• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 20

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
73
மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்..

ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு அழைத்து பேசும்போது அவள் குரலிலும் பேச்சிலும் தெரியும் மாற்றங்களில் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஊடகமாக கண்டு கொண்டாலும் மிக கவனமாக சந்திரமதியை அருந்ததியிடம் பேசவிடாமல் தவித்திருந்தான்..

அம்மா இருக்காங்களா..? அம்மா சாப்பிட்டாங்களா..! அம்மா பக்கத்துல இல்லையா என்று அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டுமென்ற தவிப்பு தெரிந்த போதிலும் ஒன்று அறியாதவன் போல் வெறும் ம்ம்.. இல்ல என்ற பதில்களின் மூலம் அருந்ததி பற்றிய உரையாடலை கடந்து பேச்சை மாற்றியிருந்தான்..

தகப்பன் வீட்டுக்கு போகும் குஷியில் சந்திரமதி பள்ளிக்கு மட்டம் போட்டிருந்தாலும் சின்னவளின் நிலை பற்றி அறிந்து கொள்ள மகரிஷி நாளைக்கொருமுறை பிரபாகரனின் வீட்டை கண்காணிக்கும் சங்கதி அருந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை.. ஃபோனில் அழைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சந்திரமதி வெளியே வந்து நின்று கண்களை மூடி திறந்து ஒரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.. அப்படி சிரித்தால் அவள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒருவேளை சிரிக்காமல் அழுகையை சமிங்ஞையாக வெளிப்படுத்தினால் மகரிஷி அதிரடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும்..

மதி தந்தையின் வீட்டிலிருந்து மகரிஷியோடு புறப்பட்டு வருவதற்கு முந்தைய நாள் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போனதில் பதட்டப்பட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற மகரிஷி வழக்கம் போல் சற்று தொலைவிலிருந்த டீக்கடையில் நின்று அந்த வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தான்..!

முன் அந்தி மாலையில் சிரிப்பை உதிர்த்த சிறுமலர் இப்போது ஏன் அழைப்பை ஏற்கவில்லை..! அவளும் ஏன் அழைக்கவில்லை..
நேரடியாக பிரபாகரனின் வீட்டுக்கே சென்று பிள்ளையை சந்திக்கலாமா..? என்றுமில்லாத பதட்டத்துடன் இதயம் அதிக அழுத்தத்தோடு துடித்துக் கொண்டிருக்க..‌ தெய்வாதீனமாக வெளியில் வந்து காத்தாட நின்ற மதியை பார்க்க நேர்ந்தது..

"ஐயோ சந்திரா மா.. ஒக்க நிமிஷலோன் பிரானம் போயிந்தி..!" உள்ளுக்குள் முணுமுணுத்தவாறு இழுத்து பெருமூச்சு விட்டவன் கையை அசைத்து சந்திராவை அழைத்தான்..

பிரபாகரன் வீட்டுக்கு கொண்டு போய் விடும் முன்னே கடைக்கு அழைத்து சென்று சுடிதார் ஸ்கர்ட் டாப்.. என அவள் விருப்பத்திற்கு ஏற்றபடி நான்கு உடைகளை வாங்கி தந்திருந்தான்..!

இத்தனை நாட்களாக அவன் வாங்கித் தந்த உடைகளை தான் மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி..

பெற்ற தகப்பனோ.. தகப்பன் வழி பாட்டியோ தாத்தாவோ சந்திரமதிக்கு புது ஆடைகள் வாங்கித் தந்ததாக தெரியவில்லை..!

எங்கு நின்றாலும் பளிச்சென தெளிவாக தெரியும் அவன் நெடிய உருவம் கண்டு கண்களை சிமிட்டி இதழ் வரிய கள்ளமில்லாமல் புன்னகைத்தாள் சந்திரா..

"சந்திரமா.. நீ ஓகே தானே..?" சைகையின் மூலம் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தான்..

அவளும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சைகையின் மூலம் சொல்லியிருக்க..

"அப்புறம் ஏன் போன் எடுக்கல..?" என்றான் கையை மடக்கி காதின் பக்கத்தில் வைத்து சைகையின் மூலம் உணர்த்தி..!

"சார்ஜ தீந்து போச்சு..! ஸ்விட்ச் ஆஃப் அதனாலதான் எடுக்கல..‌" சற்று தொலைவில் நின்று அவள் இப்படி சொன்னது அவனுக்கு புரிந்ததோ இல்லையோ..

இழுத்து பெருமூச்சு விட்டவன் "நீ நல்லா இருக்கியா..?" என்றான் மறுபடி..

"ம்ம்..!" என்ற தலையசைத்தவளின் கண்களில் சந்தோஷம் தெரியவில்லை..

"நான் வேணா வரட்டுமா..? இல்ல உன் அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா..?"

வேண்டாம் என்றாள்..

"நான் போகட்டுமா..!"

போ என்றாலும் இதழ் பிதுக்கி அழுவதை போல் தோன்றியது அவனுக்கு..

அன்று வெகு நேரம் அந்த இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான் அவன்..

சந்திரமதி வீட்டுக்குள் சென்று எந்த பிரச்சினையும் இல்லை என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் அந்த போனில் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகுதான் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்..

முடிந்தவரை சந்திரமதியை தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தான் மகரிஷி..

மற்ற நேரங்களில் பாதுகாப்பாக கவனமாக இருப்பதெப்படி.. பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும்.. தவறானவர்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும்.. தற்காப்பு கலையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகப் பொறுமையாக அவளுக்கு சொல்லித் தந்திருந்தான்..

தற்காப்பு கலையை அவன் ஒன்றும் பெரிதாக மெனக்கெட்டு சொல்லித் தரவில்லை.. அரசு பள்ளிகளில் இப்போது ஆறாம் வகுப்பிலிருந்து பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மகரிஷிக்கும் மதிக்கும் வசதியாகி போனது..!

குட் டச் பேட் டச் இதெல்லாம் கிடையாது.. ஒன்லி நோ டச்..! யாராவது உன் மேல கைய வைக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே அவங்க கண்களை கூர்மையாக கவனி.. அந்த நாய்களோட இன்டென்ஷன் என்னதுன்னு உனக்கு தெரிஞ்சு போயிடும்..! அடுத்த நொடி என்ன செய்யணும்னு துரிதமா யோசிச்சு செயல்படனும் கொஞ்சம் கூட பயப்படக்கூடாது..!" என இரண்டு மணி நேரம் அவளை உட்கார வைத்து பொறுமையாக விளக்கி தான் அனுப்பி இருந்தான்..


இப்படி மிக ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்ட போதிலும்.. அடுத்த நாளில்.. அம்மா வேணும் அம்மாவை பாக்கணும்..! என சந்திரமதி தேம்பித் தேம்பி ஒரே அழுகை..! அதிலும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே அழைத்திருந்ததில் ஃபோனை காதில் வைத்து பேசியபடியே வெளியே வந்தவன் அழுபடியே உறங்கி போயிருந்த அருந்ததியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிட்டிகை போடும் தருணத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான்..

அம்மா வேணும்.. அம்மா அம்மா.. இந்த வார்த்தை.. இந்த பாசம் இதைத்தான் அவனும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.. ஆனாலும் இந்த சின்னஞ்சிறியவளின் அழுகை மகரிஷியின் நெஞ்சை வதைக்கிறது..! ஏதோ ஒரு இனம் புரியாத பாசம்.. சந்திரமதியை ஒரு தாயின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான் ஆனால் அவள் அழுகையில் மகரிஷியின் நெஞ்சம் தகப்பன் ஸ்தானத்திலிருந்து பதறியது..

சந்திரமதிய கூட்டிட்டு போறேன் என்று பிரபாகரனின் வீட்டில் போய் நின்ற போது.. கையை முறுக்கிக் கொண்டு முன்னே வந்து நின்ற பிரபாகரன் ரிஷியின் உடற்கட்டில் பின்வாங்கினான்..

"என் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு நீங்க யாரு..! இனி அவ என் கூட தான் இருப்பா.. நீ என்ன பண்றே..! போய் இவளோட அம்மாவ வர சொல்லு.." திடீரென ஒருமைக்கு தாவி எகத்தாளமாகச் சொன்னான்..

"அதை நீயே போய் சொல்லு.. இப்ப நான் சந்திரமதிய கூட்டிட்டு போய் அவங்க அம்மாகிட்ட விடனும்.." ரிஷி அதைவிட மிடுக்கான உடல்மொழியில் நின்றான்..

"இவள பெத்தவன் நான்.. என்னை மீறி கூட்டிட்டு போயிடுவியா நீ..!"

"பெத்த பிள்ளையாவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி வீட்டுல அடைச்சு வைக்க முடியாது..! பெண் குழந்தைகள் அம்மா கிட்டதான் வளரணும் கோர்ட்டுக்கு போனாலும் உன் வாதம் எடுபடாது.."

"ஹாஹா..! இப்பதானே புரியுது.. ஜிம் பாடியோட அழகா பதவி சா ஒருத்தன் பக்கத்திலேயே இருக்கும்போது என்கிட்ட வாழ வருவாளா அவ..?" மகரிஷியை ஏற இறங்க பார்த்தபடி பிரபாகரன் நக்கலாக பல்லிளிக்க..

"அதானே பிரபா..! வருஷத்துக்கு ஒரு ஆம்பளையை மாத்தறவளுக்கு உன் கூட எப்படி வாழனும்னு தோணும்..‌ பொண்ணு பொண்டாட்டின்னு நீ மட்டும் ஆசை வச்சா போதாது..! குடும்பம் புருஷன்னு அவளும் மனசு வைக்கணும்..!" இது பிரபாகரனின் அம்மா..

சின்ன குழந்தையின் முன்பு இது போன்று அருவருப்பாக பேசும் பிரபாகரன் வீட்டுஆட்களை கோபமாகவும் சந்திரமதியை சங்கடமாகவும் பார்த்த மகரிஷி அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டபடி சந்திரமதியை கனிவோடு கைநீட்டி அழைத்தான்..

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் கைப்பற்றிக் கொண்டாள் சந்திரமதி..

"ஏய்.. மதி.. அறிவில்ல.. கண்டவன் கைய பிடிச்சுகிட்டு அவன் பக்கத்துல போய் நிக்கிற.. அப்பா சொல்றேன் உள்ள போ.." என்றவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தபடி அமைதியாக நின்றாள் சந்திரமதி..

"அதானே பார்த்தேன்.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு சொல்லுவாங்களே அது சரியா தான் இருக்குது.. உன் அம்மாவ போல உனக்கு கொழுப்பு கூத்தாடுது..! அதான் எவனோ ஒருத்தன் வந்து கூப்பிட்ட உடனே தகப்பன மதிக்காம அவன் கூட போய் நிக்கற.. பாத்துக்கிட்டே இரு என்னைக்காவது ஒரு நாள் இவனும் உன் ஆத்தாளும் சேர்ந்து உன்னை.." முடிப்பதற்குள் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது..!

நடந்ததை உணர்ந்து கொண்டு மூக்கிலிருந்து கொட்டிய ரத்தத்தை கையால் பிடித்தபடி அதிர்ந்த விழிகளோடு மகரிஷியை பார்த்தான் பிரபாகரன்..

"ஐயோ என் பிள்ளையை அடிச்சுட்டானே பாவி பைய.. நீயெல்லாம் நல்லா இருப்பியா நாசமா தான்டா போவ..! உன்னை மயக்கி இங்க அனுப்பி வச்சிருக்காளே அந்த எடுபட்ட சிறுக்கி.. அந்த நாய் புழு புழுத்துதான்டா சாவா.. என் மவன அசிங்கப்படுத்தி வாழ விடாம செய்யற உங்களுக்கெல்லாம் நல்ல கதியே வராதுடா..!" பிரபாகரனின் தாய் சங்கரி தலைவிரி கோலமாக அழுது மண்ணை வாரி தூத்தாத குறையாக சாபம் விட்டுக் கொண்டிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் சந்திரமதியோடு வெளியேறினான் ரிஷி..

"ஐயோ நம்ம வீட்டு பிள்ளைய கடத்திட்டு போறானே இந்த கேடு கெட்டவன்.. டேய் பொறுக்கி நாயே.. கேட்க ஆள் இல்லையா..? யாராவது வாங்களேன்..!" சத்தம் போட்டு ஊரைக் கூட்ட யாரும் வந்து எட்டிப் பார்த்ததாய் தெரியவில்லை.. ஓடி வந்து வழியை மறித்துக் கொண்டு நின்ற மாமனார் மருதமுத்துவை தோளால் இடித்து தள்ளிவிட்டு சாதாரணமாக சென்றான் ரிஷி..

மாரடைப்பு கண்டவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் மருதமுத்து..

"வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் பண்ணி என் பொண்ண தூக்கிட்டு போறியா..! உன்னையும் அந்த தே...ளையும் போலீஸ்ல கேஸ் போட்டு உள்ள தள்ளி கம்பி என்ன வைக்கல நான் பிரபாகரன் இல்லடா.." மூக்கில் வடிந்த ரத்தத்தோடு கத்தினான் பிரபாகரன்..

மிரட்டி குதறும் பார்வையோடு திரும்பி உள்ளே வந்தவனை கண்டு பிரபாகர் அறைக்குள் ஒளிந்து கதவை சாத்திக் கொள்ள..

"முதல்ல தைரியமிருந்தா வெளிய வந்து பேசுடா நாயே..! அப்புறம் கேஸ் போடலாம்.." நக்கலும் ஆத்திரமுமாக சொல்லிவிட்டு தன்னை அழைத்துக் கொண்டு வெளியேறியவனை ஆனந்த வியப்போடு நிமிர்ந்து பார்த்தாள் சிறியவள்..

விவரம் தெரியாத வயதிலிருந்து அப்பா என்ற ஆஸ்தான பதவியிலமர்ந்து சமீப காலங்களில்.. அப்பா தனது முதல் ஹீரோ என்ற கீரிடம் வைக்கும் ஸ்தானத்திற்கு முன்னேறியிருந்த பிரபாகரனை அந்த இடத்திலிருந்து வெகு சுலபமாக பிடுங்கி எறிந்துவிட்டு மகரிஷியை தானாகவே அவ்விடத்தில் பொருத்திக்கொண்டது இளையவளின் மனது..

மை டாட் இஸ் எ ஹீரோ..

எஸ் ஹீரோ..

ஆனால் இங்கே அப்பா என்ற வார்த்தை வெளிபடையாக யோசிக்கப் படாமல் உணர்வுகளின் உருவாகிப் போனது அந்த உறவு..

மகரிஷி சந்திரமதி இருவரும் ஒரு சிறுவர் பூங்காவில் அமர்ந்திருந்தனர்..!

ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந்த ஒரு சிறிய பால் கடையிலிருந்து இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் கப்புகளோடு வெளியே வந்தான் மகரிஷி..

பால் கடை அதிகாலையிலேயே திறக்கப்படுவது வழக்கம்.. அங்கு ஐஸ் கிரீம் மில்க் ஷேக் அனைத்தும் காலாவதியாகும் தேதிகளோடு ஸ்டாக் இருக்கும் என்பதால் சந்திரமதிக்கு பிடித்ததை இந்த விடியற்காலையில் வாங்கித் தர முடிந்தது அவனால்..

"சந்திர மாவுக்கு வெனிலா தானே பிடிக்கும்.."

"ம்ம்..!" என்றவளின் கண்கள் பனிக்கூழை ஆர்வத்தோடு தழுவியது..

புன்னகையோடு அவளிடம் ஒரு கப்பை நீட்டிவிட்டு.. அவசர அவசரமாக உண்டு முடித்தவளிடம் இன்னொரு கப்பையும் தந்தான். மகரிஷி..!

"ம்ம்.. சாப்பிட்டு முடிச்சாச்சா.." என்று வாயை துடைக்க தன் கைகுட்டையை எடுத்து நீட்டவும்.. எந்தவித தயக்கமும் இல்லாமல் அவனிடமிருந்து கைக்குட்டையை வாங்கி வாயை துடைத்துக் கொண்டு..

"ம்ம்..! சாப்பிட்டுட்டேன் ரிஷி" என்றாள் சந்திரமதி..

"இன்னொன்னு வேணுமா..?"

"வேண்டாம் போதும்.."

"சரி அப்ப பேசலாமா..?"

என்ன பேசணும் என்பதாய் அவள் பார்வை தயக்கமும் பயமுமாக மிரண்டு விழித்தது..

மென்மையாய் சிரித்தான் அவன்..

"டோன்ட் ஒரி சந்திரா மா.. ஐம் ஆல்வேஸ் வித் யூ.. தேவையில்லாததை பேசி உன்னை கவலை படுத்த மாட்டேன்.. ஆனா எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்..‌ நீதான் ரொம்ப ஆர்வமா அந்த வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிச்சு நின்ன..? இப்ப போனதை விட வேகமா அந்த வீட்டிலருந்து திரும்பி வரணும்னு அழுது என்னை கூட்டிட்டு போகச் சொன்னதும் நீதான்.. அங்க என்னதான்டா நடந்துச்சு.. ஒவ்வொரு நாள் கால் பண்ணு போதும் அங்க எல்லாம் சரியா போகுதுன்னு சொன்னியே..! ஏன் அங்க இருக்கிறவங்க உன்னை ஏதாவது திட்டினாங்களா..! அடிச்சாங்களா..?"

சந்திரமதி தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்‌‌..

"சந்திரமதி ஏதாவது பேசு..! நீ வாய தொறந்தா தான் உண்மை வெளியே வரும்.. நாளைக்கு உன்னோட அப்பா போலீசோட வந்து நான் உன்னை கட்டாயப்படுத்தி அங்கிருந்து கூட்டிட்டு வந்ததா சொன்னா என் பக்கம் பேச நியாயமான காரணங்கள் வேணும் இல்லையா..! சொல்லுமா.. அங்க இருந்தவங்க உன்னை ஏதாவது கொடுமை படுத்தினாங்களா..?"

"அவங்க யாரு என்னை கொடுமைப்படுத்தல.."

மகரிஷி கண்கள் சுருக்கினான்..

"அப்புறம்..?"

"அந்த வீட்ல என்னோட முக்கியத்துவம் என்னன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு.. அம்மா என்னை பாத்துக்கிட்டதுக்கும் அப்பா என்னை கவனிச்சுக்கிட்டதுக்கும் நிறையவே வித்தியாசம்..! "

"முதல் ரெண்டு நாள் அங்க இருந்தவங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க.. நானும் அவங்க எல்லாரும் என் மேல ரொம்ப பாசமா இருக்கிறதா நினைச்சேன்.. இவ்ளோ பாசமானவங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டதா அம்மா மேல எனக்கு ரொம்ப கோவமா வந்துச்சு.. ஆனா அடுத்த நாள்லருந்து அந்த வீட்ல யாருமே என்னை கண்டுக்கல.. சாப்பிடறியான்னு கூட யாரும் கேட்கல.. யாருமே எனக்கு தலை வாரி விடல.. பக்கத்துல உட்கார்ந்து தலையை தடவி பாசமா பேசின பாட்டி கூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போனாங்க.. அப்பா என்கிட்ட முகம் கொடுத்து பேசவே இல்ல.. அவங்க எல்லாரும் கூடி கூடி பேசினத வச்சு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.."

"அம்மாவ என் மூலமா இங்க வரவழைச்சு அவங்கள வேலை பார்க்க வச்சு சம்பளத்தை பிடுங்கி கிட்டு எல்லாரும் சொகுசா வாழலாம்னு பேசிக்கிட்டாங்க.."

"அப்படியா..?"

"ஆமா ரிஷி..! என்னென்னமோ சொல்றாங்க.. அம்மாவும் நானும் அப்பா கூட இருந்தா தான் அவருக்கு மரியாதை கிடைக்குமாம்.. உன்ன மதிச்சி எவனாவது வேலை தரனும்னா குடும்பம்னு ஒன்னு வேணும்.. இந்த சின்னக் குட்டியால அவ இங்க வரட்டும்.. இல்லைன்னா இந்த பொட்ட கழுதையை வீட்ல வச்சு பாத்துக்க எனக்கென்ன தலையெழுத்தான்னு பாட்டி என்னை திட்டுனாங்க..!" சந்திரமதியின் கண்களில் நீர் நிரம்பியது..

மகரிஷி ஆறுதலாய் அவள் தோளை தட்டிக் கொடுத்தான்..

"அப்பா ஸ்கூல்ல வந்து பாசமா பேசின மாதிரி வீட்ல நடந்துக்கல.. வேற மாதிரி என்னை வெறுப்பா பார்த்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை.. சாப்பிட்டியானு கூட கேக்கல.. அடிக்கடி ஃபோன் தரேன் உன் அம்மாவுக்கு போன் பண்ணி பேசி இங்க வர சொல்லுன்னு சொல்லிட்டே இருந்தாரு.. நான் பேச மாட்டேன்னு சொன்னபோது எரிச்சலா என்னை திட்டுனாரு..! அப்புறம் தான் இதெல்லாம்.."

