியாது.. அனுபவ பாடம் மட்டுமே வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும்.. சிலதை ஜீவா கற்றுக் கொள்வான் பல விஷயங்களை மான்வி தெரிந்து கொள்வாள்..
அக்னி தேவன் பூமிக்கு வெளிச்சம் கொடுக்க கிழக்கில் உதயமாகி மேலெழுந்து நின்ற வேளையில்..
"ஹேய்.. அது என்னோடது.. கொடு அனிதா.. அம்மா.. இவளை பாருங்க.. என்னோட செயின் எடுத்து இவ போட்டுட்டு இருக்கா".. ஹாலில் தங்கையோடு உருண்டு சண்டை போட்டவாறு ரமாவிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் மான்வி..
"ஹேய்.. இது அப்பா எனக்காக வாங்கி கொடுத்தது.. நான் தரமாட்டேன்" கழுத்தில் தன் மெல்லிய செயினை இறுக பிடித்துக் கொண்டு அனிதா சண்டை போட.. "அக்கா.. அக்கா".. என்று உரக்க அழைத்துக் கொண்டிருந்தான் நிவின்...
"என்னடா".. சலிப்போடு நிமிர்ந்தவள் அவன் மௌனமாக கண்ணை காட்டும் திசையில் திரும்பி பார்க்க.. வாசலில் சுவற்றோடு சாய்ந்து மார்பின் குறுக்கே கைகட்டிய தோரணையோடு சுவாரசியமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..
அய்யோ.. மானம் போச்சே.. சங்கடத்தோடு எழுந்து நின்றவள்.. என்ன செய்வது என்று அறியாமல் அறைக்குள் ஓடிவிட.. "அம்மா.. அம்மா".. என்று ரமாவை அழைத்துக் கொண்டிருந்தாள் அனிதா..
"வாங்க மாமா.. உக்காருங்க".. ரமாவும் நிவினும் ஜீவாவை அழைத்து அமர வைத்தனர்..
"வாங்க.. வாங்க மாப்பிள்ளை".. புன்னகையோடு ரமா வரவேற்றவள்.. "அனி.. போய் அப்பாவை கூட்டிட்டு வா" என்று.. மகளை அவசரமாக அனுப்பி வைத்தாள்..
"நிவின் நீ போய் உன்னோட அக்காவை தயாராக சொல்லு வெளியே கிளம்பனும்".. என்ற ஜீவாவை புரியாமல் பார்த்தாள் ரமா..
"வாங்க மாப்பிள்ளை".. நீலகண்டனின் குரலில் மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றான் ஜீவா..
"உக்காருங்க.. நல்லா இருக்கீங்களா அப்பா ஏதாவது சொல்லிவிட்டாரா?".. வந்த விஷயம் என்ன என்பதை நேரடியாக கேட்டிருந்தார் அவர்..
"அப்பா எதுவும் சொல்லல.. கல்யாண விஷயத்தை பத்தி நீங்க அவர்கிட்டயே பேசிக்கோங்க.. நான் மான்வியை வெளியே கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றதும்.. ஒரு கணம் திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டு.. "இன்னும் நிச்சயதார்த்தம் கூட முடியலையே.. அதுக்குள்ள பெண்ணை வெளியே அழைச்சிட்டு போறது எல்லாம் எங்க வீட்ல பழக்கம் இல்லையே".. என்றார் நீலகண்டன் சங்கோஜத்துடன் நீலகண்டன்..
"உங்க பெண்ணை கல்யாணம் செஞ்சுக்க போறது நான்தானே.. அதுல ஒன்னும் மாற்று கருத்து இல்லையே.. அதான் முகூர்த்தம் பார்த்து தேதி எல்லாம் குறிச்சாச்சே.. அப்புறமும் அவளை என்னோட அனுப்புறதுல உங்களுக்கு என்ன சார் தயக்கம்".. அலட்டல் இல்லாது புன்னகைத்தான் ஜீவா..
அவன் கூற்றுக்கு பதில் இல்லாமல் "நீங்க என்னை மாமன்னே கூப்பிடலாமே".. என்றார் நீலகண்டன்..
"பாத்தீங்களா உறவுமுறை வச்சு கூப்பிடனும்னு நீங்களே சொல்லி இந்த கல்யாணத்தை உறுதிப்படுத்திட்டீங்க.. "இதை விட என்ன வேணும்.. நான் மான்வியை அழைச்சிட்டு போறேன்.. எப்படிப் பார்த்தாலும் அவளை ஆபிஸ்க்கு கூட்டிட்டு போறதும் வீட்ல கொண்டு வந்து விடுறதும் நான் தானே.. சாரி மாமா இப்படி சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க.. மான்வி விஷயத்துல இந்த கட்டுப்பாடுகள் விதிமுறைகள் எதுவும் எனக்கு ஒத்து வராது"..
"உங்க பொண்ணு" என்றவன் சற்று நிறுத்தி "எனக்கு மனைவியா வரப் போறவ.. அவளை என்னோட வெளியே அனுப்ப நீங்க அனுமதிக்க மாட்டீங்க ன்னு சொன்னா.. அதான் தகவல் சொல்லி கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்".. என்று அதிகாரத்தோடு முடித்திருந்தான்..
உன்னிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. தகவல் மட்டுமே சொல்லுவேன் என்று கடைசி வார்த்தையை அழுத்தமாக உரைத்திருக்க.. நீலகண்டன் முகம் மாறிப் போனது.. என்னதான் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பெண்ணை தர சம்மதித்திருந்தாலும் சில அடிப்படையான மரியாதைகளை அவர் மனம் எதிர்பார்த்தது உண்மை.. வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் உங்களிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெளிப்படையாக பேசிய ஜீவாவின் மீது.. கரும்புள்ளி விழுந்ததை போல் மனதுக்குள் ஒரு அதிருப்தி பரவினாலும்.. அதை ஓரங்கட்டி விட்டு "சரி மாப்ள நீங்க கூட்டிட்டு போங்க".. என்றார் உள்ளுக்குள் உண்டான நெருடலுடன்..