"பாட்டிக்கு என்னை பிடிக்கவே இல்லை.. தாத்தா பார்வையே சரியில்ல..! பசிச்சா நானே போட்டு சாப்பிடணும்.. அது கூட சில நேரத்துல சாப்பாடு இருக்காது.. ஒரு நாள் நேரம் கழிச்சு சாப்பிட்டு வயிற்றுக்கு சேராம வாந்தி எடுத்துட்டேன்.. பாட்டி என்னை ரொம்பவே திட்டுனாங்க.. தலையில அடிச்சுட்டாங்க ரிஷி.." அழுது கொண்டே சொன்னாள் சந்திரமதி..

"வந்தவுடனே அப்பா கிட்ட வேற இதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க.. அப்பா ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டினாரு.."

"அம்மா என்னை எப்படியெல்லாம் பாத்துக்குவாங்க தெரியுமா..! எனக்கு ஜுரம் வந்துட்டா ராத்திரியெல்லாம் தூங்காமல் தொட்டு தொட்டு பார்த்து மருந்து தருவாங்க.. வாந்தி எடுத்தா சுடுதண்ணி வச்சு நெஞ்செல்லாம் துடைச்சு விடுவாங்க.. தூக்கத்துல படுக்கையில பாத்ரூம் போயிட்டா கூட அன்பாதான் சொல்லுவாங்க.. எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தாலும் கூட ஒருநாளும் என்னை சாப்பிடாம இருக்க விட்டதே இல்ல.. நான் பேசாம இருந்தா கூட அவங்கதான் தலை எல்லாம் மாறிவிடுவாங்க.. எனக்கு அம்மாகிட்ட போகணும்.. அம்மா வேணும்.."

சந்திரமதிக்குள் ஒளிந்திருந்த குழந்தை வெளியே வந்து அழ துவங்கியது..

"போகலாம்.. பத்து நிமிஷம்.. உன்ன கொண்டு போய் உன் அம்மாகிட்ட சேர்த்துடுவேன்.. ஆனா நீ எதையும் முழுசா சொல்லி முடிக்கல.." என்றதும் கண்களை துடைத்துக் கொண்டு பேச துவங்கினாள் சந்திரமதி..

"அப்பா தினமும் குடிச்சுட்டு வர்றாரு ரிஷி.. அவர் உள்ள வரும்போது எனக்கு அந்த வாசனையே பிடிக்கல..! வாந்தி வருது.. அம்மா ஏன் அப்பாவை வேண்டாம்ன்னு சொன்னாங்க நீ இப்ப புரியுது.. என்னால நாலு நாளைக்கு மேல அங்க இருக்க முடியல.. அம்மா எப்படி இந்த வீட்டுக்கு வர சம்மதிப்பாங்க.. அவங்க வர்றேன்னு சொன்னாலும் நான் அவங்களை இந்த வீட்டுக்கு வரவிடவே மாட்டேன்.. ஏன் தெரியுமா..?"

"ஏன்..?" புருவங்களை ஏற்று இறக்கினான் மகரிஷி..

"அவங்க எல்லாரும் அம்மாவை பற்றி தப்பு தப்பா என்கிட்ட சொல்றாங்க.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. அம்மா எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு தெரியாதா..? ஏன் இப்படியெல்லாம் சொல்லணும்.." சந்திரமதி மீண்டும் அழுகை..

"யார் என்ன பேசினாலும் உன் அம்மா நல்லவங்கன்னு உனக்கு தெரியுது இல்ல..?"

"ம்ம்..! அவங்க பொய் சொல்றாங்க.. அம்மா ரொம்ப நல்லவங்க.. இவங்கதான் கெட்டவங்க.. இவங்க யாருமே எனக்கு வேண்டாம் அப்பா வேண்டாம்.. பாட்டி வேண்டாம்.. அம்மா தான் வேணும்.." துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை கைகுட்டையால் அழுத்தமாய் துடைத்து விட்டான் மகரிஷி..

"உண்மைதான்..! உன் அம்மாவ உன் கிட்ட தப்பானவளா காட்டி.. அவங்கள வீழ்த்தி தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கலாம்னு பார்த்திருக்காங்க..! நல்லவேளை.. நீ உன் அம்மாவை புரிஞ்சுகிட்டியே அதுவே சந்தோஷம்.. ஆனா அம்மாவோட அருமை உணர்ந்த பொண்ணு.. ஃபோன் பண்ணும் போது ஒருநாள் கூட நான் அவங்க கிட்ட பேசணும்னு ஒரு வார்த்தை கூட கேட்கலையே..?"

"நான் அம்மாவுக்கு போன் பண்ணி பேசியிருந்தா அவங்க உடனே இங்க வந்துருப்பாங்க.. அப்பா வீட்ல எல்லாருமா சேர்ந்து அவர்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோனு எனக்கு பயமா இருந்துச்சு.. அதனால தான் அம்மா கிட்ட பேசல.." என்றவளின் தலையை செல்லமாய் கலைத்து விட்டான் மகரிஷி..

"அப்போ சந்திராம்மா இனி அவங்களோட அம்மாவை திட்ட மாட்டாங்க.. அப்படித்தானே..?"

"அம்மா கிட்ட போகணும் ரிஷி.."

"ஓகே டன் புறப்படலாமா..!" என்று தொடையை தட்டிக் கொண்டு இதோ அருந்ததியிடம் சந்திரமதியை கொண்டு வந்து ஒப்படைத்திருந்தான்..

மகளை வாரியணைத்து நெற்றி கன்னம் என்று முகம் எங்கும் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டு அழுதாள் அருந்ததி..

இருவரும் கட்டியணைத்தபடி முட்டி போட்டு அங்கேயே அமர்ந்து விட.. சுற்றி சுற்றி வந்த மோத்தி தாய் மகளோடு சேர்ந்து கொண்டான்..

சற்று தள்ளி தொலைவில் நின்றிருந்த ஒருவனது மனமோ மூவரில் ஒருவராக சேர்ந்து கொண்டு நால்வரும் ஒரே குடும்பமாகும் எண்ணத்தை புதிதாக முளை விட்டுக் கீறிய விதையாக ஈரப் பதத்தோடு துளிர்க்க வைத்திருந்தது..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Nov 20, 2024
Messages
51
மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்..

மகரிஷி ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு அழைத்து பேசும்போது அவள் குரலிலும் பேச்சிலும் தெரியும் மாற்றங்களில் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஊடகமாக கண்டு கொண்டாலும் மிக கவனமாக சந்திரமதியை அருந்ததியிடம் பேசவிடாமல் தவித்திருந்தான்..

அம்மா இருக்காங்களா..? அம்மா சாப்பிட்டாங்களா..! அம்மா பக்கத்துல இல்லையா என்று அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டுமென்ற தவிப்பு தெரிந்த போதிலும் ஒன்று அறியாதவன் போல் வெறும் ம்ம்.. இல்ல என்ற பதில்களின் மூலம் அருந்ததி பற்றிய உரையாடலை கடந்து பேச்சை மாற்றியிருந்தான்..

தகப்பன் வீட்டுக்கு போகும் குஷியில் சந்திரமதி பள்ளிக்கு மட்டம் போட்டிருந்தாலும் சின்னவளின் நிலை பற்றி அறிந்து கொள்ள மகரிஷி நாளைக்கொருமுறை பிரபாகரனின் வீட்டை கண்காணிக்கும் சங்கதி அருந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை.. ஃபோனில் அழைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சந்திரமதி வெளியே வந்து நின்று கண்களை மூடி திறந்து ஒரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.. அப்படி சிரித்தால் அவள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒருவேளை சிரிக்காமல் அழுகையை சமிங்ஞையாக வெளிப்படுத்தினால் மகரிஷி அதிரடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும்..

மதி தந்தையின் வீட்டிலிருந்து மகரிஷியோடு புறப்பட்டு வருவதற்கு முந்தைய நாள் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போனதில் பதட்டப்பட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற மகரிஷி வழக்கம் போல் சற்று தொலைவிலிருந்த டீக்கடையில் நின்று அந்த வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தான்..!

முன் அந்தி மாலையில் சிரிப்பை உதிர்த்த சிறுமலர் இப்போது ஏன் அழைப்பை ஏற்கவில்லை..! அவளும் ஏன் அழைக்கவில்லை..
நேரடியாக பிரபாகரனின் வீட்டுக்கே சென்று பிள்ளையை சந்திக்கலாமா..? என்றுமில்லாத பதட்டத்துடன் இதயம் அதிக அழுத்தத்தோடு துடித்துக் கொண்டிருக்க..‌ தெய்வாதீனமாக வெளியில் வந்து காத்தாட நின்ற மதியை பார்க்க நேர்ந்தது..

"ஐயோ சந்திரா மா.. ஒக்க நிமிஷலோன் பிரானம் போயிந்தி..!" உள்ளுக்குள் முணுமுணுத்தவாறு இழுத்து பெருமூச்சு விட்டவன் கையை அசைத்து சந்திராவை அழைத்தான்..

பிரபாகரன் வீட்டுக்கு கொண்டு போய் விடும் முன்னே கடைக்கு அழைத்து சென்று சுடிதார் ஸ்கர்ட் டாப்.. என அவள் விருப்பத்திற்கு ஏற்றபடி நான்கு உடைகளை வாங்கி தந்திருந்தான்..!

இத்தனை நாட்களாக அவன் வாங்கித் தந்த உடைகளை தான் மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி..

பெற்ற தகப்பனோ.. தகப்பன் வழி பாட்டியோ தாத்தாவோ சந்திரமதிக்கு புது ஆடைகள் வாங்கித் தந்ததாக தெரியவில்லை..!

எங்கு நின்றாலும் பளிச்சென தெளிவாக தெரியும் அவன் நெடிய உருவம் கண்டு கண்களை சிமிட்டி இதழ் வரிய கள்ளமில்லாமல் புன்னகைத்தாள் சந்திரா..

"சந்திரமா.. நீ ஓகே தானே..?" சைகையின் மூலம் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தான்..

அவளும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சைகையின் மூலம் சொல்லியிருக்க..

"அப்புறம் ஏன் போன் எடுக்கல..?" என்றான் கையை மடக்கி காதின் பக்கத்தில் வைத்து சைகையின் மூலம் உணர்த்தி..!

"சார்ஜ தீந்து போச்சு..! ஸ்விட்ச் ஆஃப் அதனாலதான் எடுக்கல..‌" சற்று தொலைவில் நின்று அவள் இப்படி சொன்னது அவனுக்கு புரிந்ததோ இல்லையோ..

இழுத்து பெருமூச்சு விட்டவன் "நீ நல்லா இருக்கியா..?" என்றான் மறுபடி..

"ம்ம்..!" என்ற தலையசைத்தவளின் கண்களில் சந்தோஷம் தெரியவில்லை..

"நான் வேணா வரட்டுமா..? இல்ல உன் அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா..?"

வேண்டாம் என்றாள்..

"நான் போகட்டுமா..!"

போ என்றாலும் இதழ் பிதுக்கி அழுவதை போல் தோன்றியது அவனுக்கு..

அன்று வெகு நேரம் அந்த இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான் அவன்..

சந்திரமதி வீட்டுக்குள் சென்று எந்த பிரச்சினையும் இல்லை என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் அந்த போனில் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகுதான் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்..

முடிந்தவரை சந்திரமதியை தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தான் மகரிஷி..

மற்ற நேரங்களில் பாதுகாப்பாக கவனமாக இருப்பதெப்படி.. பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும்.. தவறானவர்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும்.. தற்காப்பு கலையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகப் பொறுமையாக அவளுக்கு சொல்லித் தந்திருந்தான்..

தற்காப்பு கலையை அவன் ஒன்றும் பெரிதாக மெனக்கெட்டு சொல்லித் தரவில்லை.. அரசு பள்ளிகளில் இப்போது ஆறாம் வகுப்பிலிருந்து பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மகரிஷிக்கும் மதிக்கும் வசதியாகி போனது..!

குட் டச் பேட் டச் இதெல்லாம் கிடையாது.. ஒன்லி நோ டச்..! யாராவது உன் மேல கைய வைக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே அவங்க கண்களை கூர்மையாக கவனி.. அந்த நாய்களோட இன்டென்ஷன் என்னதுன்னு உனக்கு தெரிஞ்சு போயிடும்..! அடுத்த நொடி என்ன செய்யணும்னு துரிதமா யோசிச்சு செயல்படனும் கொஞ்சம் கூட பயப்படக்கூடாது..!" என இரண்டு மணி நேரம் அவளை உட்கார வைத்து பொறுமையாக விளக்கி தான் அனுப்பி இருந்தான்..

இப்படி மிகா ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்ட போதிலும்.. அடுத்த நாளில்.. அம்மா வேணும் அம்மாவை பாக்கணும்..! என சந்திரமதி தேம்பித் தேம்பி ஒரே அழுகை..! அதிலும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே அழைத்திருந்ததில் ஃபோனை காதில் வைத்து பேசியபடியே வெளியே வந்தவன் அழுபடியே உறங்கி போயிருந்த சந்திரமதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிட்டிகை போடும் தருணத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான்..

அம்மா வேணும்.. அம்மா அம்மா.. இந்த வார்த்தை.. இந்த பாசம் இதைத்தான் அவனும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.. ஆனாலும் இந்த சின்னஞ்சிறியவளின் அழுகை மகரிஷியின் நெஞ்சை வதைக்கிறது..! ஏதோ ஒரு இனம் புரியாத பாசம்.. சந்திரமதியை ஒரு தாயின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான் ஆனால் அவள் அழுகையில் மகரிஷியின் நெஞ்சம் தகப்பன் ஸ்தானத்திலிருந்து பதறியது..

சந்திரமதிய கூட்டிட்டு போறேன் என்று பிரபாகரனின் வீட்டில் போய் நின்ற போது.. கையை முறுக்கிக் கொண்டு முன்னே வந்து நின்ற பிரபாகரன் ரிஷியின் உடற்கட்டில் பின்வாங்கினான்..

"என் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு நீங்க யாரு..! இனி அவ என் கூட தான் இருப்பா.. நீ என்ன பண்றே..! போய் இவளோட அம்மா வர சொல்லு.." என்றான் எகத்தாளமாக..

"அதை நீயே போய் சொல்லு.. இப்ப நான் சந்திரமதிய கூட்டிட்டு போய் அவங்க அம்மாகிட்ட விடனும்.." ரிஷி அதைவிட மிடுக்கான உடல்மொழியில் நின்றான்..

"இவள பெத்தவன் நான்.. என்னை மீறி கூட்டிட்டு போயிடுவியா நீ..!"

"பெத்த பிள்ளையாவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி வீட்டுல அடைச்சு வைக்க முடியாது..! பெண் குழந்தைகள் அம்மா கிட்டதான் வளரணும் கோர்ட்டுக்கு போனாலும் உன் வாதம் எடுபடாது.."

"ஹாஹா..! இப்பதானே புரியுது.. ஜிம் பாடியோட அழகா பதவி சா ஒருத்தன் பக்கத்திலேயே இருக்கும்போது என்கிட்ட வாழ வருவாளா அவ..?" மகரிஷியை ஏற இறங்க பார்த்தபடி பிரபாகரன் நக்கலாக பல்லிளிக்க..

"அதானே பிரபா..! வருஷத்துக்கு ஒரு ஆம்பளையை மாத்தறவளுக்கு உன் கூட எப்படி வாழனும்னு தோணும்..‌ பொண்ணு பொண்டாட்டின்னு நீ மட்டும் ஆசை வச்சா போதாது..! குடும்பம் புருஷன்னு அவளும் மனசு வைக்கணும்..!" இது பிரபாகரனின் அம்மா..

சின்ன குழந்தையின் முன்பு இது போன்று அருவருப்பாக பேசும் பிரபாகரன் வீட்டுஆட்களை கோபமாகவும் சந்திரமதியை சங்கடமாகவும் பார்த்த மகரிஷி அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டபடி சந்திரமதியை கனிவோடு கைநீட்டி அழைத்தான்..

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் கைப்பற்றிக் கொண்டாள் சந்திரமதி..

"ஏய்.. மதி.. அறிவில்ல.. கண்டவன் கைய பிடிச்சுகிட்டு அவன் பக்கத்துல போய் நிக்கிற.. அப்பா சொல்றேன் உள்ள போ.." என்றவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தபடி அமைதியாக நின்றாள் சந்திரமதி..

"அதானே பார்த்தேன்.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு சொல்லுவாங்களே அது சரியா தான் இருக்குது.. உன் அம்மாவ போல உனக்கு கொழுப்பு கூத்தாடுது..! அதான் எவனோ ஒருத்தன் வந்து கூப்பிட்ட உடனே தகப்பன மதிக்காம அவன் கூட போய் நிக்கற.. பாத்துக்கிட்டே இரு என்னைக்காவது ஒரு நாள் இவனும் உன் ஆத்தாளும் சேர்ந்து உன்னை.." முடிப்பதற்குள் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது..!

நடந்ததை உணர்ந்து கொண்டு மூக்கிலிருந்து கொட்டிய ரத்தத்தை கையால் பிடித்தபடி அதிர்ந்த விழிகளோடு மகரிஷியை பார்த்தான் பிரபாகரன்..

"ஐயோ என் பிள்ளையை அடிச்சுட்டானே பாவி பைய.. நீயெல்லாம் நல்லா இருப்பியா நாசமா தான்டா போவ..! உன்னை மயக்கி இங்க அனுப்பி வச்சிருக்காளே அந்த எடுபட்ட சிறுக்கி.. அந்த நாய் புழு புழுத்துதான்டா சாவா.. என் மவன அசிங்கப்படுத்தி வாழ விடாம செய்யற உங்களுக்கெல்லாம் நல்ல கதையை வராதுடா..!" பிரபாகரனின் தாய் சங்கரி தலைவிரி கோலமாக அழுது மண்ணை வாரி தூத்தாத குறையாக சாபம் விட்டுக் கொண்டிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் சந்திரமதியோடு வெளியேறினான் ரிஷி..

"ஐயோ நம்ம வீட்டு பிள்ளைய கடத்திட்டு போறானே இந்த கேடு கெட்டவன்.. டேய் பொறுக்கி நாயே.. கேட்க ஆள் இல்லையா..? யாராவது வாங்களேன்..!" சத்தம் போட்டு ஊரைக் கூட்ட யாரும் வந்து எட்டிப் பார்த்ததாய் தெரியவில்லை.. ஓடி வந்து வழியை மறித்துக் கொண்டு நின்ற மாமனார் மருதமுத்துவை தோளால் இடித்து தள்ளிவிட்டு சாதாரணமாக சென்றான் ரிஷி..

மாரடைப்பு கண்டவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் மருதமுத்து..

"வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் பண்ணி என் பொண்ண தூக்கிட்டு போறியா..! உன்னையும் அந்த தே...ளையும் போலீஸ்ல கேஸ் போட்டு உள்ள தள்ளி கம்பி என்ன வைக்கல நான் பிரபாகரன் இல்லடா.." மூக்கில் வணிந்த ரத்தத்தோடு கத்தினான் பிரபாகரன்..

திரும்பி உள்ளே வந்தவனை கண்டு பிரபாகர் அறைக்குள் ஒளிந்து கதவை சாத்திக் கொள்ள..

"முதல்ல தைரியமிருந்தா வெளிய வந்து பேசுடா நாயே..! அப்புறம் கேஸ் போடலாம்.." நக்கலும் ஆத்திரமுமாக சொல்லிவிட்டு தன்னை அழைத்துக் கொண்டு வெளியேறியவனை ஆனந்த வியப்போடு நிமிர்ந்து பார்த்தாள் சிறியவள்..

விவரம் தெரியாத வயதிலிருந்து அப்பா என்ற ஆஸ்தான பதவியிலமர்ந்து சமீப காலங்களில்.. அப்பா தனது முதல் ஹீரோ என்ற பதவிக்கு முன்னேறியிருந்த பிரபாகரனை அந்த இடத்திலிருந்து வெகு சுலபமாக பிடுங்கி எறிந்துவிட்டு மகரிஷியை தானாகவே அவ்விடத்தில் பொருத்திக்கொண்டது இளையவளின் மனது..

மகரிஷி சந்திரமதி இருவரும் ஒரு சிறுவர் பூங்காவில் அமர்ந்திருந்தனர்..!

ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந்த ஒரு சிறிய பால் கடையிலிருந்து இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் கப்புகளோடு வெளியே வந்தான் மகரிஷி..

பால் கடை அதிகாலையிலேயே திறக்கப்படுவது வழக்கம்.. அங்கு ஐஸ் கிரீம் மில்க் ஷேக் அனைத்தும் காலாவதியாகும் தேதிகளோடு ஸ்டாக் இருக்கும் என்பதால் சந்திரமதிக்கு பிடித்ததை இந்த விடியற்காலையில் வாங்கித் தர முடிந்தது அவனால்..

"சந்திர மாவுக்கு வெனிலா தானே பிடிக்கும்.."

"ம்ம்..!" என்றவளின் கண்கள் பனிக்கூழை ஆர்வத்தோடு தழுவியது..

புன்னகையோடு அவளிடம் ஒரு கப்பை நீட்டிவிட்டு.. அவசர அவசரமாக உண்டு முடித்தவளிடம் இன்னொரு கப்பையும் தந்தான். மகரிஷி..!

"ம்ம்.. சாப்பிட்டு முடிச்சாச்சா.." என்று வாயை துடைக்க தன் கைகுட்டையை எடுத்து நீட்டவும்.. எந்தவித தயக்கமும் இல்லாமல் அவனிடமிருந்து கைக்குட்டையை வாங்கி வாயை துடைத்துக் கொண்டு..

"ம்ம்..! சாப்பிட்டுட்டேன் ரிஷி" என்றாள் சந்திரமதி..

"இன்னொன்னு வேணுமா..?"

"வேண்டாம் போதும்.."

"சரி அப்ப பேசலாமா..?"

என்ன பேசணும் என்பதாய் அவள் பார்வை தயக்கமும் பயமுமாக மிரண்டு விழித்தது..

மென்மையாய் சிரித்தான் அவன்..

"டோன்ட் ஒரி சந்திரா மா.. ஐம் ஆல்வேஸ் வித் யூ.. தேவையில்லாததை பேசி உன்னை கவலை படுத்த மாட்டேன்.. ஆனா எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்..‌ நீதான் ரொம்ப ஆர்வமா அந்த வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிச்சு நின்ன..? இப்ப போனதை விட வேகமா அந்த வீட்டிலருந்து திரும்பி வரணும்னு அழுது என்னை கூட்டிட்டு போகச் சொன்னதும் நீதான்.. அங்க என்னதான்டா நடந்துச்சு.. ஒவ்வொரு நாள் கால் பண்ணு போதும் அங்க எல்லாம் சரியா போகுதுன்னு சொன்னியே..! ஏன் அங்க இருக்கிறவங்க உன்னை ஏதாவது திட்டினாங்களா..! அடிச்சாங்களா..?"

சந்திரமதி தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்‌‌..

"சந்திரமதி ஏதாவது பேசு..! நீ வாய தொறந்தா தான் உண்மை வெளியே வரும்.. நாளைக்கு உன்னோட அப்பா போலீசோட வந்து நான் உன்னை கட்டாயப்படுத்தி அங்கிருந்து கூட்டிட்டு வந்ததா சொன்னா என் பக்கம் பேச நியாயமான காரணங்கள் வேணும் இல்லையா..! சொல்லுமா.. அங்க இருந்தவங்க உன்னை ஏதாவது கொடுமை படுத்தினாங்களா..?"

"அவங்க யாரு என்னை கொடுமைப்படுத்தல.."

மகரிஷி கண்கள் சுருக்கினான்..

"அப்புறம்..?"

"அந்த வீட்ல என்னோட முக்கியத்துவம் என்னன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு.. அம்மா என்னை பாத்துக்கிட்டதுக்கும் அப்பா என்னை கவனிச்சுக்கிட்டதுக்கும் நிறையவே வித்தியாசம்..! "

"முதல் ரெண்டு நாள் அங்க இருந்தவங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க.. நானும் அவங்க எல்லாரும் என் மேல ரொம்ப பாசமா இருக்கிறதா நினைச்சேன்.. இவ்ளோ பாசமானவங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டதா அம்மா மேல எனக்கு ரொம்ப கோவமா வந்துச்சு.. ஆனா அடுத்த நாள்லருந்து அந்த வீட்ல யாருமே என்னை கண்டுக்கல.. சாப்பிடறியான்னு கூட யாரும் கேட்கல.. யாருமே எனக்கு தலை வாரி விடல.. பக்கத்துல உட்கார்ந்து தலையை தடவி பாசமா பேசின பாட்டி கூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போனாங்க.. அப்பா என்கிட்ட முகம் கொடுத்து பேசவே இல்ல.. அவங்க எல்லாரும் கூடி கூடி பேசினத வச்சு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.."

"அம்மாவ என் மூலமா இங்க வரவழைச்சு அவங்கள வேலை பார்க்க வச்சு சம்பளத்தை பிடுங்கி கிட்டு எல்லாரும் சொகுசா வாழலாம்னு பேசிக்கிட்டாங்க.."

"அப்படியா..?"

"ஆமா ரிஷி..! என்னென்னமோ சொல்றாங்க.. அம்மாவும் நானும் அப்பா கூட இருந்தா தான் அவருக்கு மரியாதை கிடைக்குமாம்.. உன்ன மதிச்சி எவனாவது வேலை தரனும்னா குடும்பம்னு ஒன்னு வேணும்.. இந்த சின்னக் குட்டியால அவ இங்க வரட்டும்.. இல்லைன்னா இந்த பொட்ட கழுதையை வீட்ல வச்சு பாத்துக்க எனக்கென்ன தலையெழுத்தான்னு பாட்டி என்னை திட்டுனாங்க..!" சந்திரமதியின் கண்களில் நீர் நிரம்பியது..

மகரிஷி ஆறுதலாய் அவள் தோளை தட்டிக் கொடுத்தான்..

"அப்பா ஸ்கூல்ல வந்து பாசமா பேசின மாதிரி வீட்ல நடந்துக்கல.. வேற மாதிரி என்னை வெறுப்பா பார்த்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை.. சாப்பிட்டியானு கூட கேக்கல.. அடிக்கடி ஃபோன் தரேன் உன் அம்மாவுக்கு போன் பண்ணி பேசி இங்க வர சொல்லுன்னு சொல்லிட்டே இருந்தாரு.. நான் பேச மாட்டேன்னு சொன்னபோது எரிச்சலா என்னை திட்டுனாரு..! அப்புறம் தான் இதெல்லாம்.."

"பாட்டிக்கு என்னை பிடிக்கவே இல்லை.. தாத்தா பார்வையே சரியில்ல..! பசிச்சா நானே போட்டு சாப்பிடணும்.. அது கூட சில நேரத்துல சாப்பாடு இருக்காது.. ஒரு நாள் நேரம் கழிச்சு சாப்பிட்டு வயிற்றுக்கு சேராம வாந்தி எடுத்துட்டேன்.. பாட்டி என்னை ரொம்பவே திட்டுனாங்க.. தலையில அடிச்சுட்டாங்க ரிஷி.." அழுது கொண்டே சொன்னாள் சந்திரமதி..

"வந்தவுடனே அப்பா கிட்ட வேற இதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க.. அப்பா ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டினாரு.."

"அம்மா என்னை எப்படியெல்லாம் பாத்துக்குவாங்க தெரியுமா..! எனக்கு ஜுரம் வந்துட்டா ராத்திரியெல்லாம் தூங்காமல் தொட்டு தொட்டு பார்த்து மருந்து தருவாங்க.. வாந்தி எடுத்தா சுடுதண்ணி வச்சு நெஞ்செல்லாம் துடைச்சு விடுவாங்க.. தூக்கத்துல படுக்கையில பாத்ரூம் போயிட்டா கூட அன்பாதான் சொல்லுவாங்க.. எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தாலும் கூட ஒருநாளும் என்னை சாப்பிடாம இருக்க விட்டதே இல்ல.. நான் பேசாம இருந்தா கூட அவங்கதான் தலை எல்லாம் மாறிவிடுவாங்க.. எனக்கு அம்மாகிட்ட போகணும்.. அம்மா வேணும்.."

சந்திரமதிக்குள் ஒளிந்திருந்த குழந்தை வெளியே வந்து அழ துவங்கியது..

"போகலாம்.. பத்து நிமிஷம்.. உன்ன கொண்டு போய் உன் அம்மாகிட்ட சேர்த்துடுவேன்.. ஆனா நீ எதையும் முழுசா சொல்லி முடிக்கல.." என்றதும் கண்களை துடைத்துக் கொண்டு பேச துவங்கினாள் சந்திரமதி..

"அப்பா தினமும் குடிச்சுட்டு வர்றாரு ரிஷி.. அவர் உள்ள வரும்போது எனக்கு அந்த வாசனையே பிடிக்கல..! வாந்தி வருது.. அம்மா ஏன் அப்பாவை வேண்டாம்ன்னு சொன்னாங்க நீ இப்ப புரியுது.. என்னால நாலு நாளைக்கு மேல அங்க இருக்க முடியல.. அம்மா எப்படி இந்த வீட்டுக்கு வர சம்மதிப்பாங்க.. அவங்க வர்றேன்னு சொன்னாலும் நான் அவங்களை இந்த வீட்டுக்கு வரவிடவே மாட்டேன்.. ஏன் தெரியுமா..?"

"ஏன்..?" புருவங்களை ஏற்று இறக்கினான் மகரிஷி..

"அவங்க எல்லாரும் அம்மாவை பற்றி தப்பு தப்பா என்கிட்ட சொல்றாங்க.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. அம்மா எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு தெரியாதா..? ஏன் இப்படியெல்லாம் சொல்லணும்.." சந்திரமதி மீண்டும் அழுகை..

"யார் என்ன பேசினாலும் உன் அம்மா நல்லவங்கன்னு உனக்கு தெரியுது இல்ல..?"

"ம்ம்..! அவங்க பொய் சொல்றாங்க.. அம்மா ரொம்ப நல்லவங்க.. இவங்கதான் கெட்டவங்க.. இவங்க யாருமே எனக்கு வேண்டாம் அப்பா வேண்டாம்.. பாட்டி வேண்டாம்.. அம்மா தான் வேணும்.." துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை கைகுட்டையால் அழுத்தமாய் துடைத்து விட்டான் மகரிஷி..

"உண்மைதான்..! உன் அம்மாவ உன் கிட்ட தப்பானவளா காட்டி.. அவங்கள வீழ்த்தி தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கலாம்னு பார்த்திருக்காங்க..! நல்லவேளை.. நீ உன் அம்மாவை புரிஞ்சுகிட்டியே அதுவே சந்தோஷம்.. ஆனா அம்மாவோட அருமை உணர்ந்த பொண்ணு.. ஃபோன் பண்ணும் போது ஒருநாள் கூட நான் அவங்க கிட்ட பேசணும்னு ஒரு வார்த்தை கூட கேட்கலையே..?"

"நான் அம்மாவுக்கு போன் பண்ணி பேசியிருந்தா அவங்க உடனே இங்க வந்துருப்பாங்க.. அப்பா வீட்ல எல்லாருமா சேர்ந்து அவர்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோனு எனக்கு பயமா இருந்துச்சு.. அதனால தான் அம்மா கிட்ட பேசல.." என்றவளின் தலையை செல்லமாய் கலைத்து விட்டான் மகரிஷி..

"அப்போ சந்திராம்மா இனி அவங்களோட அம்மாவை திட்ட மாட்டாங்க.. அப்படித்தானே..?"

"அம்மா கிட்ட போகணும் ரிஷி.."

"ஓகே டன் புறப்படலாமா..!" என்று தொடையை தட்டிக் கொண்டு இதோ அருந்ததியிடம் சந்திரமதியை கொண்டு வந்து ஒப்படைத்திருந்தான்..

மகளை வாரியணைத்து நெற்றி கன்னம் என்று முகம் எங்கும் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டு அழுதாள் அருந்ததி..

இருவரும் கட்டியணைத்தபடி முட்டி போட்டு அங்கேயே அமர்ந்து விட.. சுற்றி சுற்றி வந்த மோத்தி தாய் மகளோடு சேர்ந்து கொண்டான்..

சற்று தள்ளி தொலைவில் நின்றிருந்த ஒருவனது மனமோ மூவரில் ஒருவராக சேர்ந்து கொண்டு நால்வரும் ஒரே குடும்பமாகும் எண்ணத்தை புதிதாக முளை விட்டுக் கீறிய விதையாக ஈரப் பதத்தோடு துளிர்க்க வைத்திருந்தது..

தொடரும்..
அழாத மதி மா இப்போவாச்சும் உன் அப்பா அப்புறம் அவனோட குடும்ப ஆளுங்க எப்படின்னு புரிந்து கிட்டு அம்மா கிட்ட வந்தாச்சு இனிமே நல்ல புள்ளையா இரு எல்லாத்தையும் அரு மா பாத்துகுவாங்க 🙋🙋🙋
அடடா என்ன ரிஷி உன் ஆசை கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேறும் நீ எதிர்பார்க்கும் அன்பு உனக்கு நிச்சயம் கிடைக்கும் 🤩🤩🤩
 
New member
Joined
Mar 14, 2023
Messages
8
மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்..

ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு அழைத்து பேசும்போது அவள் குரலிலும் பேச்சிலும் தெரியும் மாற்றங்களில் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஊடகமாக கண்டு கொண்டாலும் மிக கவனமாக சந்திரமதியை அருந்ததியிடம் பேசவிடாமல் தவித்திருந்தான்..

அம்மா இருக்காங்களா..? அம்மா சாப்பிட்டாங்களா..! அம்மா பக்கத்துல இல்லையா என்று அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டுமென்ற தவிப்பு தெரிந்த போதிலும் ஒன்று அறியாதவன் போல் வெறும் ம்ம்.. இல்ல என்ற பதில்களின் மூலம் அருந்ததி பற்றிய உரையாடலை கடந்து பேச்சை மாற்றியிருந்தான்..

தகப்பன் வீட்டுக்கு போகும் குஷியில் சந்திரமதி பள்ளிக்கு மட்டம் போட்டிருந்தாலும் சின்னவளின் நிலை பற்றி அறிந்து கொள்ள மகரிஷி நாளைக்கொருமுறை பிரபாகரனின் வீட்டை கண்காணிக்கும் சங்கதி அருந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை.. ஃபோனில் அழைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சந்திரமதி வெளியே வந்து நின்று கண்களை மூடி திறந்து ஒரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.. அப்படி சிரித்தால் அவள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒருவேளை சிரிக்காமல் அழுகையை சமிங்ஞையாக வெளிப்படுத்தினால் மகரிஷி அதிரடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும்..

மதி தந்தையின் வீட்டிலிருந்து மகரிஷியோடு புறப்பட்டு வருவதற்கு முந்தைய நாள் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போனதில் பதட்டப்பட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற மகரிஷி வழக்கம் போல் சற்று தொலைவிலிருந்த டீக்கடையில் நின்று அந்த வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தான்..!

முன் அந்தி மாலையில் சிரிப்பை உதிர்த்த சிறுமலர் இப்போது ஏன் அழைப்பை ஏற்கவில்லை..! அவளும் ஏன் அழைக்கவில்லை..
நேரடியாக பிரபாகரனின் வீட்டுக்கே சென்று பிள்ளையை சந்திக்கலாமா..? என்றுமில்லாத பதட்டத்துடன் இதயம் அதிக அழுத்தத்தோடு துடித்துக் கொண்டிருக்க..‌ தெய்வாதீனமாக வெளியில் வந்து காத்தாட நின்ற மதியை பார்க்க நேர்ந்தது..

"ஐயோ சந்திரா மா.. ஒக்க நிமிஷலோன் பிரானம் போயிந்தி..!" உள்ளுக்குள் முணுமுணுத்தவாறு இழுத்து பெருமூச்சு விட்டவன் கையை அசைத்து சந்திராவை அழைத்தான்..

பிரபாகரன் வீட்டுக்கு கொண்டு போய் விடும் முன்னே கடைக்கு அழைத்து சென்று சுடிதார் ஸ்கர்ட் டாப்.. என அவள் விருப்பத்திற்கு ஏற்றபடி நான்கு உடைகளை வாங்கி தந்திருந்தான்..!

இத்தனை நாட்களாக அவன் வாங்கித் தந்த உடைகளை தான் மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி..

பெற்ற தகப்பனோ.. தகப்பன் வழி பாட்டியோ தாத்தாவோ சந்திரமதிக்கு புது ஆடைகள் வாங்கித் தந்ததாக தெரியவில்லை..!

எங்கு நின்றாலும் பளிச்சென தெளிவாக தெரியும் அவன் நெடிய உருவம் கண்டு கண்களை சிமிட்டி இதழ் வரிய கள்ளமில்லாமல் புன்னகைத்தாள் சந்திரா..

"சந்திரமா.. நீ ஓகே தானே..?" சைகையின் மூலம் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தான்..

அவளும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சைகையின் மூலம் சொல்லியிருக்க..

"அப்புறம் ஏன் போன் எடுக்கல..?" என்றான் கையை மடக்கி காதின் பக்கத்தில் வைத்து சைகையின் மூலம் உணர்த்தி..!

"சார்ஜ தீந்து போச்சு..! ஸ்விட்ச் ஆஃப் அதனாலதான் எடுக்கல..‌" சற்று தொலைவில் நின்று அவள் இப்படி சொன்னது அவனுக்கு புரிந்ததோ இல்லையோ..

இழுத்து பெருமூச்சு விட்டவன் "நீ நல்லா இருக்கியா..?" என்றான் மறுபடி..

"ம்ம்..!" என்ற தலையசைத்தவளின் கண்களில் சந்தோஷம் தெரியவில்லை..

"நான் வேணா வரட்டுமா..? இல்ல உன் அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா..?"

வேண்டாம் என்றாள்..

"நான் போகட்டுமா..!"

போ என்றாலும் இதழ் பிதுக்கி அழுவதை போல் தோன்றியது அவனுக்கு..

அன்று வெகு நேரம் அந்த இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான் அவன்..

சந்திரமதி வீட்டுக்குள் சென்று எந்த பிரச்சினையும் இல்லை என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் அந்த போனில் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகுதான் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்..

முடிந்தவரை சந்திரமதியை தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தான் மகரிஷி..

மற்ற நேரங்களில் பாதுகாப்பாக கவனமாக இருப்பதெப்படி.. பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும்.. தவறானவர்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும்.. தற்காப்பு கலையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகப் பொறுமையாக அவளுக்கு சொல்லித் தந்திருந்தான்..

தற்காப்பு கலையை அவன் ஒன்றும் பெரிதாக மெனக்கெட்டு சொல்லித் தரவில்லை.. அரசு பள்ளிகளில் இப்போது ஆறாம் வகுப்பிலிருந்து பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மகரிஷிக்கும் மதிக்கும் வசதியாகி போனது..!

குட் டச் பேட் டச் இதெல்லாம் கிடையாது.. ஒன்லி நோ டச்..! யாராவது உன் மேல கைய வைக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே அவங்க கண்களை கூர்மையாக கவனி.. அந்த நாய்களோட இன்டென்ஷன் என்னதுன்னு உனக்கு தெரிஞ்சு போயிடும்..! அடுத்த நொடி என்ன செய்யணும்னு துரிதமா யோசிச்சு செயல்படனும் கொஞ்சம் கூட பயப்படக்கூடாது..!" என இரண்டு மணி நேரம் அவளை உட்கார வைத்து பொறுமையாக விளக்கி தான் அனுப்பி இருந்தான்..


இப்படி மிக ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்ட போதிலும்.. அடுத்த நாளில்.. அம்மா வேணும் அம்மாவை பாக்கணும்..! என சந்திரமதி தேம்பித் தேம்பி ஒரே அழுகை..! அதிலும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே அழைத்திருந்ததில் ஃபோனை காதில் வைத்து பேசியபடியே வெளியே வந்தவன் அழுபடியே உறங்கி போயிருந்த அருந்ததியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிட்டிகை போடும் தருணத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான்..

அம்மா வேணும்.. அம்மா அம்மா.. இந்த வார்த்தை.. இந்த பாசம் இதைத்தான் அவனும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.. ஆனாலும் இந்த சின்னஞ்சிறியவளின் அழுகை மகரிஷியின் நெஞ்சை வதைக்கிறது..! ஏதோ ஒரு இனம் புரியாத பாசம்.. சந்திரமதியை ஒரு தாயின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான் ஆனால் அவள் அழுகையில் மகரிஷியின் நெஞ்சம் தகப்பன் ஸ்தானத்திலிருந்து பதறியது..

சந்திரமதிய கூட்டிட்டு போறேன் என்று பிரபாகரனின் வீட்டில் போய் நின்ற போது.. கையை முறுக்கிக் கொண்டு முன்னே வந்து நின்ற பிரபாகரன் ரிஷியின் உடற்கட்டில் பின்வாங்கினான்..

"என் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு நீங்க யாரு..! இனி அவ என் கூட தான் இருப்பா.. நீ என்ன பண்றே..! போய் இவளோட அம்மாவ வர சொல்லு.." திடீரென ஒருமைக்கு தாவி எகத்தாளமாகச் சொன்னான்..