"மாப்பிள்ளை காபி சாப்பிடுங்க" ரமா காபி கலந்து வந்து கொடுக்கவும்.. லேசான புன்னகையோடு "தேங்க்ஸ்".. என்றவன் அதை வாங்கி பருகிக் கொண்டிருந்த வேளையில்.. "மாப்ள நீங்க வெயிட் பண்ணி அழைச்சிகிட்டு போங்க.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நான் கிளம்பறேன்.. ரமா மாப்பிள்ளை சாப்பிட வச்சு அனுப்பு" என்று அங்கிருந்து வெளியேறி இருந்தார் நீலகண்டன்..
"மாமா.. நீங்க வெச்சிருக்கிற கார் என்ன விலை".. என்று அருகே வந்து அமர்ந்தான் நிவின்..
"1.2 க்ரோர்" ஆர்ப்பாட்டம் இல்லாமல் பதில் அளித்திருந்தான் ஜீவா..
"அம்மாடியோவ்".. இரு பிள்ளைகளும் வாயை பிளக்க.. "மாமா எங்களையும் உங்க கார்ல ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போறீங்களா".. அனிதா ஆசையாக கேட்க.. "ஓஹ் போகலாமே".. என்று காப்பியை கடைசி மிடறு விழுங்கியவன்.. "வாங்களேன் உன் அக்கா கிளம்பி வர்றதுக்குள்ள ஒரு ரவுண்டு போய்ட்டு வந்திடுவோம்".. என்றுவிட்டு முன்னே நடக்க.. பிள்ளைகள் குஷியாக அவன் பின்னே ஓடினர்..
இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு அந்த ஏரியாவை சுற்றி வலம் வந்தான் ஜீவா.. "மாமா இதுதான் நாங்க படிக்கிற ஸ்கூல்.. இது அக்கா படிக்கிற காலேஜ்" என்று தங்களோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் காண்பித்துக் கொண்டே வர மான்வி பற்றிய விஷயங்களை கண்களில் ஒளியுடன் சுவாரசியமாக கேட்டுக் கொண்டே காரை ஓட்டினான் ஜீவா..
"உங்க அக்கா ரொம்ப குறும்புகாரியோ".. இதழில் தேங்கிய புன்னகையுடன் கேட்க.. "ஆமா மாமா.. எல்லா சேட்டையும் பண்றது அவதான் கடைசில எங்க ரெண்டு பேரையும் மாட்டிவிட்டுடுவா".. நிவின் சீரியஸாக சொல்லவும் சத்தமாக சிரித்தான்.. "ஒருவாட்டி பேய் மாதிரி மேக்கப் போட்டுட்டு என்னை வந்து பயமுறுத்தி ஒரு வாரமா எனக்கு காய்ச்சல் தெரியுமா".. அனிதா அப்பாவியாக கூறவும்..
"ஓஹ்.. இப்படியெல்லாம் கூட பண்ணுவாளா அவ!!".. கீழுதட்டை பற்களால் கடித்து சிரித்துக்கொண்டவனுக்கு அவள் குறும்பின் மறுபக்கம் காண ஆசை..
ஒற்றைப் பிள்ளையாக தனியாக வளர்ந்தவனுக்கு.. சிறு பிள்ளைகள் இருவரின் பேச்சுகளும்.. அரட்டைகளும்.. ரசிக்கும்படியான உற்சாகத்தை தோற்றுவித்திருந்தது..
அந்த ஏரியாவை வட்டமடித்து இறுதியாக இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தான்..
"ஹேய்.. அவரை ஏன் கஷ்டப் படுத்துறீங்க".. வீட்டுக்குள் நுழைந்ததும் ரமா அவசரமாக ஓடிவந்து இரு பிள்ளைகளையும் அதட்டினாள்..
"என்ன கஷ்டம்.. நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன்.. உங்க பிள்ளைங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு".. புன்னகைத்து நிவினின் கன்னத்தை தட்டினான் ஜீவா..
"மாமா.. நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க".. அனிதா பாராட்டிற்கு.. தாங்க்ஸ் மேடம்.. நெஞ்சில் கைவைத்து குனிந்து கூறினான் அவன்.. பிள்ளைகள் சிரித்தனர்..
நிறைவான புன்னகையுடன் "சரி சாப்பிட வாங்க.. டிபன் ரெடி ஆகிடுச்சு".. உள்ளங்கையை புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டே ரமா அழைக்க.. "இல்ல எனக்கு வேண்டாம்.. நானும் மான்வியும் வெளியே பாத்துக்கிறோம்.. நீங்க பசங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொடுங்க".. என்றான் அவன்..
"சரி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க" ரமா அழைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட.. உணவருந்தும் அறையை நோக்கி நிவின் ஓடியிருந்தான்.. அவனைப் பின்தொடர்ந்த அனிதாவை கைப்பற்றி நிறுத்திய ஜீவா.. "உன் அக்கா ரூம் எது?".. என்றான் ரகசியமான குரலில்..
"வாங்க அழைச்சிட்டு போறேன்".. என்றவள் அவனோடு சென்று மான்வி அறைக்கு முன் நின்று "அக்கா".. என அழைத்து கதவை தட்டி விட்டு "நான் சாப்பிட போறேன்".. என்று ஓடிவிட்டாள்.. கதவு தானாக திறந்து கொள்ள உள்ளே நுழைந்திருந்தான் ஜீவா..