"அதை நீயே போய் சொல்லு.. இப்ப நான் சந்திரமதிய கூட்டிட்டு போய் அவங்க அம்மாகிட்ட விடனும்.." ரிஷி அதைவிட மிடுக்கான உடல்மொழியில் நின்றான்..

"இவள பெத்தவன் நான்.. என்னை மீறி கூட்டிட்டு போயிடுவியா நீ..!"

"பெத்த பிள்ளையாவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி வீட்டுல அடைச்சு வைக்க முடியாது..! பெண் குழந்தைகள் அம்மா கிட்டதான் வளரணும் கோர்ட்டுக்கு போனாலும் உன் வாதம் எடுபடாது.."

"ஹாஹா..! இப்பதானே புரியுது.. ஜிம் பாடியோட அழகா பதவி சா ஒருத்தன் பக்கத்திலேயே இருக்கும்போது என்கிட்ட வாழ வருவாளா அவ..?" மகரிஷியை ஏற இறங்க பார்த்தபடி பிரபாகரன் நக்கலாக பல்லிளிக்க..

"அதானே பிரபா..! வருஷத்துக்கு ஒரு ஆம்பளையை மாத்தறவளுக்கு உன் கூட எப்படி வாழனும்னு தோணும்..‌ பொண்ணு பொண்டாட்டின்னு நீ மட்டும் ஆசை வச்சா போதாது..! குடும்பம் புருஷன்னு அவளும் மனசு வைக்கணும்..!" இது பிரபாகரனின் அம்மா..

சின்ன குழந்தையின் முன்பு இது போன்று அருவருப்பாக பேசும் பிரபாகரன் வீட்டுஆட்களை கோபமாகவும் சந்திரமதியை சங்கடமாகவும் பார்த்த மகரிஷி அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டபடி சந்திரமதியை கனிவோடு கைநீட்டி அழைத்தான்..

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் கைப்பற்றிக் கொண்டாள் சந்திரமதி..

"ஏய்.. மதி.. அறிவில்ல.. கண்டவன் கைய பிடிச்சுகிட்டு அவன் பக்கத்துல போய் நிக்கிற.. அப்பா சொல்றேன் உள்ள போ.." என்றவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தபடி அமைதியாக நின்றாள் சந்திரமதி..

"அதானே பார்த்தேன்.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு சொல்லுவாங்களே அது சரியா தான் இருக்குது.. உன் அம்மாவ போல உனக்கு கொழுப்பு கூத்தாடுது..! அதான் எவனோ ஒருத்தன் வந்து கூப்பிட்ட உடனே தகப்பன மதிக்காம அவன் கூட போய் நிக்கற.. பாத்துக்கிட்டே இரு என்னைக்காவது ஒரு நாள் இவனும் உன் ஆத்தாளும் சேர்ந்து உன்னை.." முடிப்பதற்குள் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது..!

நடந்ததை உணர்ந்து கொண்டு மூக்கிலிருந்து கொட்டிய ரத்தத்தை கையால் பிடித்தபடி அதிர்ந்த விழிகளோடு மகரிஷியை பார்த்தான் பிரபாகரன்..

"ஐயோ என் பிள்ளையை அடிச்சுட்டானே பாவி பைய.. நீயெல்லாம் நல்லா இருப்பியா நாசமா தான்டா போவ..! உன்னை மயக்கி இங்க அனுப்பி வச்சிருக்காளே அந்த எடுபட்ட சிறுக்கி.. அந்த நாய் புழு புழுத்துதான்டா சாவா.. என் மவன அசிங்கப்படுத்தி வாழ விடாம செய்யற உங்களுக்கெல்லாம் நல்ல கதியே வராதுடா..!" பிரபாகரனின் தாய் சங்கரி தலைவிரி கோலமாக அழுது மண்ணை வாரி தூத்தாத குறையாக சாபம் விட்டுக் கொண்டிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் சந்திரமதியோடு வெளியேறினான் ரிஷி..

"ஐயோ நம்ம வீட்டு பிள்ளைய கடத்திட்டு போறானே இந்த கேடு கெட்டவன்.. டேய் பொறுக்கி நாயே.. கேட்க ஆள் இல்லையா..? யாராவது வாங்களேன்..!" சத்தம் போட்டு ஊரைக் கூட்ட யாரும் வந்து எட்டிப் பார்த்ததாய் தெரியவில்லை.. ஓடி வந்து வழியை மறித்துக் கொண்டு நின்ற மாமனார் மருதமுத்துவை தோளால் இடித்து தள்ளிவிட்டு சாதாரணமாக சென்றான் ரிஷி..

மாரடைப்பு கண்டவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் மருதமுத்து..

"வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் பண்ணி என் பொண்ண தூக்கிட்டு போறியா..! உன்னையும் அந்த தே...ளையும் போலீஸ்ல கேஸ் போட்டு உள்ள தள்ளி கம்பி என்ன வைக்கல நான் பிரபாகரன் இல்லடா.." மூக்கில் வடிந்த ரத்தத்தோடு கத்தினான் பிரபாகரன்..

மிரட்டி குதறும் பார்வையோடு திரும்பி உள்ளே வந்தவனை கண்டு பிரபாகர் அறைக்குள் ஒளிந்து கதவை சாத்திக் கொள்ள..

"முதல்ல தைரியமிருந்தா வெளிய வந்து பேசுடா நாயே..! அப்புறம் கேஸ் போடலாம்.." நக்கலும் ஆத்திரமுமாக சொல்லிவிட்டு தன்னை அழைத்துக் கொண்டு வெளியேறியவனை ஆனந்த வியப்போடு நிமிர்ந்து பார்த்தாள் சிறியவள்..

விவரம் தெரியாத வயதிலிருந்து அப்பா என்ற ஆஸ்தான பதவியிலமர்ந்து சமீப காலங்களில்.. அப்பா தனது முதல் ஹீரோ என்ற கீரிடம் வைக்கும் ஸ்தானத்திற்கு முன்னேறியிருந்த பிரபாகரனை அந்த இடத்திலிருந்து வெகு சுலபமாக பிடுங்கி எறிந்துவிட்டு மகரிஷியை தானாகவே அவ்விடத்தில் பொருத்திக்கொண்டது இளையவளின் மனது..

மை டாட் இஸ் எ ஹீரோ..

எஸ் ஹீரோ..

ஆனால் இங்கே அப்பா என்ற வார்த்தை வெளிபடையாக யோசிக்கப் படாமல் உணர்வுகளின் உருவாகிப் போனது அந்த உறவு..

மகரிஷி சந்திரமதி இருவரும் ஒரு சிறுவர் பூங்காவில் அமர்ந்திருந்தனர்..!

ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந்த ஒரு சிறிய பால் கடையிலிருந்து இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் கப்புகளோடு வெளியே வந்தான் மகரிஷி..

பால் கடை அதிகாலையிலேயே திறக்கப்படுவது வழக்கம்.. அங்கு ஐஸ் கிரீம் மில்க் ஷேக் அனைத்தும் காலாவதியாகும் தேதிகளோடு ஸ்டாக் இருக்கும் என்பதால் சந்திரமதிக்கு பிடித்ததை இந்த விடியற்காலையில் வாங்கித் தர முடிந்தது அவனால்..

"சந்திர மாவுக்கு வெனிலா தானே பிடிக்கும்.."

"ம்ம்..!" என்றவளின் கண்கள் பனிக்கூழை ஆர்வத்தோடு தழுவியது..

புன்னகையோடு அவளிடம் ஒரு கப்பை நீட்டிவிட்டு.. அவசர அவசரமாக உண்டு முடித்தவளிடம் இன்னொரு கப்பையும் தந்தான். மகரிஷி..!

"ம்ம்.. சாப்பிட்டு முடிச்சாச்சா.." என்று வாயை துடைக்க தன் கைகுட்டையை எடுத்து நீட்டவும்.. எந்தவித தயக்கமும் இல்லாமல் அவனிடமிருந்து கைக்குட்டையை வாங்கி வாயை துடைத்துக் கொண்டு..

"ம்ம்..! சாப்பிட்டுட்டேன் ரிஷி" என்றாள் சந்திரமதி..

"இன்னொன்னு வேணுமா..?"

"வேண்டாம் போதும்.."

"சரி அப்ப பேசலாமா..?"

என்ன பேசணும் என்பதாய் அவள் பார்வை தயக்கமும் பயமுமாக மிரண்டு விழித்தது..

மென்மையாய் சிரித்தான் அவன்..

"டோன்ட் ஒரி சந்திரா மா.. ஐம் ஆல்வேஸ் வித் யூ.. தேவையில்லாததை பேசி உன்னை கவலை படுத்த மாட்டேன்.. ஆனா எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்..‌ நீதான் ரொம்ப ஆர்வமா அந்த வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிச்சு நின்ன..? இப்ப போனதை விட வேகமா அந்த வீட்டிலருந்து திரும்பி வரணும்னு அழுது என்னை கூட்டிட்டு போகச் சொன்னதும் நீதான்.. அங்க என்னதான்டா நடந்துச்சு.. ஒவ்வொரு நாள் கால் பண்ணு போதும் அங்க எல்லாம் சரியா போகுதுன்னு சொன்னியே..! ஏன் அங்க இருக்கிறவங்க உன்னை ஏதாவது திட்டினாங்களா..! அடிச்சாங்களா..?"

சந்திரமதி தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்‌‌..

"சந்திரமதி ஏதாவது பேசு..! நீ வாய தொறந்தா தான் உண்மை வெளியே வரும்.. நாளைக்கு உன்னோட அப்பா போலீசோட வந்து நான் உன்னை கட்டாயப்படுத்தி அங்கிருந்து கூட்டிட்டு வந்ததா சொன்னா என் பக்கம் பேச நியாயமான காரணங்கள் வேணும் இல்லையா..! சொல்லுமா.. அங்க இருந்தவங்க உன்னை ஏதாவது கொடுமை படுத்தினாங்களா..?"

"அவங்க யாரு என்னை கொடுமைப்படுத்தல.."

மகரிஷி கண்கள் சுருக்கினான்..

"அப்புறம்..?"

"அந்த வீட்ல என்னோட முக்கியத்துவம் என்னன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு.. அம்மா என்னை பாத்துக்கிட்டதுக்கும் அப்பா என்னை கவனிச்சுக்கிட்டதுக்கும் நிறையவே வித்தியாசம்..! "

"முதல் ரெண்டு நாள் அங்க இருந்தவங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க.. நானும் அவங்க எல்லாரும் என் மேல ரொம்ப பாசமா இருக்கிறதா நினைச்சேன்.. இவ்ளோ பாசமானவங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டதா அம்மா மேல எனக்கு ரொம்ப கோவமா வந்துச்சு.. ஆனா அடுத்த நாள்லருந்து அந்த வீட்ல யாருமே என்னை கண்டுக்கல.. சாப்பிடறியான்னு கூட யாரும் கேட்கல.. யாருமே எனக்கு தலை வாரி விடல.. பக்கத்துல உட்கார்ந்து தலையை தடவி பாசமா பேசின பாட்டி கூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போனாங்க.. அப்பா என்கிட்ட முகம் கொடுத்து பேசவே இல்ல.. அவங்க எல்லாரும் கூடி கூடி பேசினத வச்சு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.."

"அம்மாவ என் மூலமா இங்க வரவழைச்சு அவங்கள வேலை பார்க்க வச்சு சம்பளத்தை பிடுங்கி கிட்டு எல்லாரும் சொகுசா வாழலாம்னு பேசிக்கிட்டாங்க.."

"அப்படியா..?"

"ஆமா ரிஷி..! என்னென்னமோ சொல்றாங்க.. அம்மாவும் நானும் அப்பா கூட இருந்தா தான் அவருக்கு மரியாதை கிடைக்குமாம்.. உன்ன மதிச்சி எவனாவது வேலை தரனும்னா குடும்பம்னு ஒன்னு வேணும்.. இந்த சின்னக் குட்டியால அவ இங்க வரட்டும்.. இல்லைன்னா இந்த பொட்ட கழுதையை வீட்ல வச்சு பாத்துக்க எனக்கென்ன தலையெழுத்தான்னு பாட்டி என்னை திட்டுனாங்க..!" சந்திரமதியின் கண்களில் நீர் நிரம்பியது..

மகரிஷி ஆறுதலாய் அவள் தோளை தட்டிக் கொடுத்தான்..

"அப்பா ஸ்கூல்ல வந்து பாசமா பேசின மாதிரி வீட்ல நடந்துக்கல.. வேற மாதிரி என்னை வெறுப்பா பார்த்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை.. சாப்பிட்டியானு கூட கேக்கல.. அடிக்கடி ஃபோன் தரேன் உன் அம்மாவுக்கு போன் பண்ணி பேசி இங்க வர சொல்லுன்னு சொல்லிட்டே இருந்தாரு.. நான் பேச மாட்டேன்னு சொன்னபோது எரிச்சலா என்னை திட்டுனாரு..! அப்புறம் தான் இதெல்லாம்.."

"பாட்டிக்கு என்னை பிடிக்கவே இல்லை.. தாத்தா பார்வையே சரியில்ல..! பசிச்சா நானே போட்டு சாப்பிடணும்.. அது கூட சில நேரத்துல சாப்பாடு இருக்காது.. ஒரு நாள் நேரம் கழிச்சு சாப்பிட்டு வயிற்றுக்கு சேராம வாந்தி எடுத்துட்டேன்.. பாட்டி என்னை ரொம்பவே திட்டுனாங்க.. தலையில அடிச்சுட்டாங்க ரிஷி.." அழுது கொண்டே சொன்னாள் சந்திரமதி..

"வந்தவுடனே அப்பா கிட்ட வேற இதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க.. அப்பா ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டினாரு.."

"அம்மா என்னை எப்படியெல்லாம் பாத்துக்குவாங்க தெரியுமா..! எனக்கு ஜுரம் வந்துட்டா ராத்திரியெல்லாம் தூங்காமல் தொட்டு தொட்டு பார்த்து மருந்து தருவாங்க.. வாந்தி எடுத்தா சுடுதண்ணி வச்சு நெஞ்செல்லாம் துடைச்சு விடுவாங்க.. தூக்கத்துல படுக்கையில பாத்ரூம் போயிட்டா கூட அன்பாதான் சொல்லுவாங்க.. எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தாலும் கூட ஒருநாளும் என்னை சாப்பிடாம இருக்க விட்டதே இல்ல.. நான் பேசாம இருந்தா கூட அவங்கதான் தலை எல்லாம் மாறிவிடுவாங்க.. எனக்கு அம்மாகிட்ட போகணும்.. அம்மா வேணும்.."

சந்திரமதிக்குள் ஒளிந்திருந்த குழந்தை வெளியே வந்து அழ துவங்கியது..

"போகலாம்.. பத்து நிமிஷம்.. உன்ன கொண்டு போய் உன் அம்மாகிட்ட சேர்த்துடுவேன்.. ஆனா நீ எதையும் முழுசா சொல்லி முடிக்கல.." என்றதும் கண்களை துடைத்துக் கொண்டு பேச துவங்கினாள் சந்திரமதி..

"அப்பா தினமும் குடிச்சுட்டு வர்றாரு ரிஷி.. அவர் உள்ள வரும்போது எனக்கு அந்த வாசனையே பிடிக்கல..! வாந்தி வருது.. அம்மா ஏன் அப்பாவை வேண்டாம்ன்னு சொன்னாங்க நீ இப்ப புரியுது.. என்னால நாலு நாளைக்கு மேல அங்க இருக்க முடியல.. அம்மா எப்படி இந்த வீட்டுக்கு வர சம்மதிப்பாங்க.. அவங்க வர்றேன்னு சொன்னாலும் நான் அவங்களை இந்த வீட்டுக்கு வரவிடவே மாட்டேன்.. ஏன் தெரியுமா..?"

"ஏன்..?" புருவங்களை ஏற்று இறக்கினான் மகரிஷி..

"அவங்க எல்லாரும் அம்மாவை பற்றி தப்பு தப்பா என்கிட்ட சொல்றாங்க.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. அம்மா எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு தெரியாதா..? ஏன் இப்படியெல்லாம் சொல்லணும்.." சந்திரமதி மீண்டும் அழுகை..

"யார் என்ன பேசினாலும் உன் அம்மா நல்லவங்கன்னு உனக்கு தெரியுது இல்ல..?"

"ம்ம்..! அவங்க பொய் சொல்றாங்க.. அம்மா ரொம்ப நல்லவங்க.. இவங்கதான் கெட்டவங்க.. இவங்க யாருமே எனக்கு வேண்டாம் அப்பா வேண்டாம்.. பாட்டி வேண்டாம்.. அம்மா தான் வேணும்.." துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை கைகுட்டையால் அழுத்தமாய் துடைத்து விட்டான் மகரிஷி..

"உண்மைதான்..! உன் அம்மாவ உன் கிட்ட தப்பானவளா காட்டி.. அவங்கள வீழ்த்தி தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கலாம்னு பார்த்திருக்காங்க..! நல்லவேளை.. நீ உன் அம்மாவை புரிஞ்சுகிட்டியே அதுவே சந்தோஷம்.. ஆனா அம்மாவோட அருமை உணர்ந்த பொண்ணு.. ஃபோன் பண்ணும் போது ஒருநாள் கூட நான் அவங்க கிட்ட பேசணும்னு ஒரு வார்த்தை கூட கேட்கலையே..?"

"நான் அம்மாவுக்கு போன் பண்ணி பேசியிருந்தா அவங்க உடனே இங்க வந்துருப்பாங்க.. அப்பா வீட்ல எல்லாருமா சேர்ந்து அவர்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோனு எனக்கு பயமா இருந்துச்சு.. அதனால தான் அம்மா கிட்ட பேசல.." என்றவளின் தலையை செல்லமாய் கலைத்து விட்டான் மகரிஷி..

"அப்போ சந்திராம்மா இனி அவங்களோட அம்மாவை திட்ட மாட்டாங்க.. அப்படித்தானே..?"

"அம்மா கிட்ட போகணும் ரிஷி.."

"ஓகே டன் புறப்படலாமா..!" என்று தொடையை தட்டிக் கொண்டு இதோ அருந்ததியிடம் சந்திரமதியை கொண்டு வந்து ஒப்படைத்திருந்தான்..

மகளை வாரியணைத்து நெற்றி கன்னம் என்று முகம் எங்கும் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டு அழுதாள் அருந்ததி..

இருவரும் கட்டியணைத்தபடி முட்டி போட்டு அங்கேயே அமர்ந்து விட.. சுற்றி சுற்றி வந்த மோத்தி தாய் மகளோடு சேர்ந்து கொண்டான்..

சற்று தள்ளி தொலைவில் நின்றிருந்த ஒருவனது மனமோ மூவரில் ஒருவராக சேர்ந்து கொண்டு நால்வரும் ஒரே குடும்பமாகும் எண்ணத்தை புதிதாக முளை விட்டுக் கீறிய விதையாக ஈரப் பதத்தோடு துளிர்க்க வைத்திருந்தது..

தொடரும்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
143
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
138
மதி கண்டிப்பாக தனது அம்மாவை பற்றி புரிந்து கொள்வாள் என்று எதிர் பார்த்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர் பார்க்கவில்லை.....
ஆனால் இந்த சூழ்நிலையிலும் அம்மாவை விட்டுகுடுகாத மதியை பாராட்டியே ஆக வேண்டும்........♥️♥️♥️♥️♥️♥️♥️
மதியும் ரிசியை அப்பா ஸ்தானத்தில் வைத்து விட்டால்... இனி ரிஷியின் ஆசை விதையும் மதி மூலம் நிறைவேறும் காலம் வரும்......👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Oct 26, 2024
Messages
29
மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்..

ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு அழைத்து பேசும்போது அவள் குரலிலும் பேச்சிலும் தெரியும் மாற்றங்களில் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஊடகமாக கண்டு கொண்டாலும் மிக கவனமாக சந்திரமதியை அருந்ததியிடம் பேசவிடாமல் தவித்திருந்தான்..

அம்மா இருக்காங்களா..? அம்மா சாப்பிட்டாங்களா..! அம்மா பக்கத்துல இல்லையா என்று அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டுமென்ற தவிப்பு தெரிந்த போதிலும் ஒன்று அறியாதவன் போல் வெறும் ம்ம்.. இல்ல என்ற பதில்களின் மூலம் அருந்ததி பற்றிய உரையாடலை கடந்து பேச்சை மாற்றியிருந்தான்..