பொன் மேனியை சுற்றியிருந்த சிறிய டவலோடு "என்னடி.. அதான் நிவின் வந்து கிளம்ப சொல்லிட்டானே இன்னும் என்ன சொல்லி அனுப்பினாரு உன்கிட்டே உன் மாமா".. அவனுக்கு முதுகு காண்பித்து நின்று கொண்டிருந்த மான்வி தன் ஈரக்கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்க.. அழுத்தமான காலடி சத்தம் தொடர்ந்து.. இடையில் ஊர்ந்த வெம்மையான கரங்கள் இறுக்கி அணைத்துக் கொண்டன அவளை..
ஹக்.. உடல் துள்ளி விழுந்தவள்.. விழிகளை நிமிர்த்திய வேளையில் இதழும் சிறைப்பட்டு போனது.. எதையும் உணரும் நிலையில் அவன் இல்லை.. போதையேற்றிய பொன்மேனியில் எங்கெங்கு கரங்கள் ஊர்ந்து சென்றதேன உணர்ந்து உடல் தூக்கி வாரிப் போட்டதில்.. பதறி விலக துடித்தவள்.. அது முடியாது போகவே.. அவன் அணைப்புக்குள் திமிறி ஆண் சர்ப்பத்தினுள் பின்னிப்பிணைந்த பெண் நாகமாக நெளிந்த பொழுதினில்.. உடலை தழுவியிருந்த பூந்துவாலை கீழே விழுந்ததை உணராமல் ஆணவன் மார்பில் கரம் வைத்து தள்ளிவிட்டு விலகி நின்றாள் மான்வி..
"மை காட்".. ஒரு மாதிரியாக சொன்னவனின் விழிகள் தாபத்தில் குளித்து சிவந்து நின்றதை.. ஒருவித அச்சத்தோடு நோக்கியவள்.. அவ்விழிகள் தன்னை லஜ்ஜையின்றி கால் விரல் முதல் பிறைநெற்றி வரை அழுத்தமாக.. அதிலும் சில இடங்களில் நின்று நிதானமாக மேய்வதை உணர்ந்து விழிகளை தாழ்த்தி தன்னை கவனித்தாள்..
அடுத்த கணமே இதயம் துடிப்பது நின்று "ஐயோ" என்று அலறியவள் தன்னை மறைக்க முயன்று ஆடை தேட.. "நோ ப்ளீஸ்".. என்றவன்.. ஒரே எட்டில் அவளை நெருங்கி அவள் கரங்கள் இரண்டையும் பற்றி நகர்த்திக் கொண்டு போய் சுவரோரம் சாய்த்தான்..
"ஜீவா.. ஜீவா.. ப்ளீஸ்.. என்னை விட்ருங்க"".. மான்வி விழிகளை இறுக மூடிக்கொண்டு இதழ் நடுங்க..
"நீ என் பேர் சொல்லி கூப்பிடறே மானு".. நேரம் காலமில்லாமல் ரசித்தான் அவள் அழைத்தலை..
"ஜீவா எனக்கு பயமா இருக்கு.. இது.. இது.. தப்பு.. தயவுசெஞ்சு வெளியே போயிடுங்க ப்ளீஸ்".. மான்வியின் விம்மலும் அழுகையும்.. அவன் மூளையில் ஏற வில்லை.. தகிக்கும் மூச்சோடு முரட்டு இதழ்களை அவள் கழுத்தில் அழுத்தமாக பதித்திருக்க. "ஆஆ".. என்று அச்சத்தோடு கத்தவும்.. "ஷட் அப் மானு.. என்கிட்டே என்னடி பயம்.. முதல்ல கண்ணைத் திற".. என்றான் அதட்டலாக..
"ப்ளீஸ்.. பிளீஸ்.. ஜீவா".. அவள் கெஞ்சலும் அழுகையும்.. எரிச்சலையும் கோபத்தையும் கிளர்ந்தெழச் செய்ய.. "பேபி ஸ்டாப் இட்".. என்றான் ஓங்கிய குரலில்.. அழுகை அடங்கினாலும் கண்ணீர் நிற்க வில்லை..
"இது.. இது.. தப்பு".. என்றாள் மீண்டும்..
"நமக்குள்ள எதுவுமே தப்பில்லை டி".. ஆழ்ந்த மூச்சோடு அவன் கரங்கள் வெற்றிடையில் பதிய.. பார்வையோ எங்கெங்கோ சென்று மீள முடியாமல் தவித்தது..
ஐ வான்ன டச் ஹியர்.. என்றான் சீறலான மூச்சுடன்..
நோ..நோ.. பிளீஸ்.. விம்மிய மூச்சுகளோடு கத்தினாள்..
கண்கள் மூடி பெரிய பெரிய மூச்சுகளோடு "ரியலி ஐ அம் அவுட் ஆஃப் கண்ட்ரோல்டி".. என்றான்.. தலையை உலுக்கி..
அவள் தேகம் கோழி குஞ்சாய் நடுங்குவதையும் பொருட்படுத்தாது இதழில் அழுத்தமாக முத்தமிட்டு.. "எனக்கு சொந்தமானதை நீ பார்க்க விடாம தடுக்கிற.. இட்ஸ் நாட் ஃபேர்".. வார்த்தைகளின் நடுவே மீண்டும் மீண்டும் முத்தமிட்டு இறுக்கி அணைத்து விடுவித்தவன்.. கீழே கிடந்த பூந்துவாலையை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டு.. "சீக்கிரம் கிளம்பி வா".. என்றவன் ஒரு கணம் நிறுத்தி "சேரி வேண்டாம்.. லூஸ் பிட் அனார்கலி ஏதாவது போட்டுக்கோ.. என்னால சமாளிக்க முடியாது".. என்று விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்..