தகப்பன் வீட்டுக்கு போகும் குஷியில் சந்திரமதி பள்ளிக்கு மட்டம் போட்டிருந்தாலும் சின்னவளின் நிலை பற்றி அறிந்து கொள்ள மகரிஷி நாளைக்கொருமுறை பிரபாகரனின் வீட்டை கண்காணிக்கும் சங்கதி அருந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை.. ஃபோனில் அழைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சந்திரமதி வெளியே வந்து நின்று கண்களை மூடி திறந்து ஒரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.. அப்படி சிரித்தால் அவள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒருவேளை சிரிக்காமல் அழுகையை சமிங்ஞையாக வெளிப்படுத்தினால் மகரிஷி அதிரடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும்..

மதி தந்தையின் வீட்டிலிருந்து மகரிஷியோடு புறப்பட்டு வருவதற்கு முந்தைய நாள் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போனதில் பதட்டப்பட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற மகரிஷி வழக்கம் போல் சற்று தொலைவிலிருந்த டீக்கடையில் நின்று அந்த வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தான்..!

முன் அந்தி மாலையில் சிரிப்பை உதிர்த்த சிறுமலர் இப்போது ஏன் அழைப்பை ஏற்கவில்லை..! அவளும் ஏன் அழைக்கவில்லை..
நேரடியாக பிரபாகரனின் வீட்டுக்கே சென்று பிள்ளையை சந்திக்கலாமா..? என்றுமில்லாத பதட்டத்துடன் இதயம் அதிக அழுத்தத்தோடு துடித்துக் கொண்டிருக்க..‌ தெய்வாதீனமாக வெளியில் வந்து காத்தாட நின்ற மதியை பார்க்க நேர்ந்தது..

"ஐயோ சந்திரா மா.. ஒக்க நிமிஷலோன் பிரானம் போயிந்தி..!" உள்ளுக்குள் முணுமுணுத்தவாறு இழுத்து பெருமூச்சு விட்டவன் கையை அசைத்து சந்திராவை அழைத்தான்..

பிரபாகரன் வீட்டுக்கு கொண்டு போய் விடும் முன்னே கடைக்கு அழைத்து சென்று சுடிதார் ஸ்கர்ட் டாப்.. என அவள் விருப்பத்திற்கு ஏற்றபடி நான்கு உடைகளை வாங்கி தந்திருந்தான்..!

இத்தனை நாட்களாக அவன் வாங்கித் தந்த உடைகளை தான் மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி..

பெற்ற தகப்பனோ.. தகப்பன் வழி பாட்டியோ தாத்தாவோ சந்திரமதிக்கு புது ஆடைகள் வாங்கித் தந்ததாக தெரியவில்லை..!

எங்கு நின்றாலும் பளிச்சென தெளிவாக தெரியும் அவன் நெடிய உருவம் கண்டு கண்களை சிமிட்டி இதழ் வரிய கள்ளமில்லாமல் புன்னகைத்தாள் சந்திரா..

"சந்திரமா.. நீ ஓகே தானே..?" சைகையின் மூலம் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தான்..

அவளும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சைகையின் மூலம் சொல்லியிருக்க..

"அப்புறம் ஏன் போன் எடுக்கல..?" என்றான் கையை மடக்கி காதின் பக்கத்தில் வைத்து சைகையின் மூலம் உணர்த்தி..!

"சார்ஜ தீந்து போச்சு..! ஸ்விட்ச் ஆஃப் அதனாலதான் எடுக்கல..‌" சற்று தொலைவில் நின்று அவள் இப்படி சொன்னது அவனுக்கு புரிந்ததோ இல்லையோ..

இழுத்து பெருமூச்சு விட்டவன் "நீ நல்லா இருக்கியா..?" என்றான் மறுபடி..

"ம்ம்..!" என்ற தலையசைத்தவளின் கண்களில் சந்தோஷம் தெரியவில்லை..

"நான் வேணா வரட்டுமா..? இல்ல உன் அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா..?"

வேண்டாம் என்றாள்..

"நான் போகட்டுமா..!"

போ என்றாலும் இதழ் பிதுக்கி அழுவதை போல் தோன்றியது அவனுக்கு..

அன்று வெகு நேரம் அந்த இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான் அவன்..

சந்திரமதி வீட்டுக்குள் சென்று எந்த பிரச்சினையும் இல்லை என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் அந்த போனில் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகுதான் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்..

முடிந்தவரை சந்திரமதியை தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தான் மகரிஷி..

மற்ற நேரங்களில் பாதுகாப்பாக கவனமாக இருப்பதெப்படி.. பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும்.. தவறானவர்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும்.. தற்காப்பு கலையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகப் பொறுமையாக அவளுக்கு சொல்லித் தந்திருந்தான்..

தற்காப்பு கலையை அவன் ஒன்றும் பெரிதாக மெனக்கெட்டு சொல்லித் தரவில்லை.. அரசு பள்ளிகளில் இப்போது ஆறாம் வகுப்பிலிருந்து பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மகரிஷிக்கும் மதிக்கும் வசதியாகி போனது..!

குட் டச் பேட் டச் இதெல்லாம் கிடையாது.. ஒன்லி நோ டச்..! யாராவது உன் மேல கைய வைக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே அவங்க கண்களை கூர்மையாக கவனி.. அந்த நாய்களோட இன்டென்ஷன் என்னதுன்னு உனக்கு தெரிஞ்சு போயிடும்..! அடுத்த நொடி என்ன செய்யணும்னு துரிதமா யோசிச்சு செயல்படனும் கொஞ்சம் கூட பயப்படக்கூடாது..!" என இரண்டு மணி நேரம் அவளை உட்கார வைத்து பொறுமையாக விளக்கி தான் அனுப்பி இருந்தான்..


இப்படி மிக ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்ட போதிலும்.. அடுத்த நாளில்.. அம்மா வேணும் அம்மாவை பாக்கணும்..! என சந்திரமதி தேம்பித் தேம்பி ஒரே அழுகை..! அதிலும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே அழைத்திருந்ததில் ஃபோனை காதில் வைத்து பேசியபடியே வெளியே வந்தவன் அழுபடியே உறங்கி போயிருந்த அருந்ததியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிட்டிகை போடும் தருணத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான்..

அம்மா வேணும்.. அம்மா அம்மா.. இந்த வார்த்தை.. இந்த பாசம் இதைத்தான் அவனும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.. ஆனாலும் இந்த சின்னஞ்சிறியவளின் அழுகை மகரிஷியின் நெஞ்சை வதைக்கிறது..! ஏதோ ஒரு இனம் புரியாத பாசம்.. சந்திரமதியை ஒரு தாயின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான் ஆனால் அவள் அழுகையில் மகரிஷியின் நெஞ்சம் தகப்பன் ஸ்தானத்திலிருந்து பதறியது..

சந்திரமதிய கூட்டிட்டு போறேன் என்று பிரபாகரனின் வீட்டில் போய் நின்ற போது.. கையை முறுக்கிக் கொண்டு முன்னே வந்து நின்ற பிரபாகரன் ரிஷியின் உடற்கட்டில் பின்வாங்கினான்..

"என் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு நீங்க யாரு..! இனி அவ என் கூட தான் இருப்பா.. நீ என்ன பண்றே..! போய் இவளோட அம்மாவ வர சொல்லு.." திடீரென ஒருமைக்கு தாவி எகத்தாளமாகச் சொன்னான்..

"அதை நீயே போய் சொல்லு.. இப்ப நான் சந்திரமதிய கூட்டிட்டு போய் அவங்க அம்மாகிட்ட விடனும்.." ரிஷி அதைவிட மிடுக்கான உடல்மொழியில் நின்றான்..

"இவள பெத்தவன் நான்.. என்னை மீறி கூட்டிட்டு போயிடுவியா நீ..!"

"பெத்த பிள்ளையாவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி வீட்டுல அடைச்சு வைக்க முடியாது..! பெண் குழந்தைகள் அம்மா கிட்டதான் வளரணும் கோர்ட்டுக்கு போனாலும் உன் வாதம் எடுபடாது.."

"ஹாஹா..! இப்பதானே புரியுது.. ஜிம் பாடியோட அழகா பதவி சா ஒருத்தன் பக்கத்திலேயே இருக்கும்போது என்கிட்ட வாழ வருவாளா அவ..?" மகரிஷியை ஏற இறங்க பார்த்தபடி பிரபாகரன் நக்கலாக பல்லிளிக்க..

"அதானே பிரபா..! வருஷத்துக்கு ஒரு ஆம்பளையை மாத்தறவளுக்கு உன் கூட எப்படி வாழனும்னு தோணும்..‌ பொண்ணு பொண்டாட்டின்னு நீ மட்டும் ஆசை வச்சா போதாது..! குடும்பம் புருஷன்னு அவளும் மனசு வைக்கணும்..!" இது பிரபாகரனின் அம்மா..

சின்ன குழந்தையின் முன்பு இது போன்று அருவருப்பாக பேசும் பிரபாகரன் வீட்டுஆட்களை கோபமாகவும் சந்திரமதியை சங்கடமாகவும் பார்த்த மகரிஷி அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டபடி சந்திரமதியை கனிவோடு கைநீட்டி அழைத்தான்..

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் கைப்பற்றிக் கொண்டாள் சந்திரமதி..

"ஏய்.. மதி.. அறிவில்ல.. கண்டவன் கைய பிடிச்சுகிட்டு அவன் பக்கத்துல போய் நிக்கிற.. அப்பா சொல்றேன் உள்ள போ.." என்றவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தபடி அமைதியாக நின்றாள் சந்திரமதி..

"அதானே பார்த்தேன்.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு சொல்லுவாங்களே அது சரியா தான் இருக்குது.. உன் அம்மாவ போல உனக்கு கொழுப்பு கூத்தாடுது..! அதான் எவனோ ஒருத்தன் வந்து கூப்பிட்ட உடனே தகப்பன மதிக்காம அவன் கூட போய் நிக்கற.. பாத்துக்கிட்டே இரு என்னைக்காவது ஒரு நாள் இவனும் உன் ஆத்தாளும் சேர்ந்து உன்னை.." முடிப்பதற்குள் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது..!

நடந்ததை உணர்ந்து கொண்டு மூக்கிலிருந்து கொட்டிய ரத்தத்தை கையால் பிடித்தபடி அதிர்ந்த விழிகளோடு மகரிஷியை பார்த்தான் பிரபாகரன்..

"ஐயோ என் பிள்ளையை அடிச்சுட்டானே பாவி பைய.. நீயெல்லாம் நல்லா இருப்பியா நாசமா தான்டா போவ..! உன்னை மயக்கி இங்க அனுப்பி வச்சிருக்காளே அந்த எடுபட்ட சிறுக்கி.. அந்த நாய் புழு புழுத்துதான்டா சாவா.. என் மவன அசிங்கப்படுத்தி வாழ விடாம செய்யற உங்களுக்கெல்லாம் நல்ல கதியே வராதுடா..!" பிரபாகரனின் தாய் சங்கரி தலைவிரி கோலமாக அழுது மண்ணை வாரி தூத்தாத குறையாக சாபம் விட்டுக் கொண்டிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் சந்திரமதியோடு வெளியேறினான் ரிஷி..

"ஐயோ நம்ம வீட்டு பிள்ளைய கடத்திட்டு போறானே இந்த கேடு கெட்டவன்.. டேய் பொறுக்கி நாயே.. கேட்க ஆள் இல்லையா..? யாராவது வாங்களேன்..!" சத்தம் போட்டு ஊரைக் கூட்ட யாரும் வந்து எட்டிப் பார்த்ததாய் தெரியவில்லை.. ஓடி வந்து வழியை மறித்துக் கொண்டு நின்ற மாமனார் மருதமுத்துவை தோளால் இடித்து தள்ளிவிட்டு சாதாரணமாக சென்றான் ரிஷி..

மாரடைப்பு கண்டவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் மருதமுத்து..

"வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் பண்ணி என் பொண்ண தூக்கிட்டு போறியா..! உன்னையும் அந்த தே...ளையும் போலீஸ்ல கேஸ் போட்டு உள்ள தள்ளி கம்பி என்ன வைக்கல நான் பிரபாகரன் இல்லடா.." மூக்கில் வடிந்த ரத்தத்தோடு கத்தினான் பிரபாகரன்..

மிரட்டி குதறும் பார்வையோடு திரும்பி உள்ளே வந்தவனை கண்டு பிரபாகர் அறைக்குள் ஒளிந்து கதவை சாத்திக் கொள்ள..

"முதல்ல தைரியமிருந்தா வெளிய வந்து பேசுடா நாயே..! அப்புறம் கேஸ் போடலாம்.." நக்கலும் ஆத்திரமுமாக சொல்லிவிட்டு தன்னை அழைத்துக் கொண்டு வெளியேறியவனை ஆனந்த வியப்போடு நிமிர்ந்து பார்த்தாள் சிறியவள்..

விவரம் தெரியாத வயதிலிருந்து அப்பா என்ற ஆஸ்தான பதவியிலமர்ந்து சமீப காலங்களில்.. அப்பா தனது முதல் ஹீரோ என்ற கீரிடம் வைக்கும் ஸ்தானத்திற்கு முன்னேறியிருந்த பிரபாகரனை அந்த இடத்திலிருந்து வெகு சுலபமாக பிடுங்கி எறிந்துவிட்டு மகரிஷியை தானாகவே அவ்விடத்தில் பொருத்திக்கொண்டது இளையவளின் மனது..

மை டாட் இஸ் எ ஹீரோ..

எஸ் ஹீரோ..

ஆனால் இங்கே அப்பா என்ற வார்த்தை வெளிபடையாக யோசிக்கப் படாமல் உணர்வுகளின் உருவாகிப் போனது அந்த உறவு..

மகரிஷி சந்திரமதி இருவரும் ஒரு சிறுவர் பூங்காவில் அமர்ந்திருந்தனர்..!

ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந்த ஒரு சிறிய பால் கடையிலிருந்து இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் கப்புகளோடு வெளியே வந்தான் மகரிஷி..

பால் கடை அதிகாலையிலேயே திறக்கப்படுவது வழக்கம்.. அங்கு ஐஸ் கிரீம் மில்க் ஷேக் அனைத்தும் காலாவதியாகும் தேதிகளோடு ஸ்டாக் இருக்கும் என்பதால் சந்திரமதிக்கு பிடித்ததை இந்த விடியற்காலையில் வாங்கித் தர முடிந்தது அவனால்..

"சந்திர மாவுக்கு வெனிலா தானே பிடிக்கும்.."

"ம்ம்..!" என்றவளின் கண்கள் பனிக்கூழை ஆர்வத்தோடு தழுவியது..

புன்னகையோடு அவளிடம் ஒரு கப்பை நீட்டிவிட்டு.. அவசர அவசரமாக உண்டு முடித்தவளிடம் இன்னொரு கப்பையும் தந்தான். மகரிஷி..!

"ம்ம்.. சாப்பிட்டு முடிச்சாச்சா.." என்று வாயை துடைக்க தன் கைகுட்டையை எடுத்து நீட்டவும்.. எந்தவித தயக்கமும் இல்லாமல் அவனிடமிருந்து கைக்குட்டையை வாங்கி வாயை துடைத்துக் கொண்டு..

"ம்ம்..! சாப்பிட்டுட்டேன் ரிஷி" என்றாள் சந்திரமதி..

"இன்னொன்னு வேணுமா..?"

"வேண்டாம் போதும்.."

"சரி அப்ப பேசலாமா..?"

என்ன பேசணும் என்பதாய் அவள் பார்வை தயக்கமும் பயமுமாக மிரண்டு விழித்தது..

மென்மையாய் சிரித்தான் அவன்..

"டோன்ட் ஒரி சந்திரா மா.. ஐம் ஆல்வேஸ் வித் யூ.. தேவையில்லாததை பேசி உன்னை கவலை படுத்த மாட்டேன்.. ஆனா எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்..‌ நீதான் ரொம்ப ஆர்வமா அந்த வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிச்சு நின்ன..? இப்ப போனதை விட வேகமா அந்த வீட்டிலருந்து திரும்பி வரணும்னு அழுது என்னை கூட்டிட்டு போகச் சொன்னதும் நீதான்.. அங்க என்னதான்டா நடந்துச்சு.. ஒவ்வொரு நாள் கால் பண்ணு போதும் அங்க எல்லாம் சரியா போகுதுன்னு சொன்னியே..! ஏன் அங்க இருக்கிறவங்க உன்னை ஏதாவது திட்டினாங்களா..! அடிச்சாங்களா..?"

சந்திரமதி தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்‌‌..

"சந்திரமதி ஏதாவது பேசு..! நீ வாய தொறந்தா தான் உண்மை வெளியே வரும்.. நாளைக்கு உன்னோட அப்பா போலீசோட வந்து நான் உன்னை கட்டாயப்படுத்தி அங்கிருந்து கூட்டிட்டு வந்ததா சொன்னா என் பக்கம் பேச நியாயமான காரணங்கள் வேணும் இல்லையா..! சொல்லுமா.. அங்க இருந்தவங்க உன்னை ஏதாவது கொடுமை படுத்தினாங்களா..?"

"அவங்க யாரு என்னை கொடுமைப்படுத்தல.."

மகரிஷி கண்கள் சுருக்கினான்..

"அப்புறம்..?"

"அந்த வீட்ல என்னோட முக்கியத்துவம் என்னன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு.. அம்மா என்னை பாத்துக்கிட்டதுக்கும் அப்பா என்னை கவனிச்சுக்கிட்டதுக்கும் நிறையவே வித்தியாசம்..! "

"முதல் ரெண்டு நாள் அங்க இருந்தவங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க.. நானும் அவங்க எல்லாரும் என் மேல ரொம்ப பாசமா இருக்கிறதா நினைச்சேன்.. இவ்ளோ பாசமானவங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டதா அம்மா மேல எனக்கு ரொம்ப கோவமா வந்துச்சு.. ஆனா அடுத்த நாள்லருந்து அந்த வீட்ல யாருமே என்னை கண்டுக்கல.. சாப்பிடறியான்னு கூட யாரும் கேட்கல.. யாருமே எனக்கு தலை வாரி விடல.. பக்கத்துல உட்கார்ந்து தலையை தடவி பாசமா பேசின பாட்டி கூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போனாங்க.. அப்பா என்கிட்ட முகம் கொடுத்து பேசவே இல்ல.. அவங்க எல்லாரும் கூடி கூடி பேசினத வச்சு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.."

"அம்மாவ என் மூலமா இங்க வரவழைச்சு அவங்கள வேலை பார்க்க வச்சு சம்பளத்தை பிடுங்கி கிட்டு எல்லாரும் சொகுசா வாழலாம்னு பேசிக்கிட்டாங்க.."

"அப்படியா..?"

"ஆமா ரிஷி..! என்னென்னமோ சொல்றாங்க.. அம்மாவும் நானும் அப்பா கூட இருந்தா தான் அவருக்கு மரியாதை கிடைக்குமாம்.. உன்ன மதிச்சி எவனாவது வேலை தரனும்னா குடும்பம்னு ஒன்னு வேணும்.. இந்த சின்னக் குட்டியால அவ இங்க வரட்டும்.. இல்லைன்னா இந்த பொட்ட கழுதையை வீட்ல வச்சு பாத்துக்க எனக்கென்ன தலையெழுத்தான்னு பாட்டி என்னை திட்டுனாங்க..!" சந்திரமதியின் கண்களில் நீர் நிரம்பியது..

மகரிஷி ஆறுதலாய் அவள் தோளை தட்டிக் கொடுத்தான்..

"அப்பா ஸ்கூல்ல வந்து பாசமா பேசின மாதிரி வீட்ல நடந்துக்கல.. வேற மாதிரி என்னை வெறுப்பா பார்த்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை.. சாப்பிட்டியானு கூட கேக்கல.. அடிக்கடி ஃபோன் தரேன் உன் அம்மாவுக்கு போன் பண்ணி பேசி இங்க வர சொல்லுன்னு சொல்லிட்டே இருந்தாரு.. நான் பேச மாட்டேன்னு சொன்னபோது எரிச்சலா என்னை திட்டுனாரு..! அப்புறம் தான் இதெல்லாம்.."

"பாட்டிக்கு என்னை பிடிக்கவே இல்லை.. தாத்தா பார்வையே சரியில்ல..! பசிச்சா நானே போட்டு சாப்பிடணும்.. அது கூட சில நேரத்துல சாப்பாடு இருக்காது.. ஒரு நாள் நேரம் கழிச்சு சாப்பிட்டு வயிற்றுக்கு சேராம வாந்தி எடுத்துட்டேன்.. பாட்டி என்னை ரொம்பவே திட்டுனாங்க.. தலையில அடிச்சுட்டாங்க ரிஷி.." அழுது கொண்டே சொன்னாள் சந்திரமதி..

"வந்தவுடனே அப்பா கிட்ட வேற இதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க.. அப்பா ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டினாரு.."