தொடரும்..
"ஜஸ்ட் டூ மினிட்ஸ் பேசிட்டு வந்துடறேன்ப்பா".. சொல்லிவிட்டு மீண்டும் வீடியோ காலினுள் மூழ்கியவன்.. நடந்து சென்றவாறு லிவிங் ரூமின் ஜன்னல் பக்கத்தில் நின்று கொண்டு தோட்டத்திலிருந்து மலர்களின் வாசனையை சுமந்து வந்த குளிர் காற்றை அனுபவித்தவாறே மான்வியோடு உரையாடிக் கொண்டிருந்தான்.. சில்லென மோதிய காற்றில் மான்வியின் மென்மையான உள்ளங்கை ஈரத்தை உணர்ந்தான் ஜீவா..
"உன்னைப் போலவே இங்கொருத்தி என்னை உரிமை கொண்டாட துடிக்கிறாள்".. ஈரக்காற்றில் கண்கள் மூடி..
என்ன.. புரியல?
நீண்ட மூச்சுடன் புன்னகைத்து "ம்ஹும்.. ஒண்ணுமில்ல.. நாளைக்கு லீவ்தானே".. என்றவனின் பார்வை மான்வியின் சங்கு கழுத்தில் மெல்லிய நூலிழையாக.. தகதகத்து கொண்டிருந்த அந்த தங்க சங்கிலியின் மேல் பதிந்தது.. கழுத்தோடு சேர்த்து அந்த நூல் சங்கிலியை வருடி கொடுக்க ஆசை கொண்டு விரல்கள் குறுகுறுத்தன..
"ம்ம்.. லீவ்தான்".. பதில் சொல்லி அவன் கவனத்தை கலைத்தாள் மான்வி..
"தென் ஒகே.. நாளைக்கு பரத் தீப்தி வெட்டிங் ஆனிவர்சரி.. இன்வைட் செஞ்சிருக்காங்க.. நாம போறோம்.. மார்னிங் ரெடியா இரு".. முடித்து விட்டான்..
"அப்பா ஒத்துக்க மாட்டாரு.. நான் வரலை நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்".. எப்போதும் போல் அவளிடம் தயக்கம்..
"உங்க அப்பாகிட்ட நான் பேசுறேன்.. காலையில கிளம்பி தயாராய் இரு.. சாரி கட்டிக்கோ.. நைட் தூங்கும்போது கூப்பிடுறேன்".. என்றவன் அருகில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு.. "மேக்ஸிமம் நைட் ஸ்லீவ்லஸ் லூஸ் டாப் போட்டு தூங்குறதுக்கு ப்ராக்டிஸ் பண்ணு.. ஏன் இவ்வளவு டைட் ஃபிட்டிங்கா போட்டிருக்க.. காத்தே போகாதுடி.. பிளட் சர்குலேஷன் பாதிக்கப்படும்னு உனக்கு தெரியாதா".. என்றிருந்தான்.. சற்று கண்டிப்பான குரலில் ..
முழுவதுமாக போர்த்திக் கொண்டு படுக்கும்போதே அங்கே இங்கே விலகி.. மானம் போகின்றது.. இதில் ஸ்லீவ் லஸ்.. லூஸ் டாப்.. கடவுளே.. நினைக்கும் போதே மான்விக்கு தலை சுற்றியது..
"ஐயோ அதெல்லாம் வேண்டாம் நீங்க வேற வீடியோ கால்ல". என்று சட்டென வார்த்தைகளை விழுங்கி நாக்கை கடித்துக் கொண்டாள்..
விழிகளில் குறும்புடன் அவள் பாவனைகளை உற்று கவனித்துக் கொண்டிருந்தவன்.. "என்ன வீடியோ கால்ல?".. என்றான் கல்மிஷப் புன்னகையுடன்.. அதற்கு மேல் சொல்ல இயலாது.. அவள் அவஸ்தைப் படுவதை ரசித்துக்கொண்டே..
"நான் எதையாச்சும் பார்த்திடுவேன்னு.. எம்பாரிசிங்கா பீல் பண்றியா?".. அவள் மனம் புரிந்து அவனே கேட்டிருந்தான்.. இதழை கடித்து அவள் அமைதி காக்க.. "டோன்ட் பைட் யுவர் லிப்ஸ்" என்றான் சற்று அதட்டலாக.. என் உதட்டை நான் கடிப்பதில் இவருக்கு என்ன கோபமாம்.. முகம் சுருக்கினாள் மான்வி..
நீண்ட மூச்சுடன்.. "நீ எனக்காக பொறந்தவ.. என்கிட்டே கூச்சப்பட்டா எப்படி ம்ம்?.. எனக்கானதுதானடி எல்லாம்.. அப்புறம் நான் பாக்காம?.. உன்கிட்டே எனக்கு சகல உரிமைகளும் இருக்கு.. புரியுதா".. உரிமையான குரலில் அத்தனை அழுத்தம்..
"ம்ம்".. என்று தலையசைப்பதை விட வேறென்ன சொல்ல முடியும்.. "நைட் பேசறேன்".. அழைப்பை துண்டித்து விட்டு விஸ்வ மூர்த்தியின் அருகில் வந்து அமர்ந்தான்..
"சொல்லுங்கப்பா"..