"அம்மா என்னை எப்படியெல்லாம் பாத்துக்குவாங்க தெரியுமா..! எனக்கு ஜுரம் வந்துட்டா ராத்திரியெல்லாம் தூங்காமல் தொட்டு தொட்டு பார்த்து மருந்து தருவாங்க.. வாந்தி எடுத்தா சுடுதண்ணி வச்சு நெஞ்செல்லாம் துடைச்சு விடுவாங்க.. தூக்கத்துல படுக்கையில பாத்ரூம் போயிட்டா கூட அன்பாதான் சொல்லுவாங்க.. எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தாலும் கூட ஒருநாளும் என்னை சாப்பிடாம இருக்க விட்டதே இல்ல.. நான் பேசாம இருந்தா கூட அவங்கதான் தலை எல்லாம் மாறிவிடுவாங்க.. எனக்கு அம்மாகிட்ட போகணும்.. அம்மா வேணும்.."

சந்திரமதிக்குள் ஒளிந்திருந்த குழந்தை வெளியே வந்து அழ துவங்கியது..

"போகலாம்.. பத்து நிமிஷம்.. உன்ன கொண்டு போய் உன் அம்மாகிட்ட சேர்த்துடுவேன்.. ஆனா நீ எதையும் முழுசா சொல்லி முடிக்கல.." என்றதும் கண்களை துடைத்துக் கொண்டு பேச துவங்கினாள் சந்திரமதி..

"அப்பா தினமும் குடிச்சுட்டு வர்றாரு ரிஷி.. அவர் உள்ள வரும்போது எனக்கு அந்த வாசனையே பிடிக்கல..! வாந்தி வருது.. அம்மா ஏன் அப்பாவை வேண்டாம்ன்னு சொன்னாங்க நீ இப்ப புரியுது.. என்னால நாலு நாளைக்கு மேல அங்க இருக்க முடியல.. அம்மா எப்படி இந்த வீட்டுக்கு வர சம்மதிப்பாங்க.. அவங்க வர்றேன்னு சொன்னாலும் நான் அவங்களை இந்த வீட்டுக்கு வரவிடவே மாட்டேன்.. ஏன் தெரியுமா..?"

"ஏன்..?" புருவங்களை ஏற்று இறக்கினான் மகரிஷி..

"அவங்க எல்லாரும் அம்மாவை பற்றி தப்பு தப்பா என்கிட்ட சொல்றாங்க.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. அம்மா எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு தெரியாதா..? ஏன் இப்படியெல்லாம் சொல்லணும்.." சந்திரமதி மீண்டும் அழுகை..

"யார் என்ன பேசினாலும் உன் அம்மா நல்லவங்கன்னு உனக்கு தெரியுது இல்ல..?"

"ம்ம்..! அவங்க பொய் சொல்றாங்க.. அம்மா ரொம்ப நல்லவங்க.. இவங்கதான் கெட்டவங்க.. இவங்க யாருமே எனக்கு வேண்டாம் அப்பா வேண்டாம்.. பாட்டி வேண்டாம்.. அம்மா தான் வேணும்.." துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை கைகுட்டையால் அழுத்தமாய் துடைத்து விட்டான் மகரிஷி..

"உண்மைதான்..! உன் அம்மாவ உன் கிட்ட தப்பானவளா காட்டி.. அவங்கள வீழ்த்தி தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கலாம்னு பார்த்திருக்காங்க..! நல்லவேளை.. நீ உன் அம்மாவை புரிஞ்சுகிட்டியே அதுவே சந்தோஷம்.. ஆனா அம்மாவோட அருமை உணர்ந்த பொண்ணு.. ஃபோன் பண்ணும் போது ஒருநாள் கூட நான் அவங்க கிட்ட பேசணும்னு ஒரு வார்த்தை கூட கேட்கலையே..?"

"நான் அம்மாவுக்கு போன் பண்ணி பேசியிருந்தா அவங்க உடனே இங்க வந்துருப்பாங்க.. அப்பா வீட்ல எல்லாருமா சேர்ந்து அவர்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோனு எனக்கு பயமா இருந்துச்சு.. அதனால தான் அம்மா கிட்ட பேசல.." என்றவளின் தலையை செல்லமாய் கலைத்து விட்டான் மகரிஷி..

"அப்போ சந்திராம்மா இனி அவங்களோட அம்மாவை திட்ட மாட்டாங்க.. அப்படித்தானே..?"

"அம்மா கிட்ட போகணும் ரிஷி.."

"ஓகே டன் புறப்படலாமா..!" என்று தொடையை தட்டிக் கொண்டு இதோ அருந்ததியிடம் சந்திரமதியை கொண்டு வந்து ஒப்படைத்திருந்தான்..

மகளை வாரியணைத்து நெற்றி கன்னம் என்று முகம் எங்கும் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டு அழுதாள் அருந்ததி..

இருவரும் கட்டியணைத்தபடி முட்டி போட்டு அங்கேயே அமர்ந்து விட.. சுற்றி சுற்றி வந்த மோத்தி தாய் மகளோடு சேர்ந்து கொண்டான்..

சற்று தள்ளி தொலைவில் நின்றிருந்த ஒருவனது மனமோ மூவரில் ஒருவராக சேர்ந்து கொண்டு நால்வரும் ஒரே குடும்பமாகும் எண்ணத்தை புதிதாக முளை விட்டுக் கீறிய விதையாக ஈரப் பதத்தோடு துளிர்க்க வைத்திருந்தது..

தொடரும்..
Superb Sana ma.. semma ud.. next ud daily podunga sana ma. 👌🥰
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
46
மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்..

ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு அழைத்து பேசும்போது அவள் குரலிலும் பேச்சிலும் தெரியும் மாற்றங்களில் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஊடகமாக கண்டு கொண்டாலும் மிக கவனமாக சந்திரமதியை அருந்ததியிடம் பேசவிடாமல் தவித்திருந்தான்..

அம்மா இருக்காங்களா..? அம்மா சாப்பிட்டாங்களா..! அம்மா பக்கத்துல இல்லையா என்று அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டுமென்ற தவிப்பு தெரிந்த போதிலும் ஒன்று அறியாதவன் போல் வெறும் ம்ம்.. இல்ல என்ற பதில்களின் மூலம் அருந்ததி பற்றிய உரையாடலை கடந்து பேச்சை மாற்றியிருந்தான்..

தகப்பன் வீட்டுக்கு போகும் குஷியில் சந்திரமதி பள்ளிக்கு மட்டம் போட்டிருந்தாலும் சின்னவளின் நிலை பற்றி அறிந்து கொள்ள மகரிஷி நாளைக்கொருமுறை பிரபாகரனின் வீட்டை கண்காணிக்கும் சங்கதி அருந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை.. ஃபோனில் அழைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சந்திரமதி வெளியே வந்து நின்று கண்களை மூடி திறந்து ஒரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.. அப்படி சிரித்தால் அவள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒருவேளை சிரிக்காமல் அழுகையை சமிங்ஞையாக வெளிப்படுத்தினால் மகரிஷி அதிரடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும்..

மதி தந்தையின் வீட்டிலிருந்து மகரிஷியோடு புறப்பட்டு வருவதற்கு முந்தைய நாள் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போனதில் பதட்டப்பட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற மகரிஷி வழக்கம் போல் சற்று தொலைவிலிருந்த டீக்கடையில் நின்று அந்த வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தான்..!

முன் அந்தி மாலையில் சிரிப்பை உதிர்த்த சிறுமலர் இப்போது ஏன் அழைப்பை ஏற்கவில்லை..! அவளும் ஏன் அழைக்கவில்லை..
நேரடியாக பிரபாகரனின் வீட்டுக்கே சென்று பிள்ளையை சந்திக்கலாமா..? என்றுமில்லாத பதட்டத்துடன் இதயம் அதிக அழுத்தத்தோடு துடித்துக் கொண்டிருக்க..‌ தெய்வாதீனமாக வெளியில் வந்து காத்தாட நின்ற மதியை பார்க்க நேர்ந்தது..

"ஐயோ சந்திரா மா.. ஒக்க நிமிஷலோன் பிரானம் போயிந்தி..!" உள்ளுக்குள் முணுமுணுத்தவாறு இழுத்து பெருமூச்சு விட்டவன் கையை அசைத்து சந்திராவை அழைத்தான்..

பிரபாகரன் வீட்டுக்கு கொண்டு போய் விடும் முன்னே கடைக்கு அழைத்து சென்று சுடிதார் ஸ்கர்ட் டாப்.. என அவள் விருப்பத்திற்கு ஏற்றபடி நான்கு உடைகளை வாங்கி தந்திருந்தான்..!

இத்தனை நாட்களாக அவன் வாங்கித் தந்த உடைகளை தான் மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி..

பெற்ற தகப்பனோ.. தகப்பன் வழி பாட்டியோ தாத்தாவோ சந்திரமதிக்கு புது ஆடைகள் வாங்கித் தந்ததாக தெரியவில்லை..!

எங்கு நின்றாலும் பளிச்சென தெளிவாக தெரியும் அவன் நெடிய உருவம் கண்டு கண்களை சிமிட்டி இதழ் வரிய கள்ளமில்லாமல் புன்னகைத்தாள் சந்திரா..

"சந்திரமா.. நீ ஓகே தானே..?" சைகையின் மூலம் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தான்..

அவளும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சைகையின் மூலம் சொல்லியிருக்க..

"அப்புறம் ஏன் போன் எடுக்கல..?" என்றான் கையை மடக்கி காதின் பக்கத்தில் வைத்து சைகையின் மூலம் உணர்த்தி..!

"சார்ஜ தீந்து போச்சு..! ஸ்விட்ச் ஆஃப் அதனாலதான் எடுக்கல..‌" சற்று தொலைவில் நின்று அவள் இப்படி சொன்னது அவனுக்கு புரிந்ததோ இல்லையோ..

இழுத்து பெருமூச்சு விட்டவன் "நீ நல்லா இருக்கியா..?" என்றான் மறுபடி..

"ம்ம்..!" என்ற தலையசைத்தவளின் கண்களில் சந்தோஷம் தெரியவில்லை..

"நான் வேணா வரட்டுமா..? இல்ல உன் அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா..?"

வேண்டாம் என்றாள்..

"நான் போகட்டுமா..!"

போ என்றாலும் இதழ் பிதுக்கி அழுவதை போல் தோன்றியது அவனுக்கு..

அன்று வெகு நேரம் அந்த இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான் அவன்..

சந்திரமதி வீட்டுக்குள் சென்று எந்த பிரச்சினையும் இல்லை என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் அந்த போனில் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகுதான் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்..

முடிந்தவரை சந்திரமதியை தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தான் மகரிஷி..

மற்ற நேரங்களில் பாதுகாப்பாக கவனமாக இருப்பதெப்படி.. பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும்.. தவறானவர்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும்.. தற்காப்பு கலையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகப் பொறுமையாக அவளுக்கு சொல்லித் தந்திருந்தான்..

தற்காப்பு கலையை அவன் ஒன்றும் பெரிதாக மெனக்கெட்டு சொல்லித் தரவில்லை.. அரசு பள்ளிகளில் இப்போது ஆறாம் வகுப்பிலிருந்து பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மகரிஷிக்கும் மதிக்கும் வசதியாகி போனது..!

குட் டச் பேட் டச் இதெல்லாம் கிடையாது.. ஒன்லி நோ டச்..! யாராவது உன் மேல கைய வைக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே அவங்க கண்களை கூர்மையாக கவனி.. அந்த நாய்களோட இன்டென்ஷன் என்னதுன்னு உனக்கு தெரிஞ்சு போயிடும்..! அடுத்த நொடி என்ன செய்யணும்னு துரிதமா யோசிச்சு செயல்படனும் கொஞ்சம் கூட பயப்படக்கூடாது..!" என இரண்டு மணி நேரம் அவளை உட்கார வைத்து பொறுமையாக விளக்கி தான் அனுப்பி இருந்தான்..


இப்படி மிக ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்ட போதிலும்.. அடுத்த நாளில்.. அம்மா வேணும் அம்மாவை பாக்கணும்..! என சந்திரமதி தேம்பித் தேம்பி ஒரே அழுகை..! அதிலும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே அழைத்திருந்ததில் ஃபோனை காதில் வைத்து பேசியபடியே வெளியே வந்தவன் அழுபடியே உறங்கி போயிருந்த அருந்ததியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிட்டிகை போடும் தருணத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான்..

அம்மா வேணும்.. அம்மா அம்மா.. இந்த வார்த்தை.. இந்த பாசம் இதைத்தான் அவனும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.. ஆனாலும் இந்த சின்னஞ்சிறியவளின் அழுகை மகரிஷியின் நெஞ்சை வதைக்கிறது..! ஏதோ ஒரு இனம் புரியாத பாசம்.. சந்திரமதியை ஒரு தாயின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான் ஆனால் அவள் அழுகையில் மகரிஷியின் நெஞ்சம் தகப்பன் ஸ்தானத்திலிருந்து பதறியது..

சந்திரமதிய கூட்டிட்டு போறேன் என்று பிரபாகரனின் வீட்டில் போய் நின்ற போது.. கையை முறுக்கிக் கொண்டு முன்னே வந்து நின்ற பிரபாகரன் ரிஷியின் உடற்கட்டில் பின்வாங்கினான்..

"என் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு நீங்க யாரு..! இனி அவ என் கூட தான் இருப்பா.. நீ என்ன பண்றே..! போய் இவளோட அம்மாவ வர சொல்லு.." திடீரென ஒருமைக்கு தாவி எகத்தாளமாகச் சொன்னான்..

"அதை நீயே போய் சொல்லு.. இப்ப நான் சந்திரமதிய கூட்டிட்டு போய் அவங்க அம்மாகிட்ட விடனும்.." ரிஷி அதைவிட மிடுக்கான உடல்மொழியில் நின்றான்..

"இவள பெத்தவன் நான்.. என்னை மீறி கூட்டிட்டு போயிடுவியா நீ..!"

"பெத்த பிள்ளையாவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி வீட்டுல அடைச்சு வைக்க முடியாது..! பெண் குழந்தைகள் அம்மா கிட்டதான் வளரணும் கோர்ட்டுக்கு போனாலும் உன் வாதம் எடுபடாது.."

"ஹாஹா..! இப்பதானே புரியுது.. ஜிம் பாடியோட அழகா பதவி சா ஒருத்தன் பக்கத்திலேயே இருக்கும்போது என்கிட்ட வாழ வருவாளா அவ..?" மகரிஷியை ஏற இறங்க பார்த்தபடி பிரபாகரன் நக்கலாக பல்லிளிக்க..

"அதானே பிரபா..! வருஷத்துக்கு ஒரு ஆம்பளையை மாத்தறவளுக்கு உன் கூட எப்படி வாழனும்னு தோணும்..‌ பொண்ணு பொண்டாட்டின்னு நீ மட்டும் ஆசை வச்சா போதாது..! குடும்பம் புருஷன்னு அவளும் மனசு வைக்கணும்..!" இது பிரபாகரனின் அம்மா..

சின்ன குழந்தையின் முன்பு இது போன்று அருவருப்பாக பேசும் பிரபாகரன் வீட்டுஆட்களை கோபமாகவும் சந்திரமதியை சங்கடமாகவும் பார்த்த மகரிஷி அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டபடி சந்திரமதியை கனிவோடு கைநீட்டி அழைத்தான்..

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் கைப்பற்றிக் கொண்டாள் சந்திரமதி..

"ஏய்.. மதி.. அறிவில்ல.. கண்டவன் கைய பிடிச்சுகிட்டு அவன் பக்கத்துல போய் நிக்கிற.. அப்பா சொல்றேன் உள்ள போ.." என்றவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தபடி அமைதியாக நின்றாள் சந்திரமதி..

"அதானே பார்த்தேன்.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு சொல்லுவாங்களே அது சரியா தான் இருக்குது.. உன் அம்மாவ போல உனக்கு கொழுப்பு கூத்தாடுது..! அதான் எவனோ ஒருத்தன் வந்து கூப்பிட்ட உடனே தகப்பன மதிக்காம அவன் கூட போய் நிக்கற.. பாத்துக்கிட்டே இரு என்னைக்காவது ஒரு நாள் இவனும் உன் ஆத்தாளும் சேர்ந்து உன்னை.." முடிப்பதற்குள் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது..!

நடந்ததை உணர்ந்து கொண்டு மூக்கிலிருந்து கொட்டிய ரத்தத்தை கையால் பிடித்தபடி அதிர்ந்த விழிகளோடு மகரிஷியை பார்த்தான் பிரபாகரன்..

"ஐயோ என் பிள்ளையை அடிச்சுட்டானே பாவி பைய.. நீயெல்லாம் நல்லா இருப்பியா நாசமா தான்டா போவ..! உன்னை மயக்கி இங்க அனுப்பி வச்சிருக்காளே அந்த எடுபட்ட சிறுக்கி.. அந்த நாய் புழு புழுத்துதான்டா சாவா.. என் மவன அசிங்கப்படுத்தி வாழ விடாம செய்யற உங்களுக்கெல்லாம் நல்ல கதியே வராதுடா..!" பிரபாகரனின் தாய் சங்கரி தலைவிரி கோலமாக அழுது மண்ணை வாரி தூத்தாத குறையாக சாபம் விட்டுக் கொண்டிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் சந்திரமதியோடு வெளியேறினான் ரிஷி..

"ஐயோ நம்ம வீட்டு பிள்ளைய கடத்திட்டு போறானே இந்த கேடு கெட்டவன்.. டேய் பொறுக்கி நாயே.. கேட்க ஆள் இல்லையா..? யாராவது வாங்களேன்..!" சத்தம் போட்டு ஊரைக் கூட்ட யாரும் வந்து எட்டிப் பார்த்ததாய் தெரியவில்லை.. ஓடி வந்து வழியை மறித்துக் கொண்டு நின்ற மாமனார் மருதமுத்துவை தோளால் இடித்து தள்ளிவிட்டு சாதாரணமாக சென்றான் ரிஷி..

மாரடைப்பு கண்டவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் மருதமுத்து..

"வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் பண்ணி என் பொண்ண தூக்கிட்டு போறியா..! உன்னையும் அந்த தே...ளையும் போலீஸ்ல கேஸ் போட்டு உள்ள தள்ளி கம்பி என்ன வைக்கல நான் பிரபாகரன் இல்லடா.." மூக்கில் வடிந்த ரத்தத்தோடு கத்தினான் பிரபாகரன்..

மிரட்டி குதறும் பார்வையோடு திரும்பி உள்ளே வந்தவனை கண்டு பிரபாகர் அறைக்குள் ஒளிந்து கதவை சாத்திக் கொள்ள..

"முதல்ல தைரியமிருந்தா வெளிய வந்து பேசுடா நாயே..! அப்புறம் கேஸ் போடலாம்.." நக்கலும் ஆத்திரமுமாக சொல்லிவிட்டு தன்னை அழைத்துக் கொண்டு வெளியேறியவனை ஆனந்த வியப்போடு நிமிர்ந்து பார்த்தாள் சிறியவள்..

விவரம் தெரியாத வயதிலிருந்து அப்பா என்ற ஆஸ்தான பதவியிலமர்ந்து சமீப காலங்களில்.. அப்பா தனது முதல் ஹீரோ என்ற கீரிடம் வைக்கும் ஸ்தானத்திற்கு முன்னேறியிருந்த பிரபாகரனை அந்த இடத்திலிருந்து வெகு சுலபமாக பிடுங்கி எறிந்துவிட்டு மகரிஷியை தானாகவே அவ்விடத்தில் பொருத்திக்கொண்டது இளையவளின் மனது..

மை டாட் இஸ் எ ஹீரோ..

எஸ் ஹீரோ..

ஆனால் இங்கே அப்பா என்ற வார்த்தை வெளிபடையாக யோசிக்கப் படாமல் உணர்வுகளின் உருவாகிப் போனது அந்த உறவு..

மகரிஷி சந்திரமதி இருவரும் ஒரு சிறுவர் பூங்காவில் அமர்ந்திருந்தனர்..!

ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந்த ஒரு சிறிய பால் கடையிலிருந்து இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் கப்புகளோடு வெளியே வந்தான் மகரிஷி..

பால் கடை அதிகாலையிலேயே திறக்கப்படுவது வழக்கம்.. அங்கு ஐஸ் கிரீம் மில்க் ஷேக் அனைத்தும் காலாவதியாகும் தேதிகளோடு ஸ்டாக் இருக்கும் என்பதால் சந்திரமதிக்கு பிடித்ததை இந்த விடியற்காலையில் வாங்கித் தர முடிந்தது அவனால்..

"சந்திர மாவுக்கு வெனிலா தானே பிடிக்கும்.."

"ம்ம்..!" என்றவளின் கண்கள் பனிக்கூழை ஆர்வத்தோடு தழுவியது..

புன்னகையோடு அவளிடம் ஒரு கப்பை நீட்டிவிட்டு.. அவசர அவசரமாக உண்டு முடித்தவளிடம் இன்னொரு கப்பையும் தந்தான். மகரிஷி..!

"ம்ம்.. சாப்பிட்டு முடிச்சாச்சா.." என்று வாயை துடைக்க தன் கைகுட்டையை எடுத்து நீட்டவும்.. எந்தவித தயக்கமும் இல்லாமல் அவனிடமிருந்து கைக்குட்டையை வாங்கி வாயை துடைத்துக் கொண்டு..

"ம்ம்..! சாப்பிட்டுட்டேன் ரிஷி" என்றாள் சந்திரமதி..

"இன்னொன்னு வேணுமா..?"

"வேண்டாம் போதும்.."

"சரி அப்ப பேசலாமா..?"

என்ன பேசணும் என்பதாய் அவள் பார்வை தயக்கமும் பயமுமாக மிரண்டு விழித்தது..

மென்மையாய் சிரித்தான் அவன்..

"டோன்ட் ஒரி சந்திரா மா.. ஐம் ஆல்வேஸ் வித் யூ.. தேவையில்லாததை பேசி உன்னை கவலை படுத்த மாட்டேன்.. ஆனா எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்..‌ நீதான் ரொம்ப ஆர்வமா அந்த வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிச்சு நின்ன..? இப்ப போனதை விட வேகமா அந்த வீட்டிலருந்து திரும்பி வரணும்னு அழுது என்னை கூட்டிட்டு போகச் சொன்னதும் நீதான்.. அங்க என்னதான்டா நடந்துச்சு.. ஒவ்வொரு நாள் கால் பண்ணு போதும் அங்க எல்லாம் சரியா போகுதுன்னு சொன்னியே..! ஏன் அங்க இருக்கிறவங்க உன்னை ஏதாவது திட்டினாங்களா..! அடிச்சாங்களா..?"

சந்திரமதி தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்‌‌..

"சந்திரமதி ஏதாவது பேசு..! நீ வாய தொறந்தா தான் உண்மை வெளியே வரும்.. நாளைக்கு உன்னோட அப்பா போலீசோட வந்து நான் உன்னை கட்டாயப்படுத்தி அங்கிருந்து கூட்டிட்டு வந்ததா சொன்னா என் பக்கம் பேச நியாயமான காரணங்கள் வேணும் இல்லையா..! சொல்லுமா.. அங்க இருந்தவங்க உன்னை ஏதாவது கொடுமை படுத்தினாங்களா..?"

"அவங்க யாரு என்னை கொடுமைப்படுத்தல.."

மகரிஷி கண்கள் சுருக்கினான்..

"அப்புறம்..?"

"அந்த வீட்ல என்னோட முக்கியத்துவம் என்னன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு.. அம்மா என்னை பாத்துக்கிட்டதுக்கும் அப்பா என்னை கவனிச்சுக்கிட்டதுக்கும் நிறையவே வித்தியாசம்..! "

"முதல் ரெண்டு நாள் அங்க இருந்தவங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க.. நானும் அவங்க எல்லாரும் என் மேல ரொம்ப பாசமா இருக்கிறதா நினைச்சேன்.. இவ்ளோ பாசமானவங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டதா அம்மா மேல எனக்கு ரொம்ப கோவமா வந்துச்சு.. ஆனா அடுத்த நாள்லருந்து அந்த வீட்ல யாருமே என்னை கண்டுக்கல.. சாப்பிடறியான்னு கூட யாரும் கேட்கல.. யாருமே எனக்கு தலை வாரி விடல.. பக்கத்துல உட்கார்ந்து தலையை தடவி பாசமா பேசின பாட்டி கூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போனாங்க.. அப்பா என்கிட்ட முகம் கொடுத்து பேசவே இல்ல.. அவங்க எல்லாரும் கூடி கூடி பேசினத வச்சு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.."

"அம்மாவ என் மூலமா இங்க வரவழைச்சு அவங்கள வேலை பார்க்க வச்சு சம்பளத்தை பிடுங்கி கிட்டு எல்லாரும் சொகுசா வாழலாம்னு பேசிக்கிட்டாங்க.."

"அப்படியா..?"

"ஆமா ரிஷி..! என்னென்னமோ சொல்றாங்க.. அம்மாவும் நானும் அப்பா கூட இருந்தா தான் அவருக்கு மரியாதை கிடைக்குமாம்.. உன்ன மதிச்சி எவனாவது வேலை தரனும்னா குடும்பம்னு ஒன்னு வேணும்.. இந்த சின்னக் குட்டியால அவ இங்க வரட்டும்.. இல்லைன்னா இந்த பொட்ட கழுதையை வீட்ல வச்சு பாத்துக்க எனக்கென்ன தலையெழுத்தான்னு பாட்டி என்னை திட்டுனாங்க..!" சந்திரமதியின் கண்களில் நீர் நிரம்பியது..

மகரிஷி ஆறுதலாய் அவள் தோளை தட்டிக் கொடுத்தான்..

"அப்பா ஸ்கூல்ல வந்து பாசமா பேசின மாதிரி வீட்ல நடந்துக்கல.. வேற மாதிரி என்னை வெறுப்பா பார்த்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை.. சாப்பிட்டியானு கூட கேக்கல.. அடிக்கடி ஃபோன் தரேன் உன் அம்மாவுக்கு போன் பண்ணி பேசி இங்க வர சொல்லுன்னு சொல்லிட்டே இருந்தாரு.. நான் பேச மாட்டேன்னு சொன்னபோது எரிச்சலா என்னை திட்டுனாரு..! அப்புறம் தான் இதெல்லாம்.."

"பாட்டிக்கு என்னை பிடிக்கவே இல்லை.. தாத்தா பார்வையே சரியில்ல..! பசிச்சா நானே போட்டு சாப்பிடணும்.. அது கூட சில நேரத்துல சாப்பாடு இருக்காது.. ஒரு நாள் நேரம் கழிச்சு சாப்பிட்டு வயிற்றுக்கு சேராம வாந்தி எடுத்துட்டேன்.. பாட்டி என்னை ரொம்பவே திட்டுனாங்க.. தலையில அடிச்சுட்டாங்க ரிஷி.." அழுது கொண்டே சொன்னாள் சந்திரமதி..

"வந்தவுடனே அப்பா கிட்ட வேற இதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க.. அப்பா ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டினாரு.."

"அம்மா என்னை எப்படியெல்லாம் பாத்துக்குவாங்க தெரியுமா..! எனக்கு ஜுரம் வந்துட்டா ராத்திரியெல்லாம் தூங்காமல் தொட்டு தொட்டு பார்த்து மருந்து தருவாங்க.. வாந்தி எடுத்தா சுடுதண்ணி வச்சு நெஞ்செல்லாம் துடைச்சு விடுவாங்க.. தூக்கத்துல படுக்கையில பாத்ரூம் போயிட்டா கூட அன்பாதான் சொல்லுவாங்க.. எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தாலும் கூட ஒருநாளும் என்னை சாப்பிடாம இருக்க விட்டதே இல்ல.. நான் பேசாம இருந்தா கூட அவங்கதான் தலை எல்லாம் மாறிவிடுவாங்க.. எனக்கு அம்மாகிட்ட போகணும்.. அம்மா வேணும்.."

சந்திரமதிக்குள் ஒளிந்திருந்த குழந்தை வெளியே வந்து அழ துவங்கியது..

"போகலாம்.. பத்து நிமிஷம்.. உன்ன கொண்டு போய் உன் அம்மாகிட்ட சேர்த்துடுவேன்.. ஆனா நீ எதையும் முழுசா சொல்லி முடிக்கல.." என்றதும் கண்களை துடைத்துக் கொண்டு பேச துவங்கினாள் சந்திரமதி..

"அப்பா தினமும் குடிச்சுட்டு வர்றாரு ரிஷி.. அவர் உள்ள வரும்போது எனக்கு அந்த வாசனையே பிடிக்கல..! வாந்தி வருது.. அம்மா ஏன் அப்பாவை வேண்டாம்ன்னு சொன்னாங்க நீ இப்ப புரியுது.. என்னால நாலு நாளைக்கு மேல அங்க இருக்க முடியல.. அம்மா எப்படி இந்த வீட்டுக்கு வர சம்மதிப்பாங்க.. அவங்க வர்றேன்னு சொன்னாலும் நான் அவங்களை இந்த வீட்டுக்கு வரவிடவே மாட்டேன்.. ஏன் தெரியுமா..?"

"ஏன்..?" புருவங்களை ஏற்று இறக்கினான் மகரிஷி..

"அவங்க எல்லாரும் அம்மாவை பற்றி தப்பு தப்பா என்கிட்ட சொல்றாங்க.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. அம்மா எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு தெரியாதா..? ஏன் இப்படியெல்லாம் சொல்லணும்.." சந்திரமதி மீண்டும் அழுகை..

"யார் என்ன பேசினாலும் உன் அம்மா நல்லவங்கன்னு உனக்கு தெரியுது இல்ல..?"

"ம்ம்..! அவங்க பொய் சொல்றாங்க.. அம்மா ரொம்ப நல்லவங்க.. இவங்கதான் கெட்டவங்க.. இவங்க யாருமே எனக்கு வேண்டாம் அப்பா வேண்டாம்.. பாட்டி வேண்டாம்.. அம்மா தான் வேணும்.." துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை கைகுட்டையால் அழுத்தமாய் துடைத்து விட்டான் மகரிஷி..

"உண்மைதான்..! உன் அம்மாவ உன் கிட்ட தப்பானவளா காட்டி.. அவங்கள வீழ்த்தி தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கலாம்னு பார்த்திருக்காங்க..! நல்லவேளை.. நீ உன் அம்மாவை புரிஞ்சுகிட்டியே அதுவே சந்தோஷம்.. ஆனா அம்மாவோட அருமை உணர்ந்த பொண்ணு.. ஃபோன் பண்ணும் போது ஒருநாள் கூட நான் அவங்க கிட்ட பேசணும்னு ஒரு வார்த்தை கூட கேட்கலையே..?"

"நான் அம்மாவுக்கு போன் பண்ணி பேசியிருந்தா அவங்க உடனே இங்க வந்துருப்பாங்க.. அப்பா வீட்ல எல்லாருமா சேர்ந்து அவர்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோனு எனக்கு பயமா இருந்துச்சு.. அதனால தான் அம்மா கிட்ட பேசல.." என்றவளின் தலையை செல்லமாய் கலைத்து விட்டான் மகரிஷி..

"அப்போ சந்திராம்மா இனி அவங்களோட அம்மாவை திட்ட மாட்டாங்க.. அப்படித்தானே..?"

"அம்மா கிட்ட போகணும் ரிஷி.."

"ஓகே டன் புறப்படலாமா..!" என்று தொடையை தட்டிக் கொண்டு இதோ அருந்ததியிடம் சந்திரமதியை கொண்டு வந்து ஒப்படைத்திருந்தான்..

மகளை வாரியணைத்து நெற்றி கன்னம் என்று முகம் எங்கும் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டு அழுதாள் அருந்ததி..

இருவரும் கட்டியணைத்தபடி முட்டி போட்டு அங்கேயே அமர்ந்து விட.. சுற்றி சுற்றி வந்த மோத்தி தாய் மகளோடு சேர்ந்து கொண்டான்..

சற்று தள்ளி தொலைவில் நின்றிருந்த ஒருவனது மனமோ மூவரில் ஒருவராக சேர்ந்து கொண்டு நால்வரும் ஒரே குடும்பமாகும் எண்ணத்தை புதிதாக முளை விட்டுக் கீறிய விதையாக ஈரப் பதத்தோடு துளிர்க்க வைத்திருந்தது..

தொடரும்..
ஏன் சந்தூ குட்டி நல்ல பொண்ணு தான் என்ன அப்பப்ப குட்டி சாத்தான் வந்து போச்சி இனிமே குட் சாத்தானா மட்டுமே இருப்ப சூப்பரு
அப்பாங்கறது வார்த்தையில்ல உணர்வுகளின் குவியல் வாழ்க்கையின் வடிவை கற்று தரும் ஆசான் ஆனா இங்க பல ஜென்மங்களுக்கு அதன் மகிமை தெரியல 😏😏😏😏😏😏😏😏😏😏😏
அரு மா பொண்ண மட்டுமே பாக்குறியே அங்க ஒரு நாலு கால் ஜீவனும் ரெண்டு கால் ஜீவனும் உங்க ரெண்டு பேரு பாசமழையில சேர்ந்து நனைய படுபயங்கர ஆர்வமா ஆவலா காத்திருந்து பாக்குது அவங்கள கொஞ்சம் பாக்குது பாவம் பசங்க 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Last edited:
Member
Joined
May 3, 2025
Messages
42
Intha episode ku ivlo wait panathu worth tha...epadiyo rishi ala purinjukita mathi....epavum pakathula iruntha arumai theriyathu...
Rishi kula iruka vidhai mulachu sedi aguma ila arunthadhi pidingi erunjuruvala??...papomm.... interesting
 
Member
Joined
Feb 26, 2025
Messages
26
Mathi குட்டிkku உண்மை புரிஞ்சிடுச்சு... யாரு நிஜம் யாரு போலி னு தெளிவு vanthuruchu... அருமை
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
34
மதி நீ அம்மாவைப் பற்றி புரிந்து கொண்டாயே அதுவே மகிழ்ச்சி மா... இனி எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் உங்கம்மாக்கு பக்க பலமா நீ இருப்ப... 🥰🥰🥰🥰
தேங்க்யூ சோ மச் ரிஷி... உன்னை போல நல்ல நண்பனோ கணவனோ கிடைத்தால் பெண்கள் உன்னை கொண்டாடித் தீர்ப்பார்கள்... அவ்ளோ தீர்க்கதரிசனம் உன்ட்ட இருக்கு..... 🥰🥰🥰🥰🥰
 
New member
Joined
Feb 20, 2025
Messages
8
மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்..

ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு அழைத்து பேசும்போது அவள் குரலிலும் பேச்சிலும் தெரியும் மாற்றங்களில் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஊடகமாக கண்டு கொண்டாலும் மிக கவனமாக சந்திரமதியை அருந்ததியிடம் பேசவிடாமல் தவித்திருந்தான்..

அம்மா இருக்காங்களா..? அம்மா சாப்பிட்டாங்களா..! அம்மா பக்கத்துல இல்லையா என்று அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் அம்மாவிடம் பேசிவிட வேண்டுமென்ற தவிப்பு தெரிந்த போதிலும் ஒன்று அறியாதவன் போல் வெறும் ம்ம்.. இல்ல என்ற பதில்களின் மூலம் அருந்ததி பற்றிய உரையாடலை கடந்து பேச்சை மாற்றியிருந்தான்..

தகப்பன் வீட்டுக்கு போகும் குஷியில் சந்திரமதி பள்ளிக்கு மட்டம் போட்டிருந்தாலும் சின்னவளின் நிலை பற்றி அறிந்து கொள்ள மகரிஷி நாளைக்கொருமுறை பிரபாகரனின் வீட்டை கண்காணிக்கும் சங்கதி அருந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை.. ஃபோனில் அழைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சந்திரமதி வெளியே வந்து நின்று கண்களை மூடி திறந்து ஒரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.. அப்படி சிரித்தால் அவள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒருவேளை சிரிக்காமல் அழுகையை சமிங்ஞையாக வெளிப்படுத்தினால் மகரிஷி அதிரடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை பற்றி யோசிக்க வேண்டும்..

மதி தந்தையின் வீட்டிலிருந்து மகரிஷியோடு புறப்பட்டு வருவதற்கு முந்தைய நாள் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போனதில் பதட்டப்பட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற மகரிஷி வழக்கம் போல் சற்று தொலைவிலிருந்த டீக்கடையில் நின்று அந்த வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தான்..!

முன் அந்தி மாலையில் சிரிப்பை உதிர்த்த சிறுமலர் இப்போது ஏன் அழைப்பை ஏற்கவில்லை..! அவளும் ஏன் அழைக்கவில்லை..
நேரடியாக பிரபாகரனின் வீட்டுக்கே சென்று பிள்ளையை சந்திக்கலாமா..? என்றுமில்லாத பதட்டத்துடன் இதயம் அதிக அழுத்தத்தோடு துடித்துக் கொண்டிருக்க..‌ தெய்வாதீனமாக வெளியில் வந்து காத்தாட நின்ற மதியை பார்க்க நேர்ந்தது..

"ஐயோ சந்திரா மா.. ஒக்க நிமிஷலோன் பிரானம் போயிந்தி..!" உள்ளுக்குள் முணுமுணுத்தவாறு இழுத்து பெருமூச்சு விட்டவன் கையை அசைத்து சந்திராவை அழைத்தான்..

பிரபாகரன் வீட்டுக்கு கொண்டு போய் விடும் முன்னே கடைக்கு அழைத்து சென்று சுடிதார் ஸ்கர்ட் டாப்.. என அவள் விருப்பத்திற்கு ஏற்றபடி நான்கு உடைகளை வாங்கி தந்திருந்தான்..!

இத்தனை நாட்களாக அவன் வாங்கித் தந்த உடைகளை தான் மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள் சந்திரமதி..

பெற்ற தகப்பனோ.. தகப்பன் வழி பாட்டியோ தாத்தாவோ சந்திரமதிக்கு புது ஆடைகள் வாங்கித் தந்ததாக தெரியவில்லை..!

எங்கு நின்றாலும் பளிச்சென தெளிவாக தெரியும் அவன் நெடிய உருவம் கண்டு கண்களை சிமிட்டி இதழ் வரிய கள்ளமில்லாமல் புன்னகைத்தாள் சந்திரா..

"சந்திரமா.. நீ ஓகே தானே..?" சைகையின் மூலம் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தான்..

அவளும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சைகையின் மூலம் சொல்லியிருக்க..

"அப்புறம் ஏன் போன் எடுக்கல..?" என்றான் கையை மடக்கி காதின் பக்கத்தில் வைத்து சைகையின் மூலம் உணர்த்தி..!

"சார்ஜ தீந்து போச்சு..! ஸ்விட்ச் ஆஃப் அதனாலதான் எடுக்கல..‌" சற்று தொலைவில் நின்று அவள் இப்படி சொன்னது அவனுக்கு புரிந்ததோ இல்லையோ..

இழுத்து பெருமூச்சு விட்டவன் "நீ நல்லா இருக்கியா..?" என்றான் மறுபடி..

"ம்ம்..!" என்ற தலையசைத்தவளின் கண்களில் சந்தோஷம் தெரியவில்லை..

"நான் வேணா வரட்டுமா..? இல்ல உன் அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா..?"

வேண்டாம் என்றாள்..

"நான் போகட்டுமா..!"

போ என்றாலும் இதழ் பிதுக்கி அழுவதை போல் தோன்றியது அவனுக்கு..

அன்று வெகு நேரம் அந்த இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான் அவன்..

சந்திரமதி வீட்டுக்குள் சென்று எந்த பிரச்சினையும் இல்லை என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் அந்த போனில் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகுதான் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்..

முடிந்தவரை சந்திரமதியை தன் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தான் மகரிஷி..

மற்ற நேரங்களில் பாதுகாப்பாக கவனமாக இருப்பதெப்படி.. பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும்.. தவறானவர்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும்.. தற்காப்பு கலையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகப் பொறுமையாக அவளுக்கு சொல்லித் தந்திருந்தான்..

தற்காப்பு கலையை அவன் ஒன்றும் பெரிதாக மெனக்கெட்டு சொல்லித் தரவில்லை.. அரசு பள்ளிகளில் இப்போது ஆறாம் வகுப்பிலிருந்து பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மகரிஷிக்கும் மதிக்கும் வசதியாகி போனது..!

குட் டச் பேட் டச் இதெல்லாம் கிடையாது.. ஒன்லி நோ டச்..! யாராவது உன் மேல கைய வைக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே அவங்க கண்களை கூர்மையாக கவனி.. அந்த நாய்களோட இன்டென்ஷன் என்னதுன்னு உனக்கு தெரிஞ்சு போயிடும்..! அடுத்த நொடி என்ன செய்யணும்னு துரிதமா யோசிச்சு செயல்படனும் கொஞ்சம் கூட பயப்படக்கூடாது..!" என இரண்டு மணி நேரம் அவளை உட்கார வைத்து பொறுமையாக விளக்கி தான் அனுப்பி இருந்தான்..


இப்படி மிக ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்ட போதிலும்.. அடுத்த நாளில்.. அம்மா வேணும் அம்மாவை பாக்கணும்..! என சந்திரமதி தேம்பித் தேம்பி ஒரே அழுகை..! அதிலும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே அழைத்திருந்ததில் ஃபோனை காதில் வைத்து பேசியபடியே வெளியே வந்தவன் அழுபடியே உறங்கி போயிருந்த அருந்ததியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிட்டிகை போடும் தருணத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து விட்டான்..