"மான்வி அப்பா நீலகண்டன் போன் பண்ணி இருந்தாரு.. வர்ற வைகாசி மாசம் பதினேழாம் தேதி.. நல்ல நாள்ன்னு ஜோசியர் தேதி குறிச்சு கொடுத்திருக்கிறாராம்.. அதுக்கு முன்னாடி சொல்லிக்கிற மாதிரி முகூர்த்தம் எதுவும் இல்லையாம்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு என்கிட்ட கேட்டாரு.. நானும் ஓகே உங்க இஷ்டப்படியே செய்யுங்கன்னு சொல்லிட்டேன்".. என்று மகனுக்கு தகவல் சொல்லவும்.. வைகாசி பதினேழுன்னா இன்னும் எத்தனை நாள் இருக்கு.. கண்கள் சுருங்க கேட்டிருந்தான் ஜீவா..
"இன்னும் ஒன்று கரெக்டா சொல்லப்போனால் இன்னும் ஒன்றரை மாசம் இருக்கு"..
"வாட்".. பெரிதாக திகைத்தான் அவன்..
"யூ மீன் பார்ட்டி பைவ் டேஸ்.. நோ அப்பா அவ்வளவு நாள் வெயிட் பண்ண முடியாது.. மேக்ஸிமம் ஒன் வீக்ல ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கான்னு பாருங்க".. பிடிவாதமாக சொன்ன மகனை சிரிப்போடு பார்த்தவர்..
"அவசரப்படாதே கண்ணா.. நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து.. பெரியவங்க ஆசிர்வாதத்தோடு திருமணம் செஞ்சாதான் உங்க வாழ்க்கை சுபிட்சமா இருக்கும்.. அதை விட்டுட்டு நீண்ட காலம் தொடர போற இந்த பந்தத்துக்கு எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது ஜீவா".. என்றார் சற்று அழுத்தமாக.. தனது ஒரே மகனின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடிக்க அவருக்கும் பேராசை உண்டல்லவா.. அதிலும் கர்கியுமிக் காஸ்மெடிக் நிறுவனத்தின் உரிமையாளர் திருமணம்.. அவசர அவசரமாக முடிவதில் துளியும் விருப்பமில்லை மூர்த்திக்கு..
"என்னப்பா பேசுறீங்க.. நல்ல நாள் பார்த்து செய்த திருமணம் தான் ஜெயிக்கும்னா உங்க திருமண வாழ்க்கை ஏன் தோல்வி அடைஞ்சது".. மகன் கேட்ட கேள்வியில் அவர் முகம் இருளடைந்து போனது.. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மைதான் என்றாலும்.. பல நேரங்களில் ஜீரணிக்க முடியாமல் தொண்டை அடைத்துப் போகின்றது..
"திரும்பத் திரும்ப உங்களை ஹர்ட் பண்ணனும்னு நான் இதை சொல்லலப்பா.. எது உண்மை எது முட்டாள்தனம்னு உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்றேன்.. நமக்காக விடியற ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தானேப்பா.. அதில ஏன் இந்த பாகுபாடு.. என்னால் அவளை பிரிஞ்சு இருக்க முடியல.. புரிஞ்சுக்கோங்க அப்பா".. கடைசி வார்த்தைகளில் மகனுக்கு மான்வி மீதான அதிகப்படியான நேசத்தை புரிந்து கொண்ட விஸ்வமூர்த்தி.. "எனக்கு புரியுது கண்ணா.. ஆனா என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கையும் ஆகிட கூடாதுன்னு தான் இவ்வளவு பாடுபடுறேன்.. நான் தொழில் தொழில்ன்னு உங்க அம்மா மேல அக்கறையே இல்லாம இருந்தேன்.. நீ அந்த பொண்ணு மேல அதீத அக்கறை எடுத்துக்கிறே.. இரண்டுமே நல்லதில்லையே!!"..
"அளவுக்கு மீறிய அன்பும் கூட ஆபத்துல முடியலாம்.. புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன்".. விஷ்வமூர்த்தி தயக்கத்தோடு மறைமுகமாக எச்சரிக்கை செய்திருக்க.. அவர் கூற்றை தவறு என்பது போல் புன்னகைத்தான் ஜீவா..
"அன்புக்கும் காதலுக்கும் ஏதுப்பா எல்லை.. அவ என்னை புரிஞ்சுக்குவா.. என் காதலை மனப்பூர்வமா ஏத்துக்குவா.. என் கூட சந்தோஷமா இருப்பா.. கல்யாணத்துக்காக ஒன்றரை மாசம் இடைவெளி இருக்கிற இந்த காலகட்டத்தை.. எங்க புரிதலுக்கான நேரமா நான் பயன்படுத்திக்கிறேன்.. என்னை நினைச்சு கவலைப்படாம நீங்க கல்யாண வேலையை போய் பாருங்க.. நான் போய் தூங்குறேன் நீங்களும் போய் தூங்குங்க குட் நைட்".. என்றவன் அவர் பதிலுக்காக காத்திராமல் எழுந்து சென்று விட்டான்.. அவன் சென்ற பிறகும் கூட தீவிரமாக எதையோ யோசித்தபடி அங்கேயே அமர்ந்திருந்தார் விஸ்வ மூர்த்தி.. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்.. மகனின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்துக் கொண்டவருக்கு இனம் புரியாத பயம் நெஞ்சத்தை அரித்துக் கொண்டிருந்தது.. தன் வாழ்க்கை தோற்றுப் போனதால் வந்த கலக்கமா.. அல்லது மகனின் குணம் தெரிந்ததால் வந்த கவலையா.. தண்ணீரில் குதிக்காமல் நீச்சல் பழக முடியாது.. அனுபவ பாடம் மட்டுமே வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும்.. சிலதை ஜீவா கற்றுக் கொள்வான் பல விஷயங்களை மான்வி தெரிந்து கொள்வாள்..
அக்னி தேவன் பூமிக்கு வெளிச்சம் கொடுக்க கிழக்கில் உதயமாகி மேலெழுந்து நின்ற வேளையில்..
"ஹேய்.. அது என்னோடது.. கொடு அனிதா.. அம்மா.. இவளை பாருங்க.. என்னோட செயின் எடுத்து இவ போட்டுட்டு இருக்கா".. ஹாலில் தங்கையோடு உருண்டு சண்டை போட்டவாறு ரமாவிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் மான்வி..
"ஹேய்.. இது அப்பா எனக்காக வாங்கி கொடுத்தது.. நான் தரமாட்டேன்" கழுத்தில் தன் மெல்லிய செயினை இறுக பிடித்துக் கொண்டு அனிதா சண்டை போட.. "அக்கா.. அக்கா".. என்று உரக்க அழைத்துக் கொண்டிருந்தான் நிவின்...
"என்னடா".. சலிப்போடு நிமிர்ந்தவள் அவன் மௌனமாக கண்ணை காட்டும் திசையில் திரும்பி பார்க்க.. வாசலில் சுவற்றோடு சாய்ந்து மார்பின் குறுக்கே கைகட்டிய தோரணையோடு சுவாரசியமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா..
அய்யோ.. மானம் போச்சே.. சங்கடத்தோடு எழுந்து நின்றவள்.. என்ன செய்வது என்று அறியாமல் அறைக்குள் ஓடிவிட.. "அம்மா.. அம்மா".. என்று ரமாவை அழைத்துக் கொண்டிருந்தாள் அனிதா..
"வாங்க மாமா.. உக்காருங்க".. ரமாவும் நிவினும் ஜீவாவை அழைத்து அமர வைத்தனர்..
"வாங்க.. வாங்க மாப்பிள்ளை".. புன்னகையோடு ரமா வரவேற்றவள்.. "அனி.. போய் அப்பாவை கூட்டிட்டு வா" என்று.. மகளை அவசரமாக அனுப்பி வைத்தாள்..
"நிவின் நீ போய் உன்னோட அக்காவை தயாராக சொல்லு வெளியே கிளம்பனும்".. என்ற ஜீவாவை புரியாமல் பார்த்தாள் ரமா..
"வாங்க மாப்பிள்ளை".. நீலகண்டனின் குரலில் மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றான் ஜீவா..
"உக்காருங்க.. நல்லா இருக்கீங்களா அப்பா ஏதாவது சொல்லிவிட்டாரா?".. வந்த விஷயம் என்ன என்பதை நேரடியாக கேட்டிருந்தார் அவர்..
"அப்பா எதுவும் சொல்லல.. கல்யாண விஷயத்தை பத்தி நீங்க அவர்கிட்டயே பேசிக்கோங்க.. நான் மான்வியை வெளியே கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்".. என்றதும்.. ஒரு கணம் திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டு.. "இன்னும் நிச்சயதார்த்தம் கூட முடியலையே.. அதுக்குள்ள பெண்ணை வெளியே அழைச்சிட்டு போறது எல்லாம் எங்க வீட்ல பழக்கம் இல்லையே".. என்றார் நீலகண்டன் சங்கோஜத்துடன் நீலகண்டன்..
"உங்க பெண்ணை கல்யாணம் செஞ்சுக்க போறது நான்தானே.. அதுல ஒன்னும் மாற்று கருத்து இல்லையே.. அதான் முகூர்த்தம் பார்த்து தேதி எல்லாம் குறிச்சாச்சே.. அப்புறமும் அவளை என்னோட அனுப்புறதுல உங்களுக்கு என்ன சார் தயக்கம்".. அலட்டல் இல்லாது புன்னகைத்தான் ஜீவா..
அவன் கூற்றுக்கு பதில் இல்லாமல் "நீங்க என்னை மாமன்னே கூப்பிடலாமே".. என்றார் நீலகண்டன்..
"பாத்தீங்களா உறவுமுறை வச்சு கூப்பிடனும்னு நீங்களே சொல்லி இந்த கல்யாணத்தை உறுதிப்படுத்திட்டீங்க.. "இதை விட என்ன வேணும்.. நான் மான்வியை அழைச்சிட்டு போறேன்.. எப்படிப் பார்த்தாலும் அவளை ஆபிஸ்க்கு கூட்டிட்டு போறதும் வீட்ல கொண்டு வந்து விடுறதும் நான் தானே.. சாரி மாமா இப்படி சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க.. மான்வி விஷயத்துல இந்த கட்டுப்பாடுகள் விதிமுறைகள் எதுவும் எனக்கு ஒத்து வராது"..
"உங்க பொண்ணு" என்றவன் சற்று நிறுத்தி "எனக்கு மனைவியா வரப் போறவ.. அவளை என்னோட வெளியே அனுப்ப நீங்க அனுமதிக்க மாட்டீங்க ன்னு சொன்னா.. அதான் தகவல் சொல்லி கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்".. என்று அதிகாரத்தோடு முடித்திருந்தான்..
உன்னிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. தகவல் மட்டுமே சொல்லுவேன் என்று கடைசி வார்த்தையை அழுத்தமாக உரைத்திருக்க.. நீலகண்டன் முகம் மாறிப் போனது.. என்னதான் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பெண்ணை தர சம்மதித்திருந்தாலும் சில அடிப்படையான மரியாதைகளை அவர் மனம் எதிர்பார்த்தது உண்மை.. வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் உங்களிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெளிப்படையாக பேசிய ஜீவாவின் மீது.. கரும்புள்ளி விழுந்ததை போல் மனதுக்குள் ஒரு அதிருப்தி பரவினாலும்.. அதை ஓரங்கட்டி விட்டு "சரி மாப்ள நீங்க கூட்டிட்டு போங்க".. என்றார் உள்ளுக்குள் உண்டான நெருடலுடன்..