அம்மா வேணும்.. அம்மா அம்மா.. இந்த வார்த்தை.. இந்த பாசம் இதைத்தான் அவனும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.. ஆனாலும் இந்த சின்னஞ்சிறியவளின் அழுகை மகரிஷியின் நெஞ்சை வதைக்கிறது..! ஏதோ ஒரு இனம் புரியாத பாசம்.. சந்திரமதியை ஒரு தாயின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான் ஆனால் அவள் அழுகையில் மகரிஷியின் நெஞ்சம் தகப்பன் ஸ்தானத்திலிருந்து பதறியது..

சந்திரமதிய கூட்டிட்டு போறேன் என்று பிரபாகரனின் வீட்டில் போய் நின்ற போது.. கையை முறுக்கிக் கொண்டு முன்னே வந்து நின்ற பிரபாகரன் ரிஷியின் உடற்கட்டில் பின்வாங்கினான்..

"என் பொண்ண கூட்டிட்டு போறதுக்கு நீங்க யாரு..! இனி அவ என் கூட தான் இருப்பா.. நீ என்ன பண்றே..! போய் இவளோட அம்மாவ வர சொல்லு.." திடீரென ஒருமைக்கு தாவி எகத்தாளமாகச் சொன்னான்..

"அதை நீயே போய் சொல்லு.. இப்ப நான் சந்திரமதிய கூட்டிட்டு போய் அவங்க அம்மாகிட்ட விடனும்.." ரிஷி அதைவிட மிடுக்கான உடல்மொழியில் நின்றான்..

"இவள பெத்தவன் நான்.. என்னை மீறி கூட்டிட்டு போயிடுவியா நீ..!"

"பெத்த பிள்ளையாவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி வீட்டுல அடைச்சு வைக்க முடியாது..! பெண் குழந்தைகள் அம்மா கிட்டதான் வளரணும் கோர்ட்டுக்கு போனாலும் உன் வாதம் எடுபடாது.."

"ஹாஹா..! இப்பதானே புரியுது.. ஜிம் பாடியோட அழகா பதவி சா ஒருத்தன் பக்கத்திலேயே இருக்கும்போது என்கிட்ட வாழ வருவாளா அவ..?" மகரிஷியை ஏற இறங்க பார்த்தபடி பிரபாகரன் நக்கலாக பல்லிளிக்க..

"அதானே பிரபா..! வருஷத்துக்கு ஒரு ஆம்பளையை மாத்தறவளுக்கு உன் கூட எப்படி வாழனும்னு தோணும்..‌ பொண்ணு பொண்டாட்டின்னு நீ மட்டும் ஆசை வச்சா போதாது..! குடும்பம் புருஷன்னு அவளும் மனசு வைக்கணும்..!" இது பிரபாகரனின் அம்மா..

சின்ன குழந்தையின் முன்பு இது போன்று அருவருப்பாக பேசும் பிரபாகரன் வீட்டுஆட்களை கோபமாகவும் சந்திரமதியை சங்கடமாகவும் பார்த்த மகரிஷி அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மூச்சை ஆசுவாசமாக இழுத்து விட்டபடி சந்திரமதியை கனிவோடு கைநீட்டி அழைத்தான்..

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் பக்கத்தில் வந்து நின்று அவன் கைப்பற்றிக் கொண்டாள் சந்திரமதி..

"ஏய்.. மதி.. அறிவில்ல.. கண்டவன் கைய பிடிச்சுகிட்டு அவன் பக்கத்துல போய் நிக்கிற.. அப்பா சொல்றேன் உள்ள போ.." என்றவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தபடி அமைதியாக நின்றாள் சந்திரமதி..

"அதானே பார்த்தேன்.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு சொல்லுவாங்களே அது சரியா தான் இருக்குது.. உன் அம்மாவ போல உனக்கு கொழுப்பு கூத்தாடுது..! அதான் எவனோ ஒருத்தன் வந்து கூப்பிட்ட உடனே தகப்பன மதிக்காம அவன் கூட போய் நிக்கற.. பாத்துக்கிட்டே இரு என்னைக்காவது ஒரு நாள் இவனும் உன் ஆத்தாளும் சேர்ந்து உன்னை.." முடிப்பதற்குள் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது..!

நடந்ததை உணர்ந்து கொண்டு மூக்கிலிருந்து கொட்டிய ரத்தத்தை கையால் பிடித்தபடி அதிர்ந்த விழிகளோடு மகரிஷியை பார்த்தான் பிரபாகரன்..

"ஐயோ என் பிள்ளையை அடிச்சுட்டானே பாவி பைய.. நீயெல்லாம் நல்லா இருப்பியா நாசமா தான்டா போவ..! உன்னை மயக்கி இங்க அனுப்பி வச்சிருக்காளே அந்த எடுபட்ட சிறுக்கி.. அந்த நாய் புழு புழுத்துதான்டா சாவா.. என் மவன அசிங்கப்படுத்தி வாழ விடாம செய்யற உங்களுக்கெல்லாம் நல்ல கதியே வராதுடா..!" பிரபாகரனின் தாய் சங்கரி தலைவிரி கோலமாக அழுது மண்ணை வாரி தூத்தாத குறையாக சாபம் விட்டுக் கொண்டிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் சந்திரமதியோடு வெளியேறினான் ரிஷி..

"ஐயோ நம்ம வீட்டு பிள்ளைய கடத்திட்டு போறானே இந்த கேடு கெட்டவன்.. டேய் பொறுக்கி நாயே.. கேட்க ஆள் இல்லையா..? யாராவது வாங்களேன்..!" சத்தம் போட்டு ஊரைக் கூட்ட யாரும் வந்து எட்டிப் பார்த்ததாய் தெரியவில்லை.. ஓடி வந்து வழியை மறித்துக் கொண்டு நின்ற மாமனார் மருதமுத்துவை தோளால் இடித்து தள்ளிவிட்டு சாதாரணமாக சென்றான் ரிஷி..

மாரடைப்பு கண்டவன் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் மருதமுத்து..

"வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் பண்ணி என் பொண்ண தூக்கிட்டு போறியா..! உன்னையும் அந்த தே...ளையும் போலீஸ்ல கேஸ் போட்டு உள்ள தள்ளி கம்பி என்ன வைக்கல நான் பிரபாகரன் இல்லடா.." மூக்கில் வடிந்த ரத்தத்தோடு கத்தினான் பிரபாகரன்..

மிரட்டி குதறும் பார்வையோடு திரும்பி உள்ளே வந்தவனை கண்டு பிரபாகர் அறைக்குள் ஒளிந்து கதவை சாத்திக் கொள்ள..

"முதல்ல தைரியமிருந்தா வெளிய வந்து பேசுடா நாயே..! அப்புறம் கேஸ் போடலாம்.." நக்கலும் ஆத்திரமுமாக சொல்லிவிட்டு தன்னை அழைத்துக் கொண்டு வெளியேறியவனை ஆனந்த வியப்போடு நிமிர்ந்து பார்த்தாள் சிறியவள்..

விவரம் தெரியாத வயதிலிருந்து அப்பா என்ற ஆஸ்தான பதவியிலமர்ந்து சமீப காலங்களில்.. அப்பா தனது முதல் ஹீரோ என்ற கீரிடம் வைக்கும் ஸ்தானத்திற்கு முன்னேறியிருந்த பிரபாகரனை அந்த இடத்திலிருந்து வெகு சுலபமாக பிடுங்கி எறிந்துவிட்டு மகரிஷியை தானாகவே அவ்விடத்தில் பொருத்திக்கொண்டது இளையவளின் மனது..

மை டாட் இஸ் எ ஹீரோ..

எஸ் ஹீரோ..

ஆனால் இங்கே அப்பா என்ற வார்த்தை வெளிபடையாக யோசிக்கப் படாமல் உணர்வுகளின் உருவாகிப் போனது அந்த உறவு..

மகரிஷி சந்திரமதி இருவரும் ஒரு சிறுவர் பூங்காவில் அமர்ந்திருந்தனர்..!

ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந்த ஒரு சிறிய பால் கடையிலிருந்து இரண்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் கப்புகளோடு வெளியே வந்தான் மகரிஷி..

பால் கடை அதிகாலையிலேயே திறக்கப்படுவது வழக்கம்.. அங்கு ஐஸ் கிரீம் மில்க் ஷேக் அனைத்தும் காலாவதியாகும் தேதிகளோடு ஸ்டாக் இருக்கும் என்பதால் சந்திரமதிக்கு பிடித்ததை இந்த விடியற்காலையில் வாங்கித் தர முடிந்தது அவனால்..

"சந்திர மாவுக்கு வெனிலா தானே பிடிக்கும்.."

"ம்ம்..!" என்றவளின் கண்கள் பனிக்கூழை ஆர்வத்தோடு தழுவியது..

புன்னகையோடு அவளிடம் ஒரு கப்பை நீட்டிவிட்டு.. அவசர அவசரமாக உண்டு முடித்தவளிடம் இன்னொரு கப்பையும் தந்தான். மகரிஷி..!

"ம்ம்.. சாப்பிட்டு முடிச்சாச்சா.." என்று வாயை துடைக்க தன் கைகுட்டையை எடுத்து நீட்டவும்.. எந்தவித தயக்கமும் இல்லாமல் அவனிடமிருந்து கைக்குட்டையை வாங்கி வாயை துடைத்துக் கொண்டு..

"ம்ம்..! சாப்பிட்டுட்டேன் ரிஷி" என்றாள் சந்திரமதி..

"இன்னொன்னு வேணுமா..?"

"வேண்டாம் போதும்.."

"சரி அப்ப பேசலாமா..?"

என்ன பேசணும் என்பதாய் அவள் பார்வை தயக்கமும் பயமுமாக மிரண்டு விழித்தது..

மென்மையாய் சிரித்தான் அவன்..

"டோன்ட் ஒரி சந்திரா மா.. ஐம் ஆல்வேஸ் வித் யூ.. தேவையில்லாததை பேசி உன்னை கவலை படுத்த மாட்டேன்.. ஆனா எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்..‌ நீதான் ரொம்ப ஆர்வமா அந்த வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிச்சு நின்ன..? இப்ப போனதை விட வேகமா அந்த வீட்டிலருந்து திரும்பி வரணும்னு அழுது என்னை கூட்டிட்டு போகச் சொன்னதும் நீதான்.. அங்க என்னதான்டா நடந்துச்சு.. ஒவ்வொரு நாள் கால் பண்ணு போதும் அங்க எல்லாம் சரியா போகுதுன்னு சொன்னியே..! ஏன் அங்க இருக்கிறவங்க உன்னை ஏதாவது திட்டினாங்களா..! அடிச்சாங்களா..?"

சந்திரமதி தரையை பார்த்தபடி அமைதியாக இருந்தாள்‌‌..

"சந்திரமதி ஏதாவது பேசு..! நீ வாய தொறந்தா தான் உண்மை வெளியே வரும்.. நாளைக்கு உன்னோட அப்பா போலீசோட வந்து நான் உன்னை கட்டாயப்படுத்தி அங்கிருந்து கூட்டிட்டு வந்ததா சொன்னா என் பக்கம் பேச நியாயமான காரணங்கள் வேணும் இல்லையா..! சொல்லுமா.. அங்க இருந்தவங்க உன்னை ஏதாவது கொடுமை படுத்தினாங்களா..?"

"அவங்க யாரு என்னை கொடுமைப்படுத்தல.."

மகரிஷி கண்கள் சுருக்கினான்..

"அப்புறம்..?"

"அந்த வீட்ல என்னோட முக்கியத்துவம் என்னன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு.. அம்மா என்னை பாத்துக்கிட்டதுக்கும் அப்பா என்னை கவனிச்சுக்கிட்டதுக்கும் நிறையவே வித்தியாசம்..! "

"முதல் ரெண்டு நாள் அங்க இருந்தவங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க.. நானும் அவங்க எல்லாரும் என் மேல ரொம்ப பாசமா இருக்கிறதா நினைச்சேன்.. இவ்ளோ பாசமானவங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டதா அம்மா மேல எனக்கு ரொம்ப கோவமா வந்துச்சு.. ஆனா அடுத்த நாள்லருந்து அந்த வீட்ல யாருமே என்னை கண்டுக்கல.. சாப்பிடறியான்னு கூட யாரும் கேட்கல.. யாருமே எனக்கு தலை வாரி விடல.. பக்கத்துல உட்கார்ந்து தலையை தடவி பாசமா பேசின பாட்டி கூட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போனாங்க.. அப்பா என்கிட்ட முகம் கொடுத்து பேசவே இல்ல.. அவங்க எல்லாரும் கூடி கூடி பேசினத வச்சு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.."

"அம்மாவ என் மூலமா இங்க வரவழைச்சு அவங்கள வேலை பார்க்க வச்சு சம்பளத்தை பிடுங்கி கிட்டு எல்லாரும் சொகுசா வாழலாம்னு பேசிக்கிட்டாங்க.."

"அப்படியா..?"

"ஆமா ரிஷி..! என்னென்னமோ சொல்றாங்க.. அம்மாவும் நானும் அப்பா கூட இருந்தா தான் அவருக்கு மரியாதை கிடைக்குமாம்.. உன்ன மதிச்சி எவனாவது வேலை தரனும்னா குடும்பம்னு ஒன்னு வேணும்.. இந்த சின்னக் குட்டியால அவ இங்க வரட்டும்.. இல்லைன்னா இந்த பொட்ட கழுதையை வீட்ல வச்சு பாத்துக்க எனக்கென்ன தலையெழுத்தான்னு பாட்டி என்னை திட்டுனாங்க..!" சந்திரமதியின் கண்களில் நீர் நிரம்பியது..

மகரிஷி ஆறுதலாய் அவள் தோளை தட்டிக் கொடுத்தான்..

"அப்பா ஸ்கூல்ல வந்து பாசமா பேசின மாதிரி வீட்ல நடந்துக்கல.. வேற மாதிரி என்னை வெறுப்பா பார்த்தாரு.. என்னை கண்டுக்கவே இல்லை.. சாப்பிட்டியானு கூட கேக்கல.. அடிக்கடி ஃபோன் தரேன் உன் அம்மாவுக்கு போன் பண்ணி பேசி இங்க வர சொல்லுன்னு சொல்லிட்டே இருந்தாரு.. நான் பேச மாட்டேன்னு சொன்னபோது எரிச்சலா என்னை திட்டுனாரு..! அப்புறம் தான் இதெல்லாம்.."

"பாட்டிக்கு என்னை பிடிக்கவே இல்லை.. தாத்தா பார்வையே சரியில்ல..! பசிச்சா நானே போட்டு சாப்பிடணும்.. அது கூட சில நேரத்துல சாப்பாடு இருக்காது.. ஒரு நாள் நேரம் கழிச்சு சாப்பிட்டு வயிற்றுக்கு சேராம வாந்தி எடுத்துட்டேன்.. பாட்டி என்னை ரொம்பவே திட்டுனாங்க.. தலையில அடிச்சுட்டாங்க ரிஷி.." அழுது கொண்டே சொன்னாள் சந்திரமதி..

"வந்தவுடனே அப்பா கிட்ட வேற இதை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க.. அப்பா ரொம்ப அசிங்க அசிங்கமா திட்டினாரு.."

"அம்மா என்னை எப்படியெல்லாம் பாத்துக்குவாங்க தெரியுமா..! எனக்கு ஜுரம் வந்துட்டா ராத்திரியெல்லாம் தூங்காமல் தொட்டு தொட்டு பார்த்து மருந்து தருவாங்க.. வாந்தி எடுத்தா சுடுதண்ணி வச்சு நெஞ்செல்லாம் துடைச்சு விடுவாங்க.. தூக்கத்துல படுக்கையில பாத்ரூம் போயிட்டா கூட அன்பாதான் சொல்லுவாங்க.. எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தாலும் கூட ஒருநாளும் என்னை சாப்பிடாம இருக்க விட்டதே இல்ல.. நான் பேசாம இருந்தா கூட அவங்கதான் தலை எல்லாம் மாறிவிடுவாங்க.. எனக்கு அம்மாகிட்ட போகணும்.. அம்மா வேணும்.."

சந்திரமதிக்குள் ஒளிந்திருந்த குழந்தை வெளியே வந்து அழ துவங்கியது..

"போகலாம்.. பத்து நிமிஷம்.. உன்ன கொண்டு போய் உன் அம்மாகிட்ட சேர்த்துடுவேன்.. ஆனா நீ எதையும் முழுசா சொல்லி முடிக்கல.." என்றதும் கண்களை துடைத்துக் கொண்டு பேச துவங்கினாள் சந்திரமதி..

"அப்பா தினமும் குடிச்சுட்டு வர்றாரு ரிஷி.. அவர் உள்ள வரும்போது எனக்கு அந்த வாசனையே பிடிக்கல..! வாந்தி வருது.. அம்மா ஏன் அப்பாவை வேண்டாம்ன்னு சொன்னாங்க நீ இப்ப புரியுது.. என்னால நாலு நாளைக்கு மேல அங்க இருக்க முடியல.. அம்மா எப்படி இந்த வீட்டுக்கு வர சம்மதிப்பாங்க.. அவங்க வர்றேன்னு சொன்னாலும் நான் அவங்களை இந்த வீட்டுக்கு வரவிடவே மாட்டேன்.. ஏன் தெரியுமா..?"

"ஏன்..?" புருவங்களை ஏற்று இறக்கினான் மகரிஷி..

"அவங்க எல்லாரும் அம்மாவை பற்றி தப்பு தப்பா என்கிட்ட சொல்றாங்க.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. அம்மா எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு தெரியாதா..? ஏன் இப்படியெல்லாம் சொல்லணும்.." சந்திரமதி மீண்டும் அழுகை..

"யார் என்ன பேசினாலும் உன் அம்மா நல்லவங்கன்னு உனக்கு தெரியுது இல்ல..?"

"ம்ம்..! அவங்க பொய் சொல்றாங்க.. அம்மா ரொம்ப நல்லவங்க.. இவங்கதான் கெட்டவங்க.. இவங்க யாருமே எனக்கு வேண்டாம் அப்பா வேண்டாம்.. பாட்டி வேண்டாம்.. அம்மா தான் வேணும்.." துடைக்க துடைக்க வழிந்த கண்ணீரை கைகுட்டையால் அழுத்தமாய் துடைத்து விட்டான் மகரிஷி..

"உண்மைதான்..! உன் அம்மாவ உன் கிட்ட தப்பானவளா காட்டி.. அவங்கள வீழ்த்தி தன்னோட சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கலாம்னு பார்த்திருக்காங்க..! நல்லவேளை.. நீ உன் அம்மாவை புரிஞ்சுகிட்டியே அதுவே சந்தோஷம்.. ஆனா அம்மாவோட அருமை உணர்ந்த பொண்ணு.. ஃபோன் பண்ணும் போது ஒருநாள் கூட நான் அவங்க கிட்ட பேசணும்னு ஒரு வார்த்தை கூட கேட்கலையே..?"

"நான் அம்மாவுக்கு போன் பண்ணி பேசியிருந்தா அவங்க உடனே இங்க வந்துருப்பாங்க.. அப்பா வீட்ல எல்லாருமா சேர்ந்து அவர்களை ஏதாவது செஞ்சுடுவாங்களோனு எனக்கு பயமா இருந்துச்சு.. அதனால தான் அம்மா கிட்ட பேசல.." என்றவளின் தலையை செல்லமாய் கலைத்து விட்டான் மகரிஷி..

"அப்போ சந்திராம்மா இனி அவங்களோட அம்மாவை திட்ட மாட்டாங்க.. அப்படித்தானே..?"

"அம்மா கிட்ட போகணும் ரிஷி.."

"ஓகே டன் புறப்படலாமா..!" என்று தொடையை தட்டிக் கொண்டு இதோ அருந்ததியிடம் சந்திரமதியை கொண்டு வந்து ஒப்படைத்திருந்தான்..

மகளை வாரியணைத்து நெற்றி கன்னம் என்று முகம் எங்கும் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டு அழுதாள் அருந்ததி..

இருவரும் கட்டியணைத்தபடி முட்டி போட்டு அங்கேயே அமர்ந்து விட.. சுற்றி சுற்றி வந்த மோத்தி தாய் மகளோடு சேர்ந்து கொண்டான்..

சற்று தள்ளி தொலைவில் நின்றிருந்த ஒருவனது மனமோ மூவரில் ஒருவராக சேர்ந்து கொண்டு நால்வரும் ஒரே குடும்பமாகும் எண்ணத்தை புதிதாக முளை விட்டுக் கீறிய விதையாக ஈரப் பதத்தோடு துளிர்க்க வைத்திருந்தது..

தொடரும்..
Super ♥️♥️♥️
 
Top