"மாப்பிள்ளை காபி சாப்பிடுங்க" ரமா காபி கலந்து வந்து கொடுக்கவும்.. லேசான புன்னகையோடு "தேங்க்ஸ்".. என்றவன் அதை வாங்கி பருகிக் கொண்டிருந்த வேளையில்.. "மாப்ள நீங்க வெயிட் பண்ணி அழைச்சிகிட்டு போங்க.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நான் கிளம்பறேன்.. ரமா மாப்பிள்ளை சாப்பிட வச்சு அனுப்பு" என்று அங்கிருந்து வெளியேறி இருந்தார் நீலகண்டன்..
"மாமா.. நீங்க வெச்சிருக்கிற கார் என்ன விலை".. என்று அருகே வந்து அமர்ந்தான் நிவின்..
"1.2 க்ரோர்" ஆர்ப்பாட்டம் இல்லாமல் பதில் அளித்திருந்தான் ஜீவா..
"அம்மாடியோவ்".. இரு பிள்ளைகளும் வாயை பிளக்க.. "மாமா எங்களையும் உங்க கார்ல ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போறீங்களா".. அனிதா ஆசையாக கேட்க.. "ஓஹ் போகலாமே".. என்று காப்பியை கடைசி மிடறு விழுங்கியவன்.. "வாங்களேன் உன் அக்கா கிளம்பி வர்றதுக்குள்ள ஒரு ரவுண்டு போய்ட்டு வந்திடுவோம்".. என்றுவிட்டு முன்னே நடக்க.. பிள்ளைகள் குஷியாக அவன் பின்னே ஓடினர்..
இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு அந்த ஏரியாவை சுற்றி வலம் வந்தான் ஜீவா.. "மாமா இதுதான் நாங்க படிக்கிற ஸ்கூல்.. இது அக்கா படிக்கிற காலேஜ்" என்று தங்களோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் காண்பித்துக் கொண்டே வர மான்வி பற்றிய விஷயங்களை கண்களில் ஒளியுடன் சுவாரசியமாக கேட்டுக் கொண்டே காரை ஓட்டினான் ஜீவா..
"உங்க அக்கா ரொம்ப குறும்புகாரியோ".. இதழில் தேங்கிய புன்னகையுடன் கேட்க.. "ஆமா மாமா.. எல்லா சேட்டையும் பண்றது அவதான் கடைசில எங்க ரெண்டு பேரையும் மாட்டிவிட்டுடுவா".. நிவின் சீரியஸாக சொல்லவும் சத்தமாக சிரித்தான்.. "ஒருவாட்டி பேய் மாதிரி மேக்கப் போட்டுட்டு என்னை வந்து பயமுறுத்தி ஒரு வாரமா எனக்கு காய்ச்சல் தெரியுமா".. அனிதா அப்பாவியாக கூறவும்..
"ஓஹ்.. இப்படியெல்லாம் கூட பண்ணுவாளா அவ!!".. கீழுதட்டை பற்களால் கடித்து சிரித்துக்கொண்டவனுக்கு அவள் குறும்பின் மறுபக்கம் காண ஆசை..
ஒற்றைப் பிள்ளையாக தனியாக வளர்ந்தவனுக்கு.. சிறு பிள்ளைகள் இருவரின் பேச்சுகளும்.. அரட்டைகளும்.. ரசிக்கும்படியான உற்சாகத்தை தோற்றுவித்திருந்தது..
அந்த ஏரியாவை வட்டமடித்து இறுதியாக இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தான்..
"ஹேய்.. அவரை ஏன் கஷ்டப் படுத்துறீங்க".. வீட்டுக்குள் நுழைந்ததும் ரமா அவசரமாக ஓடிவந்து இரு பிள்ளைகளையும் அதட்டினாள்..
"என்ன கஷ்டம்.. நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன்.. உங்க பிள்ளைங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு".. புன்னகைத்து நிவினின் கன்னத்தை தட்டினான் ஜீவா..
"மாமா.. நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க".. அனிதா பாராட்டிற்கு.. தாங்க்ஸ் மேடம்.. நெஞ்சில் கைவைத்து குனிந்து கூறினான் அவன்.. பிள்ளைகள் சிரித்தனர்..
நிறைவான புன்னகையுடன் "சரி சாப்பிட வாங்க.. டிபன் ரெடி ஆகிடுச்சு".. உள்ளங்கையை புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டே ரமா அழைக்க.. "இல்ல எனக்கு வேண்டாம்.. நானும் மான்வியும் வெளியே பாத்துக்கிறோம்.. நீங்க பசங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொடுங்க".. என்றான் அவன்..
"சரி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க" ரமா அழைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட.. உணவருந்தும் அறையை நோக்கி நிவின் ஓடியிருந்தான்.. அவனைப் பின்தொடர்ந்த அனிதாவை கைப்பற்றி நிறுத்திய ஜீவா.. "உன் அக்கா ரூம் எது?".. என்றான் ரகசியமான குரலில்..
"வாங்க அழைச்சிட்டு போறேன்".. என்றவள் அவனோடு சென்று மான்வி அறைக்கு முன் நின்று "அக்கா".. என அழைத்து கதவை தட்டி விட்டு "நான் சாப்பிட போறேன்".. என்று ஓடிவிட்டாள்.. கதவு தானாக திறந்து கொள்ள உள்ளே நுழைந்திருந்தான் ஜீவா..
பொன் மேனியை சுற்றியிருந்த சிறிய டவலோடு "என்னடி.. அதான் நிவின் வந்து கிளம்ப சொல்லிட்டானே இன்னும் என்ன சொல்லி அனுப்பினாரு உன்கிட்டே உன் மாமா".. அவனுக்கு முதுகு காண்பித்து நின்று கொண்டிருந்த மான்வி தன் ஈரக்கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்க.. அழுத்தமான காலடி சத்தம் தொடர்ந்து.. இடையில் ஊர்ந்த வெம்மையான கரங்கள் இறுக்கி அணைத்துக் கொண்டன அவளை..
ஹக்.. உடல் துள்ளி விழுந்தவள்.. விழிகளை நிமிர்த்திய வேளையில் இதழும் சிறைப்பட்டு போனது.. எதையும் உணரும் நிலையில் அவன் இல்லை.. போதையேற்றிய பொன்மேனியில் எங்கெங்கு கரங்கள் ஊர்ந்து சென்றதேன உணர்ந்து உடல் தூக்கி வாரிப் போட்டதில்.. பதறி விலக துடித்தவள்.. அது முடியாது போகவே.. அவன் அணைப்புக்குள் திமிறி ஆண் சர்ப்பத்தினுள் பின்னிப்பிணைந்த பெண் நாகமாக நெளிந்த பொழுதினில்.. உடலை தழுவியிருந்த பூந்துவாலை கீழே விழுந்ததை உணராமல் ஆணவன் மார்பில் கரம் வைத்து தள்ளிவிட்டு விலகி நின்றாள் மான்வி..
"மை காட்".. ஒரு மாதிரியாக சொன்னவனின் விழிகள் தாபத்தில் குளித்து சிவந்து நின்றதை.. ஒருவித அச்சத்தோடு நோக்கியவள்.. அவ்விழிகள் தன்னை லஜ்ஜையின்றி கால் விரல் முதல் பிறைநெற்றி வரை அழுத்தமாக.. அதிலும் சில இடங்களில் நின்று நிதானமாக மேய்வதை உணர்ந்து விழிகளை தாழ்த்தி தன்னை கவனித்தாள்..
அடுத்த கணமே இதயம் துடிப்பது நின்று "ஐயோ" என்று அலறியவள் தன்னை மறைக்க முயன்று ஆடை தேட.. "நோ ப்ளீஸ்".. என்றவன்.. ஒரே எட்டில் அவளை நெருங்கி அவள் கரங்கள் இரண்டையும் பற்றி நகர்த்திக் கொண்டு போய் சுவரோரம் சாய்த்தான்..
"ஜீவா.. ஜீவா.. ப்ளீஸ்.. என்னை விட்ருங்க"".. மான்வி விழிகளை இறுக மூடிக்கொண்டு இதழ் நடுங்க..
"நீ என் பேர் சொல்லி கூப்பிடறே மானு".. நேரம் காலமில்லாமல் ரசித்தான் அவள் அழைத்தலை..
"ஜீவா எனக்கு பயமா இருக்கு.. இது.. இது.. தப்பு.. தயவுசெஞ்சு வெளியே போயிடுங்க ப்ளீஸ்".. மான்வியின் விம்மலும் அழுகையும்.. அவன் மூளையில் ஏற வில்லை.. தகிக்கும் மூச்சோடு முரட்டு இதழ்களை அவள் கழுத்தில் அழுத்தமாக பதித்திருக்க. "ஆஆ".. என்று அச்சத்தோடு கத்தவும்.. "ஷட் அப் மானு.. என்கிட்டே என்னடி பயம்.. முதல்ல கண்ணைத் திற".. என்றான் அதட்டலாக..
"ப்ளீஸ்.. பிளீஸ்.. ஜீவா".. அவள் கெஞ்சலும் அழுகையும்.. எரிச்சலையும் கோபத்தையும் கிளர்ந்தெழச் செய்ய.. "பேபி ஸ்டாப் இட்".. என்றான் ஓங்கிய குரலில்.. அழுகை அடங்கினாலும் கண்ணீர் நிற்க வில்லை..
"இது.. இது.. தப்பு".. என்றாள் மீண்டும்..
"நமக்குள்ள எதுவுமே தப்பில்லை டி".. ஆழ்ந்த மூச்சோடு அவன் கரங்கள் வெற்றிடையில் பதிய.. பார்வையோ எங்கெங்கோ சென்று மீள முடியாமல் தவித்தது..
ஐ வான்ன டச் ஹியர்.. என்றான் சீறலான மூச்சுடன்..
நோ..நோ.. பிளீஸ்.. விம்மிய மூச்சுகளோடு கத்தினாள்..
கண்கள் மூடி பெரிய பெரிய மூச்சுகளோடு "ரியலி ஐ அம் அவுட் ஆஃப் கண்ட்ரோல்டி".. என்றான்.. தலையை உலுக்கி..
அவள் தேகம் கோழி குஞ்சாய் நடுங்குவதையும் பொருட்படுத்தாது இதழில் அழுத்தமாக முத்தமிட்டு.. "எனக்கு சொந்தமானதை நீ பார்க்க விடாம தடுக்கிற.. இட்ஸ் நாட் ஃபேர்".. வார்த்தைகளின் நடுவே மீண்டும் மீண்டும் முத்தமிட்டு இறுக்கி அணைத்து விடுவித்தவன்.. கீழே கிடந்த பூந்துவாலையை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டு.. "சீக்கிரம் கிளம்பி வா".. என்றவன் ஒரு கணம் நிறுத்தி "சேரி வேண்டாம்.. லூஸ் பிட் அனார்கலி ஏதாவது போட்டுக்கோ.. என்னால சமாளிக்க முடியாது".. என்று விட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்..
தொடரும்..
Last edited: